Friday 28 February 2014

'முக்தா' படங்களில் ரஜினி, கமல்!

ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்த படங்கள் உள்பட மொத்தம் 65 படங்களை 'முக்தா' சீனிவாசன் இயக்கியுள்ளார்.

1973-ம் ஆண்டு வித்யா மூவிஸ் சூரியகாந்தி என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்தை முக்தா சீனிவாசன் டைரக்ட் செய்தார். இதில் முத்துராமன், ஜெயலலிதா ஆகியோர் நடித்தனர். படம் வெற்றிப்படமானது.

'சூரியகாந்தி' பற்றி முக்தா சீனிவாசன் கூறியதாவது:-

'எந்த திரைப்பட டைரக்டருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சினிமாவே பிடிக்காத பெரியார் ஈ.வெ.ரா, 'சூரியகாந்தி' வெற்றி விழாவிற்கு வந்து கேடயம் வழங்க வேண்டும் என்று விரும்பினேன். கி.வீரமணிதான் பெரியாரிடம் என்னை அழைத்துச் சென்றார். பெரியாரிடம் விஷயத்தைக் கூறினேன்.

'படத்தின் கதை என்ன?' என்று பெரியார் கேட்டார். நான் சொன்னேன். பெரியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். விழா நடக்கும் தேதியை கேட்டு
குறித்துக்கொண்டார். விழாவுக்கு வருவதாக கூறினார்.

ஆனால் என் நண்பர்கள், 'பெரியார் வரமாட்டார்' என்று கூறினார்கள்.

ஆனால் பெரியார், விழாவுக்கு சரியான நேரத்திற்கு வந்து, ஒரு மணி நேரம் அனைவரையும் வாழ்த்திப்பேசி, கேடயங்களை வழங்கினார்.

அந்தப் படத்தில் நடித்ததற்காக தற்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கேடயத்தை கொடுக்கும்போது, 'இனி இந்த மாதிரி படங்களிலேயே நடியுங்கள்' என்று பெரியார் கூறினார்.

இன்றைக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தான் நடித்த சிறந்த படங்களுள் 'சூரியகாந்தி'யையும் ஒன்றாக கருதுகிறார். எனது டைரக்ஷனில், 'பொம்மலாட்டம்', 'அன்பைத்தேடி', 'சினிமா பைத்தியம்' ஆகிய படங்களில் ஜெயலலிதா நடித்துள்ளார்.'

இவ்வாறு 'முக்தா' கூறினார்.

முக்தா சீனிவாசன் டைரக்ஷனில், 'சினிமா பைத்தியம்', 'சிம்லா ஸ்பெஷல்' ஆகிய படங்களில் கமலஹாசனும், 'பொல்லாதவன்', 'சிவப்பு சூரியன்' ஆகிய படங்களில் ரஜினியும் நடித்து உள்ளனர்.

கமல் நடித்த 'நாயகன்' படத்தை 'முக்தா'சீனிவாசன் தயாரித்தார்.

இதுபற்றி முக்தா சீனிவாசன் கூறியதாவது:-

'கமலை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். ஒருமுறை கமல் நடித்த 'சினிமா பைத்தியம்' படத்தை பெருந்தலைவர் காமராஜருக்கு போட்டுக் காட்டினேன். அந்த நிகழ்ச்சிக்கு கமலையும் வரச்சொல்லி இருந்தேன்.

படத்தைப் பார்த்துவிட்டு காமராஜர் வெளியே வந்தபோது, கமல் உள்ளே நுழைந்தார். அப்போது கமலை பார்த்த காமராஜர், 'நீ பரமக்குடி சீனிவாசன் மகன்தானே, உன் தாயார் நலமாக இருக்கிறார்களா?' என்று கேட்டார்.

அதன் பிறகு என்னிடம் திரும்பி 'நான் பரமக்குடி செல்லும்போது இவர்கள் வீட்டில்தான் சாப்பிடுவேன்' என்று கூறினார். பின்னர் கமலை தட்டிக்கொடுத்து விட்டு சென்றார்.

ரஜினி கால்ஷீட் கொடுத்த தேதியில் குறித்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். காட்சி அமைப்புகளை மாற்றும்படி கருத்து எதுவும் சொல்லாமல், மிக மிக ஒத்துழைப்போடு நடித்தார். அந்த நட்புணர்வை நானும், அவரும் இன்றும் போன்றி வருகிறோம்.'

இவ்வாறு முக்தா சீனிவாசன் கூறினார்.

'கோடை மழை', 'கதாநாயகன்', 'சின்ன சின்ன ஆசைகள்', 'வாய்க்கொழுப்பு', 'கண்களின் வார்த்தைகள்' உள்பட 65 படங்களை முக்தா சீனிவாசன் டைரக்ட் செய்து உள்ளார். நிறைய படங்களை சொந்தமாக தயாரித்து இருக்கிறார்.

பல டெலிவிஷன் சீரியல்களையும் டைரக்ட் செய்து உள்ளார்.

சினிமா வாழ்க்கை பற்றி முக்தா சீனிவாசன் கூறியதாவது:-

'சினிமா வாழ்வில் எனக்கு ரோல் மாடல் டைரக்டர் கே.ராம்நாத்தான். அவரிடம் இருந்து நான் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாட்டை கற்றுக்கொண்டேன். இன்று வரை நான் எந்தத் தவறும் செய்யாமல் சினிமாத் துறையில் வாழ்க்கையை ஓட்டிவிட்டேன்.

பட உலகில் நடிகை மனோரமா, 'சோ', ஜெமினிகணேசன், நாகேஷ், லட்சுமி, ஸ்ரீபிரியா, ராதாரவி போன்றோர் என் நெருங்கிய நண்பர்கள். கடந்த 4 ஆண்டுகளாக நான் படத் தயாரிப்பில் ஈடுபடவில்லை. மீண்டும் வருகிற ஆண்டில் திரைப்படத் தொழிலில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறேன்' என்றார், முக்தா சீனிவாசன்.

இயக்குனர் ஆன பிறகு தான் திருமணம் என்ற முடிவில் இருந்த முக்தா சீனிவாசன் 'முதலாளி' படம் வெளியானதும் தன் அண்ணியின் தங்கையான பிரேமாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம், திருப்பதியில் நடந்தது.

திருமணத்தின்போது 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்த பிரேமா, பின்னர் பொருளாதாரத்திலும், இந்தியிலும் 'எம்.ஏ' படித்து பட்டம் பெற்றுள்ளார்.

இவர்களுக்கு ரவி, முக்தா சுந்தர் என்று 2 மகன்களும், மாயா என்ற மகளும் உள்ளனர். முக்தா சுந்தர் சினிமா துறையில் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் அமெரிக்காவில் சினிமா 'டெக்னிக்' படித்தவர்.

முக்தா சீனிவாசன் புத்தகங்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். 'இணையற்ற சாதனையாளர்கள்' உள்பட 45 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளார்.

1947-ம் ஆண்டில் சினிமாத் துறையில் சேர்ந்த 'முக்தா' சீனிவாசன், தற்பொழுது சினிமா துறையில் 59 ஆண்டுகள் முடிந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது, திரைப்படத்துறையில் 'முக்தா'வுக்கு இது வைர விழா ஆண்டு. 

கண்டிப்பாக உங்கள் கைபேசிக்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள்!

கண்டிப்பாக உங்கள் கைபேசிக்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள்

உங்கள் சிம் அட்டை மற்றும் கைபேசியை கடவுச்சொல்லை வைத்து பூட்டவும்.

உங்கள் கைபேசியில் உள்ள தானாக பூட்டிக்கொள்ளும் வசதியை செயல் படுத்தவும்.

உங்கள் கை பேசியில் உள்ள தகவல்களை குறியாக்கம் (encrypt) செய்யவும்

நம்பகமான ஒரு மென்பொருள் வழங்கும் நிறுவனத்தின் பாதுகாப்பு மென்பொருளை கைபேசியில் உபயோகிக்கவும்.

நம்பகமான வலைத்தளங்களின் மொபைல் பயன்பாடுகளை மட்டுமே தரவிறக்கம் செய்யவும்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை இணைய தளங்கள் மற்றும் மென்பொருள் வழங்கு நிறுவனங்கள் அணுக அல்லது பெற முயலும் பொழுது போது கவனமாக இருங்கள்

கோரப்படாத அல்லது எதிர்பாராத இணைப்புகளை கிளிக் வேண்டாம்

உங்கள் கைபேசி பில்லில் அசாதாரண தரவு கட்டணம் அல்லது பிரீமியம் அழைப்புகள் கட்டணம் ஆகியவற்றை சரிபார்க்கவும்

உங்கள் கை பேசியின் இயக்க முறைமைகளின் புதுப்பிப்புகளை (opeating system updates) அவ்வப்போது தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

Wi-fi மற்றும் ப்ளூடூத் வசதிகளை தேவையான பொழுது மட்டுமே புத்திசாலிதனமாக பயன்படுத்தவும்.

உங்கள் கைபேசியை மறுசுழற்சி (recycle) செய்ய முடிவு செய்தால், முதலில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை துடைத்து (wipe out) விடவும்.

உங்கள் சேவை வழங்குனரின் மொபைல் கண்காணிப்பு வசதியை பெறவும். இதன் மூலம் உங்கள் கைபேசி காணாமல் போகும் பொழுது அதன் செயல்பாடுகளை முடக்கி கைபேசியை செயலிழக்க செய்ய முடியும். .

கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்!!!!!...

கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்!!!!!...

நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்த பிறகு எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.

அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிகள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ-போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில்தானே வேலை பார்க்கிறோம் என்ற அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

கிருமிகளின் பட்டியல்

லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில் ஒரு கம்ப்யூட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீரியா அளவைவிட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.

அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவறை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலிபார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப்பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் வயிற்று வலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக்கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம் அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

சுத்தம் உங்கள் கையில்

தனிநபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறுத்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப்பும் அமைகிறது. பலர் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவதும் சகஜம்.

இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளியோ, இரப்பை குடல்அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் மிக எளிதாகத் தொற்றிவிடும்.

நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வதுதான், நமக்குக் கைவந்த கலையாயிற்றே. அதனால் கம்ப்யூட்டரில் வேலை செய்துகொண்டே எதையாவது கொறிப்பது அல்லது குடிப்பது என்பதைப் பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அப்படிச் சாப்பிடும் உணவுப்பொருள் தெரியாமல் கம்ப்யூட்டர் கீ போர்டில் விழுந்துவிடும். அப்படி விழுகிற உணவுத் துணுக்கை ஆதாரமாகக் கொண்டு பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகிவிடும்.

