Thursday 20 March 2014

ஆந்திராவில் ராஜா ராணி சக்சஸ்மீட் - எக்ஸ்க்ளுசிவ் தகவல்கள்!


சில படங்கள் ஏன் எதற்கு ஓடுகின்றன என்ற ரகசியத்தை கண்டுபிடிப்பது கடினம். சென்ற வருடம் வெளியாகி கண்டபடி ஓடி வசூல் செய்தது அட்லீ இயக்கிய ராஜா ராணி. படம் தமிழில் பம்பர்ஹிட்.


அதனை தெலுங்கில் டப் செய்து சென்ற வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.


முதல் மூன்று தினங்களில் நான்கு கோடியை வசூலித்து ஆந்திர நடிகர்களுக்கு ஜெர்க் தந்துள்ளது படம்.


 டப்பிங் படம் என்ற அளவில் இது அபாரமான வசூல்.



முதல்நாளே படத்தின் வெற்றியை அறிந்த தயாரிப்பாளர் முருகதாஸ், ஆர்யா, அட்லீ, ஜீ.வி.பிரகாஷ் அனைவரும் நேற்று ஹைதராபாத் பறந்தனர்.


சூட்டோடு சூடாக சக்சஸ்மீட்டும் நடத்தினர்.


சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட படங்களில் இதுதான் டாப் கிராஸர். வரும் வெள்ளிக்கிழமை வீரம் வீரு டொக்கடே என்ற பெயரிலும், இவன் வேற மாதிரி சிட்டிசன் என்ற பெயரிலும் ஆந்திராவில் வெளியாகின்றன.

0 comments:

Post a Comment