Saturday 1 February 2014

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பொட்டு :

பொட்டு வைக்கும்
பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :

மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும்.கண்பார்வை திறன்
கூடும் .

நெற்றிச்சுட்டி :

நெற்றிச்சுட்டி அணியும்
போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை
சரி செய்கிறது.

மோதிரம் :

பாலுறுப்புகளை தூண்டும்
புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு
அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :

கழுத்தில் செயின் அணியும் போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள
சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :

கையின் பூஜை பகுதியில்
இறுக்கமான அணிகலன்கள்
அல்லது கயிறுகள் அணியும்
பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்படபடப்பு ,பயம்
குறைகிறது .மார்பக புற்று நோய்
வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே
உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி
பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில்
இருந்து முழங்கைக்கு மேல்
வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்
மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :

வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது.முக்கியமான
ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட்
செய்யபடுகிறது.இதன் மூலம்
தாய்க்கும் சேய்க்கும் நோய்
எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :

ஒட்டியாணம் அணியும்
போது இடுப்பு பகுதியின்
சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம்
கூடும்.வயிற்று பகுதிகள்
வலு வடையும்.

மூக்குத்தி :

மூக்கில் இருக்கும் சில
புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும் நெருக்கமான
தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள்
தூண்டப்படும் பொது அது சமந்தமான
நோய்கள்
குணமாகும் .மூக்குத்தி அணியும்
பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல்
சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :

கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக
முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான
அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க
பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம்
தீர்க்கலாம் .

மெட்டி :

மெட்டி அணிவது கர்ப்பப்பையை
பலப்படுத்தும் .செக்ஸுவல்
ஹார்மோன்கள் தூண்டும்.
பில்லாலி என்பது குழந்தை
பிறந்தவுடன் 3வது விரலில்
அணியும்போது சில புள்ளிகள்
தூண்டப்பட்டு பால்
சுரப்பை அதிகப்படுத்தும் 

ரம்மி - ஆட்டம் நல்லா ஆடியிருக்கலாம்... - விமர்சனம்!

 
காதல் செய்தால் ஆளையே வெட்டும் ஒரு கட்டுக்கோப்பான கிராமத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் முளைக்கும் காதலை மையமாக வைத்துதான் ரம்மி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் படிக்க இனிகோ பிரபாகரும், விஜய் சேதுபதியும் வருகின்றனர். பின்னர் அதே ஊரில் இருக்கும் ஐஸ்வர்யாவை விஜய் சேதுபதியும், காயத்ரியை இனிகோவும் காதலிக்கிறார்கள். அங்கு படிக்கும் சூரியும் இவர்களுக்கு நண்பர்களாகிறார்.

ஒருநாள், காதலித்தாகக் கூறி ஒருவனை நடுரோட்டில் அந்த ஊர்க்காரர்கள் வெட்டிச் சாய்ப்பதை பார்க்கும் இனிகோவும், விஜய் சேதுபதியும் பதறிப்போகிறார்கள். இனிகோ காதலிக்கும் காயத்ரி அந்த ஊர் தலைவரின் தம்பி மகள் என்பதால் வயிற்றில் மேலும் புளியை கரைக்கிறது. இருந்தாலும் அவர்கள் ஊர்க்காரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் காதலித்து வருகிறார்கள்.

ஒருநாள் இனிகோ தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கல்லூரிக்கு திரும்பி வருகிறார். வந்ததும் விஜய் சேதுபதியை காணவில்லை. அப்போது அங்கு ஒரு லெட்டர் இவரது கண்ணில் படுகிறது. அதில் விஜய்சேதுபதி தான் காதலித்த பெண்ணை கூட்டிக் கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டதாகவும், ‘நீயும் தப்பித்துக்கொள்’ எனவும் எழுதி வைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி அழைத்துக் கொண்டு சென்றவர் ஊர் தலைவரின் மகள் என்பது அப்போதுதான் இனிகோவிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில், அந்த ஊர்க்காரர்கள் விஜய் சேதுபதியை கொலை செய்துவிட்டு ஐஸ்வர்யாவை இழுத்து வருகிறார்கள். இதைப் பார்க்கும் இனிகோ பதற்றத்தில் இருக்கிறார்.

இறுதியில் தனது காதலனை கொலை செய்த ஊர்க்காரர்களை ஐஸ்வர்யா பழிவாங்கினாரா? இனிகோ தனது காதலியுடன் கைகோர்த்தாரா? என்பதே மீதிக்கதை.

நிறைய படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்து வந்த இனிகோ பிரபாகருக்கு இந்த படத்தில் ஹீரோ அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த படத்தின் விளம்பரங்களில் விஜய் சேதுபதியை மையப்படுத்தியே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதனால், தியேட்டருக்கு விஜய் சேதுபதியை எதிர்பார்த்து சென்றதால் இவரை ரசிக்க முடியவில்லை. மற்றபடி, காதல், காமெடி, ஆக்க்ஷன் என எல்லாவற்றிலும் தூள் கிளப்புகிறார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வர சான்ஸ் இருக்கிறது.

விஜய் சேதுபதி இப்படத்தில் நட்பின் அடிப்படையிலேயே நடிக்க ஒத்துக்கொண்டதாக சொல்லியிருந்தார். ஆனால், இப்படத்தில் இவருடைய நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருக்கு இல்லை என்பது வருத்தமே. ஹீரோயின் எதைச் சொன்னாலும் அப்படியே செய்யும் ஒரு மொக்கையான கதாபாத்திரம். இதை இவர் ஏற்று நடிக்காமலேயே இருந்திருக்கலாம். ரசிகர்களை ரொம்பவும் ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

நாயகி காயத்ரி முன்பிருந்ததைவிட இந்த படத்தில் ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறார். பார்க்கவே பாவம்போல் இருக்கிறார். இவரை வைத்து டூயட் எல்லாம் ஆடவைச்சு நம்மை பயமுறுத்துகிறார்கள். துணை நடிகையாக நடித்துவந்த ஐஸ்வர்யா இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக வருகிறார். கதையை தாங்கி நிற்கிற வலுவான கதாபாத்திரம் இவருடையது. ஆனால், இவருக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் கொடுக்காமல், கடைசியில் விஸ்வரூபம் எடுப்பதுபோன்ற காட்சியை வைத்திருப்பதால் ரசிக்க முடியவில்லை.

சூரிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கல்லூரி காட்சிகளில் நன்றாக காமெடி பண்ணுகிறார். இடைவேளைக்கு பிறகு நல்ல குணசித்திர நடிகராகவும் மாறிவிடுகிறார். ‘கும்கி’யில் லட்சுமிமேனனின் அப்பாவாக நடித்திருப்பவர் இந்த படத்தில் ஊர் பெரியவராக வருகிறார். இவரைவிட இவருக்கு அடியாளாக வருபவர் மிரட்டுகிறார். அவருடைய வில்லத்தனமான கண்கள் பயமுறுத்துகின்றன.

இயக்குனர் ஒரு காதல் கதையை ஏன் திரில்லாக கொடுக்க நினைத்தார்? என்று அனைவர் மத்தியிலும் கேள்வி எழுகிறது. முக்கிய கதாபாத்திரங்களின் தன்மையை ரசிகர்களுக்கு சொல்லாமல் மறைத்து சஸ்பென்ஸ் வைப்பதாக கூறி, அதை காட்சிப்படுத்துவதில் கோட்டை விட்டுவிட்டார். ஆனால், விஜய் சேதுபதி படம் என நம்ப வைத்து ரசிகர்களை வரவழைப்பதில் வெற்றியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பருத்திவீரனில் ‘முத்தழகு’ கதாபாத்திரம்போல் காட்டவேண்டிய ஐஸ்வர்யாவின் கதாபாத்திரத்தை சொதப்பியிருக்கிறார். படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் ஏதும் சம்பந்தம் இல்லாததுபோல் இருக்கிறது.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ‘கூட மேல கூட வச்சு’ பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு படத்தில் சஸ்பென்ஸை கூட்ட உதவியிருக்கிறது.