சுய சுத்தத்தை விடுங்கள். நம்மில் எத்தனை பேர் கம்ப்யூட்டரையும் மவுஸையும் அடிக்கடி சுத்தம் செய்கிறோம்? கீ போர்டில் தூசுப்படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல்லையென்றால் இது அலுவலக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள்வார்கள் என்ற நினைப்பு, சுத்தத்தைத் துரத்தி விடுகிறது.

சில அலுவலகங்களில் இடம் மாறியோ, வேலை நேரம் மாறியோ ஷிப்ட்களில் வேலை செய்வார்கள். அப்போது ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படுத்த நேரிடும். இதுபோன்ற சூழ்நிலையில் சுத்தம் செய்வது எவ்வளவு தூரம் கேள்விக்குறியோ, அவ்வளவு தூரம் கிருமிகள் பரவுவதும் நிச்சயம்.

என்ன செய்யலாம்?

குறிப்பிட்ட கால இடைவெளியில் கீ போர்டு, மவுஸ், செல்போன் ஆகியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டைத் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூலம் அதனுள்ளே சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகளையோ, சிறிய குப்பையையோ அகற்றலாம். மெல்லிய துணியின் மூலம் இவற்றைத் துடைத்தெடுக்கலாம்.

இவை அனைத்தையும்விட ரொம்ப முக்கியம் சுயச் சுத்தம். எங்கெல்லாம் கிருமித் தொற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல் லாம் சென்றுவந்த பிறகு கைகளைச் சுத்தம் செய்வது நல்லது. அதுவும் வெறும் தண்ணீரிலோ அல்லது சுத்திகரிப்பான் மூலமாகவோ சும்மா கழுவுவதால், பாக்டீரியாக்கள் முழுமையாக அழிவதில்லை. சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக் குறைந்தபட்சம் 30 விநாடிகள் தேய்த்துக் கழுவ வேண்டும்.

அதேபோலச் சாப்பாடோ, கொறிப்போ எதையும் தூசி பறக்கும், மனிதர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலோ சாப்பிடுவதைத் தவிருங்கள். இப்படிச் சுத்தத்தைப் பராமரிக்கத் தவறினால் பின்னால், அவதிப்படப் போவது வேறு யாருமல்ல, நாம்தான்.

படித்ததில் பிடித்தது !

படித்ததில் பிடித்தது 

துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்ற தொரு காலம்...!!!

• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
.
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை

உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன

தமிழில் ஆஸ்திரேலிய நடிகை!

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் மெலிசா. இவர் மகா மகா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் மதிவாணன் ஹீரோவாக நடித்து படத்தை இயக்குகிறார்.


இளையராஜா அண்ணன் வரதராஜனின் மகன் பாவலர் சிவா இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தின் பாடல்களை கேட்ட இளையராஜா, சிவாவுக்கு பாராட்டு தெரிவித்தார். வேலை விஷயமாக ஆஸ்திரேலியா செல்லும் இளைஞன், அங்கு ஒரு பெண்ணை காதலிக்கிறான். திடீரென அவள் காணாமல் போகிறாள்.


அதிர்ச்சி அடையும் காதலன் தனது தோழியுடன் சேர்ந்து காதலியை ஆஸ்திரேலியா முழுவதும் தேடுகிறான். த்ரில்லர் படமாக உருவாகும் இதன் ஷூட்டிங் முழுவதும் ஆஸ்திரேலியாவில் சிட்னி மற்றும் கடற்கரை பகுதிகளில் நடந்துள்ளது.


பிரேம் ஒளிப்பதிவு. இதில் நிழல்கள் ரவி, அனுபமா குமார் மற்றும் ஆஸ்திரேலிய நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ளனர். 

துபாயில் காஜலுடன் சுற்றிய வாலிபர் யார்? தங்கை பரபரப்பு பதில்!

துபாயில் காஜலுடன் சுற்றிய வாலிபர் அவரது பல பாய் பிரண்ட்களில் ஒருவர் என்றார் காஜலின் தங்கை நிஷா. சமீப காலமாக ஹீரோயின்கள் தங்கள் காதலர்களுடன் டேட்டிங் என்ற பெயரில் வெளிநாடுகளில் சுற்றி திரிவதுடன், நண்பர்களின் பார்ட்டிகளிலும் கலந்து கொள்கின்றனர்.


 துப்பாக்கி, ஜில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். சமீபத்தில் இவரது தங்கை நிஷாவுக்கு அவரது காதலன் கரண் வலேச்சா என்பவருடன் திருமணம் நடந்தது. அக்காவுக்கு திருமணம் (காஜல்) செய்யாமல் தங்கைக்கு திருமணம் செய்வது ஏன் என்ற போது, நான் சினிமாவில் பிசியாக இருப்பதால் எனது திருமணத்தை தள்ளி போட்டிருக்கிறேன் என்று காஜல் பதில் அளித்தார். நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என்ற போது, யாரையும் காதலிக்கவில்லை என்றார்.


இந்நிலையில் காஜல் அகர்வால் தனது பாய் பிரண்டுடன் துபாயில் சுற்றித் திரிந்த காட்சிகள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து காஜல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அவரது தங்கை நிஷா கூறும்போது, ‘காஜலுக்கு நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது.


அவர்களுடன் இணைந்து எடுத்து கொண்ட பல்வேறு படங்களை அவரே தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதுபோல்தான் இந்த படமும். இதை ஊதி பெருக்க பார்க்கிறார்கள். இதுபற்றி யாரும் பெரிய அளவில் கற்பனையை வளர்த்து கொள்ள வேண்டாம். யாரையாவது காதலித்தால் அதை காஜல் தானாகவே முன்வந்து வெளியில் சொல்வார் என்றார். - 

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

பல நடிகைகளும் நடிக்க மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தை தைரியமாக ஏற்று நடித்துள்ளார் டிவி நடிகை சான்ட்ரா எமி.

மனைவி உள்பட பல சன் டிவி சீரியல்களில் நடித்திருப்பவர் பிரஜின். இவர் மனைவிதான் சான்ட்ரா. இவரும் பல சீரியல்களில் நடித்துள்ளார். சுற்றுலா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சிவப்பு எனக்குப் பிடிக்கும் என்ற படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க பல நடிகைகளையும் கேட்டுப் பார்த்துள்ளார் இயக்குநர் யுரேகா.

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

ஆனால் பாத்திரத்தின் தன்மையைக் கேட்டபிறகு யாரும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இந்த வேடத்தில் நடித்தால் நிச்சயம் தன்னைப் பற்றி அதேபோன்ற இமேஜ்தான் இருக்கும் எனும் அளவுக்கு அந்த கேரக்டர் இருந்ததாம்.

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

ஆனால் சான்ட்ரா அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். அந்த பாத்திரத்தில் நடிப்பதில் உறுதியாக இருந்தாராம். பல காட்சிகளில் துணிச்சலாக நடித்துள்ளாராம்.

ஒரு நடிகை என்ற சாயலே இல்லாத மாதிரி நடித்து அசத்தியுள்ளாராம் சான்ட்ரா.

அவரு பார்த்தால்தான் எனக்கு திருப்தி!


ரன்தீப் ஹுடாவுக்கு நஸ்ருதீன் ஷா மீது அளப்பரிய மரியாதை. அவரின் பாராட்டு தேசிய விருதைவிட முக்கியமானது. நஸ்ருதீன் ஷாவுக்கும் ஹுடா மீது தனிப் பாசம். இந்த முகவுரைக்கு காரணம் உள்ளது.

ரன்தீப் ஹுடாவின் ஹைவே படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஹுடா கலக்கிட்டார் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் படத்தை ரன்தீபின் காட்ஃபாதர் இன்னும் பார்க்கவில்லை.


யார் என்ன சொல்லுங்க... நஸ்ருதீன் ஷா பார்த்தாதான் ஹைவே முழுமையடையும் என்று ஹுடா கறாராக சொல்லிவிட்டார். இதற்கிடையில் படம் பார்த்த பலரும் ஷாவுக்கு போனை போட்டு உங்க சிஷ்யன் நல்லா பண்ணியிருக்கான் என்று பாராட்டியிருக்கிறார்கள். ஆக, குருவும் சந்தோஷம்.


இந்த கண்ணாமூச்சி இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியாது. படத்தைப் பார்த்து சிஷ்யா சூப்பர் என்று பாராட்ட ஷாவுக்கு என்ன தடை? அதுதான் புரிய மாட்டேங்குது.

மணிரத்னம் படத்தின் ஒளிப்பதிவாளர்!


கடைசியில் மணிரத்னம் படம் குறித்த உறுதியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மணிரத்னத்தின் புதிய படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறவர் ரவி வர்மன்.


ரவி வர்மன் அந்நியன், தசாவதாரம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்தியில் வெளியான பர்பி படத்துக்கும் இவர்தான் கேமராமேன். மணிரத்னம் படத்துக்கு இவர் ஒளிப்பதிவு செய்வது இதுவே முதல்முறை.


மணிரத்னம் படத்துக்குப் படம் மாற்றுகிற ஒருவர் ஒளிப்பதிவாளர். தொடர்ந்து ஒரே ஒளிப்பதிவாளரை அவர் பயன்படுத்துவதில்லை. ஆனால் ராஜீவ் மேனன், சந்தோஷ் சிவன் என்று சொற்பமான பேரையே பயன்படுத்தவும் செய்வார். எப்போதாவது பி.சி.ஸ்ரீராம்.


கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ரவி.கே.சந்திரனுடன் பணிபுரிந்தார். அவருடன் மணிரத்னம் வேலை பார்ப்பது அதுவே முதல்முறை. 12 வருடங்களுக்குப் பிறகு அவர் வேலை செய்யப் போகும் புதிய கேமராமேன் ரவி வர்மன்.


மகேஷ்பாபு, நாகார்ஜுன், ஃபகத் ஃபாசில், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

நான் சிகப்பு மனிதன் - விஷாலின் இன்னொரு அதிரடி !

ஏப்ரல் பதினொன்று சொன்ன தேதியில் படத்தை வெளியிடுவோம். கோச்சடையானைப் பார்த்தெல்லாம் கவலையில்லை என்று விஷாலும், இயக்குனர் திருவும் உறுதியாக இருக்கிறார்கள் தங்கள் முடிவில். சூப்பர்ஸ்டாருக்கே அஞ்சாதவர்கள் பேய்க்காக பயப்படுவார்கள்?


பொதுவாக 13 ஆம் தேதியில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஏன் ஹோட்டலில்கூட 13 ஆம் எண் அறையில் தங்க மாட்டார்கள். அது பேய்க்குரிய எண். அதை முடிந்தவரை தவிர்க்கவே அனைவரும் விரும்புவர்.


