Thursday 20 March 2014

நயன்தாராவுடன் இணையும் தமன்னா..அக்கா?


ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா உட்பட பலர் நடித்த படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் வெற்றி இயக்குநர் ராஜேஷையும் கவனிக்கத்தக்க வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.


இப்பட வெற்றி காரணமாக படத்தின் தயாரிப்பாளாரான உதயநிதி, தன்னை வைத்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி' இயக்கும் வாய்ப்பை இயக்குநர் ராஜேஷுக்கு அளித்தார்.


தற்போது 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ராஜேஷ். முந்தைய பாகத்தில் நடித்த ஆர்யா, நயன்தாரா உடன் இரண்டாம் பாகத்தில் தமன்னாவும் இணைகிறார்.


மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் த்ரிஷா..!


பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகளில் ஒருவர் த்ரிஷா. “என்றென்றும் புன்னகை’ மூலம் இளைஞர்களின் மனதை மறுபடியும் ஒரு முறை கொள்ளையடித்த திரிஷாவுடன் ஒரு சந்திப்பு.

பத்து வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான ஹீரோயின். எப்படி உணர்கிறீர்கள்?

நேற்று நடிக்க வந்தவள் போலவே உணர்கிறேன். “மெüனம் பேசியதே’யில் நாயகியாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து பதினோரு வருடங்கள் முடித்து பன்னிரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். நேற்றுதான் “மெüனம் பேசியதே’யில் நடித்தது போலிருக்கிறது. பதினோரு வருடங்கள் சீக்கிரமாகக் கடந்துவிட்டதை நம்பமுடியவில்லை. எந்த ஒரு படம் நடிக்கும் போதும் முதல் படம் போலவே உணர்ந்து நடிப்பது எனது ஸ்பெஷல் என நினைக்கிறேன். பெரிதாக சாதித்த உணர்வு, வீண் பெருமிதம் எல்லாம் இல்லை. ஆனால், சந்தோஷமாக உணர்கிறேன். நடிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

தமிழ் சினிமாவில் உங்களுக்கு ஒரு சிறு இடைவெளி விழுந்து விட்டதே… தமிழ் சினிமாவை வேண்டுமென்றே நீங்கள் தவிர்ப்பதாக சில வதந்திகள் உங்களைச் சுற்றி இருப்பது தெரியுமா?

தமிழ் சினிமாவை நான் நேசிக்கிறேன். இந்த இடைவெளி எதேச்சையாக விழுந்த ஒன்று. “சமர்’ “என்றென்றும் புன்னகை’ இடையேயான ஒரு வருடம் பெரிய இடைவெளி போல என் ரசிகர்களை உணரவைத்திருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். நான் தமிழ் சினிமாவைத் தவிர்ப்பதாகவோ, தமிழ் சினிமாவில் எனக்கு வாய்ப்புக்கள் இல்லை என்று வருகின்ற செய்திகள் எல்லாம் வெறும் வதந்திகள். ரசிகர்கள் என்னை நம்பத்தயாராக உள்ளனர். ஆனால், மீடியா என்னை நம்பத் தயாராக இல்லை.

இளம் ஹீரோக்களுடனும், வயதான ஹீரோக்களுடனும் பெருமளவில் நடித்துள்ளீர்கள். இவர்களிடையே ஏதாவது வித்தியாசத்தை உணர்கின்றீர்களா?

வித்தியாசம் பெரிதாக இல்லை. ஆனால், ஒற்றுமை என்னவென்றால் அனைவருமே கடின உழைப்பாளிகள். செய்யும் தொழிலுக்கு நேர்மையானவர்கள். ஒரே ஒரு வேறுபாடு, வயதான நடிகர்களுக்கு அனுபவம் அதிகம். அவர்களுக்கு சினிமா சார்ந்த புரிதல் அதிகம். அதற்காக இளைய நடிகர்கள் வயதான நடிகர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்களல்ல. நான் எந்த நடிகருடனும் நடிக்கத் தயாராக உள்ளேன். வயதிற்கும் நடிப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இவர்களின் வளர்ச்சியை ஒரு அனுபவ நடிகையாக எப்படிப்பார்க்கிறீர்கள்?

