Sunday 2 February 2014

Gmailலில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை... Cc & Bcc அவசியம் படிக்கவும்!

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.

சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??

Cc: Carbon Copy

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.
இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.

இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி , Cc யில் மற்றவர் ஐ‌டி.
இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Bcc: Blind Carbon Copy

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.
இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.


Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.
Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை....!

காமெடி நடிகைக்கு கிடைத்த அதிஷ்டம் ஹீரோயின் ஆனார்..!

காமெடி நடிகர்கள் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமா? காமெடி நடிகையும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். பல சிறு பட்ஜெட் படங்களில் காமெடியாகவும் கவர்ச்சியாகவும் நடித்து வந்தவர் ஜோதிஷா.


இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் தாதாக்களின் ஆசை நாயகியாக வந்து கடைசியில் மச்சினன் சூரியையும் மடக்கி போட்ட கேரக்டரில் நடித்து பாப்புலர் ஆனார்.


இப்போது ஜோதிஷா சமுதாயம் செய் என்ற படத்தில் ஹீரோயின் ஆகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராவணன் என்ற நியூபேஸ் நடிக்கிறார். எஸ்.பி.என்பவர் டைரக்ட் செய்கிறார். "ஓடுற வரைக்கும்தான் வாழ்க்கை, சுத்துற வரைக்கும்தான் உலகம். நல்லது கெட்டது எதுவும் இல்லை.


 வாழ்க்கை ஒரு முறைதான் அதில் நமக்கு பிடித்தமானதை செய்து கொண்டே இருக்க வேண்டும். நமக்கு பிடித்ததை கையில் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அதைத்தான் இந்தப் படத்துல சொல்றோம்" என்று படத்துக்கு இண்ட்ரோ கொடுக்கிறார் டைரக்டர் எஸ்.பி.

கமல் பாணியில் புது டைரக்டர்....!

துபாயில் பொறியாளராக இருக்கும் மனுகண்ணன் என்பவர் அங்குசம் என்ற படத்தை தயாரித்து, டைரக்ட் செய்திருக்கிறார். இந்தப் படம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றியது. அதாவது படத்தின் ஹீரோ தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அநியாயத்தை தட்டிக் கேட்பார். இதனால் அவருக்கு அதிகார மையங்களில் இருந்து பல பிரச்சனைகள் வரும். இப்படியான கதை.

இந்த படத்துக்கு சென்சார் போர்ட் யூ சான்றிதழ் கொடுத்தது. உடனே வரிவிலக்கு கமிட்டிக்கு மனுப்போட்டார், மனு கண்ணன். வரிவிலக்கு கமிட்டியும் படத்தை பார்த்துவிட்டு. இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் வரிவிலக்கு தரலாம் என்று கூறியது. ஆனால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரின் உதவியாளர் வரிவிலக்கு தகுதி பெற லஞ்சம் கேட்டதாகவும், அந்த லஞ்சப் பணம் முதல்வர் வரை செல்வதாகவும் பரபரப்பு பேட்டி அளித்துவிட்டார், மனுகண்ணன். இதனால் முதல்வர், வணிகவரித்துறை அமைச்சர் ஆகியோர் மனு கண்ணன் மீது மானநஷ்ட வழக்கு போட்டனர். வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மனுகண்ணன் இந்த மாதம் அங்குசம் படத்தை ரிலீஸ் பண்ணுவதில் தீவிரமாக இறங்கி விட்டார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நல்ல சினிமாவை மக்களுக்கு தரவேண்டும் என்பதற்காகத்தான் எனது வேலையை விட்டுவிட்டு இந்தப் படத்தை எடுத்தேன். தகவல் அறியும் உரிமைச் சட்டம் நம் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை பயன்படுத்தாமல் இருக்கிறார்களே என்கிற ஆதங்கத்தில் எடுத்தேன். முதல்வரை பற்றியோ, தமிழக அரசைப் பற்றியோ ஒரு காட்சிகூட படத்தில் கிடையாது.

மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர் பெயரைச் சொல்லி அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகத் தான் பேட்டி கொடுத்தேன். அதை தவறாக புரிந்து கொண்டு என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். அதனை நான் சட்டப்படி சந்திப்பேன். இந்த மாதம் படத்தை ரிலீஸ் பண்ணுகிறேன். அதை ரிலீஸ் பண்ண விடாமல் தடுத்தாலோ அல்லது படம் தோற்கடிக்கப்பட்டாலோ நான் விட்டு வந்த வேலை அப்படியே இருக்கிறது. லண்டன், துபாய் அல்லது அமெரிக்கா சென்று செட்டிலாகிவிடுவேன். இன்னும் சம்பாதித்து இதேபோன்ற விழிப்புணர்வு படத்தை திரும்ப எடுப்பேன். என்றார்.

கோலிவுட்டில் லேட்டஸ் டாக்.... ஆயா வடை சுட்ட கதை....

பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா கரகாட்ட கலையை மையமாக வைத்து ஒரு படம் டைரக்ட் செய்யப்போகிறார். இதில் சசிகுமார் நடிக்கிறார்.

 செழியன் கேமரா. இளையராஜா இசை. மற்ற டெக்னீஷியன்களும், டைட்டிலும் இன்னும் முடிவாவவில்லை. பரமன் படம் முடிந்ததும் சசிகுமார் பாலா படத்தில் நடிக்க இருக்கிறார்.


இதற்கிடையில் தனது அடுத்த படத்துக்கான 6 பாடலையும் இளையராஜாவிடம் கொடுத்து இசை அமைத்து வாங்கிவிட்டார். இந்த பாடல்கள் தயாரான விதத்தை 90 விநாடி வீடியோ காட்சியாக பாலா வெளியிட்டுள்ளார்.

அதில் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இளையராஜா காரில் வந்து இறங்கி பாடலுக்கு இசை அமைப்பது, பாலாவுடன் ஆலோசனை நடத்துவது, பாலா பாடல்களை திருத்தி தருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

 12 நாட்களில் தயாரானது 6 பாடல்கள் என்றும், படப்பிடிப்புகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்குகிறது என்றும் அந்த வீடியோ காடசிகள் தெரிவிக்கிறது.

‘இது நம்ம ஆளு ‘ ஆகுமா ? தலைப்பு மாறப்போகிறது...?

சிம்பு – நயன் – சூரி கூட்டணியில் உருவாகி வரும் தனது புதிய படத்தை காதலை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து படமாக்கி வருகிறார், இயக்குநர் பாண்டிராஜ். படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. சூட்டிங் முடிந்ததும் அதன் எடிட்டிங் வேலைகளை உடனுக்குடன் முடித்து பம்பரமாய்ச் சுற்றிவரும் இயக்குநர் பாண்டிராஜிடம் பேசினோம்.

‘‘சிம்பு, நயன் கூட்டணியை மையமாக வைத்துள்ள காட்சிகள் கலர்ஃபுல்லாக வந்திருக்கிறது. மூன்று செட்யூல் ஷூட்டிங் முடிந்தது. அடுத்த செட்யூல் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் படமாக்கப்பட உள்ளது. படத்தின் தலைப்பை இன்னும் இறுதி செய்யவில்லை. ‘இது நம்ம ஆளு’ என்பதை ஒரு யோசனையாகத்தான் வைத்திருக்கிறோம். அதேபோல படத்தில் சிம்புக்கு இன்னொரு ஜோடியும் உண்டு. அவர் யார் என்கிற தேர்வில்தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம்.

