Friday 24 January 2014

சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 25-ந் தேதி தொடங்குகிறது!

நடிகர்கள் மோதும் சிசிஎல் எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25ம் தேதி மும்பையில் துவங்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், நடிகர்கள் இதில் பங்கேற்று விளையாடுகிறார்கள். மும்பையில் 25ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை ரைனோஸ் எனும் தமிழ் நடிகர்கள் அணிக்கும் மும்பை ஹீரோஸ் எனும் இந்தி நடிகர்கள் அணிக்கும் போட்டி நடக்கிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வீரமராத்தி அணியும் போஜ்புரி அணியும் மோதுகிறது.

26ம் தேதி கேரள நடிகர்கள் அணியும், தெலுங்கு நடிகர்கள் அணியும் மாலை 3 மணிக்கு பெங்களூரில் மோதுகின்றனர். 7 மணிக்கு கன்னட நடிகர்கள் அணிக்கும், பெங்கால் டைகர்ஸ் அணிக்கும் போட்டி நடக்கிறது. பிப்ரவரி 1ம்தேதி துபாயில் இந்தி, தெலுங்கு, மலையாள நடிகர்கள் அணிகள் மோதுகின்றன. 2ம் தேதி சென்னையில் போஜ்புரி, இந்தி, சென்னை, கன்னட நடிகர்கள் அணிகள் மோதுகின்றன. 22ம் தேதி வரை இப்போட்டிகள் நடக்கிறது. 23ம்தேதி இறுதி போட்டி நடக்கிறது.

தமிழ் நடிகர்கள் அணியில் விஷால், விக்ராந்த், ஜீவா, விஷ்ணு, சிவா, சாந்தனு, பிரித்வி, ஆர்யா, ஸ்ரீகாந்த், ஷாம், பரத், ஜித்தன் ராமேஷ், ரமணா, உதய் போஸ், வெங்கட் சஞ்சய், நிதின் சத்யா, பிரேம்குமார், ஷரண், சுந்தர்ராமு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.