ரொம்ப பிரமிப்பா இருக்கு. இவர்களின் அனைத்துப் படங்களையும் பார்த்தேன். அற்புதமா பண்றாங்க. அவர்களின் கதைத்தேர்வு, நடிப்பு என அனைத்துமே அற்புதம். ஒரு நடிகனின் பலமே தனக்கு தகுந்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், தனக்கு எது சரியாக வரும், எது சரியாக வராது என அறிந்து கொள்வதிலும் தான் உள்ளது. விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் இந்த விஷயத்தில் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன்.

சினிமா வாழ்க்கையில் உங்களின் நிறைவேறாத ஆசை ஏதாவது உண்டா?

சில வாய்ப்புகளை நான் பயன்படுத்தியுள்ளேன். சில வாய்ப்புகளை நான் பயன்படுத்தவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. சில நிறைவேறாத ஆசைகள் உண்டு. அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை.

இன்னும் எத்தனை வருடங்கள் சினிமாவில் இருப்பதாக உத்தேசம்?

நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் சில பரீட்சார்த்தமான படங்கள் செய்ய விரும்புகிறேன். மசாலாப்படங்கள் போதும் போதும் என்கிற அளவிற்கு செய்தாகிவிட்டது. நடிப்பிற்குத் தீனி போடக் கூடிய சிறந்த படங்களை எதிர்பார்த்திருக்கிறேன். எது எப்படியோ நடித்துக்கொண்டிருப்பேன் என்பது மட்டும் உண்மை.

இப்போதுள்ள நடிகைகளில் உங்களுக்குப் பிடித்தவர்?

எல்லோருமே அற்புதமான பெண்கள். இப்போதுள்ள இளம் நடிகைகள் யாருக்குமே வெட்டிபந்தாவோ, வீண் பேச்சுக்களோ இல்லை. தமது கிரீடங்களை கழற்றி வைத்துவிட்டு மிக இயல்பாக இருக்கிறார்கள். நாங்கள் எப்போதாவது தான் சந்திப்போம். சந்திக்கும் வேளைகளில் ஜாலியாக இருப்போம். தமன்னா, காஜல், அனுஷ்கா, நயன் ஆகியோர் என் நெருங்கிய தோழிகள். என்னால் எல்லோருடனும் பழக முடியும் என்பதால் அனைவருமே என்னை நேசிக்கிறார்கள் என நினைக்கிறேன். நானும் அவர்களை நேசிக்கிறேன். எந்த ஈகோவும் இல்லாமல் சகோதரிகள் போலப் பழகுவோம். சந்திக்கும் வேளைகளில் சினிமா பற்றி பேச மாட்டோம். ஜாலியாகவும் கேலியாகவும் கல்லூரி மாணவிகள் சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வதுபோலத்தான் பேசுவோம்.

உங்களைச் சுற்றியுள்ள இந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டுத்தான் ஆக வேண்டும். கல்யாணம் எப்போது?

கல்யாண நேரம் வரும் போது கண்டிப்பாக நடக்கும்

சிவகார்த்திகேயன் – ஆண்ட்ரியா நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.!


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியான நடிகராக வளர்ந்துவிட்டார்.


ஒரு முன்னணி நடிகருக்கு உண்டான மரியாதை இப்போது சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர்கள் கொடுத்து வருகின்றனர்.


இவர் நடித்த மான் கராத்தே ரூ.18 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ‘தாணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன்ராம் அவர்களின் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயனே நடிக்கிறார்.


இந்த படத்திற்கு ரஜினி முருகன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


 இந்த படத்திலும் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


இந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 என்றும் கூறப்படுகிறது.


ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர்கள் நடிக்கிறார்கள்.


முந்தைய படம் போல முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

ஹன்சிகா படம் பணால்..!


ஹன்சிகா நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டது. சமீபத்தில் ட்ராப்பான இரண்டாவது படம் இது.


சிம்பு, ஜெய், தீக்சா சேத்துடன் ஹன்சிகா நடித்த படம் வேட்டை மன்னன். நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்த இந்தப் படம் படப்பிடிப்பு சில வாரங்கள் நடந்த பின் கைவிடப்பட்டது. மீண்டும் வேட்டை மன்னனை தூசு தட்டும் எண்ணம் யாருக்கும் இல்லை.