படத்தில் சிம்புக்கு அப்பாவாக ஜெயப்பிரகாஷ் நடிக்கிறார். நயன்தாரா சேலை சுடிதார் என்று முழுக்க முழுக்க குடும்பப் பாங்கான பெண்ணாக வலம் வருவார். சூரிக்கும் நயனுக்கும் இடையிலான காமெடி டிராக்கை தனியே 2 நாட்கள் ஷூட் செய்தோம். எல்லோரும் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்த நாட்களாகவே அவை மாறிப்போனது. இந்தப் படம் கமர்ஷியல் படமாக இருந்தாலும் கண்ணியமாக படம் எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதனாலேயே படத்தில் குத்துப்பாடல், கவர்ச்சி ஆட்டத்திற்கு வேலையே வைக்கவில்லை. படத்தின் பாடலின் அமைப்புக்கும் சூழலுக்கும் அவசியம் என்றால் வெளிநாட்டில் ஷூட் செய்யலாம்.

இதுவரைக்கும் அப்படி ஒரு யோசனை தோன்றவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் இப்படத்தில் சிம்புவும்

நயனும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அது படத்திற்கு பலமாக இருக்கும்!’’ என்றார், பாண்டிராஜ்.

கார்த்திகா புகழ்ந்து தள்ளும் ஹீரோ யார்...?

அருண் விஜய்யுடன்  டீல் படத்தில் நடித்த கையோடு கார்த்திகா புறம்போக்கு படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதில் நீங்கள் யாருக்கு ஜோடி விஜய் சேதுபதிக்கா அல்லது ஆர்யாவுக்கா என்று கேட்டால் “தெரியலயேபா” என்று நாயகன் ஸ்டைலில் சொன்னார் கார்த்திகா.

இதுவரைக்கும் என்ன கதை என்று திட்டவட்டமாக எனக்கு தெரியவில்லை என்றும் இப்போது வரை எனக்கும் ஆர்யாவுக்கும் உள்ள காம்பினேஷன் சீன்ஸ் மட்டுமே  எடுத்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் கூறினார்.

இந்த படம் கமிட் பண்றதுக்கு முன்னாடி ஆர்யாவுடன் நடிக்க போகிற பார்த்து மா என பல பேர் அட்வைஸ் செய்தார்கள். ஏற்கனவே இவருக்கு காதல் மன்னன் என்ற  பட்டம் கொடுத்து விட்டார்கள் அதனால் உஷார் ரா இரு என்று பல பேர் பட்டும் படாத மாதிரி சொன்னார்கள்.

ஆனால் நேரில் சென்று பார்த்து போது  ச்சே ஹி இஸ் ஜெம் ஆஃப் பெர்சன் என்று தெரிந்தது.

அவர் கதாநாயகி கிட்ட காட்டும் அக்கறை ஒரு நல்ல மனசோடு  தான் தவிர வேறு ஏதும் இல்லை என்றும் செட்டில் நான் இப்போ பார்க்கும் போது கூட எவ்வளோ பெரிய கஷ்டமான டான்ஸ் ஸ்டெப்பாக இருந்தாலும் சரி பொழந்து கட்டுகிறார் எனவும் கூறினார்.

எஸ்.ஜே சூர்யாவின் இசை மிக பிரமாதமாக வந்துள்ளது...!

எஸ்.ஜே சூர்யா நடித்து இயக்கி கொண்டு இருக்கும் ஒரு மியூசிக்கல் படம் தான் இசை.

பொதுவாக எஸ்.ஜே சூர்யா படம் என்றால் கிளுகிளுப்புக்கும், குதுகலத்துக்கும் பஞ்சம் இருக்காது. இடையில் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று ஒரே காலில் நின்று சில படங்களை நடித்தார். ஆனால் அவர் இயக்கத்துக்கு கிடைத்த வரவேற்பு நடிப்புக்கு கிடைக்கவில்லை.

சரி என்று தன்னுடைய பழைய இயக்குனர் பாணியில் பயணிக்க ஆரம்பித்தார். இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட எஸ்.ஜ சூர்யா இசையை மையப் படுத்தி இசை என்ற பெயரிலே கடந்த ஒரு வருட காலமாக ஒரு படத்தை  எடுத்து கொண்டு இருக்கிறார்.

தற்போது இப்படம் முடியும் தருவாயில் உள்ளதால் படத்தை பற்றி சில தகவல்கள் எடிட்டர் ஆண்டனி தெரவித்தார்.

