Friday 14 February 2014

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்!

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக் கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5. எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது. தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6. மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்கா விட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத் தையும் முழு மனதாய் கணவன் ஏற்க வேண்டும். கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர்.

9. கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் சீக்கிரமாய் வீடு திரும்ப முயற்சிக்கணும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக. பக்குவம் பார்த்ததும் வந்து விடக் கூடியதல்ல. பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

காணாமல் போனவைகள் - "தானிய குதிர்"

காணாமல் போனவைகள் - "தானிய குதிர்"


பண்டைய பழந்தமிழர் நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு.



குதிரிடல் (ஆங்கிலம்-granary,bunkering) என்பது வேளாண்மையில் பயன்படுத்தப்படும முக்கியமான நடைமுறையாகும்.நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத்தேவைக்காக, விளைந்த தானியங்களைச் சேமித்து வைக்க இம்முறை பயன்படுத்துப் பட்டு வருகிறது.



சிமென்டு, கரி போன்றவற்றையும் பெருமளவில் குதிர்களில் சேமித்து வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.தமிழகக் கிராமங்களில் உள்ள குதிர்கள் மரம், மண், செங்கல் ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.



இக்குதிர்கள பெரிய அளவுகளில், பல விதங்களில் பயன்படுகின்றன.

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் என்ன?

 தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்..

    திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
    திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
    திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
    திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380


    திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
    திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
    திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
    திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.


    திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
    திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
    திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
    திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை


    திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
    திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
    திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
    திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்


    திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
    திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
    திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
    திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்



    திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
    திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
    திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
    திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்


    திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
    திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
    எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
    ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.


            திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

47 வகை நீர்நிலைகள்!

 01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்

06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை

08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது

09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்

10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்

11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு

12. கடல் -(Sea) சமுத்திரம்

13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்

14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் - (Channel) நீரோடும வழி

16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி

17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை

18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை

19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை

20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு

22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு

25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்

26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு

28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை

29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை

30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்

31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்

32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்

34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்

36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்

37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு

41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை

42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்

43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு

44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது

45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்

46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்

47. வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்

"காமராஜர் ஒரு சகாப்தம்"

கடவுளுக்காக வாதம் நடந்த காலகட்டத்தில் மக்களுக்காக வாதம் செய்த முதல் வக்கீல்!


முதலாளிகளுக்கு பாதுகாப்புத் தந்த காவல் துறை மத்தியில் பாமரர்களுக்கு பாதுகாப்பளித்த முதல் போலீஸ்!


ஓட்டு வேட்டைக்காக உழைத்த அரசியல் வாதிகளுக்கு மத்தியில் மக்களின் ஓட்டு வீடுகளுக்காக உழைத்த முதல் அரசியல்வாதி!


மூன்று வேட்டி சட்டை முன்னூறு ரூபாய் ரொக்கத்தோடும் வாழ்ந்து முடித்து  விட்ட முதல் ஏழை!

எப்படி ஆள வேண்டும்?

எப்படி வாழ வேண்டும்?

என்பதற்கு உதாரணமாய்

இருந்த முதல் தலைவன்....

"என்றுமே" இவரை வெல்ல எவரும் இல்லை...


இந்த படத்தில் நீங்கள் காண்பது உண்மைதான்...!

இந்த படத்தில் நீங்கள் காண்பது உண்மைதான் .
 . .
ஒரு சில ஆண்டுக்கு முன்னர் ரஷ்ய செய்தியாளர்களைச் சேர்ந்த இரு நபர்கள் மொபைலின் கதிர்வீச்சு எந்த விதத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று மக்களிடத்தில் விளக்குவதற்காக ஒரு அரங்கத்தில அனைவரையும் கூடச்செய்தனர் அங்கு micro-oven போன்ற அமைப்பை உருவாக்கி அதில் ஒரு முட்டையை வைத்து அதில் இரு புறமும் மொபைல் போன்களை வைத்து விட்டனர்

இரண்டிற்க்கும் தொடர்பை ஏற்படுத்தி விட்டு
இரு போன்களுக்கு அருகிலும் radio tap ஒலிபரப்பி உரையாடல் தொடரப்பட்டது ...

தொடரப்பட்ட 40 நிமிடத்தில் முட்டையிலிருந்து வெப்பம் வெளிவர ஆரம்பித்தது

அடுத்த 65 நிமிடத்தில் முட்டை முழுமையாக அவிந்து விட்டது ........