தற்போது தெலுங்கிலும் ஹன்சிகா நடிப்பதாக இருந்த ஒரு படம் கைவிடப்பட்டுள்ளது.


தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் துர்கா படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமானார். படத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாச ரெட்டி.


படப்பிடிப்புக்கு கிளம்ப இருந்த நேரம் இயக்குனருக்கும், நாக சைதன்யாவுக்கும் முட்டிக் கொண்டது. இயக்குனரை மாற்றினால்தான் படத்தில் நடிப்பேன் என்று அடம்பிடித்தார் நாக சைதன்யா.


தயாரிப்பாளருக்கு ஸ்ரீனிசார ரெட்டியின் கதையும் முக்கியம் ஹீரோ நாக சைதன்யாவின் கால்ஷீட்டும் முக்கியம்.


இந்த இருவரும் சமாதானத்துக்கு உடன்பட மறுக்க படத்தையே ட்ராப் செய்துவிட்டார் தயாரிப்பாளர். ஹன்சிகாவுக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அமீர் ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா...!

யோகி படத்துக்குப் பிறகு அமீர் ஹீரோவாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.


இயக்குனர்களின் நடிப்பாசை அவர்களை எப்படி பாதாளத்துக்கு இழுக்கும் என்பதற்கு உதாரணம் அமீர்.


பருத்திவீரன் போன்ற ஒரு படத்தை தந்துவிட்டு ஹீரோ ஆசையில் ட்ராக் மாறியவர் அடுத்து தந்தது ஆதிபகவன் என்ற படுசுமார் படத்தை.


இன்னொரு படத்தை உடனே இயக்கும் தெம்பு அமீருக்கு இல்லை போலிருக்கிறது. மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.


இந்தமுறை அமீரை இயக்குகிறவர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்திக்.


அமீர் ஜோடியாக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஸ்கிரிப்ட் தயாராக இருந்தாலும் படப்பிடிப்புக்கு ஜுனுக்கு பிறகே கிளம்புகிறார்கள்.


ஏப்ரல் அல்லது மேயில் பெப்சிக்கு தேர்தல் நடைபெறுகிறது.


இப்போது பெப்சி தலைவராக அமீர் உள்ளார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என தெரிகிறது. அ


தனால் பெப்சி தேர்தல் முடிந்த பிறகு படப்பிடிப்புக்கு கிளம்புவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ராஜா ராணி சக்சஸ்மீட் - எக்ஸ்க்ளுசிவ் தகவல்கள்!


சில படங்கள் ஏன் எதற்கு ஓடுகின்றன என்ற ரகசியத்தை கண்டுபிடிப்பது கடினம். சென்ற வருடம் வெளியாகி கண்டபடி ஓடி வசூல் செய்தது அட்லீ இயக்கிய ராஜா ராணி. படம் தமிழில் பம்பர்ஹிட்.


அதனை தெலுங்கில் டப் செய்து சென்ற வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.


முதல் மூன்று தினங்களில் நான்கு கோடியை வசூலித்து ஆந்திர நடிகர்களுக்கு ஜெர்க் தந்துள்ளது படம்.


 டப்பிங் படம் என்ற அளவில் இது அபாரமான வசூல்.



முதல்நாளே படத்தின் வெற்றியை அறிந்த தயாரிப்பாளர் முருகதாஸ், ஆர்யா, அட்லீ, ஜீ.வி.பிரகாஷ் அனைவரும் நேற்று ஹைதராபாத் பறந்தனர்.


சூட்டோடு சூடாக சக்சஸ்மீட்டும் நடத்தினர்.


சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட படங்களில் இதுதான் டாப் கிராஸர். வரும் வெள்ளிக்கிழமை வீரம் வீரு டொக்கடே என்ற பெயரிலும், இவன் வேற மாதிரி சிட்டிசன் என்ற பெயரிலும் ஆந்திராவில் வெளியாகின்றன.

முக்கியப் புள்ளிகளுக்கு பினாமியாக மாறிய இயக்குநர் லிங்குசாமி...?

ஒரே நேரத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்து வருகிறார் இயக்குநர் லிங்குசாமி.


அதோடு, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உட்பட அரை டஜன் இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஆளுக்கொரு ஆபீஸ் போட்டுக்கொடுத்து ஸ்டோரி டிஸ்கஷனில் உட்கார வைத்திருக்கிறார்.