சிகப்பு மனிதர்கள் விஷாலுக்கும், திருவுக்கும் 13 மற்றுமொரு எண். இந்த மாதம் 13 ஆம் தேதியில் நான் சிகப்பு மனிதனின் பாடல்கள் வெளியீட்டை வைத்துள்ளனர். சத்யம் சினிமாஸில் வெளியீட்டு விழா நடக்கிறது.


விஷால் ஃபிலிம் ஃபேக்டரியும், யுடிவியும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. பண்டிகை தினங்களிலும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளிலும் மட்டுமே பெரிய படங்களை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பதில் தமிழ்ப் புத்தாண்டான 14 ஆம் தேதி நான் சிகப்பு மனிதன் வெளியாகும் என தெரிகிறது.

பறக்கும் கல்லறை மனிதன் - திரைவிமர்சனம்!

நடிகர் : ஆருன் ஏகார்ட்
நடிகை : யுவானி ஸ்ட்ராகோவ்ஸ்கி
இயக்குனர் : ஸ்டூவார்ட் பீட்டி
இசை : ஜானி கிளிமெக்
ஓளிப்பதிவு : ரோஸ் எமிரி

படத்தின் கதை 1795-ல் இருந்து தொடங்குகிறது. விக்டர் என்ற விஞ்ஞானி இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கும் ஆய்வை செய்து வருகிறார். இந்த ஆய்வின் மூலம் 8 பிணங்களின் உறுப்புகளை கொண்டு ஒருவனை உருவாக்குகிறார். அவன் தான் கல்லறை மனிதன். இவனுக்கு உயிர் இருந்தும் ஆன்மா கிடையாது. அதனால் இவனுக்கு அழிவே கிடையாது.

இவனை உருவாக்கியதன் மூலம் பிற்காலத்தில் பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கிறார் விக்டர். இதனால் கல்லறை மனிதனை அழிக்க பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி வீசுகிறார். ஆனால் கல்லறை மனிதன் அழியாமல், தன்னை அழிக்க நினைத்த விக்டரை பழி வாங்க திட்டம் தீட்டுகிறான். அதன் விளைவாக விக்டரின் மனைவியை கொன்று விட்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பனி பிரதேசத்திற்கு போய்விடுகிறான்.

இதை அறிந்த விக்டர், கல்லறை மனிதனை தேடி பனி பிரதேசத்திற்கு செல்கிறார். அங்கு பனியின் தாக்கத்தால் விக்டர் இறந்து விடுகிறார். தன்னை படைத்தவன் என்ற காரணத்தினால் கல்லறை மனிதன், விக்டரை அடக்கம் செய்கிறான். அப்போது அங்கு வரும் அரக்கர்கள், கல்லறை மனிதனை தாக்குகிறார்கள். அதில் ஒரு அரக்கனை இவன் கொன்று விடுகிறான். இதைப் பார்க்கும் அரக்கர்களின் எதிரியான கார்கோலிஸ் இனத்தை சேர்ந்தவர்கள் கல்லறை மனிதனையும், இவனை உருவாக்கிய குறிப்பு அடங்கிய டைரியையும் காப்பாற்றி, வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

மனிதனும் அல்லாத, அரக்கனும் அல்லாத, கார்கோலிஸும் அல்லாத கல்லறை மனிதனை கொன்றுவிடுமாறு தன் ராணியிடம் படைத்தளபதி கூறுகிறான். இதற்கு ராணி மறுப்பு தெரிவிக்கிறாள். மேலும் அவனிடம் ஏதோ மனித நேயம் இருக்கிறது. அதனால் இவனை நம்மிடமே வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறாள்.

இந்நிலையில் கல்லறை மனிதனையும் விக்டரின் டைரியையும் தேடி அரக்கர்கள் அலைகிறார்கள். இறுதியில் கல்லறை மனிதனை அவர்கள் கண்டுபிடித்தார்களா? டைரியை கைப்பற்றினார்களா? என்பதே மீதிக்கதை.

கல்லறை மனிதனாக நடித்திருக்கும் ஆருண் ஏகார்ட், கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் சிக்ஸ் பேக் உடற்கட்டோடு சண்டை காட்சியில் மிரள வைக்கிறார். நாயகி யுவானி ஸ்ட்ராகோவ்ஸ்கி சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார். ஜானி கிளிமெக்கின் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம். ரோஸ் எமிரியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. இயக்குனர் ஸ்டூவார்ட் பீட்டி திரைக்கதையில் விறுவிறுப்பை அதிகப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

மொத்தத்தில் ‘பறக்கும் கல்லறை மனிதன்’ அழிவில்லா மனிதன். 

வெற்றிமாறன் ஐ.பி.எஸ். - திரைவிமர்சனம்!

நடிகர் : மோகன் லால்
நடிகை : ஆஷா சரத்
இயக்குனர் : மேஜர் ரவி
இசை : ஸ்ரீ குமார்
ஓளிப்பதிவு : பிரதீப் நாயர்

மும்பையில் மிகப்பெரிய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன்லால். இவர், அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கும் அதிரடி போலீஸ்காரராக வலம் வருகிறார். இந்நிலையில், மர்ம கும்பலால் பள்ளிச் சிறுமி கடத்தப்படுகிறாள். அவளை கடத்திய கும்பல் யார் என்பதை விசாரிக்கும் மோகன்லால், அந்த கும்பல் இது போல் பள்ளிச் சிறுமிகளை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலையை செய்து வருவது தெரிகிறது. அதன்படி, கடத்திய சிறுமிகளை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்புவதும் தெரிகிறது. உடனே, மோகன்லால் அந்த கும்பலை தேடி கேரளாவுக்கு வருகிறார்.

மும்பையில் கடத்தியது போன்றே கேரளாவிலும் சிறுமி ஒருவள் கடத்தப்படுகிறாள். இந்த கடத்தல் வேலைகளை செய்வது யார் என்பதை துப்பறியும் மோகன்லால் இறுதியில் அந்த கும்பலை பிடித்தாரா? சிறுமிகளை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

ஐ.பி.எஸ். அதிகாரியாக மோகன்லால் மிடுக்கான தோற்றத்துடன் வலம் வருகிறார். ஆனால், படத்தில் இவர் ஒரு காட்சியில் கூட போலீஸ் உடை அணிந்திருப்பதை பார்க்க முடியவில்லை. யாரையும் பாரபட்சம் இன்றி அடித்து துவைப்பது, யாருக்கும் மரியாதை கொடுக்காதது என துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கடத்தப்பட்ட தனது மகளை காப்பாற்ற துடிக்கும்போது பாசத்தில் நம்மையும் நெகிழ வைக்கிறார்.

படத்தில் மோகன்லாலுக்கு இணையாக பேசப்படுவர் வில்லன் முரளி சர்மா தான். இவருடைய ஆண்மை இழப்புக்கு மோகன்லால் காரணம் என்பதால் அவரது மகளை பழிவாங்க துடிப்பதும், சோனாவுடம் நெருக்கமாக இருக்கும் காட்சியில் தன்னால் அந்த சுகத்தை அனுபவிக்க முடியவில்லையே என எண்ணி அழுவதுமாக நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இறுதிக்காட்சியில் சிரித்து, சிரித்து மோகன்லாலை அழவைப்பதில் சிகரம் தொடுகிறார்.

மற்றபடி, படத்தில் வரும் மலையாள நடிகர் முகேஷ், சோனா உள்ளிட்ட பலரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கஷ்டப்பட்டு சம்பாதிப்பதில் காட்டும் அக்கறையை, அவர்கள் பாதுகாப்பில் காட்டுவதில்லை என்பதை வலியுறுத்தி படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் மேஜர் ரவிக்கு சலாம் போடலாம். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகளை நீளமாக வைத்து விறுவிறுப்பை குறைத்திருக்கிறார். நிறைய இடங்களில் வசனங்கள் புரியவில்லை.

படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் ஒரு பாடலைத் தவிர வேறு பாடல்கள் இல்லை. ஆரம்ப பாடலும் கேட்கும்படியாக இல்லை. பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஸ்ரீகுமார் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் பளிச்சிட்டாலும், பல இடங்களில் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது.

மொத்தத்தில் ‘வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.,’ வேகம் இல்லை. 

காவியத் தலைவன்: கிட்டப்பா, சுந்தராம்பாள் கதை அல்ல: வசந்தபாலன்

அரவான் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் படம் காவியத் தலைவன், சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா ஷெட்டி நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரிலையன்ஸ் மீடியாவும், ஒய்நாட் ஸ்டூடியோவும் இணைந்து தயாரிக்கிறது. பலகோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை ஓசைப்படாமல் எடுத்து வருகிறார் வசந்தபாலன். இந்தப் படம் பழம்பெரும் நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாளின் கதை என்று கூறப்பட்டது.


இதுகுறித்து வசந்தபாலன் எதுவும் சொல்லாமல் மவுனம் சாதித்து வந்தார். இப்போது முதன் முறையாக படம் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: அங்காடி தெரு படப்பிடிப்பின் போது எழுத்தாளர் ஜெயமோகன் என்னிடம் நாடக கலைஞர்களின் வாழ்க்கை பற்றி நிறைய பேசினார். மேக்-அப், நாட்டியம், நாடகம், நடிப்பு, கைதட்டல் என அவர்கள் ஒரு வித்தியாசமான உலகத்தில் வாழ்ந்திருந்கிறார்கள்.


அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்ய முடிவு செய்திருந்தேன். அதுதான் காவியத் தலைவன். அரவான் படத்திற்கு முன்பே இந்த படத்தை இயக்க இருந்தேன். இது பெரிய பட்ஜெட் படம். அந்த அளவுக்கு தயாரிப்பாளர் கிடைக்காததால் ஒதுக்கி வைத்திருந்தேன். கிடைத்த உடன் ஆரம்பித்து விட்டேன்.


இது மேடை நாடக கலைஞர்களை பற்றிய கதை. தனிப்பட்ட யாருடைய கதையையும் சொல்லவில்லை. கிட்டப்பாவின் நேரடி வாரிசுகள் இதுபற்றி என்னிடம் கேட்டார்கள். இது அவர்களின் காதல் கதை இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டேன். மொத்த ஆயுளையும் நாடகத்துக்காக அர்ப்பணித்த ஏழைக் கலைஞர்களின் கதை. அதற்குள்ளும் காதல், ஏக்கம், வறுமை, நம்பிக்கை நிறைந்திருக்கிறது.


கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் நாடக வாழ்க்கையும், காதலும் சின்ன இன்ஸ்பிரேசன்னு சொல்லிக்கலாம். சித்தார்த்திடம் கொஞ்சம் கிட்டப்பாவின் சாயல் இருக்கும் அதனால் அவரை தேர்வு செய்தேன். முக்கிய கேரக்டரில் பிருத்விராஜை கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டார். இசைக்கு முக்கியத்தும் மிக்க படம் என்பதால் ரகுமானும் இசை அமைக்க ஒப்புக் கொண்டார். படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு வசந்தபாலன் கூறியுள்ளார்.