தொலைக்காட்சியில் இது நேரடியாக ஒலிபரப்பப் பட்டு அந்த நாடே விழிப்புணர்வு பெற்றது

ஒரு முட்டைக்கே இந்த கதி என்றால் அதை விட மெல்லிய நமது மூலை ?

அதிக நேரம் உரையாடுவதை நிறுத்தி விடுங்கள்

நம் அரசாங்கம் இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாது....? 

குழந்தையின் விக்கலை நிறுத்த இந்த முறையை முயற்சித்து பாருங்கள்..!

குழந்தையின் விக்கலை நிறுத்த இந்த முறையை முயற்சித்து பாருங்கள்..!

பிறந்த குழந்தையை சரியாக கவனிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களது உடலே ஒருவித ஆட்டத்தை ஏற்படுத்தும். அதைப் பார்த்தால், அனைத்து அம்மாக்களுக்கும் பயமாக இருக்கும். ஆகவே அத்தகைய விக்கலை நிறுத்துவதற்கு என்ன வழியென்று தெரிந்து கொண்டீடு, விரைவில் அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும். அதைவிட்டு அது தானாக போய்விடும் என்று காத்துக் கொண்டிருந்தால், பின் குழந்தை அழத் தொடங்கி, அதன் அழுகையே நிறுத்துவது பெரும் அவஸ்தையாகிவிடும்.

ஆகவே அத்தகைய விக்கலை உடனே நிறுத்துவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அதைப் பின்பற்றி வந்தால், குழந்தையின் விக்கலை எளிதில் நிறுத்திவிடலாம். சரி, இப்போது அந்த விக்கலை எப்படியெல்லாம் செய்தால் நிறுத்திவிடலாம் என்று பார்ப்போம்.

குழந்தையின் விக்கலை நிறுத்த, இத ட்ரை பண்ணுங்க...
பொதுவாக விக்கலை நிறுத்துவதற்கு சிறிது நேரம் மூச்சை பிடித்துக் கொண்டு விட்டால், நின்றுவிடும். ஆனால் இந்த முறை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே அதற்கு பதிலாக வேறு என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குகிறது. இதனால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. எனவே குழந்தைகள் அதிகப்படியான காற்றை விழுங்காமல் இருப்பதற்கு, பால் கொடுக்கும் நேரத்தில் அவ்வப்போது ஒரே பக்கத்தில் கொடுக்காமல், அடிக்கடி நிலையை மாற்றிக் கொண்டே இருந்தால், குழந்தைகள் அதிகமான காற்றை விழுங்காதவாறு பார்த்துக் கொள்ளலாம். மேலும் விக்கலும் ஏறப்டாமல் இருக்கும்.

* தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பத்தை விட வேண்டும். அவ்வாறு ஏப்பம் வந்தால், தாய்ப்பாலின் போது, அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். மேலும் சில சமயங்களில் அத்தகைய ஏப்பமும் குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

* குழந்தைகள் விக்கல் எடுக்கும் போது அவர்களது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால், அவை விக்கலை நிறுத்திவிடும்.

* குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு பசிக்கும் முன் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். விக்கல் ஏற்படுவதற்கு ஒரு காரணம் வாயுத் தொல்லை என்றும் சொல்லலாம்,. எனவே குழந்தைகள் வாயுத் தொல்லையினால் தான் விக்கல் எடுக்கிறார்கள் என்றால், அதன் அறிகுறியாக அவர்கள் வாந்தி எடுப்பார்கள். ஆகவே அவர்களுக்கு வாயுத் தொல்லை ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு அவ்வப்போது பால் கொடுக்க வேண்டும்.

* தாய்ப்பால் கொடுத்தும் விக்கல் நிற்கவில்லையெனில், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். அதைவிட்டு, தொடர்ந்து கொடுத்தால், பின் குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடும். பின்னர் இதுவே அவர்களை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கிவிடும்.

ஸ்ட்ராபெர்ரி பழமும் முக அழகும்!

சருமத்துக்கு இளமையைக் கூட்டி, பளபளப்பைத் தருவது பழங்கள்தான். பழங்களை அரைத்து, சருமத்தின் மீது பூசுவதாலும் அழகைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதிலும் பழ வகைகளில் அதிக அளவு முகத்தைப் பொலிவாக்குவது சிவப்பு நிறப் பழ வகைகளில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி.