இதை எல்லாம் பார்த்துவிட்டு லிங்குசாமிக்கு ஏதுய்யா இவ்வளவு பணம்? என்ற கேள்வி படத்துறையில் பரவலாக அடிபடுகிறது. அதற்கான பதிலாக இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள்.


லிங்குசாமி படம் எடுப்பது அவரது சொந்தப்பணம் இல்லை, அவரது பெயரில் திரையுலகில் புழங்கும் மொத்தப் பணமும் அழகிரியின் மகன் துரைதயாநிதியின் பணம். சுமார் 200 கோடியை லிங்குசாமியிடம் கொடுத்திருக்கிறார் துரை தயாநிதி என்கிறார்கள் கிசுகிசுப்பாக.


 இன்னொரு தரப்போ, இத்தகவலை அடியோடு மறுப்பதோடு லிங்குசாமியின் பணப்புழக்கத்துக்கான காரணமாக மதுரை அன்புவை சுட்டிக் காட்டுகிறார்கள்.


ஏறக்குறைய 50 கோடிக்கு மேல் மதுரை அன்புவிடம் கடன் வாங்கியுள்ளாராம் லிங்குசாமி. மாதத்தின் முதல் தேதி அன்று வாங்கிய கடனுக்கான வட்டியை கரெக்டாகக் கொடுத்துவிடுகிறாராம்.


அந்த நம்பிக்கையின் பேரில்தான் லிங்குசாமி எந்த நேரத்தில், எத்தனை கோடிகள் கேட்டாலும் அடுத்த அரை மணி நேரத்தில் ரெடி பண்ணி கொடுத்துவிடுகிறாராம் மதுரை அன்பு.

சினிமாவில் நாணயமாக நடந்து கொள்வது மிகப்பெரிய விஷயம்தான்..!

அசினு ரொம்ப நல்லவங்க..! கேரள அரசு விருது கொடுத்தாங்க..!


கேரளத்து பெண்குட்டியான அசின், ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தமிழுக்கு வந்தவர், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படம் மூலம் இந்திக்கு சென்று அங்கேயும் முன்னணி நடிகையாகி விட்டார்.


அங்குள்ள பிரபல ஹீரோக்களே அசினுக்கு பிரத்யேக சிபாரிசு செய்து வந்ததால், இப்போது வரை நீடித்துக்கொண்டிருக்கிறார்.


அவ்வப்போது மார்க்கெட் சரிந்தபோதும், யாராவது நடிகர்கள் புகுந்து அசினுக்கு கைகொடுத்ததால் இப்போதும் தாக்கு பிடித்துக்கொண்டிருக்கிறார்.


இதற்கிடையே தமிழ், தெலுங்கு, இநதியில் தான் இயக்கும் படத்தின் நாயகியாகவும் அசினை புக் பண்ணியிருக்கிறார் மணிரத்னம்.


இப்படி பரவலாக நடித்துக்கொண்டிருக்கும் அசின், சினிமாவில் தான் சம்பாதிக்கிற பணத்தின் ஒரு கணிசமான தொகையை சமூக சேவையில் செலவிட்டு வருகிறார். குறிப்பாக, அனாதை பிள்ளைகளை அவர் படிக்க வைத்து வருகிறார்.


 அவர்களது படிப்பு முடிகிற வரை மொத்த செலவையும் தானே ஏற்று வருகிறார். அதனால் அசினின் இந்த சமூக சேவையை உற்சாகப்படுத்தும் விதமாக சமீபத்தில் கேரளா அரசு, அசினை கெளரவித்துள்ளது.


இதையடுத்து, இன்னும் நிறைய சமூக சேவையை செய்ய தூண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அசின்.

நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் அலையும் அமிதாப் பச்சன்! என்ன கொடுமை சார்....!


பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகர் என கூறப்படும் நடிகர் அமிதாப் பச்சன்.


ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இந்த வயதில் எனக்கு அதிக வாய்ப்பு வருவதில்லை; நிறைய வாய்ப்புகள் தன்னை விட்டு போய்விட்டதாக கூறி உள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் அமிதாப் பேட்டி அளித்துள்ளார்.