பான் கார்டு வாங்க பழைய நடைமுறையே தொடரும்: நிதித்துறை அறிவிப்பு!

பான் கார்டு பெற பழைய நடைமுறையே தொடரும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பான் கார்டு வழியாக செய்யப்படும் வரி ஏய்ப்புகளை தடுக்கவும், போலி பான் கார்டுகளை ஒழிக்கவும் வரும் 3ஆம் தேதி முதல் புதிய நடைமுடை பின்பற்றப்படும் என்று நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

புதிய நடைமுறைப்படி, பான் கார்டு பெற விண்ணப்பிக்கும் தனி நபர்கள் தங்களது பிறந்த தேதி, இருப்பிட சான்று மற்றும் அடையாளச் சான்று போன்றவைகளுக்கு ஆவணத்தின் அசலை சரி பார்க்க ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், மத்திய நிதி அமைச்சகம் திடீரென பழைய நடைமுறையே தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், பான் கார்டு பெற ஆவணங்களின் நகல்கள் மட்டுமே போதுமானது.

இளையராஜாவின் புதிய இசை முன்னோட்டம் - சாதனைப் படைக்கும் இசை! வீடியோ!




பாலா, இளையராஜா மீண்டும் இணையும் படத்தின் இசை முன்னோட்டம்!

வீட்டிலேயே 'மெடிக்கல் ஷாப்'!


வீட்டிலேயே 'மெடிக்கல் ஷாப்'!

சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ் பழுத்துவிடும் அளவுக்கு செலவாகிறது. மூலிகை, கைவைத்தியம் என நம் முன்னோர்கள் பின்பற்றிய மருத்துவ முறைகளை மறந்துவிட்டதால்தான் சின்னச் சின்ன வியாதிகளுக்குகூட பெரிய அளவில் செலவுக்கு ஆளாகிறோம். மூலிகைகள் அரிதாகிவிட்ட காலத்தில் அவற்றை எங்கே தேடுவது என நீங்கள் கேட்கலாம். வீட்டிலேயே அவற்றை வளர்க்க வழி இருக்கிறது.

'மூலிகைச் செடிகளைத் தொட்டியில்தான் வைத்து வளர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உடைந்த பிளாஸ்டிக் வாளி, பழைய தகர டப்பா, மரப் பெட்டி, சாக்கு, பிளாஸ்டிக் பை என்று பலவற்றையும் பயன்படுத்தி வளர்க்கலாம். இப்போது செடி வளர்ப்பதற்கு என்றே பிரத்யேகமான பிளாஸ்டிக் பைகள் கிடைக்கின்றன.

இரண்டு பங்கு செம்மண் (அ) வண்டல் மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு எரு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, செடியை நட இருக்கும் கலனில் நிரப்ப வேண்டும். இம்முறையில், ஐந்து கிலோ கலவையைத் தயார் செய்ய சுமார் 100 மட்டுமே செலவாகும். துளசிச்செடி 5, இன்சுலின் செடி 15 என செடியைப் பொறுத்து விலை மாறுபடும்.

சூரிய ஒளி படும் இடத்தில் செடியை வளர்க்க வேண்டும். ஈரப்பதம் குறையும்போது மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். கோடைகாலத்தைப் பொறுத்தவரை ஒருநாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீரே ஒரு செடிக்குப் போதுமானது. தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றினால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். செடி வளர்க்கும் கலனில், தேவையற்ற தண்ணீர் வடிவதற்கு வசதியாக துவாரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

செடி நட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு உரமிட வேண்டும். அதன்பிறகு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் செடியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு 20 முதல் 40 கிராம் வரை கலப்பு உரம் போடலாம். கலப்பு உரம் போட்ட ஒரு மாதத்துக்குப் பின்னர் 100 கிராம் மண்புழு உரம் போட வேண்டும். உரம் போட்டபின் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம். மழைக் காலங்களில் உரமிடத் தேவையில்லை.

செடிகளில், பூச்சிகளின் பாதிப்பு இருப்பதாகத் தெரிந்தால், ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு மில்லி வேப்ப எண்ணெய், இரண்டு மில்லி ஒட்டும் திரவம் (ஜிமீமீ றிணீறீ) கலந்து செடியின் மீது தெளிக்க வேண்டும். ஒட்டும் திரவம் கிடைக்காவிட்டால் காதிபவன்களில் கிடைக்கும் காதி சோப்பை புளிய விதை அளவுக்குப் பயன்படுத்தலாம்.

செடி ஓரளவு வளர்ச்சி அடைந்தபிறகு அதில் உள்ள இலைகளைப் பறித்துப் பயன்படுத்தலாம்!'' என்கிறார்கள் இருவரும்.

வீட்டிலேயே மூலிகைகளை வளர்க்கும்போது ஆஸ்பத்திரி செலவு, காத்திருப்பு என அல்லாட வேண்டியது இருக்காது. மூலிகைகளின் பயன்பாடு குறித்து சித்த மருத்துவர் அருண் சின்னையாவிடம் பேசினோம். 'சளி, இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த மருந்து துளசி. இதன் இலையை நன்றாகக் கழுவி அப்படியே சாப்பிடலாம் அல்லது சாறெடுத்தோ, கஷாயம் வைத்தோ குடிக்கலாம்.

ரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை நீக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வல்லமை வாய்ந்தது மணத்தக்காளி. இதன் இலை, பழங்கள் குடல்புண் மற்றும் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வல்லாரை நினைவாற்றலை மேம்படுத்தும். இதயம் தொடர்பான நோய்கள் குணமாகும். இந்த இலையை பச்சையாகவும் சாப்பிடலாம்; துவையல், கூட்டு, பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

கற்றாழை உடலை இளமையாக வைத்திருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

புதினாக் கீரை ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். புதினா ஜூஸ் குடித்தால், கொழுப்பு கரையும்.

திருநீற்றுப்பச்சை இலையுடன் சிறிது உப்பு சேர்த்து கசக்கி, அந்தச் சாறை நுகர்ந்தால் நாள்பட்ட ஒற்றைத்தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரை இரும்புச்சத்து நிறைந்தது. கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு இது சிறந்த மருந்து. நினைவுத்திறனை அதிகப் படுத்தும். இதை துவையல் செய்தோ அல்லது கஷாயம் வைத்தோ சாப்பிடலாம்.

பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பலமாகும். எலும்பு மற்றும் மூல நோய்களுக்கு நல்ல நிவாரணி பிரண்டை. இதை சட்னி அல்லது துவையல் செய்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணி கீரை தேகத்தைப் பொலிவாக்கும். கண்பார்வையை அதிகப்படுத்தும். பொடுதலைக் கீரை மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்து!'' என்றவர், ''துவையல், குளம்பு, சட்னி என மூலிகைகளை உணவாக்கி சாப்பிடுவதன் மூலம் வியாதிகளை முன்கூட்டியே தவிர்க்கலாம். செலவையும் குறைக்கலாம்!''

மருத்துவக் காப்பீடு - மெடிக்ளைம்: சந்தேகமும் தீர்வும்...

மருத்துவக் காப்பீடு - மெடிக்ளைம்: சந்தேகமும் தீர்வும்...