தன் சுவையால் நாக்கைச் சுண்டி இழுப்பதுபோல், அழகையும் இது அள்ளித்தருவது உண்மை என்கிறது அழகியல் ஆராய்ச்சி.

ஸ்ட்ராபெர்ரியைப் பயன்படுத்தி, முகத்தைப் பளிச்செனக் காட்டும் டிப்ஸ்கள் என்னவெனில்,


சிவப்பு நிறத்தில் ஜொலிக்க

நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை ஒரு துணியால் கட்டி, அப்படியே பிழிந்து ஜூஸாக்கவும்.

இந்தச் சாற்றை முகமெங்கும் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

வாரத்துக்கு மூன்று முறை இதுபோல் செய்துகொள்வதால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தைக் கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதாக் கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

பருக்கள் நீங்க

ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து ந‌ன்றாக மசிக்கவும்.

இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.

இதில் உள்ள சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். சருமத்தில் உள்ள பெரிய துளைகளைச் சிறியதாக்கி, தொங்கிய சருமத்தை இறுக்கும்.

ச‌ருமத்தைப் பொலிவாக்க‌

ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து, நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். இந்த ஜூஸை இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதனுடன் 100 மில்லி குளிர்ந்த பன்னீர் கலந்து முகத்தைக் கழுவவும்.

இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, ஒரு மெல்லிய துணியை உருண்டையாகச் சுற்றி, அதை ஜூஸில் தோய்த்து முகம் எங்கும் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்யவும்.

நன்றாக உலர்ந்ததும், கழுவவும். தினமும் இரவில் இதுபோல் செய்துவர, சருமம் பிரகாசமாக மிளிரும். இதைச் செய்யும்போது, க்ரீம் எதுவும் போட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஜூஸை ஃப்ரிட்ஜில் 15 நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

இளமையைக் கூட்ட

ஆறு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து நன்றாக மசிக்கவும். இதனுடன் மிதமான சுடுதண்ணீரை விட்டுக் கலந்து முகத்தில் பூசி, விரலால் வட்டமாக மசாஜ் செய்யவும்.

10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இப்படிச் செய்து வந்தால், என்றும் சருமம் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

சோர்வை நீக்கிப் பளிச்சென மாற்ற

மூன்று ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் 'மாஸ்க்’ போல போடவும்.

நன்றாகக் காய்ந்ததும், முகத்தைக் கழுவவும். இதன் பிறகு எந்த க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும்.

அழுக்கை நீக்கிச் சுத்தமாக்க

ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி ஜூஸுடன் அதே அளவு கரட் ஜூஸ் கலந்து முகத்தில் நன்றாகப் பூசி, துணியால் துடைத்து, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.

சரும அழுக்கை நீக்கி, முக‌த்தில் துளியும் அழுக்கு சேராமல் பாதுகாக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய அருமையான 'க்ளென்சிங்’ முறை இது. 

LG அறிமுகப்படுத்தும் 105 அங்குல அளவுடைய தொலைக்காட்சி!

தொழில்நுட்ப உலகில் புரட்சியினை ஏற்படுத்திவரும் LG நிறுவனம் 105 அங்குல அளவுடைய Ultra HD தொலைக்காட்சியினை அறிமுகம் செய்கின்றது.


21:9 என்ற அளவுப் பரிமாணத்தைக் கொண்டதும், 5120 x 2160 Pixel Resolution உடையதுமான இத்தொலைக்காட்சி HDMI 2.0, USB மற்றும் LAN ஆகிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது.


இறுதியாக 84 அங்குல அளவுடைய தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய LG நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தும் LED LCD தொழில்நுட்பத்தினைக் கொண்ட மிகப்பெரிய தொலைக்காட்சி இதுவாகும்.

பாலுமகேந்திராவை நினைவுக்கூர்ந்த திரைபிரபலங்கள்...!!

தனது அழகிய ஒளிப்பதிவாளும், நிகரற்ற படைப்பாலும் தமிழ் சினிமாவை புதிய உலகத்திற்கு அழைத்து சென்ற பாலுமகேந்திரா எனும் சகாப்தம் மறைந்துவிட்டது. அவர் மறைந்துவிட்டாலும் அவரது படைப்புகள் என்றும் நீங்காமல், தலைமுறை தலைமுறையாய் தொடரும் என்றால் நிகரல்ல. இந்த தருணத்தில் பாலுமகேந்திராவின் பட்டறையில் பயின்ற திரையுலக பிரபலங்கள், அவரின் நினைவுகளை பங்கிடுகின்றனர்.