கண்டிப்பாக இப்படம் எஸ்.ஜே சூர்யாவின் முந்தைய படங்களை விட மிக பிரமாதமாக வந்துள்ளது என்றும் நீங்கள் எஸ்.ஜே சூர்யாவிடம் எதிர்பார்க்கும் கிளுகிளுப்பு போன்ற சமாச்சாரங்களுக்கும் பஞ்சம் இருக்காது எனவும் தெரிவித்தார். இப்படத்தை தல பிறந்த நாளான மே 1ம் தேதி அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளார்.

ஆகமொத்ததில் நம்ம பழைய எஸ்.ஜேசூர்யாவை பார்க்கபோறோம் டோய்!!

அஜீத்துடன் புதிய ஜோடி சேருவது யார்....?

அஜீத் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து வெற்றியடைந்த படம் ‘வீரம்’ இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். படம் முழுவதும் வெள்ளைச் சட்டை, வேஷ்டி, நரைத்த முடி என கலக்கியிருந்தார் அஜீத். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படம் அமைந்திருந்தால், படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து அஜீத்தும்-சிவாவும் மீண்டும் புதுப்படமொன்றில் இணையவிருக்கிறார்கள். இந்த படத்திலும் தமன்னாவே கதாநாயகியாக நடிக்கிறாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்கள்.

அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கவுதம்மேனன் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, அஜீத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இப்படம் முடிந்த பிறகு சிவாவும், அஜீத்தும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று தெரிகிறது.

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துவதில் உதடுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய உதடானது ஒருசில பருவக் காலத்தில் அதிகம் வறட்சி அடையும். குறிப்பாக குளிர்காலத்தில் தான் அதிகம் ஏற்படும். இவ்வாறு வறட்சி ஏற்படும் போது உதடுகளைச் சுற்றி வெள்ளையாக இருப்பதோடு, உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, சில சமயங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.

ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை மட்டுமின்றி, உதடுகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், உதடுகள் அதன் இயற்கை அழகை இழந்து அசிங்கமாக காணப்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குளிர்காலத்தில் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் இருக்க எந்த பொருட்களைக் கொண்டு உதடுகளை பராமரித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கொடுத்துள்ளது.

அதைப் படித்து அவற்றைக் கொண்டு உதடுகளை பராமரித்து, அழகான உதடுகளைப் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்யாக் எணணெயை தினமும் பலமுறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமல் இருப்பதோடு, உதடுகளின் இயற்கை அழகும் பாதுகாக்கப்படும்.

கற்றாழை

கற்றாழை ஜெல் கூட உதடு வறட்சியைத் தடுக்கும் அருமையான பொருள். எனவே தினமும் உதடுகளுக்கு கற்றாழை ஜெல்லை தடவி வாருங்கள்.
உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

ரோஜாப்பூ

ரோஜாப்பூவில் சிறிது கிளிசரின் சேர்த்து அரைத்து, அதனை உதடுகளுக்கு தினமும் இரவில் தடவி வந்தால், உதடுகளின் நிறம் அதிகரிப்பதோடு, உதடுகளில் ஈரப்பதமும் தக்க வைக்கப்படும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தாலும், உதடுகளின் வறட்சி தடுக்கப்படும்.
உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகளில் ஈரப்பதை அதிகரிப்பதோடு, உதடுகளும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.

தேன்

தேன் ஒரு அருமையான மாய்ஸ்சுரைசர். எனவே தினமும் தேனைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தால், உதடுகளில் உள்ள வறட்சியுடன், வெடிப்புகள் விரைவில் குணமடைந்து, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயும் அருமையான ஒரு பொருள். ஆகவே இதனையும் உதடுகளுக்கு தடவலாம்.

கிளிசரின்

1 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டனை நீரில் நனைத்து உதடுகளை துடைத்து எடுக்க வேண்டும். இதுவும் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் போன்று இருக்கும்.