கோச்சடையானில் நாகேஷூம் நடித்துள்ளார் - செளந்தர்யா பேட்டி!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை ஹீரோவாக்கி இயக்குநராக அவதரித்தார். முதல்படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதனையடுத்து ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா, ஒருபடி மேலே போய், தன் அப்பாவையே தன் முதல்படத்தில் ஹீரோவாக்கி களம் இறக்குகிறார். அந்தப்படம் தான் கோச்சடையான். 3டி அனிமேஷன் படமாக, இந்திய சினிமாக்களில் முதன்முறையாக மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் செளந்தர்யா. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் இப்படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் கோச்சடையான் படத்தை பிரபலப்படுத்தும் வகையில் கார்பன் மொபைல் போனில், கோச்சடையான் மொபைல் என்று வெளியிட்டுள்ளனர். இதற்கான விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் செளந்தர்யா,

கோச்சடையான் டெக்னாலஜி படம்

கோச்சடையான் சாதாரண படம் கிடையாது. 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள டெக்னாலஜி படம். பொதுவாக மக்கள், சினிமாக்காரர்கள் ஒருபடத்தை ஐந்தாறு மாதங்களில் எடுத்து அடுத்து இரண்டு மாதங்களில் ரிலீஸ் பண்ணி விடுகிறார்கள் என்றே எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அது அக்ஷ்ன் போன்ற கமர்ஷியல் படங்களுக்கு செட்டாகும். இதுபோன்ற அனிமேஷன் படங்களுக்கு ஒத்துவராது. கோச்சடையான் படம் இவ்வளவு காலம் தாமதமாகி செல்ல, அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம் தான் காரணம். அவதார் போன்ற படங்களை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியிருக்கிறது. கோச்சடையான் ஆக்ஷ்ன் படம் கிடையாது, டெக்னாலாஜி நிறைந்த படம். படத்தின் கதை கூட டெக்னாலஜி நிறைந்த கதை தான். இதில் பணியாற்றி இருப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகள்.

அப்பாவை இயக்கியது சந்தோஷம்

அப்பாவை வைத்து படம் இயக்கியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு அப்பாவாக அவர் இருக்கும் போது மிகவும் பொறுப்புணர்ச்சியுடன், பாதுகாப்புடன் இருப்பார். அதேசமயம் நடிகராக தொழில்பக்தியுடன் இருப்பார். திறமைசாலிகளை எப்பவும் அப்பா ஊக்குவிப்பார், அதேப்போல் ஒருமகளாக, இயக்குநராக எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தார்.ஒரு மகளாக நான் இந்தப்படத்தை இயக்கும்போது தீபிகாவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க அப்பா ரொம்ப சங்கடப்பட்டார். இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். அப்பா மட்டுமல்ல இப்படத்தில் நடித்துள்ள சரத்குமார், ஆதி, நாசர் உள்ளிட்ட எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

கோச்சடையானில் நாகேஷூம் இருக்கிறார்

கோச்சடையான் படத்தை பற்றி இதுவரை வெளிவராத ஒரு தகவலை சொல்லப்போகிறேன். இந்தப்படத்தில் மறைந்த நடிகர் நாகேஷூம் நடித்துள்ளார். உண்மையில் இந்தப்படத்தில் அவர் நடிக்கவில்லை. மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது முகம் மற்றும் உடலை வைத்து அவரும் நடித்தது போன்று எடுத்துள்ளோம். திரையில் ரசிகர்கள் பார்க்கும்போது நாகேஷ், நிஜத்தில் நடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கோச்சடையான் படத்தின் ஆடியோ சி.டி.யின் கவர்பேஜிலேயே நாகேஷின் உருவத்தை வெளியிட்டுள்ளோம். இதன்மூலம் அவருக்கு இப்படத்தை சமர்ப்பிக்க எண்ணியுள்ளோம்.

கோச்சடையான் படத்தின் ஆடியோ ரிலீஸ் மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரலில் படம் ரிலீஸாகும். கோச்சடையான் படத்திற்கு ரசிகர்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்து வருங்காலத்தில் இதுபோன்ற படங்களை நான் நிறைய எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

அரைசதம் அடித்த தல, தளபதி!

தல நடித்த வீரமும், தளபதி நடித்த ஜில்லாவும் 50 நாட்கள் ஓடி அரைசதம் அடித்துள்ளது. அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டர். பாட்டு, பைட்டு, தலயின் வில்லேஜ் கெட்டப்பு, சால்ட் அண்ட் பெப்பர் லுக்குன்னு தல ரசிகர்களும், பொது ரசிகர்களும் தலப்பொங்கலை கொண்டாடினார்கள். "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க... என்னை கெட்டவன்னு சொல்வாங்க திட்டிடாதீங்க..."ன்னு இன்னும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது 50வது நாளுக்கு வந்துவிட்டது வீரம்.


சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, சாந்தி, அபிராமி, மாயாஜால் ஆகிய மால் தியேட்டர்களில் தல இன்னும் வேட்டிய மடிச்சுக்கட்டியபடி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 தியேட்டர்களில் வீரம் வெற்றி நடைபோடுவதாக விநியோகஸ்தர்கள் ஏரியா தகவல்கள் தெரிவிக்கிறது.


இளைய தளபதி விஜய்யும், கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்து நடித்த ஜில்லாவை ஆர்.டி.நேசன் டைரக்ட் செய்திருந்தார். காஜல் அகர்வால் ஹீரோயின். பொங்கலையொட்டி வெளியான ஜில்லா 50வது நாளுக்கு வந்துவிட்டது. சத்யம், ஸ்கேப், தேவி, அபிராமி, சங்கம், ஆல்பட், பெரம்பூர் எஸ் 2, பிவிஆர், உதயம், கமலா, வளாகங்களில் ஜில்லா கொடி இன்னும் பறக்கிறது. தமிழ்நாட்டில் 60 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

100 வது நாளை தொடுவது யார்? தலையா, தளபதியா? 'வீ ஆர் வெயிட்டிங்'.

'அமரா' - திரைவிமர்சனம்!

நடிகர் : அமரன்
நடிகை : சோனு
இயக்குனர் : ஜீவன்
இசை : டி.இமான்
ஓளிப்பதிவு : ராஜா முகமது

கிராமத்தில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களோடு ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார் நாயகன் அமரன். இப்படி பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதை தாயார் கண்டித்தும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் தன் நண்பர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஊருக்கு செல்ல உற்சாகத்துடன் தயாராகிறார் அமரன். ஆனால், அவரது நண்பரோ, வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிவரும் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் என்று கூறி அவரை விட்டுச் செல்கிறார்.

இதனால் மனமுடைந்து போன அமரன், வேலைக்குச் செல்ல முடிவெடுத்து மதுரையில் காய்கறி கடை நடத்திவரும் தன் அத்தையிடம் வேலைக்குச் செல்கிறார். ஒருநாள் இவர் மார்க்கெட்டில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கும்போது ஒருவர் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் செல்கிறார். பணத்தை தராமல் சென்றது போலீஸ்காரர் என்று தெரியாமல் அவரிடம் சண்டை போடுகிறார். அதை தடுக்க வந்த போலீஸ் அதிகாரியான சம்பத்தையும் அடித்து விடுகிறார் அமரன்.

போலீஸூடன் சண்டை போட்டதால் அமரனின் அத்தை, அவரை ரெயிலில் சென்னைக்கு அனுப்பி விடுகிறார். ரெயிலில் அமரனை சந்தித்த நாயகி சோனு, அவருடனே ஒட்டிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ரெயிலை தவற விடுகின்றனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த இவர்களை ஒருவர் புகைப்படம் எடுத்து பத்திரிக்கை ஒன்றில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்றதாக செய்தி வருகிறது. இதை அறியும் சோனுவின் தந்தையான ஆஷிஷ் வித்யார்த்தி, இவர்களை கொல்ல திட்டம் தீட்டுகிறார்.

மறுநாள் விடிந்த பிறகு சோனு, அமரனிடம் நீ யார்? என்னை எதற்கு கடத்தினாய்? என்று சத்தம் போடுகிறார். அமரன் நடந்ததையெல்லாம் சோனுவிடம் விவரிக்கிறார். இதற்கு சோனு, நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன். இதற்கு சம்மதித்த என் தந்தையை சந்திக்க காதலனை அழைத்துக்கொண்டு நான் ஊருக்கு ரெயில் சென்று கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னிடம் மயக்க பிஸ்கட் கொடுத்து விட்டார்கள் என்று கூறுகிறார். எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என் காதலனையும் காணவில்லை என்று கூறி புலம்புகிறாள். காதலனை கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறு அமரனை கேட்கிறாள்.

அமரனும், சோனுவும் காதலனை தேடி அவரது வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு தன் அப்பா ஆஷிஷ் வித்யார்த்தி காதலனை கொன்றுவிட்டதாகவும், தன்னையும் கொல்ல தேடி வருகிறார் என்பதையும் அறிகிறார் சோனு.

இறுதியில் அமரனும், சோனுவும் ஆஷிஷ் வித்யார்த்தியிடம் மாட்டிக் கொண்டார்களா? அல்லது போலீஸ் அதிகாரியான சம்பத்திடம் சிக்கினார்களா? காதலிக்காத இவர்கள் இரண்டுபேரும் காதலித்தார்களா? என்பதே மீதிக்கதை.

அமராவாக நடித்திருக்கும் அமரன், நடனம், சண்டை, காதல் என அனைத்திலும் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகி சோனுவுக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். வில்லனாக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் சம்பத் ஆகியோர் அவர்களுக்கே உள்ள பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

டி.இமான் இசையில் பாடல்களை ரசிக்கலாம். ராஜா முகமது ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. இயக்குனர் ஜீவன் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘அமரா’ சுமார்

டிப் டாப் போலீசாக வேட்டையாடி விளையாடவுள்ள அஜித்!

தல அஜித் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் துவங்கவுள்ளதாக ஏற்கெனவே பேசப்பட்டுவருகிறது. இப்படத்திற்கு அஜித் தனது உடல் எடையைக் குறைத்துவருவதாகவும், இதற்காக அவர் ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்துவருவதாகவும் கூறப்பட்டது.