'நான் ஏன் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கணும்? தேவை இல்லாமல் இன்சூரன்ஸ் கம்பெனிக்காரனுக்கு ஏன் பணத்தைக் கொடுக்கணும்?' என்ற நண்பர் ஒருவர், அலுவலகத்தின் கட்டாயம் காரணமாக மெடிக்ளைம் பாலிசியை எடுத்தார். இன்சூரன்ஸ் எடுத்த ஒன்றரை மாதத்தில், விபத்தில் சிக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிருக்கு ஆபத்து இல்லை. இருப்பினும், மிகப் பெரிய காயங்கள் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவக் காப்பீடு இருந்ததால், மருத்துவச் செலவின்றி அவர் வீடு திரும்பினார்.

'ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும், அதனால் ஏற்படும் உடல்நலக்குறைவும் மருத்துவச் செலவுகளை அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில், மருத்துவக் காப்பீடு என்பது தவிர்க்க முடியாதது. மருத்துவச் செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால்தான் மக்களும் ஏதேனும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.' என்கிறார் ஃபார்ச்சூன் பிளானர் நிறுவனரும், நிதி ஆலோசகருமான பி.பத்மநாபன்.

ஏன் எடுக்க வேண்டும் காப்பீடு?

எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். ஒருவேளை, எதிர்பாராத நேரத்தில் திடீர் விபத்துகள் ஏற்பட்டால், நோய்கள் தாக்கினால், அதை எப்படி எதிர்கொள்வது? அதற்குத் தீர்வாக இருப்பதுதான் மருத்துவக் காப்பீடு. எளிதாகச் சொல்லப்போனால், நமக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நோய்கள் வரலாம் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்று நினைத்தால், குறைந்த அளவு பிரீமியத்தைக் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தி, அதனால் ஏற்படும் செலவுகளை, காப்பீட்டு நிறுவனம் மூலம் பெறக்கூடிய திட்டமே மருத்துவக் காப்பீடு.

தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசி!

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், 'நான் ஏன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று நினைக்கலாம். ஆனால், ஃபேமிலி ஃப்ளோட்டர் என்ற பாலிசித் திட்டம் மூலம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பீட்டுப் பயன்பாட்டுக்குள் கொண்டுவரலாம். தனிநபர் பாலிசியும் உள்ளது. இது அவ்வளவு பிரபலம் இல்லை. ஒருவர் திருமணம் ஆவதற்கு முன்பு, தனிநபர் பாலிசி எடுக்கலாம். பின்பு திருமணம் ஆன பின்பு மனைவி மற்றும் குழந்தைகளையும் அதில் இணைத்துக்கொள்ள முடியும். தனித்தனியாக எடுப்பதைவிட, ஃப்ளோட்டர் பாலிசி பிரீமியம் குறைவு.

நம்மைப் பற்றிய விவரங்கள்!

க்ளைம் எளிதாக இருக்க வேண்டுமானால், நாம் நம்முடைய உடல் சம்பந்தப்பட்டவற்றை ஒன்றும் மறைக்காமல் சொல்ல வேண்டும். முகவரிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, ஏதாவது வியாதி இருக்கிறதா, இல்லையா என்று முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை செய்து, அதனை விண்ணப்பத்துடன் இணைத்துப் பதிவுசெய்திருக்க வேண்டியது அவசியம்

காப்பீட்டைக் கண்டறிவோம்!

மிகப் பெரிய சவால்... 'எந்த பாலிசி எடுப்பது, எவ்வளவு எடுப்பது, மேலும் எந்த நிறுவனத்தில் எடுப்பது, நமக்கு எது தேவை’ என்பதை நாம் அறிய வேண்டும், பிறகு சில கேள்விகளை இரண்டு, மூன்று நிறுவனங்களில் கேட்பதன் மூலம் நமக்கு ஓரளவு தெளிவு கிடைக்கும். இன்று இணையதளங்களில் நாம் எதைக் கேட்டாலும் நமக்கு விடைகிடைக்கும். அதிலும் ஒருமுறை நாம் தேர்வுசெய்தது சரியாக உள்ளதா என்று பார்க்க முடியும். 'காசுக்கேத்த தோசை’ என்பார்கள், அதுபோல பிரீமியத்தை மட்டும் பார்க்காமல், அதில் என்னென்ன கவர் செய்கிறார்கள்... அதில் ஏதாவது கண்டிஷன் இருக்கிறதா... என்று பார்த்தால், நம்மால் நல்ல ஒரு காப்பீட்டைக் கண்டுபிடிக்க முடியும்.

பொதுவான தவறு!

இன்று நிறையப் பேர், 'எனக்கு அலுவலகத்தில் காப்பீடு உள்ளது... அதனால் எனக்கு தனியாகத் தேவைப்படாது’ என எண்ணுகிறார்கள். அது மிகவும் தவறு. இன்று எல்லோரும் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் சூழல். மேலும் வெகு காலம் யாரும் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்வதில்லை, அப்படி இருக்கும்போது, ஒரு வேலையைவிட்டு மறு வேலையில் சேரும்போதுகூட, நமக்கு ஏதாவது நோய் வரலாம். மேலும், பாலிசி எடுத்துச் சில ஆண்டுகள் கழித்துதான் சிலவகையான நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கும். அதனால் தனியாக எடுத்துக்கொள்வது நல்லது. இன்று புதிய வகையான பாலிசிகள் வந்துள்ளன. அவற்றில் ஒன்று நம்முடைய வரம்பு போக, உயிர்க்கொல்லி நோய்கள் எதுவும் கண்டெடுக்கப்பட்டால், நம்முடைய பாலிசி தொகைபோல இருமடங்கு கொடுக்கிறார்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பும் பின்பும்!

சில நோய்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு சில டெஸ்ட் எடுக்க நேரிடும், சில மாத்திரைகள் சாப்பிடவும் செய்யலாம். இவை வழக்கமான மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் முடிவுசெய்யப்படும். 30 முதல் 60 நாட்களுக்கு முன்பு வரை ஆகும் செலவுகளில் ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையே இதன் வரம்புக்குள் கொண்டுவரப்படும். அதேமாதிரி நாம் மருத்துவமனையைவிட்டு வந்தவுடன் நோய் உடனடியாகக் குணமாகாது. அதன்பிறகும் ஆகும் செலவுகளையும் இதில் சேர்க்க முடியும். சிகிச்சைத் திட்டம் பாலிசி எடுப்பதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட நோய்களும் இந்தத் திட்டத்தில் அடங்கும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோய்கள், அதிக மருத்துவச் செலவை ஏற்படுத்தும் நோய்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

நிதிப் பற்றாக்குறை!

மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, நாம் உடல்ரீதியாக மட்டும் பாதிப்புக்குள்ளாவது இல்லை. மாறாக நம்மால் வேலைக்குச் செல்ல முடியாது. அதனால் நம்முடைய சம்பளத்தில் துண்டு விழும். நிதிச் சுமைகளை யார் கவனிப்பது என்பதுபோன்ற கேள்விகள் மனதைப் பிசையும். நாம் எடுக்கும் பாலிசிக்கு ஏற்ப நமக்கும், நம்மைப் பார்த்துக்கொள்பவருக்கும், சில பாலிசிகளில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை தருகிறார்கள்.

மருத்துவப் பரிசோதனை செய்பவர்கள், காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும்தான். எனவே, உங்கள் தரப்பு வாதம்தான் வெற்றிபெறும்.

இந்தியக் கார்களின் தரம்....!


இந்தியக் கார்களின் தரம்....! 

உலகில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பாதுகாப்பு குறித்த சோதனை ஜெர்மனியில் நடத்தப்பட்டது. லண்டனைச் சேர்ந்த கார் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய இந்தச் சோதனைக்கு, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாடா நானோ, மாருதி ஸூசுகி ஆல்டோ 800, ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு பிகோ மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ ஆகிய 5 இந்திய பிராண்டட் சிறிய ரக கார்கள் தோ்வு செய்யப்பட்டன.