க்ரீம் மில்க்

க்ரீம் மில்க்கை உதடுகளுக்கு தடவி வந்தாலும், உதடுகளில் பிரச்சனை ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.


வேஸ்லின் மற்றும் தேன்

வேஸ்லின் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை உதடுகளுக்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுத்தாலும், நல்ல பலன் கிடைக்கும்.

எந்த உறவும் இல்லை! ஸ்ருதிஹாசன் பரபரப்பு!

தெலுங்கில் ராம்சரன்தேஜா, அல்லு அர்ஜூன் மற்றும் இந்தியில் ஜான் ஆபிரஹாம்,  அக்‌ஷய் குமார் என முன்னணி ஹீரோக்களுடன் 4 மிகப்பெரிய ஹீரோக்களுடன் கமிட் ஆகியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். தெலுங்கு, இந்தி என இருமொழியிலும் வெளியான படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் D-Day திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் துணிவாக ஏற்று நடித்த கதாபாத்திரம் பாலிவுட்டில் அவரது மார்கெட்டை உயர்த்தியது.

சிகப்பு விளக்குப் பகுதியில் பணிபுரியும் பெண்ணாக ஸ்ருதிஹாசன் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றதுடன், திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான D-Day திரைப்படத்தை ‘தாவூத்’ என்கிற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட முயற்சி நடந்திருக்கிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ருதிஹாசன் “உங்களது ஆதரவிற்கு நன் நன்றி.

 நான் நடித்த D-Day திரைப்படம் தமிழில் தாவூத் என்ற பெயரில் வெளியாவதற்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. என் அனுமதி இல்லாமல் இந்த முயற்சி நடந்திருக்கிறது. சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். இதுபற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டதும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றிய தகவல்கள் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

 தனக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்த திரைப்படத்தின் மீதே ஸ்ருதிஹாசன் வழக்குத் தொடுக்கப்போவதாக கூறியுள்ளது இந்தி திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுட்த்தியுள்ளது.

அறிவை வளர்க்க சில வழிகள்...!

இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர்.

அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள்.

உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல வகைகள் உள்ளன. அத்தகைய அறிவை அனைவரும் பெற வேண்டுமென்றால், அறிவை வளர்க்க ஒரு சில வழிகள் இருக்கிறது.

அறிவை வளர்க்க சில டிப்ஸ்

1. நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டும் ஒன்று அல்ல.

ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம். ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி எழுந்து புத்துணர்ச்சி அடையாமல் இருந்தால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்போது அறிவானது குறைவாகத் தான் இருக்கும். ஆகவே நல்ல தூக்கத்தின் மூலம் அறிவானது பெருகும்.

2. நிறைய பேர் வார இறுதியில் தூங்கி எழுந்திருக்கும் போது நீண்ட நேரம் கழித்து எழுந்திருப்பர். ஆனால் எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பர்.

ஆனால் அப்படி எழுந்து உடற்பயிற்சி செய்ய நினைக்கும் நேரம் ஷூ ஆனது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தேடி, அதையே கண்டு பிடிக்க போய் ஒரு நாளில் அரை நாள் போய்விடும். இந்த நேரத்தில் அவர்களது மூளையானது அந்த ஒரு ஷூவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.

மேலும் சோம்பேறித்தனம் தான் அறிவை மழுங்க வைத்து நேரத்தை கழிக்கிறது. எப்படியெனில் நீண்ட நேரம் தூங்குவதால் சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும்.

ஆகவே அத்தகைய நீண்ட நேர தூக்கமானது அறிவை அப்போது மழுங்க வைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு மழுங்காமல் ஸ்டாமினா அதிகரிக்க தினமும் எழுந்து சுறுசுறுப்பாக 'ஜாக்கிங்' செய்ய வேண்டும். இதனால் அறிவானது பெருகும்.

3. தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை மழுங்க வைக்கின்றனர். மேலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அடிமையே ஆகிவிடுகின்றனர்.