இத்தனை விசயங்கள் பேசப்பட்டுவந்த போதும் கௌதம் மேனன் படத்தில் அஜித் எந்த வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் மட்டும் வெளியாகாமல் இருந்துவந்தது. தற்பொழுது அந்தத் தகவலும் வெளியாகிவிட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. கௌதம் மேனன் இயக்கவுள்ள இப்புதிய படத்தில் அஜித் இளம் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


இப்படத்தின் கதைக்கு ஃபிட்டாகவே மிகக் கடுமையாக உடற்பயிற்சி செய்துவருகிறார். விரைவில் ஸ்லிம்மான அஜித்தை ரசிகர்கள் பார்க்கலாம்.


மேலும் மங்காத்தாவில் தொடங்கி இதுவரை நடித்த நான்கு படங்களிலும் கொஞ்சம் நரைமுடி கலந்த, சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கலக்கிய அஜித் இப்படத்தில் ஹேர் ஸ்டைலையும் மாற்றவுள்ளார்.


இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான காக்க காக்க மற்றும் வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்கள் காவல்துறை சம்பந்தப்பட்ட கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. அவை மெஹா ஹிட்டும் அடைந்தன. அஜித் போலீசாகத் தோன்றவுள்ள இப்படமும் ப்ளாக் பஸ்டர் படமாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

கோச்சடையான் போன்கள் வெளியிடப்பட்டன!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகிவரும் கோச்சடையான் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக, கார்பன் மொபைல் போன் நிறுவனமும் கோச்சடையான் படக்குழுவும் இணைந்து, கோச்சடையான் காலர் டியூன்ஸ், பிக்சர்ஸ் மற்றும் தீம்ஸ் கொண்ட கார்பன் மொபைல் போன்களை இன்று வெளியிட்டுள்ளனர்.


நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 11ல் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.


இப்படத்தின் புரொமோசன் ஏற்பாடுகளில் முக்கியமாக, கோச்சடையான் திரைப்படத்தின் பாடல்கள், படங்கள் கொண்ட மொபைல் போன்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 10 லட்சம் மொபைல் போன்களைத் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்தியாவிலேயே முதல்முறையாக கோச்சடையான் திரைப்படம்தான் மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது.


இப்படத்தின் ஆடியோ வருகிற மார்ச் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் சுமார் 6000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது.

முதலில் கடத்தல்... அப்புறம் காதல்! - விருதுகள் காத்திருக்கின்றன!

ஆறு மாநிலங்களைக் கடந்து செல்லும் நெடுஞ்சாலைப் பயணமாய் திரையில் விரிகிறது 'ஹைவே’ பாலிவுட் படம். 'ஜப் வி மெட்’, 'ராக் ஸ்டார்’ படங்களால் கலக்கிய இம்தியாஸ் அலிதான் டைரக்டர். இந்திய சினிமாவின் மிக முக்கியமான 'ரோடு மூவி’ என தாராளமாகச் சொல்லலாம். கடத்தியவன் மீதே காதல்கொள்ளும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் டைப் கதை.


டெல்லியைச் சேர்ந்த பணக்காரரின் மகள், ஹீரோயின் அலியா பட். விடிந்தால் திருமணம் நடக்கும் சூழலில், தன் வருங்காலக் கணவனோடு காரில் ஹைவேஸில் செல்லும் ஆசையைச் சொல்லி இருவரும் கிளம்புகிறார்கள். ஒரு பெட்ரோல் பங்கில் வைத்து அவளைக் கடத்திச் செல்கிறது ஒரு கும்பல். கடத்தல் கும்பலில் இருக்கும் ரன்தீப் ஹூடா, அவளை வெவ்வேறு இடங்களுக்குத் தன்னுடைய டிரக்கில் வைத்து போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து அழைத்துச் செல்கிறார்.


 ஒரு கட்டத்தில் முதல்முறையாகத் தன் வாழ்க்கையில் முழு சுதந்திரத்தை உணர்கிறார் அலியா. பயணத்தின் நடுவே போலீஸ் செக்போஸ்ட்டில்கூட டிரக்குக்குள் ஒளிந்துகொண்டு ரன்தீப்பையும் அவர் சகாவையும் காப்பாற்றுகிறார் ஆலியா. சிடுமூஞ்சியான ரன்தீப்பிற்கு மோசமான இளம்பிராயம் இருப்பதை உணர்ந்து அன்பு காட்டுகிறார். ராஜஸ்தானின் பாலைவன மணல் வழி நெடுஞ்சாலையில் விரைந்த டிரக், உலகின் கூரையாய் இருக்கும் இமயமலைக்குச் செல்கிறது.


அங்கே அலியாவை இறக்கிவிட்டு ஓடிப்போகிறார் ரன்தீப். அவரை விடாமல் துரத்தி முதன்முறையாக ரன்தீப்பை சிரிக்கவைக்கிறார் அலியா. முடிவில் பனி படர்ந்த மலை உச்சியில் ஓர் அழகான வீட்டில் இருவரும் தங்குகிறார்கள். தாயன்பை அவள் மூலம் முதல்முறையாக உணர்கிறார் ரன்தீப். அழகான காதல் உருவாகிறது. மறுநாள் நாம் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.


'ஹைவே’ படம் இதுவரை காட்டாத அற்புதமான கேமரா கோணங்களைக்கொண்ட படம். 'லகான்’ கேமராமேன் அனில் மேத்தாதான் படத்தின் ப்ளஸ். அலியா பட், ரன்தீப் ஹூடாவின் நடிப்பு அபாரம். அழுக்கு உடையோடு படம் நெடுகிலும் குழந்தைத்தனமான எக்ஸ்பிரஷனோடு வளையவரும் அலியா நம் எல்லோருக்கும் நெருக்கமானவராக மாறிவிடுகிறார். இந்த அலியா பட், பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் கடைசி மகள். படத்தில் கரை புரண்டு ஓடும் இமயமலை நதி நீரலைகளுக்கு நடுவே பாறையில் அமர்ந்துகொண்டு சந்தோஷத்தில் வெடித்து அழுவார் பாருங்கள். செம செம எக்ஸ்பிரஷன்.


இசை நம்ம ரஹ்மான். ஏற்கெனவே பாடல்கள் ஹிட். படத்தில் அவரின் பின்னணி இசை பிரமிக்கவைக்கிறது. ஆங்காங்கே 'இம்ப்ளோசிவ் சைலன்ஸ்’-ஆக வரும் அந்த சாலைப் பயணப் பின்னணி இசை வேறு உலகிற்கு நம்மைக் கடத்திச் செல்கிறது. அலியா பட்டையும் ஒரு தாலாட்டுப் பாடலைப் பாடவைத்து அப்ளாஸ் அள்ளுகிறார் ரஹ்மான்.


கேமராவுக்கு முன் துருப்பிடித்த கம்பி போல நீண்டுகிடக்கும் சாலை. திரும்பத் திரும்ப சாலைப் பயணம் என அலுப்புத் தட்டாமல் இருக்க, ஆங்காங்கே 'ஹால்ட்’ அடித்துச் செல்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதியில் அந்தப் பயணம் இலக்கில்லாமல் போனாலும் இமயமலையில் முடிவடையும்போது இன்னும் கொஞ்ச நேரம் டிரக்கில் பயணித்திருக்கலாமோ என நம்மை நினைக்கவைக்கிறது. வழக்கமான கதைதான். அதைச் சொன்னவிதத்திலும் காட்சிப்படுத்திய விதத்திலும் 'ஹைவே’ நம்மை ஒரு ஜாலி ட்ரிப் போய் வந்த உணர்வைத் தருகிறது.


''மும்பையில் ஒரு ரூமுக்குள் நான் எழுதிய ஸ்கிரிப்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு இந்த ஆறு மாநில சாலைப் பயணத்தைத் தொடங்கவில்லை. நிஜத்திலும் அழுக்கு உடையோடு ஆலியாவும் ரன்தீப்பும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் என்னுடன் பயணித்தார்கள். இமயமலையில் அவர்களிடம் நான் சூழலை மட்டும் சொல்லி விட்டு அவர்கள் அதற்கு ரியாக்ட் செய்வதைப் படம் பிடித்தேன். கிட்டத்தட்ட கேண்டிட் படம் செய்த உணர்வைத் தந்தார்கள் இருவரும்'' என்று நெகிழ்கிறார் இம்தியாஸ்.

விருதுகள் காத்திருக்கின்றன

செல்வராகவனின் - அது ஒரு டவுசர் காலம்!

இளசுகளின் பல்ஸ் தெரிந்த இயக்குநர் செல்வராகவனின் டவுசர் காலம்.

ஆம்லேட்டைப் பிய்த்து அதில் சோற்றை உருட்டி வைத்துச் சாப்பிட்டிருப்பார்.

அடிக்கடி மழையில் ஆட்டம் போட்டு நனைந்து வந்து அப்பாவிடம் அடி வாங்கியிருப்பார்.

டயர் கொளுத்தி வட்டமாய் நின்று கேம்ப் ஃபயர் டான்ஸ் அப்போதே ஆடியிருப்பார்.

ஹிஸ்டரி சப்ஜெக்ட்டை விரும்பிப் படித்திருப்பார். ஆனால் ஆன்சர் ஷீட்டில் மட்டும் குழப்பி அடித்து ஹிஸ்டரி டீச்சருக்கு ஹிஸ்டீரியா வர வைத்திருப்பார்.

பாய் ஃப்ரெண்ட்ஸ் வைத்துக்கொண்டால் பிம்பிள்ஸ் வரும் அளவுக்கு அலர்ஜி என்பதால், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் மட்டுமே வகைதொகையில்லாமல் நட்புப் பட்டியலில் வைத்திருப்பார்.

டி.எம்.எஸ் ரசிகராக, மயக்கம் என்ன, துள்ளுவதோ இளமை எனப் பழைய பாடல்களாகப் பாடித் திரிந்திருப்பார்.

தன் தோழியைக் கண்டுகொள்ளாமல் நண்பனின் தோழியிடம் பேச அடிக்கடி முயற்சி செய்திருப்பார். இதனாலேயே அடிக்கடி பெஞ்சில் ஏறி நின்றிருப்பார்.

ஸ்கூலுக்கு மட்டம் போட வருண பகவானை வேண்டிக்கொண்டிருப்பார். மழை பெய்தால் 'நான் சொன்னதும் மழை வந்துச்சா?’ என உற்சாகமாய் வீட்டுக்குள் டான்ஸ் ஆடியிருப்பார்.

ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு கடைசியாக ஓடி பல்பு வாங்கியிருப்பார். 'ஏன் செல்வா ஏன்?’ என யாரேனும் கேள்வி கேட்டால், 'ஓட ஓட ஓடத் தூரம் குறையல’ எனப் பாட்டாகவே பாடி ஒருபாட்டம் அழுதிருப்பார்.