ஒவ்வொரு பிராண்டிலும் தலா இரண்டு கார்களை கப்பல் மூலம் ஜொ்மனிக்கு அனுப்பினார்கள். இந்தக் கார்களை வேகமாக ஓட்டிச் சென்று மோத விட்டு சோதனை நடத்தப்பட்டது. ஒரு சோதனை 56 கி.மீ வேகத்திலும் மற்றொரு சோதனை 64 கி.மீ வேகத்திலும் நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக நடந்த இந்த சோதனையில் அனைத்து கார்களும் தோல்வியை தழுவின.

குறிப்பாக உலக அளவில் பாதுகாப்பு சோதனையில் இன்றியமையாததாக கருதப்படும் ஏர்பேக்குகள் எனப்படும் காற்றுப் பைகள் மேற்கண்ட எந்த காரிலும் இல்லை. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடக்கும் ஐந்து லட்சம் சாலை விபத்துக்களில் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். கார்களின் பாதுகாப்பு குறித்த எந்தச் சோதனையும் இந்தியாவில் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெந்தயப் பொரியல் - சமையல்!


தேவையானவை:

வெந்தயம் - ஒரு கப்,

துவரம்பருப்பு - அரை கப்,

 தேங்காய்த் துருவல் - கால் கப்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை,

மஞ்சள் தூள் - சிறிதளவு.


காய்ந்த மிளகாய்,

பச்சைமிளகாய் - தலா 2.

தாளிக்க: கடுகு,

 உளுத்தம்பருப்பு.


செய்முறை:


வெந்தயத்தை முந்தைய நாள் இரவே ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் நீரை வடித்துவிட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை, கிள்ளு பதத்தில் வேகவைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதில் வேகவைத்த வெந்தயத்தைப் போட்டு வதக்கி, வெந்த துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும்.

சுவையான ஆரோக்கியமான வெந்தயப் பொரியல் ரெடி...


(தேவைப்பட்டால், கடைசியில் சிறிது உப்பு சேர்க்கலாம்.)

கற்பனையின் பலம்...?

கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள். "சொல்வது சுலபம் ஆனால் அது நடக்கனுமே" என்று சலித்துக் கொள்ளவேண்டாம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ்ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த்தனர். மனக்கற்பனைக்கும் செயல் திறமைக்கும் ஏதாவது சிறிதளவாவது சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார்.

கம்ப்யூட்டர் திரையில் நிறைய எழுத்துக்களுக்கிடையே மறைந்திருக்கும் சில எழுத்துக்களை மட்டும் காட்டச் சொன்னார்கள். அதற்கு முன் அவர்களை கம்ப்யூட்டர் திரையை இரு கைகளால் முன்புறம் பிடித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளச் சொன்னார்கள். அடுத்து அதையே முதுகுக்குப் பின்னால் பிடித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளச் சொன்னார்கள். இதை அவர்கள் நிஜமாக செய்ய வேண்டியதில்லை சும்மா மனத்தில் நினைத்துக்கொண்டாலே போதும்.

விளைவு, திரையை பின்னால் பிடித்துக்கொண்டிருப்பதாக கற்பனை செய்தபோது மட்டும் மாணவர்கள் அதிக அளவில் எழுத்துக்களை அடையாளம் காட்டினார்கள். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! உளவியல்படி நமக்கு கையருகே இருக்கும் பொருளைப் பற்றித்தான் நாம் அதிக நேரம் கவனிக்கிறோம். அப்பால் (மனத்தளவில்கூட) இருப்பதை குறைந்த அளவே நினைக்கிறோம். ஒரு வகையில் கையருகே இருக்கும் பொருள்கள் அதிக கவனத்தை ஈர்ப்பதால், முடிவெடுப்பதில் இடைஞ்சலாகவே உள்ளன. அவை மறைவாக இருப்பதாக நினைக்கும்போது அது பற்றிய சிந்தனை சிதைவில்லாமல் நடப்பதாக சொல்கிறார்கள்.

மனக்கற்பனை நமது செயலை சிறிதளவாவது பாதிக்கும் என்பது இந்தச் சோதனையிலிருந்து உறுதியாகிறது.

மாலை நேரப் பூக்கள் - சொதப்பல். - விமர்சனம்!

நாயகி நிஷா தன் தோழி ஷோபியாவுடன் வெளியூரில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு நாள் நிஷா, நாயகன் ரவியின் நண்பன் செல்போன் கடைக்குச் சென்று ரீசார்ஜ் செய்கிறார்.

ரவி தன் நண்பன் கடையில் ரீசார்ஜ் செய்யும் பெண்களின் எண்களை எடுத்து ராங் கால் மாதிரி பேசி பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவர். அந்த வகையில், நிஷாவின் செல்போன் எண்ணை எடுத்து அவருக்கு ராங் கால் மாதிரி பேசி கடலை போடுகிறார். நிஷாவும் அவர் யார் என்று தெரியாமலே பேசுகிறார்.

இந்த ராங் கால் நட்பு வலுவாக... தினமும் ரவியுடன் 24 மணி நேரமும் போனில் பேசிக்கொண்டே இருக்கிறார் நிஷா. இதனால் தோழி ஷோபியா கடுப்பாகி நிஷாவை திட்டுகிறார். ஒருநாள் ரவியும் நிஷாவும் முதன்முதலாக சந்திக்கிறார்கள். அங்கு நிஷா நாம் பேசுவதை நிறுத்திக் கொள்ளலாம். என் தோழிக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார். அதற்கு ரவி, ‘எனக்கும் இந்த காதல் எல்லாம் பிடிக்காது. எனவே, என்னை நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி ஒரு குட்டிக் கதையை கூறுகிறார். அந்த கதையை கேட்ட நிஷா அவன் மீது காதல் வயப்படுகிறார்.

இருவரும் காதலித்து வருகிறார்கள். ஒருநாள் நிஷா, ரவியை வீட்டிற்கு வரவழைக்கிறார். அங்கு தன் தோழி ஷோபியாவை அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது திடீரென்று கரண்ட் கட்டாகிறது. மெழுகுவர்த்தி எடுக்கப்போன சிறிது இடைவெளியில் ரவியும் நிஷாவும் படுக்கையறைக்கு சென்று தவறு செய்கிறார்கள். இதை ஷோபியா பார்த்து விடுகிறார்.

இதற்கிடையில் ரவி வேறொரு பெண்ணான பிரியாவை தன் வலையில் விழ வைக்க, அதே குட்டிக்கதையை சொல்லி ஏமாற்றுகிறார். இந்த விஷயம் நிஷாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் ரவியுடன் பேசுவதை தவிர்க்கிறார். நிஷாவை சமாதானம் செய்ய ரவி, நிஷாவிற்கு அடிக்கடி போன் செய்கிறார். அதை ஷோபியா எடுத்து பேசுகிறார். இதனால் ஷோபியாவிற்கும் ரவிக்கும் தொடர்பு ஏற்படுகிறது.