 அதில், திரையுலகில் உங்களுக்கு வயதாகி விட்டால், உங்களுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்காது.


 அவ்வாறு வாய்ப்பு கிடைக்காத போது உங்களைத் தேடி எது வருகிறதோ அதனை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.


எப்போதும் இளம் எழுத்தாளர்களின் கதைகளில் வயதானவர்கள் நடிக்க வேண்டி உள்ளது.


அதனால் அவர்கள் தங்கள் வயதை ஒத்த நடிகர்களையே கதைக்கு தேர்வு செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

தலைவலி அதிகம் வரமல் தவிர்ப்பது எப்படி?

தலைவலி! இதனால் அவதிப்படாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். சிலருக்கு எப்போதாவது ஏற்படுவதுண்டு. ஆனால் சிலருக்கு அதுவே அன்றாட இம்சையாக இருக்கும்.

இதில், அதிகமாக சிக்கி அல்லல்படுபவர்கள். உலகின் பணக்கார நாடான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான்.

*இதுபற்றி அமெரிக்காவில் உள்ள தேசிய தலைவலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அமெரிக்காவில் தினமும் தலைவலியால் 4.5 கோடிப் பேர் அவதிப்படுகிறார்கள். இதில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 2 கோடியே 80 லட்சம் பேர்.

*தலைவலிக்கு பொதுவான காரணம் பதற்றம்தான். பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு தலைவலியால் பாதிப்பு ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு தலையின் இரண்டு பக்கமும் கழுத்தின் அடிப்பகுதியிலும் வலி இருக்கும்.

*இதைவிட ஒற்றை தலைவலியின் பாதிப்பு மிகவும் அதிகம். இவர்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் தலை சுற்றல் போன்றவை அதிகம் இருக்கும், வலியும் அதிகமாக இருக்கும். மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமான தூக்கம், ஏமாற்றம், பசி, உணவுக் கோளாறுகளால் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

எளிய முறையில் கையாண்டால் :

1. பொதுவாக இப்படிப்பட்ட தலைவலியால் தவிப்பவர்கள், சில எளிய முறைகளை கையாண்டால் இதுபோன்ற பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

2. தலைவலி ஏற்படுவதற்கு முன் அவர்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். தலைவலியின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

3. ஏனெனில் உடலில் நீர்சத்து குறைவு ஏற்பட்டாலும் தலைவலி வருவதுண்டு. சில உடற்பயிற்சி செய்வது நல்லது. இரவு நன்கு தூங்க வேண்டும்.

4. அதிக தூக்கமும் ஆபத்தைத் தரும். தலைவலி வரும்போது இருட்டு அறைக்குள் தனியாக அமர்ந்து இருக்கலாம்.

5. இப்படி ஏதாவது ஒரு முறையை கையாண்டால் ஒற்றை தலைவலியை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்!

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…


தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.


தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.


சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.


முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?


கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்
தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.


நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.


கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.


ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.


சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.


பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.


ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும். 

வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்!

வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்ற…த்தை விரட்டி அடித்துவிடலாம்.

ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.

மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

மருத்துவ ரீதியான காரணங்கள்:

தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும் இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள். அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவுமண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.

3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.

5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.

8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை

வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.
சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஜீத் நடிக்க ஷாலினி எதிர்ப்பு.!


அஜீத்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்துக்கு முருகதாஸ் ‘தல’ என்று பெயர் கூட வைத்துவிட்டாராம்.



அஜீத் தற்போது கவுதம் மேனனின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அவருடைய கால்ஷீட்டுக்காக கே.வி.ஆனந்த், விஷ்ணுவர்தன், ஆகியோர்கள் ஏற்கனவே காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டார் ஏ.ஆர் முருகதாஸ்.



தீனா படத்தில்தான் முதன்முதலாக அஜீத்தை ‘தல’ என்று கூப்பிட வைத்தது. அதன்பின்னர் மீண்டும் இருவரும் கஜினி படத்தில் இணைந்தனர். ஆனால் ஒருவாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. அந்த படத்தில் இருந்து அஜீத் திடீரென விலகினார். அதன்பின்னர் சூர்யா நடிப்பில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.