டீச்சரோ, பக்கத்து கிளாஸ் திவ்யாவோ வந்து சொன்னால்தான் பரிட்சையை ஃபயரோடு எழுதுவார். இல்லை என்றால் வெள்ளைத்தாளை மடித்துக் கொடுத்துவிட்டு சோகமாய்க் கழுத்தை சாய்த்தபடி வாக்-அவுட் செய்திருப்பார்.

கேர்ள்ஸ் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் இவரே 'அடிடா அவளை... வெட்றா அவளை’ என சில நேரங்களில் உக்கிரமாய் திட்டித் தீர்த்ததால், ஹெட்மாஸ்டரிடம் செமத்தியாய் அடி வாங்கியிருப்பார்.

முந்தின நாளே மக்-அப் பண்ணிவிட்டு வந்து க்ளாஸ் ரூமில் அயர்ந்து தூங்குவார். டீச்சர் எழுப்பிக் கேள்வி கேட்டால் கையைக் கட்டிக்கொண்டு அப்படியே ஒப்பித்து வாய் பிளக்கவைத்திருப்பார்!  

கோச்சடையான் அப்டேட்!

செளந்தர்யா இயக்கத்தில்  ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் , ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் நடித்துள்ள படம் 'கோச்சடையான்' . இந்தியாவில் MOTION CAPTURE TECHNOLOGYல் உருவாகி இருக்கும் முதல் திரைப்படம் இது.


கடந்த அக்டோபர் மாதம் 'எங்கே போகுதோ வானம்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளிவந்துவிட்டது. எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது.


ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்  படத்திற்கு இசையமைத்துள்ளார். 'மன்னன்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் சொந்த குரலில் ஒரு பாடலை கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார் என்பது இந்த படத்தின் சிறப்பு. அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.


படம் குறித்து இயக்குநர் சௌந்தர்யா பேசும்போது, ''மார்ச் 9ம் தேதி சென்னையில் நடக்கும் கோச்சடையான் பாடல் வெளியீடு விழாவில் கோச்சடையான் கார்பன் போனை ரஜினி வெளியிட இருக்கிறார்.


கோச்சடையான் பட்ஜெட் பெரியதுதான்.என் இயக்கத்தில் அப்பா  தீபிகா படுகோனேயுடன் காதல் காட்சிகளில் நடிக்கும்போது ரொம்பவே சங்கடப்பட்டார்.


நாகேஷை நவீன முறையில் கோச்சடையானில் கொண்டு வந்திருக்கிறோம். இந்தப் புதுமை எல்லோரையும் ஈர்க்கும். ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அறிவிப்போம்'' என்று பேசினார்.

விஷ‌த்தை மு‌றி‌க்கு‌ம் ‌பிரம‌த்த‌ண்டு!

பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட, பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.


பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.


பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.


பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.


‌பிர‌ம த‌ண்டு பூக்களை 20 எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும். 

உங்களுக்கு அதிகமா வியர்க்குதா?

பொதுவாக கோடையில் அதிக அளவில் வியர்வையானது வெளிப்படும். அதிகமாக வியர்ப்பது சங்கடம் கொடுக்க கூடியது. அதுவும், பயணத்தின் போதும், வெளியிடங்களில் தங்கும் போதும், ஒரு நாளுக்கு ஐந்து முறை உடை மாற்ற முடியாத போதும், அல்லது வியர்க்கும் பொழுது அடர்த்தியான மேலுறையை அணியும் போதும் தாங்க முடியாத வேதனை ஏற்படுகின்றது.

இத்தகைய வேதனையை தவிர்ப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, பயன்பெறுங்கள்...

வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்...

01. கையில்லா சட்டைகளை வாங்க வேண்டும். அதுவும் சட்டைகளின் ஓரப் பகுதிகள் அக்குளுக்கு மேலே போகாமல் கீழே இருத்தல் அவசியம். இதனால் வியர்வையின் ஈரம் துணிகளின் மேல் தங்கி நமக்கு அசெளகரியம் ஏற்படுத்தாமல் ஆவியாகி வெளியேறி விடும். இவ்வகைச் சட்டைகள் அளவில் சிரியதாய் இருப்பதால், பெட்டிகளிலும் நிறைய அடுக்கலாம். எனவே தேவையானவற்றை வாங்கி புத்துணர்வைப் பெறுங்கள். (ஆடைகளைத் தேர்வு செய்யும் போது காற்றோட்டமான பருத்தி ஆடைகள் போன்ற ஆடைகளை வாங்கவும்.)

02. தோல்பட்டையை மூடிக்கொள்வதற்கென சால்வை அல்லது தளர்வான ஆடைகளை வாங்கிக் கொள்ளலாம். இவ்வித ஆடைகளை குளிர் பருவத்தில் கழுத்தை சுற்றி கட்டி கொள்ளவும் பயன்படுத்தலாம். இது போன்று செய்வதால், உடலை மிகுதியான வெப்பமோ, குளிரோ தாக்காமலும் அதிகமாக வியர்க்காமலும் காத்துக் கொள்ளலாம்.

 அதிகமாக வியர்க்கும் இடங்களுக்கு செல்லும் பொழுது மாற்றுத் துணிகளை எடுத்து செல்லவும். அவை ஒரு சட்டை, ஒரு ஜோடி அரைக்கால் சட்டை, அல்லது தளர்வான காலணிகளாகவும் இருக்கலாம். இதில் அவசரத் தேவைக்கான பொருட்கள் அடங்கிய கைப்பை (emergency kit) ஒன்றையும் சேர்த்து கொள்ளலாம். அவற்றில், - டியோடரண்ட் (அலுமினியம் சேர்க்காதது) - முகம் துடைப்பதற்கு டிஸ்யூ பேப்பர் - ஒரு ஜோடி மாற்றுச் சட்டைகள் - வியர்வைப் பட்டைகள் - சிறிது சமையல் சோடா

03. துவைத்துப் பயன்படுத்தக் கூடிய அல்லது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய வியர்வை அட்டைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக விற்கப்படுகின்றது. அதை இணையம் மூலமாக வாங்கலாம். வை விடுமுறை நாட்களுக்கு மிகவும் ஏற்ற பொருட்கள் என்பதோடு அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் புத்திசாலித்தனமானது. மேலும் இருக்கும் இடத்தில் நீச்சல் குளம் இருந்தால் தயங்காமல் நீந்தலாம். அது புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் அளிக்க வல்லது.

04. என்ன சாப்பிடுகிறோம்? எப்போது வெளியே செல்கிறோம்? என்பதை கவனிக்கவும். பூண்டு மற்றும் காரமான மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதிகமாக வியர்க்க செய்யும் மது மற்றும் காபி போன்றவற்றை பருகுவதைத் தவிர்க்கவும். நட்பான மற்றும் மனதிற்கு அமைதி நிறைந்த சூழல்களை உருவாக்க வேண்டும். இவை மன அழுத்தம் அடைவதை தவிர்ப்பதோடு, உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் உதவும்.

ஜில்லுனு சில டிப்ஸ்..!

*வெயில் காலத்தில் பல நோய்களுக்குக் காரணம் தண்ணீர்தான். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பதே பெஸ்ட்.

*இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.

*வெண்பூசணியும் பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது இதம் அளிக்கும்.

*டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும்.

*உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.

*இட்லி, அவியல், கூட்டு, ரெய்த்தா போன்று விரைவில் தயாரிக்கக்கூடிய உணவுகளை சமையுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்து, சூரியன் ‘ஹாய்’ சொல்வதற்குள் சமையலறை வெப்பத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள்.

*உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.

*இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

*உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்க்கலாம்.

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!

தலைப்பை பார்த்ததும் ரைமிங்கா இருக்கேனு பார்க்கிறீங்களா? அது உங்களோட பார்வையை பொறுத்தது! சரி விஷயத்துக்கு போவோமா? மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லும் வரிகளே இது. இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணும்னா...

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.

இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெ‌ள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.

ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுக‌ள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புக‌ள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நா‌ள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநா‌ள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.

இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செ‌ய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்கா‌ய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநா‌ள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.

அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செ‌ய்யுறது. சாயங்கால நேரத்துல செ‌ய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்கா‌ய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைக‌ள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.

இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.

மாலையில் கடுக்கா‌ய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்கா‌ய் சாப்பிடணுமானு நீங்க ‘ஙே’னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்கா‌ய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்கா‌ய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.

ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்கா‌ய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும். இது சத்தியம்... சத்தியம். ஆமாங்க எல்லா நம்ம அனுபவந்தான். இது எல்லாமே எனக்கு நான் செஞ்சி பார்த்து முழு பலனையும் அனுபவிச்சது எ‌ன்‌கிறா‌ர் மூலிகை ஆரா‌ய்ச்சியாளர்.

ஆணுக்கு தந்தையாக போகிறோம் என்ற சந்தோஷத்திற்கு பின் உள்ள பயங்கள்!

ஒரு ஆணுக்கு தந்தையாக போகிறோம் என்றால் அதை விட சந்தோஷம் வேறு எதுவாக இருக்க போகிறது? அவனுடைய குழந்தையை கையை பிடித்து கொண்டு, இந்த உலகத்தை சுற்றி வருவது என்றால் அதில் உள்ள இன்பம் வேறு எதில் உள்ளது? பகல் என்றால் இரவு ஒன்று இருப்பதை போல, இந்த சந்தோஷத்திற்கு பின்னால் பல பயங்களும் ஒளிந்திருக்கிறது. ஆனால் அவைகளை பொதுவாக ஆண்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

தந்தையாக போகிற ஒவ்வொரு ஆணுக்கும் தனக்கு தகப்பன் என்று புதிதாக வர போகிற ஸ்தானம் மற்றும் அதிலுள்ள பொறுப்புகளை எண்ணும் போது, ஒரு பயம் இருக்கத் தான் செய்யும். இந்த புதிய மாற்றத்துடன் அவர்கள் ஒன்றி விட முதலில் கஷ்டப்படுவது இயல்பாக ஏற்படுவது தான். உண்மையை சொல்ல வேண்டுமானால், கருவை சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தாய் தான் இந்த கதாநாயகனாக விளங்குகிறாள். இருப்பினும் தந்தையாக போகிறவர்கள் தகப்பன் என்ற ஸ்தானத்தில் பயணிக்கும் போது, வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு பல பொறுப்புகள் காத்துக் கொண்டு இருக்கிறது.

பயத்தை எல்லாம் கடந்து வருவது தான் தந்தையாக போகிறவர்களின் கடமையாகும். இருப்பினும் தான் அப்பா ஆக போகிறோம் என்ற நினைப்பை ஏற்றுக் கொள்ளவே பலருக்கு பயம் வந்துவிடும். அவர்களின் மனதில் குழப்பும், துயரமும் உலா வந்தாலும் கூட, அவர்கள் அதனை வெளியில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை.