இப்படி பெண்களை அடுத்தடுத்து ஏமாற்றும் ரவி இறுதியில் யாருடன் சேர்ந்தார்? என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சுதாகருக்கு, பெண்களை வசியம் செய்து ஏமாற்றுவதற்கு ஏற்ற முகபாவனை உள்ளது. மற்றபடி இப்படத்தில் நடித்திருப்பவர்கள் நடிப்பு என்னும் பெயரில் ஏதோ செய்கிறார்கள். நாயகிகளுக்கு நடிப்பே வரவில்லை. கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பெற்றோர்களின் வளர்ப்பு இல்லாமல் இளைஞர்கள் வாழ்ந்தால் எப்படி வாழ்வார்கள் என்ற கதையை ரசிகர்களிடம் கொண்டு செல்வதற்காக, கவர்ச்சி, காமம் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக திணித்திருக்கிறார் இயக்குனர். சிறு பட்ஜெட் படங்கள் வெற்றியடைந்து வரும் சூழ்நிலையில், இதுபோன்ற படங்கள் வெளிவந்து இளைஞர்களையும் சினிமா உலகத்தினரையும் சீரழிக்கிறார்கள். படத்தில் இசை என்னும் பெயரில் எல்லாப்படத்தின் பிண்ணனி இசையையும் போட்டு பார்ப்பவர்களை கடுப்பேத்துகிறார். நீண்ட காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகளை வைத்து இயக்குனர் ஏமாற்றி இருக்கிறார்.

இங்க என்ன சொல்லுது - சொல்ற மாதிரி எதுவும் இல்ல. - விமர்சனம்!

கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது வாழ்க்கையை கார் டிரைவரான சந்தானத்துடன் கூறுவதுபோன்ற காட்சியுடன் படம் நகர்கிறது. சிம்புவும், விடிவி கணேஷும் அண்ணன் தம்பிகள். ஒருநாள் இரவில் இருவரும் வந்து கொண்டிருக்கும்போது வழியில் மீரா ஜாஸ்மினிடம் ரகளை செய்யும் சிலபேரிடமிருந்து அவரை மீட்கிறார்கள். இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்படுகிறது.

ஒருநாள் மீரா ஜாஸ்மின் தன்னுடைய பிறந்த நாளுக்கு கணேசையும், சிம்புவையும் அழைக்கிறார். அங்கு போகும் சிம்பு, மீரா ஜாஸ்மினுக்கு விலை உயர்ந்த வைர மோதிரத்தை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதை இன்முகத்துடன் வாங்கிக் கொள்ளும் மீரா ஜாஸ்மினுக்கு சிம்புவின் மீது காதல் வருகிறது. அதை அவரிடமே தெரிவிக்கிறார் மீரா ஜாஸ்மின்.

ஆனால், சிம்புவுக்கோ ஏற்கெனவே ஆண்ட்ரியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் மீரா ஜாஸ்மின் தன்னிடம் காதல் கூறியதும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கணேஷிடம் சொல்லி, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அவளிடம் கூறச் சொல்கிறார். ஒருநாள் தன்னை எப்பொழுது கல்யாணம் செய்துக்கொள்ளப் போகிறாய் என்று சிம்புவுக்கு மீரா ஜாஸ்மின் மெசேஜ் அனுப்புகிறார். அதை, சிம்புவின் வீட்டிற்கு வந்திருக்கும் ஆண்ட்ரியா பார்த்துவிடுகிறார். உடனே பதிலுக்கு மீரா ஜாஸ்மினுக்கு போன் செய்து அவரை திட்டிவிடுகிறார்.

ஏதும் அறியாத மீரா ஜாஸ்மின் கணேஷிடம் அவள் யார் என்று கேட்க, அவள்தான் சிம்புவை திருமணம் செய்துகொள்ளப் போகிறவள் என்பதை மீரா ஜாஸ்மினிடம் விளக்கிவிட்டு போனைத் துண்டித்துவிட்டுகிறார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கணேஷுக்கு போன் வருகிறது. தன்னை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறிவிட்டு, தற்போது மறுப்பதாக மீரா ஜாஸ்மின் கணேஷ் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கூறியுள்ளார். போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் கணேஷ், அவளை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அங்கிருந்து அழைத்து வருகிறார்.

இதற்கிடையில் கணேஷின் நெருங்கிய உறவினரான மயில்சாமி அவரை பார்க்க வருகிறார். இருவரும் சேர்ந்து ஒரு சினிமாப் படம் எடுக்க முடிவெடுக்கின்றனர். இதற்காக மீரா ஜாஸ்மினின் வீட்டை அடமானம் வைக்கின்றனர். ஆனால், படம் எடுக்க காலதாமதம் ஆவதால், அந்த பணம் எல்லாம் கரைந்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல், மீரா ஜாஸ்மினின் நகையெல்லாம் அடகு வைத்து ரேஸில் போட்டு பணத்தையெல்லாம் கரைக்கிறார். இதனால் மீரா ஜாஸ்மின் அவர்மீது கோபத்துடன் இருக்கிறார்.

இறுதியில் கணேஷ், திருந்தி மீரா ஜாஸ்மினுடன் சந்தோஷமாக வாழ்ந்தாரா? அவரது வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

படத்தின் கதாநாயகன் விடிவி கணேஷ். தான் கதாநாயகன் ஆகவேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். தன்னுடைய குரலையே பலமாக நம்பி, கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில் தனக்குத்தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

சிம்பு படத்தில் கால் மணி நேரம்தான் வருகிறார். இவரும் ஆண்ட்ரியாவும் காட்டும் நெருக்கும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இருந்தாலும் ஓகே சொல்லலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டியிருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு வெயிட்டான கதாபாத்திரம். ஆனால், கணேஷுக்கு ஜோடியாக நடிக்க எப்படித்தான் முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. இருவரும் கணவன்-மனைவியாக இருந்தாலும் படத்தில் இருவரும் நெருங்கி நடிக்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. இவரே கணேஷிடம் அவ்வாறெல்லாம் நடிக்க முடியாது என்று கூறியிருப்பார் போலும்.

சந்தானம் இந்த படத்தில் கடவுளின் அவதாரம் போல் வருகிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். வழக்கம்போல் விடிவி கணேஷை கலாய்க்கும் காட்சிகள் அருமை. தரண் இசையில் ஒரு பாடல் கூட கேட்கும்படியாக இல்லை என்றே சொல்லலாம். ‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்தவர் இவரா என்று கேட்க தோன்றுகிறது. பின்னணி இசையும் படம் முழுக்க ஒரே மாதிரி உள்ளது.

திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போது அபரிதமான ஒன்று. இந்த சூழ்நிலையில், இதுபோன்ற திரைப்படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை என கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள். பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும். திரையில் நடப்பதைதான் விமர்சனமாக சொல்லப்படும். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை தியேட்டருக்கு உள்ளே நடப்பதையே விமர்சனமாக சொல்லலாம். 

4வது அழகி ஐஸ்வர்யா ராய்!

உலகின் மிக அழகான பெண்களில் 4வது இடம் பிடித்தார் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய்.

ஹாலிவுட் ஆன்லைன் பத்திரிகையொன்று உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. உலகம் முழுவதும் ஆன் லைனிலேயே இதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் இத்தாலிய நடிகை மோனிசாயெல்லுசி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றார்.
அமெரிக்க நடிகை கேத் ஆப்டன் இரண்டாவது இடத்தையும், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 3வது இடத்தையும் பிடித்தனர்.

முன்னாள் உலக அழகியும், இந்திய நடிகையுமான ஐஸ்வர்யாராய் 4வது இடம் பிடித்தார். இந்தி நடிகை தீபிகா படுகோனே உலகின் மிக அழகான பெண்கள் போட்டியில் 29வது இடத்தை பிடித்துள்ளார். 4வது இடத்தில் தேர்வு செய்ததற்காக ரசிகர்களுக்கு ஐஸ்வர்யாராய் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அழகும் திறமையும் உள்ள பெண்களைப் பற்றிய கருத்து கணிப்பை உலகம் முழுவதும் நான்கு மில்லியன் பேர் ஓட்டளித்து எனக்கு பெரிய கவுரவத்தை அளித்துள்ளனர் என்றும் இதற்காக அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார்

சிம்புவுக்கு ஒரே படத்தில் 2 ஜோடிகள் நயன்தாரா & ஹன்சிகா! Hot news..