தற்போது ஒருஆக்ஷன் கதையின் திரைக்கதை முழுவதையும் முடித்து கையில் வைத்துள்ள முருகதாஸ் இந்த படத்தில் அஜீத் நடித்தால் மிகவ்ம் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரை நேரில் சந்தித்து கதையையும் கூறிவிட்டார். ஆனால் அஜீத்திடம் இருந்து இன்னும் முடிவு கிடைக்கவில்லை.



கவுதம் மேனனின் படத்தை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்யவேண்டும் என ஷாலினி வற்புறுத்தி வருவதால், மனைவியின் பேச்சுக்குத்தான் அவர் முதலிடம் கொடுப்பார் என கூறப்படுகிறது. மனைவி ஷாலினிகாக ஆபரேஷனுக்கு நேரம் ஒதுக்கிவிட்டு முருகதாஸ் படத்தை அஜீத் மறுத்துவிடுவார் என்றுதான் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

கோச்சடையான் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. வி.ஐ.பி வெளியிட்ட ஆதாரபூர்வ அதிர்ச்சி தகவல்.!


கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதையடுத்து இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதியை ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர் என்பது போல செய்திகள் தெரிவித்தன.


 இந்நிலையில் கோச்சடையான் படம் வெளிவரும் தேதி குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் கோலிவுட்டின் மிகப்பிரபலமான ஒரு வி.ஐ.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் கோச்சடையான் படம் வெளிவர வாய்ப்பே இல்லை என்பதுதான்.


கோச்சடையான் படத்தை முதலில் தயாரிப்பதாக ஒப்புக்கொண்ட நிறுவனம் EROS என்ற நிறுவனம்தான். ஆனால் அதன்பின்னர் EROS நிறுவனத்துடன் ரஜினியின் சார்பில் மீடியா ஒன் என்ற நிறுவனம் கோச்சடையானின் உரிமையை வாங்கியது.



 ரிலீஸுக்கு முன்பாக ரூ.50 கோடியை ரஜினியின் மீடியா ஒன் EROS நிறுவனத்திற்கு திருப்பிக்கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால் ரஜினி தற்போதைய நிலையில் ரூ.50 கோடியை திருப்பித்தரும் சூழ்நிலையில் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். அனிமேஷன் செலவுகள் அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டபடியால் தற்போது பணச்சிக்கலில் இருக்கின்றாராம் ரஜினிகாந்த்.



எனவே தியேட்டர் அதிபர்களிடம் இருந்து கோச்சடையான் படத்துக்காக அட்வான்ஸ் வாங்கி, அந்த பணத்தில் இருந்து ரூ.50 கோடியை திருப்பித்தந்துவிடலாம் என ரஜினி நினைத்தார். ஆனால் வழக்கமான ரஜினி படமாக கோச்சடையான் இல்லை என்றும், இது ஒரு பொம்மை படம் என்றும் பரவலாக செய்தி பரவி வருவதால் இந்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க தியேட்டர் அதிபர்கள் தயங்கி வருகின்றனர்.



 மேலும் இந்த படத்துக்கு பெரிய தொகை எதையும் அட்வான்ஸாக கொடுக்க முடியாது என்றும், படத்தின் வசூலை பொறுத்துதான் பணம் கொடுக்க முடியும் என்றும் தியேட்டர் அதிபர்கள் வெளிப்படையாக தெரிவித்து வருவதால் தற்போது EROS நிறுவனத்திற்கு எப்படி பணம் கொடுப்பது என தெரியாமல் ரஜினி பெருங்கவலையில் இருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - ‌விள‌க்க‌ம்


ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது.


ஆவாரம் பூவினுடைய மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பழமொழி இது. இந்த ஆவாரம் பூவில் அத்தனை விசேஷங்கள் உள்ளது.


ஆவாரம் பூ, அதன் கொழுந்து இலைகளைப் பறித்து காயவைத்து, உரலில் இடித்து தூளாக்கி அதனை டீ போல குடிக்கலாம்.


தேநீர் போன்று ஆவாரம்பூ நீர் போட்டு குடித்தால் எல்லா விதமான நோய்களும் விலகுகிறது.


இதே ஆவாரம் பூவை புங்கை மர நிழலில் உலர்த்தி பதப்படுத்தும் தே‌நீ‌ர் போ‌‌ன்று அரு‌ந்து‌ம் போது‌ம் எல்லா நோய்களும் நீங்கிவிடும்.