புதிதாக தந்தையாக போகிறவர்களுக்கு, தங்கள் குழந்தையை சரியான முறையில் கையில் தூக்குவோமா என்ற பயம் அவர்களை சூழும். அதனுடன் சேர்த்து குழந்தைக்கு சரியாக டையப்பர் மாற்றுவது, அதனை பாதுகாப்பது, வீட்டை குழந்தைக்காக பாதுகாப்பாக மாற்றுவது போன்றவைகளும் பயத்திற்கான சில உதாரணங்கள். இவ்வகை பயன்கள் எல்லாம் இயல்பாக வருவது தான். ஆனால் அவைகளையெல்லாம் மிகைப்படுத்த தேவையில்லை.

அலுவலக வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமாளிப்பது என்பது ஒரு தந்தையும் சந்திக்கும் முக்கிய சவாலாகும். உங்கள் குடும்பத்திற்கென நீங்கள் ஒதுக்கும் பொன்னான நேரத்திற்கு ஈடு இணை வேறு கிடையாது. தந்தையாக போகும் ஆண்களுக்கு, தங்கள் வீட்டில் குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைக்குமா என்பதில் பயம் ஏற்படும். மேலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கவன சிதறலால் தங்களால் வேலையில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியுமா என்ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும். மேலும் வேலைப்பளு காரணமாக தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் நடக்கும் விசேஷமான தருணங்களில் கலந்து கொள்ள முடியாது போன்ற எண்ணங்களால் இவ்வகை கவன சிதறல் உண்டாகும்.

குழந்தை வந்தாலே தந்தையின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதனை உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் காலம் முதலே நீங்கள் கவனிக்க தொடங்கலாம். குழந்தை பிறந்த நேரத்தில், அதற்கென அதிக நேரம் மற்றும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் உங்கள் மனைவி உங்களிடம் அன்யோநியமாக இல்லாமல் போகலாம். அதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்படும் களைப்பும் உளைச்சலும். ஆனால் இது நிரந்தரம் அல்ல. குழந்தை வளர வளர இது மெதுவாக மாறும். அதற்கு உங்களிடம் பொறுமை இருக்க வேண்டும்.

பெற்றோராக மாறிய பின் பொறுப்புகள் கூடுவதால், அதற்கென செலவிடும் நேரமும் அதிகமாகும். அதனால் தங்களின் பொது வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயமும் ஆண்களிடம் இருக்கும். தன் நண்பர்களுடன் வெளியில் செல்வது அல்லது பார்ட்டிக்கு செல்வது போன்றவைகள் எல்லாம் தடைபட்டு விடுமோ என்ற பயமும் இருக்கும். இதனால் தங்களின் அனைத்து நண்பர்களையும், அந்த வாழ்க்கையையும் தொலைத்து விடுவோமோ என்ற பயமும் சேர்ந்து கொள்ளும்.

தங்கள் குடும்பத்தில் பார்த்த நிகழ்வுகள் சில ஆண்களுக்கு பயத்தை உருவாக்கும். அதாவது காதல் மழையில் நனைந்து, தன்னுடனேயே இருக்கும் தன் ஆசை மனைவி அடியோடு மாறிவிட்டால்? ஆம், தந்தையாக போகிறவர்களுக்கு வரும் மற்றொரு பயம் - தன் மனைவி தன்னை விட தன் குழந்தையின் மீது தான் அன்பை செலுத்துவாளா? என்ற எண்ணத்தால், அவர்கள் அனுபவித்து வந்த அன்யோநியமான உறவு பாதிக்கப்படும். இப்படி அன்பு இடம் மாறும் போது, இது நியாயமான பயமாகத் தான் விளங்கும்.

தன் மனைவியின் பிரசவத்தின் போது தன்னால் அவளுக்கு துணையாக இருக்க முடியாது என்ற பயம் பல ஆண்களிடம் இருக்கும். பிரசவ வலியில் அவர்கள் துடிப்பது, கை கால்களை முறுக்குவது, ஆங்காங்கே காணப்படும் இரத்தங்களும் நீர்களும் ஆண்களுக்கும் குமட்டலை ஏற்படுத்தி தலை சுற்றச் செய்யும். அதனால் தான் பல ஆண்கள் பிரசவ நேரத்தில் கண்டிப்பாக மனைவிகளுக்கு துணையாக இருப்பதில்லை.

புது வாழ்க்கை தொடங்கும் போது, முடியும் ஒன்றை எண்ணி நாம் ஒன்றுமே செய்ய முடியாது. தந்தையாக போகிறவர்களுக்கு புதிதாக இன்னொரு உயிர் வரப்போவதால், தங்கள் இளமை பறி போய்விட்டது என்ற பயம் உண்டாகும். தந்தை என்றால் தன் குழந்தை மற்றும் குடும்ப தேவைக்காக பாடுபட்டு தன்னுடைய சுகங்கள் மற்றும் தேவைகளை எல்லாம் மூட்டை கட்டி விட வேண்டும் என்ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும்.

பிரசவத்தின் போது தங்கள் மனைவி அல்லது குழந்தையை இழந்து விடுவோமா என்ற பயம் பொதுவாக ஆண்களுக்கு வருவது தான். ஒரு வேலை மனைவி இறந்துவிட்டால், குழந்தையை தனியாக வளர்க்க வேண்டும் என்ற பயம் சூழும். குழந்தையை பெற்றெடுக்க தாய் வலியால் துடிப்பதை பார்க்கும் போது, குழந்தை பிறப்பு என்பது நம்மை உறைய வைக்கும் ஒரு அனுபவமாக விளங்கும். ஆனால் இவ்வகை பயங்கள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பயங்களாகும். அவைகளை முதலில் அகற்றுங்கள்.
தன் குழந்தைக்கு தான் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியுமா என்பது ஒவ்வொரு ஆணின் ஆழ்மனதில் நீடிக்கும் பயமாகும். தன் குழந்தையை பண ரீதியாக எந்த பிரச்சனையுமின்றி வளர்க்க முடியுமா என்ற பயமும் இருக்கும்.

தன் குடும்பத்தையும், குழந்தையின் கல்வியையும் பண ரீதியாக சமாளிக்க வேண்டுமே என்ற பயமும் பல ஆண்களிடம் இருக்கும். குழந்தை பெற்ற பின், தன் மனைவி வேலையை விட்டு நின்று விட்டதால், தன் ஒருவனின் சம்பளத்தை வைத்து குடும்ப தேவைகளை சமாளிக்க முடியுமா என்ற பயமும் உண்டாகும். இது நியாயமான பயமே. பல பேர் குடும்பத்தில் குழந்தை பிறந்தவுடன் இரண்டு பேருக்கு பயன்படுத்தப்பட்ட இருவரின் சம்பளம், இப்போது மூன்று பேருக்கு ஒரு ஆள் சம்பளமாக மாறி விடுவது வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

வெற்றிக்கு காரணம் யார்?: மனம் திறந்து கூறுகிறார், பாலசந்தர்!

'என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.

அவர் ஒரு கட்டுரையில் மனைவி ராஜம் பற்றி கூறியிருப்பதாவது:-

'ஆரம்பத்தில் இருந்தே என் மனைவியின் மனப்பூர்வமான ஒத்துழைப்பு எனக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், நான் இவ்வளவு தூரம் சிறப்பு அடைந்திருக்க முடியாது. அப்போது இவள் செய்ததை `தியாகம்' என்றே சொல்லவேண்டும்.

எங்களுக்குத் திருமணம் நடந்த நாள் 31-5-1956. தஞ்சை மாவட்டத்தின் நன்னிலத்தில் இருந்த என்னையும், பல மைல்களுக்கு அப்பால் திருவனந்தபுரத்தில் இருந்த ராஜத்தையும் திருமணம் ஒன்று சேர்த்தது.

பெண் பார்த்துவிட்டு வந்த என் அண்ணன், 'பார்ப்பதற்கு குமாரி கமலா மாதிரி இருக்கிறாள்' என்றார். 18 வயது பாவையான ராஜம் என்னை கைப்பிடித்தபோது, நான் ஏ.ஜி.எஸ். ஆபீஸ் குமாஸ்தா. என்னுடைய இப்போதைய வளர்ச்சியை இவள் அப்போது கனவில் கூட கற்பனை செய்திருக்க முடியாது.

எனக்கு முதல் காதல் நாடகத்தின் மீதுதான். மனைவி, குடும்பம் எல்லாம் அப்புறம்தான். என் பெரும்பாலான இரவுகளை ஏ.ஜி.எஸ். ஆபீஸ் விழுங்கி விடும். புதிதாகத் திருமணம் ஆன இளம் தம்பதியாகிய நாங்கள் உல்லாசமாகப் பயணம் போவதோ, சினிமா பார்ப்பதோ, வெளியில் எங்காவது சென்று வருவது அவசியம் என்பது கூட என் மனதில் தோன்றாத அளவுக்கு அசுர உழைப்பு உழைத்து விட்டு வந்து படுக்கையில் விழுவேன்.

இப்படியிருக்க, நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே செல்ல நேரம் ஏது? ஆனால் இவள் கொஞ்சமாவது முகம் சுளித்தது இல்லை. குடும்பப் பொறுப்புகளையும் என் கண்ணில் காட்டியதில்லை. அதனால்தான் என் முழு கவனத்தையும், கலைத்துறைக்குத் திருப்ப முடிந்தது.

அன்று முதல் இன்று வரை, குடும்பப் பிரச்சினைகள் எதுவும் என் காதுக்கோ, கவனத்துக்கோ வராதபடி பார்த்துக் கொள்வதில் இவள் மிகவும் சாமர்த்தியசாலி. அந்த மாதிரி தொல்லைகளை எல்லாம் தன் தோளிலேயே தூக்கிப்போட்டுக்கொள்வாள்.

குடும்பம், கணவன், குழந்தைகள் என்ற வட்டத்துக்குள்ளேயே சுழன்றால் போதும் என்ற மனோபாவம் கொண்டவள். அநாவசியமான நண்பர் குழாம், வம்பு பேச்சுக்கள், ஆடம்பரம், போலி கவுரவம், நகை ஆசைகள் இவை அனைத்துமே அவள் அகராதியில் இடம் பெறுவதில்லை.

கணவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக, `ஓகோ' என்றெல்லாம் புகழ்வதில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றால், 'பிடிக்கவில்லை'தான். வழவழ கொழகொழ வெல்லாம் கிடையாது.