சிம்பு ஹீரோவாக நடிக்க, சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்க, தம்பி குறளரசன் இசை அமைக்க, மாஜி காதலி நயன்தாரா நடிக்க, பசங்க பாண்டிராஜ் இயக்க தயாராகிவருகிறது இது நம்ம ஆளு. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்த கட்டமாக பாடல் காட்சிகள் எடுக்க வேண்டும். வெளிநாட்டில் எடுக்கலாம் என்பது சிம்புவின் ஆசை. நயன்தாரா அதற்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கவில்லை.

கடைசி கட்ட ஷூட்டிங்கில்தான் அடுத்த பரபரப்பு இருக்கிறது. படத்தில் திடீரென்று நயன்தாரா கமிட்டாகி படத்துக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்ததைபோல அடுத்த அதிரடி இருக்கிறது. கதைப்படி சிம்புவின் முதல் காதல் தோற்றுவிடும், காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என்று திரியும் சிம்புவுக்கு பெற்றவர்கள் நயன்தாராவை பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து விடுவார்கள். 6 மாதத்துக்கு பிறகுதான் கல்யாணம். அதுக்குள்ள லவ் பண்ணிக்குங்க என்பதுதான் பெற்றவர்களின் கண்டிஷன்.

அவர்களுக்கு லவ் வந்துச்சா வரலியா? லவ் வந்து கல்யாண நேரத்தில் பழைய காதலி திரும்பி வந்தாரா? சிம்புவுக்கு இருந்த மாதிரியே நயன்தாராவுக்கும் ஒரு முதல் காதல் இருந்ததா? இந்த விபரத்தையெல்லாம் சொன்னால் பாண்டிராஜ் சார் கோவிச்சுக்குவார்.

இப்போ விஷயத்துக்கு வருவோம். கடைசி ஷெட்யூல் பரபரப்பு என்னவாக இருக்கும் தெரியுமா? சிம்புவின் முதல் காதலி யார்? என்பதுதான். அதாவது முதல் காதலியாக நடிப்பவர் யார் என்பது? அந்த கேரக்டரை நயன்தாரா அளவுக்கு பவர்புல்லான ஒரு ஹீரோயின் செய்தால்தான் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் கருதுகிறார். இதனால் தீவிரமாக ஹீரோயின் வேட்டை நடக்கிறது. "அவரை அந்த கேரக்டர்ல நடிக்க வச்சிட்டீங்கன்னா கோடியை கொட்டிக் கொடுத்து படத்தை வாங்கிக்கிறோம்"னு டிஸ்ட்ரிபியூட்டர்களும், தியேட்டர்காரர்களும் சொல்லியிருக்காங்களாம். அவர்கள் சொல்லும் அந்த ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி.

சூரிய சக்தியில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாணவி சாதனை!

மின்சாரப் பிரச்னை எங்கும் உள்ளது. வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், இனிமேல்தான் வளரப்போகும் நாடுகள் என எவையும் இதற்கு விதிவிலக்கில்லை.இந்தப் பிரச்னைக்கான தீர்வு, நம் கண்ணெதிரே இருக்கிறது:

 சூரிய ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாலே போதும்!இதைக் கவனத்தில் கொண்டு அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார்.

எந்தவொரு அசுத்த நீரையும் குடிநீராக மாற்றும் இப்பொறிமுறையைக் கண்டுபிடித்த தீபிகா குரூப் என்ற இந்த மாணவிக்கு “அமெரிக்காவின் முதல் தர இளம் விஞ்ஞானி” பட்டம் வழங்கப்பட்டுள்ளது.அதேவேளை இம் மாணவிக்கு அமெரிக்காவின் Discovery Education மற்றும் 3M ஆகிய நிறுவனங்கள் 25,000 அமெரிக்க டாலர்களை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செயற்கை விழித்திரை பொருத்தி பார்வை! அரிய சாதனை!

உலகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையின்றி தவிக்கின்றனர். எனவே செயற்கையான முறையில் விழித்திரையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கண் பார்வையற்ற எலிக்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன லென்சுடன் கூடிய விழித்திரை பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.இதன் மூலம் பார்வை கிடைத்த எலி துள்ளிக் குதித்து விளையாட ஆரம்பித்தது.

எனவே இதே தொழில்நுட்பத்தை மனிதர்களுக்கும் பயன்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அமெரிக்க மருத்துவர்கள் கண்பார்வையற்ற இரண்டு நோயாளிகளுக்கு செயற்கை விழித்திரைகளைப் பொருத்தி அவர்கள் முன்னால் இருப்பவர்கள், பொருட்கள் மற்றும் வெளிச்சம் போன்றவற்றை அவர்கள் அறிந்து கொள்ளுமாறு உதவி புரிந்து சாதனைப் புரிந்துள்ளனர்.

மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த திரன் ஜெயசுந்தரா மற்றும் டேவிட் என் ஸாக்ஸ் என்ற மருத்துவர்கள் விழித்திரை நோய் இருந்த இரண்டு நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள்.தங்களின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெயசுந்தரா நோயாளிகளின் முன்னேற்றமும் தங்களுக்குத் திருப்தியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சிகிச்சை மூலம் அவர்கள் தங்கள் வீட்டில் சுதந்திரமாக நடமாடவும், மற்றவர்களைப் போல் பிற விஷயங்களைப் பார்த்து மகிழ்ச்சியடையவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்கஸ் II ரெடினல் புரோஸ்தசிஸ் என்று அழைக்கப்படும் இந்த செயற்கை விழித்திரையானது சென்ற வருடம்தான் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றது. நோயாளி அறுவை சிகிச்சையிலிருந்து பூரணமாகக் குணமடைந்த பின்னரே இந்த விழித்திரையின் செயல்பாடு தொடங்கும். அதன்பின்னரே சுமார் ஒன்றிலிருந்து மூன்று மாத காலத்திற்கு புதிய பார்வைத் திறனுக்கான பயிற்சி அந்த நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக மருத்துவத்துறை நிர்வாகம் தெரிவிக்கின்றது. 

முதுமையில் தூக்கம்....!

ஒவ்வொரு மனிதனுக்கும்  முதுமை என்பது ஒருநாள் வரக்கூடிய பருவமாகும். இந்த பருவம்தான் மிகுந்த அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் பருவமாகும்.  நம் முன்னோர்கள் முதுமைப்பருவத்தை மீண்டும் ஒரு குழந்தைப் பருவம் என்றனர்.

பண்பாடு நிறைந்த நம் பாரத தேசத்தில் மக்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர்.  அனுபவமிக்க முதியோர் சொல்லும் வழி காட்டுதலில் பிள்ளைகளை வழி நடத்தி வந்தனர்.  இதனால் இவர்கள் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து குடும்பத்தை ஆலமரமாகத் தழைக்கச் செய்தனர்.
இந்த முதுமைப் பருவத்தில் உடல் பலவகையான பாதிப்புகளை சந்திக்க நேர்வது இயல்பான ஒன்று தான்.  உடலின் சத்துக்கள் குறைதல், எலும்புகளின் வலிமை குன்றல், உறுப்புகளின் செயல்பாடு குறைதல் போன்றவை இக்காலத்தில் ஏற்படும்.  முதியவர்கள் பலர் பல நோய்களில் அவதியுற்றாலும், முக்கால் வாசிப்பேர் தூக்கமின்மையால் அவதியுறுகின்றனர்.  முதுமைப் பருவத்தில் தூக்கமின்மை உடலின் ஆரோக்கியத் திற்குக் கேடாகும்.