 அதனால், ஆவாரம் பூவை தேநீர் போன்று போட்டுக் குடித்தால் சாவே வராது என்று சொல்கிறார்கள்.


 அதானால்தான், ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்ற பழமொழி வந்தது.

ஆரம்பிக்கும் முன்பே விலைபோன ஆர்யா படம் !



ஆர்யா தனி ஹீரோவா நடித்து கடைசியாக வெற்றி பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன். அதிலும் சந்தானத்தின் பங்கு சரிபாதி. ஆர்யாவுக்கான வியாபார எல்லை சிவ கார்த்திகேயன் அளவுக்கும் இல்லை. அப்படியிருக்க ஆர்யாவின் படம் ஒன்றை ஆரம்பிக்கும் முன்பே விலை பேசியுள்ளதாம் ஒரு நிறுவனம்.



புறம்போக்கு, மீகாமன் படங்களில் நடித்துவரும் ஆர்யா விரைவில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல், ஆரம்பம் என்று விஷ்ணுவர்தனின் அதிக படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஆர்யா. விஷ்ணுவின் புதிய படத்தில் ஆர்யாவும், விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் நடிக்கின்றனர்.


படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நடிகர்கள் தேர்வு நடைபெறவில்லை. தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவாகவில்லை. இத்தனை இல்லைகளுக்கு நடுவில் விஷ்ணுவர்தனின் புதிய படநிறுவனமான விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.


எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதே அறியாத நிலையில் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை வாங்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனம் யுடிவியாக இருக்கும் என்பது கோடம்பாக்க பேச்சு.


புறம்போக்கு படத்தை அப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் இணைந்து யுடிவி தயாரித்து வருகிறது. அதேபோல் அஞ்சான் படத்தை அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமியுடனும், நான் சிகப்பு மனிதனை விஷாலுடனும் இணைந்து யுடிவி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சக்களத்தி சண்டை போட்ட சினேகா-ஓவியா. அதிர்ச்சியில் பிரசன்னா !


ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் பிரசன்னாவிற்கும், உடன் வேலை செய்யும் ஓவியாவிற்கும் காதல். இருவரின் ஒருவர் திடீரென வேலை மாற்றலாகி வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வேலையை விட காதல் பெரிது என எண்ணி ஒரு அதிரடி முடிவை எடுக்கிறார் பிரசன்னா.


அதனால் ஏற்படும் விளைவுகளை காமெடியுடன் கூறியுள்ள கூறியிருக்கிறாராம் “புலிவால்” படத்தின் இயக்குனர் மாரிமுத்து.


இந்த படத்தில் காதலர்களாக நடித்த பிரசன்னாவிற்கும் ஓவியாவிற்கு நிஜமாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக படக்குழுவினர் கிசுகிசுத்தனர்.


ஷாட் முடிந்ததும் இருவரும் கேரவனில் மணிக்கணக்கில் கடலை போடுகிறார்களாம். இந்த செய்தி சினேகாவில் காதில் விழுந்தவுடன் கொதித்து எழுந்துவிட்டாராம்.


பிரசன்னாவை உலுக்கி எடுத்ததோடு அல்லாமல் நேராக ஓவியா தங்கியிருக்கும் வீட்டிற்கே சென்று அசிங்கப்படுத்திவிட்டாராம்.


அந்த தெரு முழுக்க இதே பேச்சுதான். பின்னர் சினேகாவின் குடும்ப நண்பர் ஒருவர் வந்து சினேகாவை சமாதானப்படுத்தி அழைத்து சென்றிருக்கிறார்.


அந்த தெருவில் உள்ளவர்கள் இந்த சக்களத்தி சண்டையை பார்த்து வெறுத்து போய்விட்டார்களாம்.


பார்க்கத்தான் டீஸண்டாக இருக்கிறார்கள். ஆனால் சண்டை என்று வரும்போது இவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் சேரியைவிட மிக கேவலமாக இருந்ததாக புலம்பி வருகின்றனர் அந்த ஏரியாவாசிகள்.

ஊருக்கெல்லாம் 'தலைவர்'னா ரஜினி: ஆனால் தனுஷுக்கோ...