பெற்றதற்கு நன்றி சொல்லணும் - கமல்

பாலுமகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், பாலுமகேந்திரா இழந்ததற்கு இறப்பை சொல்வதை விட, பெற்றதற்கு நன்றி சொல்வது முக்கியம். பாலுமகேந்திரா அளித்த கொடை மிகப்பெரியது. இங்கே நன்றி சொல்லுதல் என்று கூட சொல்லலாம். பாலு ரொம்ப திறமையானவர், அறிய மனிதர், உலக சினிமா கொண்டாடியவர், ஏற்கனவே வேறொரு பேட்டியில் சொல்லியிருந்தேன், இன்னும் நிறைய படங்கள் செய்யாமல் போனது, எனக்கு திகைப்பு அல்ல, வருத்தமே. தமிழ் சினிமா நன்றியுடன் பார்க்கிறது. சீடர்களை தந்திருக்கிறார். அவரை வழியனுப்பும் நேரத்தில் அவருடைய சீடர்களையும் வரவேற்க வேண்டும்.

ஒளிப்பதிவு மேதை பாலுமகேந்திரா - வைரமுத்து

பாலுமகேந்திரா என்ற பெருங்கலைஞர் பெளதிக ரீதியாக இன்றில்லை. ஆனால் அவர் படைப்புகளில் அவர் மரிப்பதில்லை. இந்த உலகத்தை அழகாகக் காண்பதற்கு மனிதக் கண்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர் பாலு மகேந்திரா. அதனால் தான் கண்ணுள்ள ரசிகர்கள் இன்று கண்கலங்குகிறார்கள். தன்னை அழகாகக் காட்டியவர் இன்றில்லையே என்று கண்கள் இருந்தால் நிலா அழும் ; வாய் இருந்தால் பூ புலம்பும். சூரியனைப் பனித்துளியாகவும் பனித்துளியைச் சூரியனாகவும் நிறப்பிரிகை செய்த ஒளிப்பதிவு மேதை அவர். பாலு மகேந்திரா ஒரு படைப்பாளி மட்டுமல்லர் ; இலக்கியவாதி. உலகத்தின் தலைசிறந்த படைப்புகளையெல்லாம் காதலோடு கற்றவர். அந்த இலக்கியச் சாரங்களை வெள்ளித்திரையில் பிம்பப்படுத்தியவர்.

மூன்றாம் பிறை - உன் கண்ணில் நீர் வழிந்தால் - நீங்கள் கேட்டவை ஆகிய படங்களில் அவருக்கு நான் பாடல் எழுதிய நாட்கள் சுகமானவை. மனித மனங்களின் இருட்டுப் பிரதேசங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர். தம் ஒளிப்பதிவின் மூலம் தமிழ்த் திரைப்படங்களை இந்திய உயரத்திற்கு ஏற்றியவர். அவரது கடைசி உறக்கத்தை இன்று சென்று பார்த்தேன். அடுத்த படைப்பைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் அவர் இருப்பதாகவே தோன்றியது. அவருக்கு எழுதிய பாடல்களில் அவருக்கும் எனக்கும் பிடித்த ஒரு பாடல் நீங்கள் கேட்டவை படத்தில் இடம்பெற்றது.

”கனவு காணும் வாழ்க்கையாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்” ,

 - இந்தப் பாடலையே அவருக்கு என் அஞ்சலியாகச் செலுத்துகிறேன். அவர் பட்டறையில் தயாரான இயக்குனர்கள் அவரது புகழை உயர்த்திப் பிடிப்பார்கள். அந்த வரிசையில் அவர் நண்பன் என்ற முறையில் நானும்.

எனக்கு முகவரி தந்தவர் - இயக்குனர் சீனுராமசாமி

இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசை பிரியர் என பன்முகம் கொண்டவர். தான் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களை பிறருக்கு, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தங்கு தடையின்றி கற்றுத்தந்த அருமையான ஆசிரியர். அவரது மாணவனாக, அவரிடம் கற்றுக்கொண்டது ஏராளம். 1996ல் பாலுமகேந்திராவிற்கு கடிதம் எழுதினேன். அதில், அவருக்கே உரிய தனித்துவம் குறித்து அலசியிருந்தேன். அதைப்படித்து பார்த்து உடனே, என்னை சென்னைக்கு வரவழைத்தார். அப்போது, பாலு சாரின் சென்னை வீட்டு விலாசத்தை தவிர, வேறு யாரையும் எனக்கு தெரியாது. பாலு சாரை, அவரது வீட்டில் சந்தித்து பேசினேன். அன்று முதல் என்னை, மாணவனாக ஏற்றுக்கொண்டு சினிமாவை எனக்கு கற்றுத்தந்தார். எனது படைப்புகளை, அவர் பாதங்களில் சமர்ப்பிக்றேன்.