முதுமைப் பருவம் என்பது இயற்கை கொடுக்கும் ஓய்வுப் பருவம்.  இளைய தலை முறையினரை  நல்வழிப்படுத்தும் பருவமும் இதுவே.

முதுமையில் அதிக மன உளைச்சல், மனதிற்கு வேதனை தரும் சம்பவங்கள், ஓயாத சிந்தனை இவற்றாலும், அல்லது சர்க்கரை நோய் இரத்த அழுத்த நோய், சிறுநீரக நோய் இவற்றாலும் தூக்கமின்மை ஏற்படுகிறது.

நரம்பு மண்டலத்தில் சரிவர இரத்த ஓட்டமின்மையாலும், இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பதாலும் அதாவது கல்லீரல்  பாதிக்கப் பட்டு அதனால் பித்தப்பை அலர்ஜி உண்டாகி அதிக பித்த நீரைச் சுரக்கிறது. இதனாலும் இரத்தத்தில் பித்த நீர் அதிகரிக்கிறது.

இதனால் தூக்கமின்மை உண்டாகிறது.  பொதுவாக தூக்கமின்மைக்கு பித்தம் அதிகரிப்பு தான் முக்கிய காரணமாகும்.  பித்தத்தை அதிகரிக்கக் கூடிய உணவுப் பொருட்களை உண்பதாலும், அதனால் வயிற்றில் செரியாமை ஏற்பட்டு, வாயு அதிகரித்து, நரம்பு மண்டலத்தை பாதித்து உடலில் நரம்புகள் இறுக்கம் உண்டாகி தசை நார்கள் இறுகிவிடுகின்றன.  இதனால் தூக்கமின்மை உண்டாகிறது.

வயதுக்கு மீறி உடலுக்கு  கடின வேலை கொடுப்பவர்கள், ஓய்வில்லா வேலை இவையாலும் உடல் அசதியுற்று தூக்கமின்மை உண்டாகும்.

அதுபோல் மலச்சிக்கல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும்.  மலச்சிக்கலால் குடலில் உள்ள குன்ம வாயு சீற்றம் கொண்டு சிரசைத் தாக்கும் .  இதனால் மூளை வறட்சி உண்டாகி நரம்பு மண்டலத்தை உலரச் செய்து, மனதிற்கு ஒருவித தாக்கத்தை உண்டுபண்ணி தூக்க மின்மையை ஏற்படுத்துகிறது.

முதுமையில் உண்டாகும் அதீத பாசம், ஏக்கம், இயலாமை, பொருளாதார தட்டுப்பாடு, குழந்தைகளால் போதிய கவனிப்பின்மை, தனிமை, போதிய தங்கும் வசதியின்மை, அடுத்தவரின் உதவியை எதிர்பார்ப்பது போன்ற காரணங்களாலும் தூக்கமின்மை உண்டாகும்.

சிலருக்கு நோய்களின் தாக்குதலுக்கு மருந்து, மாத்திரை எடுப்பதால் அவை தூக்கமின்மையை உண்டாக்கும்.  இளம் வயதில் அதிக மது, போதை வஸ்து, புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு முதுமையில் தூக்கமின்மை ஏற்படும்.

மனதளவில் தான் வயது முதிர்ந்தவர் என்ற எண்ணத்தில் எந்த வித வேலையையும் செய்யாமல், உடலுக்கு அசைவு கொடுக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் தூக்க மின்மை உண்டாகும்.

தூக்கமின்மையைப் போக்க

பழங்காலத்தில் அனைவருமே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர்.  அந்த குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் சொல்படிதான் அந்த குடும்பத்து உறுப்பினர்கள் நடந்துகொள்வார்கள்.  முதியவர்கள்  மாலைநேரத்தில் வீட்டுத் திண்ணையிலோ, கோவில்களிலோ அல்லது எதாவது ஒரு பொது இடத்திலோ அமர்ந்து ஒருவருக்கொருவர் கலந்து பேசி மனக் குறைகளையும் நிறைகளையும் பகிர்ந்து கொள்வார்கள்.  இதனால் அவர்கள் தங்களுக்கு உண்டான மனக்குறைகள் தீர்ந்து நல்ல தூக்கத்தை பெற்றார்கள்.

மனம் அமைதி பெற்றால் உறக்கம் தானாக நம்மைத் தழுவிவிடும்.  நம் முன்னோர்கள் அயராது உழைத்து உடலுக்கும் பயிற்சி  கொடுத்து, மாலையில் மற்றவர்களுடன் கலந்து பேசி, மனதிற்கும் அமைதி கொடுத்து வாழ்ந்ததால் சஞ்சலம், சலனம் இல்லா ஆரோக்கியமான வாழ்வைப்  பெற்றனர்.

ஆனால் தற்போது முதுமையிலும், வேலைப்பளு, மன அமைதியின்மை எப்போதும் போராட்டம், பொறுமையின்மையும் ஆட் கொண்டுவிட்டது.  ஒருவருக்கொருவர் மனத் துயரங்களை பகிர்வது என்பது இல்லாமல் போய்விட்டது. அதோடு உணவு முறை, இரசாயனம் கலந்த உணவு போன்றவற்றால் உடல் சீர்கேடு அடைந்து முதுமையில் தூக்கமின்மை ஏற்படுகிறது.

நல்ல தூக்கத்திற்கு முதுமையில் நடைப்பயிற்சி அவசியம்.  மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

தூக்க மாத்திரை உண்பவர்கள் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள்.  இதனால் இவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகிவிடுகிறது.  நாளடைவில் தூக்கமாத்திரையை 1க்கு 2 என்று அதிகரித்தாலும் தூக்கம் என்பது வெறும் கனவாகிவிடுகிறது.  தூக்கமாத்திரை உட்கொள்ளும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

நல்ல தூக்கம் பெற

· நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், இரவு உணவில் காரத்தைக் குறைத்து சாப்பிட வேண்டும்.

· நார்ச்சத்து மிகுந்த பழங்கள், எளிதில் சீரணமாகும்.  மென்மையான உணவுகள் போன்றவற்றை உண்ண வேண்டும்.

· இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் சூடான பால் அருந்தினால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

· படுக்கையறை மிகுந்த காற்றோட்டமானதாக இருக்க வேண்டும்.  மென்மையான இசையைக் கேட்டுக்கொண்டே தூங்கலாம்.

· தியானம் செய்ய வேண்டும்.  இதனால் சிதைந்து கிடக்கும் எண்ணங்கள் ஒருநிலைப்பட்டு மன அமைதியடைந்து, எதையும் தாங்கும் இதயமாக தியானம் உங்களை மாற்றும்.  இந்நிலை அடைந்தால், தூக்கம் தானாகவே உங்களைத் தேடி வரும்.  எனவே தியானம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.

· தாமரை இலையின் மேல் தண்ணீர் போல் பற்றற்று வாழ் என்றார் ராமகிருஷ்ணர்.  அவ்வாறு வாழ்ந்தால் மனம் அமைதியடையும்.  மனம் அமைதி அடைந்தால் நல்ல தூக்கம் தானாகவே வரும்.

· மனம் விட்டு பேசுங்கள், மகிழ்ச்சியான எண்ணங்களை அசைபோடுங்கள், முதுமைப் பருவம் போராட்டமாக இல்லாமல் போற்றுதலாகத் தோன்றும்.

‘ஆனந்த மழை’யில் கலக்கப்போகும் மு.களஞ்சியம் !