அலங்காரம், அலங்கார வார்த்தைகள், அகங்காரமான எண்ணங்கள் - இவை என்னவென்றே தெரியாதவள், அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலக குமாஸ்தாவின் மனைவியாக இருந்தபோதும் சரி, பிரபலமான திரைப்பட இயக்குனரின் மனைவியாக இருக்கும்போதும் சரி, அவள் 'அவளாகவே இருக்கிறாள்.'

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பாலசந்தரின் மனைவி ராஜம், தன் கணவர் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

'எங்கள் கல்யாணம் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பெரியவர்கள் செய்து வைத்ததுதான். எனக்குப் பாலக்காடு சொந்த ஊர். அப்பா ஹெல்த் இன்ஸ்பெக்டராகப் பல ஊர்களில் வேலை பார்த்தவர்.

என் திருமணம் நாகர்கோவிலில் நடந்தது. திருமணமானவுடனேயே சென்னையில் கோபாலபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். அங்கு பல ஆண்டுகள் வசித்தோம்.

அந்த நாளிலும் சரி, இப்போதும் சரி அவர் வீட்டில் பகல் நேரத்தில் அதிக நேரம் இருப்பதில்லை. பட விஷயமான வேலைகளைக் கவனிக்க வெளியே சென்று விடுவார். இரவில் படுக்க எவ்வளவு நேரமானாலும் சரி, காலையில் ஆறு மணிக்கு மேல் தூங்க மாட்டார். எழுந்ததும் உடனே பல் தேய்த்துவிட்டு, ஒரு கப் காபி குடித்தவுடன் தான் மற்ற வேலைகளைக் கவனிப்பார்.

முன்பெல்லாம் தினமும் விடியற்காலையில் கடற்கரைக்குச் சென்று குறைந்தது இரண்டு மைல்களாவது வாக்கிங் போவார். இப்போது போவதில்லை. ஏனென்றால் இப்போது அவருக்கு ஏது ஓய்வு நேரம்?

முன்பு இவருக்கு அதிகமாக கோபம் வரும். அப்படி கோபம் வரும்போது இவர் எதிரில் யாரும் போகமாட்டோம். ஆனால் வந்த வேகத்திலேயே அது மறைந்து போய் விடும். இப்போதெல்லாம் இவருக்கு வீட்டில் கோபம் வந்து பார்ப்பது ரொம்ப அபூர்வம்.

வீட்டில் அவருடைய புத்தகங்களோ மற்றும் பேனா பேப்பர் போன்ற பொருள்களோ அவர் வைத்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். அவை அவர் தேடும்போது இடம் மாறிவிட்டால் அவருக்குப் பிடிக்காது.

பலருடைய பாடல்களை டேப்புகளில் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறார். எப்பொழுதாவது அபூர்வமாகப் பொழுது போகாமல் வீட்டில் இருக்கும்போது தமக்குப் பிடித்த பாடல்களைப் போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார். பாட்டுக் கச்சேரிக்கோ, கதா காலட்சேபங்களுக்கோ போக அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. போக வேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு. `டேப்பின்' மூலம் அந்த ஆசையை நேரம் கிடைக்கும்போது நிறைவேற்றிக் கொள்கிறார்.

அவர் சினிமாவுக்காக, தான் எழுதிய கதையைப் பற்றி என்னிடம் அபிப்ராயம் எதுவும் கேட்க மாட்டார். பொதுவாக யாரிடமுமே அவர் கேட்பதில்லை. முன்பெல்லாம் படம் மூவாயிரம் அல்லது நாலாயிரம் அடி வளர்ந்த பிறகு என்னை அழைத்துக்கொண்டு போய் படத்தைப் போட்டுக் காண்பிப்பார். அப்போதும்கூட என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்கமாட்டார். இப்போது படம் முடிந்து வெளியிடப்பட இருக்கும் சமயத்தில்தான் வீட்டில் எல்லோரையும் அழைத்துக்கொண்டு போய் படத்தைக் காண்பிக்கிறார்.

புதுப்படம் ஆரம்பிக்கும் நாளில் கூட இவர் எவ்வித டென்ஷனும் இல்லாமல் என்றும் போலவே இருப்பார். அதேபோல இவர் டைரக்ட் செய்த புதுப்படம் ரிலீஸ் ஆகும் அன்றும் இவர் சாதாரணமாகவே இருப்பார். அதற்காக ஸ்பெஷலாகக் கோவிலுக்குப் போவதோ, பூஜை செய்வதோ அதெல்லாம் இவரிடம் கிடையாது. மனதிற்குள்ளே கடவுளை வேண்டிக்கொள்வார் என்று நினைக்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்று சுறுசுறுப்பாய்ப் பணியாற்றும் இவர், வெளிப்படையாக கடவுளிடம் எதையும் வேண்டிக்கொண்டதை நான் பார்த்ததில்லை.

ரசிகர்களிடமிருந்து இவருக்கு நிறையக் கடிதங்கள் வருகின்றன. அவற்றிற்கு உடனுக்குடன் பதில் எழுத நேரம் கிடையாது. ஆனால் இனிமேலும் சேர்ந்தால் சமாளிக்க முடியாது என்கிற அளவிற்கு கடிதங்கள் குவிந்து விடும் பொழுது ஒரே நாளில் எல்லாவற்றையும் பார்த்து முக்கியமான கடிதங்களுக்குப் பதில் எழுதி விடுவார்.

எதையும் செய்யாமல் ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார இவரால் முடியாது. இதனால் இவர் காரில் ஏறிக்கொண்டால் கார் வேகமாகப் போகவேண்டும். டிரைவரிடம் சீக்கிரமாகப் போகும்படி சொல்வார். முன்பு இவரே டிரைவிங் செய்து கொண்டிருந்தார். இவர் ஓட்டும்பொழுது வேகமாக ஓட்டுவார். இவர் இப்போது காரை ஓட்டுவதில்லை.

இவ்வாறு ராஜம் பாலசந்தர் கூறியுள்ளார். 

2-வது கதாநாயகியாக நடிக்க ஒத்துக்கொண்ட நடிகை!

சமீபத்தில் வெளியான வேற மாதிரியான பட நாயகி, தன் படம் நன்றாக ஓடியதால் உடனே சம்பளத்தை அதிகமாக்கி விட்டாராம்.


முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்தாராம். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி யாரும் வரவில்லையாம்.


வெற்றிப்பட இயக்குனர் ஒருவர் சமீபத்தில் 2-வது நாயகி கதாபாத்திரத்திற்கு அவரை அணுகினாராம்.


அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் வந்த வாய்ப்பை விட கூடாது என நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்.


2-வது நாயகியாக நடித்தால் தொடர்ந்து இந்த மாதிரி வாய்ப்புகள்தான் வரும் என நடிகைக்கு தெரியாது போல! 

கௌதம்மேன்னுக்காக அட்ஜெஸ்ட் செய்யும் சமந்தா!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.


இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அனுஷ்கா நடிப்பதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.


அனுஷ்கா தெலுங்கில் இரண்டு சரித்திர படங்களில் நடித்து வருகிறார். அதற்காக மொத்தமாக டேட்ஸும் கொடுத்துவிட்டார். இரண்டு படங்களிலுமே அனுஷ்காவுக்கு நல்ல சம்பளமும் கூட.


அஜீத்துடன் விரைவில் நடிப்பேன் என்று கௌதம் மேனனின் மனம் கவர்ந்த நாயகி சமந்தா அண்மையில் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அது எப்படி விரைவில் என்று வியந்தவர்களுக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.


கௌதம் படத்தில் அவரது ஆஸ்தான நாயகி சமந்தா தான் அஜீத் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. கௌதம் மேனன் தான் என் ரோல் மாடல் என்று சமந்தா முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கௌதம் தனது படத்தில் நடிக்குமாறு சமந்தாவிடம் கேட்டாராம். ரோல் மாடல் கேட்டு இல்லை என்றா கூற முடியும். அதனால் விஜய், சூர்யா படங்களில் நடித்து வரும் சமந்தா கௌதமுக்காக டேட்ஸை அட்ஜெஸ்ட் செய்கிறாராம்.

மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும்????

மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌அ‌ந்த கால‌ம் தொ‌ட்டே பல ‌விஷய‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவை பெ‌ண் அடிமை‌த்தன‌த்‌தி‌ற்காக‌க் கூற‌ப்ப‌ட்டவை எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌க்க கூடாது.


மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.


குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.


கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.


முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் த‌ற்போதைய த‌த்துவவா‌திக‌ள்.


பெ‌ண்க‌ளிட‌ம் இரு‌க்க வே‌ண்டிய குண‌ங்க‌ள் ப‌ற்‌றி ஒளவையா‌ரி‌ன் அமுத வா‌க்‌கினை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.


தாயானவ‌ள் த‌ன் குழ‌ந்தை‌யிட‌ம் எ‌வ்வாறு பாச‌ம் கா‌ட்டுவாளோ, அ‌ப்படி கணவ‌னிட‌ம் பாச‌ம் கா‌ட்ட வே‌ண்டு‌ம். ப‌ணிபு‌ரியு‌ம் வேலை‌க்கா‌ரியை‌ப் பால, ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்.


செ‌ந்தாமரை‌யி‌ல் ‌வீ‌ற்‌றி‌ரு‌‌க்கு‌ம் ல‌ட்சு‌மியை‌ப் போல ‌சி‌ரி‌த்த முக‌த்துட‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம். கணவ‌ன் கோ‌பி‌த்து‌க் கொ‌ண்டாலு‌ம், பூமாதே‌வியை‌ப் போல பொறுமையாக இரு‌க்க வே‌ண்டு‌ம். படு‌க்கை அறை‌யி‌ல் கணவ‌னிட‌ம் அ‌ன்பு கா‌ட்டி அரவணை‌த்த‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.


தேவையான போது ம‌ந்‌தி‌ரியை‌ப் போல, ந‌ல்ல ஆலோசனைகளையு‌ம் கூற வே‌ண்டு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்ட குண‌ங்களை‌ப் பெ‌ற்ற பெ‌ண்ணே இ‌ல்ல‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற இ‌னிய பெ‌ண்ணாக இரு‌ப்பா‌ள்.

வீட்டு வைத்திய குறிப்புகள்!

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

1.சுக்கு,மிளகு,திப்பிலி
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்...லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

7.சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு
உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய்,பூசணிக்காய்
இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்
வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு
இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி
கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும். கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

முடி வளர சித்த மருத்துவம் !

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

நோய்களுக்கான சில டிப்ஸ்!

கண்கள்

கண்கள் உப்பியிருந்தால்...

என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்

என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது.

என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம்

தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது

என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம்

கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல்

என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்

என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

கைகள்

சிவந்த உள்ளங்கை

என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள்

என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி

என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல்

என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்

ஈறுகளில் இரத்தம் வடிதல்.

என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்

என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.

என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.