மறுபடியும் தொடரும் - நடிகை ரோகிணி

யதார்த்தமான சினிமாவை ரசிகர்களுக்கு காண்பித்த, அற்புதமான இயக்குனர் பாலு மகேந்திரா. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப வெளிவரும் திரைப்படங்களில் அவரது பாதிப்பு இருக்கும். அவரிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் மட்டுமல்ல, அவரது படங்களை பார்த்து, மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம். அவரது இயக்கத்தில் மறுபடியும் படத்தில் நான் நடித்த போது, சினிமாவை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். சினிமா கலையை தன் கண்ணில் சுமந்து வாழ வைத்தவர். திரையுலக சகாப்தத்தில் மறுபடியும் அவரது தாக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கும்.

சினிமாவை சுவாசித்தவர் - இயக்குநர், நடிகர் சசிக்குமார்

சினிமாவை ஆழமாக நேசித்தவர். நான் தயாரித்த தலைமுறை படத்தில் அவர் நடித்த போது, அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவு வேகம், சுறுசுறுப்புடன் செயல்பட்டார். தலைமுறையை ஒரு பதிவாக வைத்து விட்டு சென்றுள்ளார். நிறைய படங்கள் செய்வார் என எதிர்பார்த்திருந்தோம். ஏற்கனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, பார்க்க சென்றிருந்தேன். அப்போது அவர், மீண்டும் சினிமாவை இயக்க வேண்டும், நடிக்க வேண்டும் என அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். சினிமா, அவரது சுவாசம். 

பாலாவை தேடும் இயக்குனர்கள்!

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ்-வெற்றிமாறன் ஆகியோர் தங்களது பேனரில் மற்ற இயககுனர்களுக்கு சான்ஸ் கொடுத்து வருவதைப்போன்று சில வருடங்களுக்கு முன்பு வரை ஷங்கர்-பாலா ஆகிய இரண்டு மெகா டைரக்டர்களும் செயல்பட்டனர். இதில், ஷங்கர் ஈரம், ரெட்டைச்சுழி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் உள்பட பல படங்களை தயாரித்தார். ஆனால் அவற்றில் வடிவேலு நடித்த இம்சை அரசன் மட்டுமே வெற்றி பெற்று நாலு காசு பார்த்தார் ஷங்கர். மற்ற எல்லா படங்களுமே அவரது கல்லாவுக்கே வேட்டு வைத்தன.

அதனால் அதன்பிறகு தனது எஸ் பிக்சர்ஸை இழுத்து மூடியே விட்டார் ஷங்கர்.அதையடுத்து இன்னும் அதை திறப்பதற்கான மூடுக்கே அவர் வரவில்லை. பாலாவை எடுத்துக்கொண்டால், தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் சூர்யா-ஜோதிகா நடித்த மாயாவி என்ற படத்தை தயாரித்து கையை சுட்டுக்கொண்டார். அதன்பிறகு ஏற்பட்ட சில பிரச்னைகளால், அந்த நிறுவனத்தை மூடியே வைத்திருந்த பாலா, தற்போது மிஷ்கினுக்காக மீண்டும் திறப்பு விழா நடத்தியிருக்கிறார்.

பாலா எப்படி கதை விசயத்தில் காம்ப்ரமிஸ் ஆக மாட்டாரோ அதேபோன்று மிஷ்கினும் பிடிவாதக்காரர். எப்படியோ இவர்கள் இருவரும் கைகோர்த்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியே. ஆனால், இந்த தருணத்தில் சேது, பிதாமகன் பாணியில் ஹீரோக்களை அடையாளம் தெரியாமல் உருமாற்றிக்காட்டும் கதைகள் பண்ணி வைத்திருக்கும் சில புதுவரவு டைரக்டர்களும் பாலாவிடம் கதை சொல்ல படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் தனது கரகாட்டப்பட வேலைகளில் தீவிரமடைந்திருப்பதால், இன்னும் கதைகள் கேட்கும் மூடுக்கு வரவில்லையாம் பாலா.