மூளையானது ஒரு கத்தி போன்றது. அதை பயன்படுத்தாவிட்டால் கூர்மையை இழந்துவிடும். ஆகவே அறிவுக்கு வேலை கொடுக்கும் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றால் காணலாமே தவிர, அறிவை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம்.

4. இன்றைய காலத்தில் நிறைய பேர், எடை குறைய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சாப்பிடாமலே இருக்கின்றனர். ஆகவே இத்தகையவற்றை நினைவில் கொள்ளாமல், நன்கு உண்டால் தான் மூளையானது கத்திப் போல் நன்கு வேலை செய்யும்.

மேலும் நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும். மேலும் இவை அனைத்தும் உடலுக்கு ஏற்ற, உடல் எடையை அதிகரிக்காத உணவுகளும் கூட.

5. நன்கு விளையாட வேண்டும். மூளையை நன்கு சுறுசுறுப்பாக, கூர்மையாக வைத்துக் கொள்ள யோசிக்கும் வகையில் இருக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும்.

உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவற்றை விளையாடுவதன் மூலமும் அறிவை வளர்க்கலாம்.

இவ்வாறெல்லாம் பின்பற்றுங்கள் மூளையானது சுறுசுறுப்போடு இருப்பதோடு, அறிவும் கூர்மையடையும்.

Facebook -ல் அதிகமாக எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதை நொடியில் அறியணுமா?

பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதை நொடியில் அறியணுமா?

சமூக வலைதளங்களில் அனைவரும் பயன்படுத்தும் முதல் தளமாக அனைத்து நாடுகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்-ல் நாம் கொடுக்கும் வார்த்தைப்பற்றி என்ன பேச்சு நடைபெறுகிறது என்பதை நமக்கு துல்லியமாக எடுத்துக் கூற ஒரு தளம் உள்ளது.

500 மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதை நொடியில் அறிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது

இணையதள முகவரி :


இந்த்தளத்திற்கு சென்று நாம் என்ன வார்த்தையைப்பற்றிய தகவல்களை
தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தியதும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த

வார்த்தைப்பற்றி தற்போது பேஸ்புக்-ல் என்ன பேச்சு நடைபெறுகிறது என்பதை நொடியில் அறியலாம். இதைத்தவிர News , Music , Sports,Politics,Gossip,TV,Fashion,Movies,Deals,Travel,Brands,Games போன்ற எந்தத்துறை சார்ந்து தேட வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்து எளிதாக தேடலாம்.

பேஸ்புக்-ல் நடக்கும் தகவல்களை நொடியில் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.

பி.ஏ.பாஸ் - உல்லாச விருந்து - திரைவிமர்சனம்!

முகேஷ் பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். அவருக்கு இரு சகோதரிகள் உள்ளனர். அவன் படித்து கொண்டிருக்கும்போதே அவனது தாய் தந்தையர் சாலை விபத்தில் இறந்துவிடுகின்றனர். இதனால் அவனது தாத்தாவின் நிர்பந்தம் காரணமாக முகேஷ் தனது அத்தை வீட்டில் தங்கி அவர்களது வீட்டு வேலைகளை செய்து கல்லூரி படிப்பை தொடருகிறான்.  அவன் கல்லூரிக்கு சென்ற நேரம் போக மீதி நேரங்களில், அத்தை வீட்டிற்கு அருகே உள்ள கல்லறையில் வேலை செய்து வரும் ஜானியுடன் செஸ் விளையாடி பொழுதை கழிக்கிறான். அவனிடம் தனது தங்கைகளின் எதிர்காலம் பற்றியும் அடிக்கடி முகேஷ் புலம்பி வருகிறான்.

இவ்வாறு அத்தை வீட்டில் அவன் வசித்து வரும் சூழலில் ஒருமுறை மகளிர் அணி குழுவை சேர்ந்தவர்கள் அவனது அத்தையை பார்க்க வருகிறார்கள். இக்குழுவினருக்கு முகேஷ்  டீ வழங்கும்போது தன்னை விட மூத்தவளும் திருமணமானவளுமான நாயகி சரிகாவை சந்திக்கிறான். அப்போது வீட்டு வேலை செய்வது குறித்து அவனை மகளிர் குழுவினர் கேலி கிண்டல் செய்கின்றனர்.