தலைவா படம் ரிலீஸானதில் இருந்து ரசிகர்கள் விஜய்யை தலைவா என்று அழைக்கிறார்கள்.



 அதே சமயம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ளவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தான் தலைவர் என்று அன்போடு அழைக்கிறார்கள்.



ஆங்கில பத்திரிக்கைகளும் ரஜினியை தலைவர் என்றே குறிப்பிடுகின்றன.



இப்படி ஊருக்கெல்லாம் 'தலைவர்' ரஜினியாக இருக்க அவரது மருமகன் தனுஷுக்கோ தலைவர் என்றால் அது கவுண்டமணியாம்.



கவுண்டமணியின் பிறந்தநாளையொட்டி தனுஷ் ட்விட்டரில் நேற்று தெரிவித்துள்ளதாவது,


எனது ஆல் டைம் பிடித்த நடிகர், என் தலைவர், தி ஒன் அன்ட் ஒன்லி கவுண்டமணி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

அப்ப ஆர்யா இப்ப விஜய்….


கோலிவுட்டில் அன்றும் சரி, இன்றும் சரி ஈவ்னிங் பார்ட்டில் என்றாலே அதில் இருக்கும் கிக்கே தனி தான்.


 இந்த பார்ட்டி கோஷ்ட்டியில் சமீபகாலமாக ஒரு பெரிய நடிகரின் தலை அடிக்கடி தென்படுகிறதாம்… ஆம் அந்த பெரிய நடிகர் வேற யாரும் இல்ல இளைய தளபதி விஜய் தான்.


நீங்க நினைக்கிற மாதிரி அந்த விஷயத்துக்கு இல்லீங்க, அவருடைய சகாக்களுடனும், இளம் தலைமுறை நடிகர்களுடன் ஜாலியாக பேசி பழக தான் இந்த திடீர் விசிட் என்கிறார்கள்…


இதேபோல் ஆர்யாவும் இந்த மாதிரி பார்ட்டிகளில் சுற்றிக் கொண்டிருந்தார்.


தற்போது பார்ட்டியே வேண்டாம்பா என்று கூறிவருகிறாராம், இந்த திடீர் திருந்தலுக்கு என்ன காரணம் என்று விசாரித்தால் “அங்கெ போனா குடிக்க கூப்பிட்றானுங்க” என்கிறாராம்…


காரணம் இதுமட்டுமல்ல வீட்டில் இவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம் தான்.


விஜய்யின் இந்த வருகையால் ஆனந்தத்திலும், குதூகலத்திலும் இன்னும் ரெண்டு ரவுண்ட் எக்ஸ்ட்ராவே போகிறதாம் எல்லோருக்கும் விஜயை தவிர…

அவர மாதிரி என்னையும் வீட்லையே உட்கார வைச்சிருவாரோ…?


தேர்தல் நேரம் வந்தாலே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படித்தான் போன சட்டமன்றத் தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலுவை அரசியலில் இறக்கி விட்டு அவரது திரையுலக வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள்.


இதனால் கடந்த மூன்று வருடங்களாக தமிழ்சினிமா அவரை ஓரங்கட்டி விட்டது.


இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வடிவேலு இடத்தில் இருக்கும் சந்தானத்தை வைத்து ஒரு முழு நீள னகாமெடிப்படம் எடுக்க ஆசைப்பட்டாராம் உதயநிதி ஸ்டாலின்.


முதலில் அவசரப்பட்டு ஒப்பு கொண்ட சந்தானம் பிறகு எங்கே தேர்தல் சமயத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக இதை பெரிய பிரச்சனையாக்கி விடுவார்களோ?


என்ற பயத்தில் பின் வாங்கி விட்டார். முதலில் என்ன ஜி உங்ககிட்ட எல்லாம் பேமண்ட் பேச முடியுமா? குடுக்குறதைக் குடுங்க என்று சொன்ன சந்தானம் இப்போது இந்த தொகையை கொடுங்க என்று கழற்றி விடும் எண்ணத்தில் ஒரு பெரிய தொகையை கேட்கிறாராம்.


ஆதலால் சந்தானத்தை வைத்து படம் பண்ணும் யோசனையை பின்னுக்குத் தள்ளி விட்டாராம் உதயநிதி.