ஒரு நாள் அவனது அத்தை முகேஷிடம் சரிகாவின் வீட்டுக்கு சென்று அவளிடம் உள்ள ஆப்பிள் பையை வாங்கி வருமாறு  கூறுகிறார். முதலில் செல்ல மறுக்கும் முகேஷ் இரு நாட்கள் கழித்து சரிகாவின் வீட்டுக்கு செல்கிறான். அப்போது தன்னை விட மிக இளமையாகவும், கட்டான உடல் வாகும் கொண்டவனான முகேஷை அடையும் நோக்கில் சரிகா உடை மற்றும் உடல் ரீதியாக அவனை மயக்க வைக்கும் செயல்களில் ஈடுபடுகிறாள். ஒரு கட்டத்தில் அப்பாவியும், கூச்ச சுபாவமும் கொண்டவனான முகேஷ் அவளுடன் கலவியில் ஈடுபட்டுவிடுகிறான். பின்னர் சரிகா தனது வீட்டுக்கு தொடர்ந்து அவனை அழைத்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வருகிறார். அவ்வாறு உல்லாசத்தில் ஈடுபடுவதற்காக அவனுக்கு பணத்தையும் தருகிறாள். முதலில் பணத்தை வாங்க மறுக்கும் அவன் பின்னர் அதை வாங்கிக்கொள்கிறான்.

இந்நிலையில் அவனது தாத்தா இறந்துவிட்டதாக அவனுக்கு தகவல் வருகிறது. உடனே அவன் தனது தாத்தா வீட்டிற்கு சென்று அவரது இறுதிச்சடங்குகள் முடிந்த பின் தனது தங்கைகளை அழைத்து சென்று காப்பகத்தில் சேர்க்கிறான். தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் அவனுக்கு ஏற்படுகிறது. இதனால் அவனுக்கு பணம் அதிகமாக தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளும் சரிகா தன்னை போல் உல்லாசத்திற்கு ஏங்கும் பெண்களுக்கு அவனை அறிமுகப்படுத்தி ஆண் விபச்சாரியாகவே மாற்றி விடுகிறாள். அவனது கைக்கும் ஏராளமான பணம் கிடைக்கிறது. தனக்கு கிடைத்து வரும் பணத்தை அவன் சரிகாவிடமே கொடுத்து சேமித்து வருகிறான். அவ்வாறு அவனது பணத்தை சேமித்து வைக்க, தன்னுடன் கலவியில் ஈடுபடவேண்டும் என சரிகா கூறுகிறாள். அதை ஏற்று அவனும் அவளை திருப்திபடுத்துகிறான். இந்த நிலையில் ஒருநாள் இருவரும் கலவியில் ஈடுபடும்போது சரிகாவின் கணவர் அவர்களை பார்த்துவிடுகிறார். அவர் கோபமடைந்து இருவரையும் அடித்து துவைத்ததோடு மட்டுமல்லாமல் அவனது அத்தையிடமும் அவர்களது செயல்கள் பற்றி கூறிவிடுகிறார்.

இதனால் கோபமடைந்த அத்தை அவனை வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். வீட்டிலிருந்து துரத்தப்படும் அவனை ஜானி தன்னுடன் தங்கிகொள்ள அனுமதிக்கின்றான். ஆனால் மறுபடியும் பணத்தேவை அவனுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. சரிகாவை தேடிப்போகின்றான், ஆனால் அவள் தனது கணவருக்கு இருவரின் விஷயமும் தெரிந்துவிட்டதால் இனி தனது வீட்டிற்கு வரவேண்டாம் என கூறிவிடுகிறாள். மற்ற பெண்களை அவன் அணுகும்போது அவர்களும் அவனை தவிர்த்து விடுகின்றனர். கடுமையான பண நெருக்கடியில் சிக்கிய அவன் தான் ஏற்கனவே சரிகாவிடம் கொடுத்து வைத்துள்ள பணத்தை கேட்கும்போது அவள் அதைதர மறுத்து ஏமாற்றிவிடுகிறாள்.

அவனுக்கு அவனது பணம் கிடைத்ததா, தன்னை ஏமாற்றிய சரிகாவை பழிவாங்கினானா என்பதே மீதிக்கதை. இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள ஷதாப் கமல் அருமையாக நடித்துள்ளார். நாயகியாக நடித்துள்ள ஷில்பா சுக்லாவும் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து கதைக்கு தேவையான ஆபாசமான நடிப்பில் அசத்தியிருக்கிறார். எந்த வித சினிமாத்தனமுமின்றி யதார்த்தமான வாழ்க்கையை படமாக்கிய இயக்குனர் அஜய் பாஹ்லை வெகுவாக பாராட்டலாம்.

குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து..!

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான  வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன்  தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை  அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று  கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது,  நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி  தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள்  மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும்.  அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி  நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக்  காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும்  கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து  வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில்  மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி  இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று  இருக்கும்.

குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்...?

சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மருத்துவம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரத்தை ஆராய்ந்த போது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை  அதிகம் பயன்படுத்தியது தெளிவாகிறது.. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. பல பெற்றோர்கள்  குழந்தைகளுக்கு செய்யப்படும் இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. பொதுவாக அனைத்து இயற்கை வைத்தியமும் நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் இயற்கை வைத்தியம்.

இருமல்

குழந்தையின் பிஞ்சு உடல்களை எளிதில் தாக்கும் இருமல். இருமல், சளி வந்ததும் அலையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனையும் இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று.. குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து  விடுபட ஒமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு  முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஒய்வு எடுக்க செய்ய வேண்டும். இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்சனை வராமல்  தடுக்கலாம்.

மேலும் இருமல் பிரச்சனைக்கு பெருந்துத்தி பூக்களைக்கொண்டு குளிர்பானம் தயாரித்து குழந்தைகளுக்கு தரலாம். குளிர்பானத்தை வடிகட்டி ஒரு சிறிய  துணியில் ஈரமாக்கி குழந்தையின்  தொண்டை, மூச்சு குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் தேய்க்க இருமல் குணமாகும்.

டயாபர் ஒவ்வாமை

டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க  வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குழந்தைகளை குளிக்க வைக்கலாம். 

பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு!

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.

எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம். வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும். சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.

பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும் நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு  அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள்  சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் சாய்ச்சல் கூட வரும். மலம் வெளியேற  சிரமப்படுவார்கள். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள்.

பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும்  சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில்  குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல  மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.

தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா, துளசி இவற்றின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி  சூரணம் செய்து 1ஸ்பூன்  அளவு எடுத்து தேனிலோ அல்லது வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கபக்கட்டு போன்றவை குணமாகும். துளசி  இலைகளை பறித்து நசுக்கி அப்படியே சாறு எடுத்து மருந்துக்கு கொடுப்பார்கள். இப்படி செய்வது தவறு. ஏனெனில் துளசி இலையில் உள்ள மெல்லிய  சுனைகள் குழந்தைகளுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சளி தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும்  தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம்  மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது. குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின்  உடலையும், காதுகளையும் மூடவேண்டும்.

குளிர் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்கவும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு  சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி  பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.

அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும்.  எனவே பாலூட்டும்  தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து  மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பற்களில் கரை படிந்துள்ளதா....? அறிந்துகொள்வோம்!


பற்களில் கரை படிந்துள்ளதா....?

இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.

முயற்சித்துப் பாருங்களேன்....... பற்களில் கரை படிந்துள்ளதா....?

இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.

முயற்சித்துப் பாருங்களேன்......