ஜி.கே. அறிவுச்சோலை திரைப்பட நிறுவனமும், அப்போலைன் ரியல்டர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஆனந்த மழை’. சுப தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார். இவர் சரண்ராஜ் நடித்த கரிசல்மண் படத்தை இயக்கியவர். ஸ்டீபன் ராயல் இசையமைக்கிறார். கணேஷ் ராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இதில் ஜெய் ஆனந்த், சுப தமிழ்வாணன், சிவா ஆகிய மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மு.களஞ்சியம் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார். இரண்டு கெட்டப்புகளுக்கும் கொஞ்சம் ஒற்றுமையில்லாமல் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். புதுமுக கதாநாயகிகளாக விகீதா, ஸ்ரீஜா நடிக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, செந்தில், சிங்கமுத்து, லியாகத் அலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும், சாதிப்பதற்காக எப்பவுமே சந்தோஷமாக இருக்கும் கவிஞரின் அறை தோழர்களாக, வாழ்க்கையில் விரக்தியடைந்த இரண்டு இளைஞர்கள் வந்து சேர்கிறார்கள். கவிஞரைச் சந்தித்த பின் புத்துணர்ச்சி பெற்று, புரட்சிகரமான சிந்தனைகளுடன் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அப்படித் தொடங்கும் புதிய வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் ‘ஆனந்த மழை’ படத்தின் கதை.

தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. 

ராஜூசுந்தரத்தை மிஞ்சப்போகும் கார்த்திகா...?



செலக்டீவ்வாக படங்களை பண்ணக்கூடியவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை என்ற சில படங்களை மட்டுமே இயக்கியவர், பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இப்போது புறம்போக்கு என்ற படத்தை இயக்குகிறார். ஆர்யா, ஷாம், விஜயசேதுபதி என மூன்று நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் கோ பட நாயகி கார்த்திகா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், கோ படம் என்னை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நல்லவிதமான அடையாளம் காட்டியது. முதல் படமே மெகா ஹிட்டானதோடு, பாரதிராஜாவின் அன்னக்கொடியில் மிகுந்த நம்பிக்கை வைத்து நடித்தேன். ஆனால், படம் காலைவாரி விட்டது. அதையடுத்து, டீல் என்றொரு படத்தில் நடித்திருக்கிறேன்.

இந்த நிலையில், கண்ட படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, தரமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருந்து வந்த நேரம்தான், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. வித்தியாசமான இயக்குனர் என்பதால், நம்பிக்கையுடன் கதை கேட்டேன். நான் எதிர்பார்த்ததை விடவும் அற்புதமான கதையாக சொன்னார். அதிலும் என் கேரக்டர் ரொம்ப வித்தியாசமானது. இதுவரை மென்மையான பெண்ணாக நடித்து வந்த நான், இந்த படத்தில் கரடுமுரடான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

வீடியோ கேம் மூலம் பிரபலமான வீராங்கனை லாரா க்ராப்ட் போன்ற கெட்டப்பில் நடிக்கும் எனக்கு ஆக்சன் காட்சிகளும் உள்ளது. குறிப்பாக, ஒரு பாடலில் டேப் டான்ஸ் ஆடியுள்ளேன். இதற்கு முன்பு தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடன மாஸ்டர் ராஜூசுந்தரம்தான் ஒரு பாடலில் அந்த நடனத்தை ஆடியிருந்தார். அதன்பிறகு தமிழில் நான்தான் ஆடுகிறேன்.

ஆக, டேப் டான்ஸ் ஆடிய முதல் தமிழ் நடிகை என்ற பெருமை எனக்கு இந்த படம் மூலம் கிடைக்கப்போகிறது என்கிறார் கார்த்திகா.

நவரச நாயகனுக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகிறது...!

பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் சரிந்த பிறகு, தெலுங்கு, இந்தியில் இருந்து சில மெகா படங்களுக்கு வில்லன்களை கொண்டு வந்தனர். ஆனபோதும், அவர்களால் தமிழில் சைன் பண்ண முடியவில்லை. அதனால் இப்போது அப்பா வேடங்களுக்கு மாஜி ஹீரோக்களை அழைத்து வருவது போன்று, வில்லனுக்கும் மாஜி ஹீரோக்களை புது எனர்ஜி கொடுத்து கொண்டு வரலாமே என்று உதித்த யோசனையின் பயனாகத்தான், தனுஷ் நடிக்கும் அனேகன் படத்திற்காக நவரச நாயகன் கார்த்திகை வில்லனாக்கியுள்ளார் கே.வி.ஆனந்த்.

அந்த படத்துக்காக தனது கெட்டப்பை மறுபடியும் யூத்புல்லாக மாற்றியிருக்கும் கார்த்திக், பழைய கார்த்திக்கை நினைவுபடுத்தும் வகையில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனுஷ் முதன்முறையாக நான்கு கெட்டப்புகளில் நடிக்கும் அப்படத்தில், கார்த்திக்கிற்கும், தனுசுக்குமிடையே பலத்த நடிப்பு போட்டியே நடந்து கொண்டிருக்கிறதாம்.

மேலும், ஹீரோவாக நடித்து வந்த காலத்தில், நினைத்த நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு வருவது, திடீரென்று இதோ வருகிறேன் என்று ஓட்டம் பிடிப்பதுமாக இருந்து வந்த கார்த்திக், இப்போது முற்றிலும் புதியவராக மாறி விட்டாராம். புதுமுக நடிகர்கள் போன்று 9 மணிக்கே ஸ்பாட்டில் அஜராகி விடுபவர், 6 மணிக்கு டைரக்டர் பேக்அப் சொன்ன பிறகுதான் அவுட் போகிறாராம்.

அவரது இந்த மாற்றத்தைக் கேள்விப்பட்டு இப்போது, அஜீத்தைக் கொண்டு கெளதம்மேனன் இயக்கும் படத்திற்கும் கார்த்திக்கை வில்லனாக கமிட் பண்ணியுள்ளார்கள். அதோடு, அனேகன் படத்திற்கு அவர் காட்டும் ஆர்வம், உழைப்பைக் கேள்விப்பட்டவர்கள், அப்படின்னா, இந்த படத்திலும் அஜீத்துக்கும், கார்த்திக்குமிடையே மிகப்பெரிய பலப்பரீடசை நடக்கும் என்று கூறுபவர்கள், இதே பாணியில் போனால், வில்லன் பஞ்சம் தலைவிரித்தாடும் கோலிவுட்டில் அடுத்து முன்னணி வில்லன் நடிகராகி விடுவார் கார்த்திக் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

கல்யாணத்தை விடவும் காதல்ல இவ்வளவு சுவாரஸ்யம் இதுக்குதுங்க…

கல்யாணத்தை விடவும் காதல்ல இவ்வளவு சுவாரஸ்யம் இதுக்குதுங்க…

காதல் பொழுதில் விரும்பும் குறும்பு, கல்யாணத்தில் கிடைப்பதில்லை…’ என சொல்லப்படுவதுண்டு.

கல்யாணம் செய்து கொள்வதற்காகத் தான் பெரும்பாலானவர்கள் காதலிக்கிறார்கள் என்ற போதும், காதல் வாழ்க்கையே கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்வதில்லை. இதோ, காதலுக்கும், கல்யாணத்திற்உம் இடையே உள்ள சுவாரஸ்யமான வித்தியாசங்கள் சில…..

காதல் சண்டை….

காதல் என்பது கைகோர்த்த படி உலகைச் சுற்றி வரும் உலா…திருமணம் என்பது நடுத் தெரு என்று கூட பாராமல் போடும் சண்டை.

பார்சல் சாப்பாடு….

காதல் என்பது பிடித்த உணவகங்களில் சேர்ந்து சாப்பிடுவது மாதிரி… திருமணம் என்பது பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவது

சோபா….

காதல் என்பது சோபாவில் அமர்ந்து சொகுசாக படம் பார்ப்பது… திருமணம் என்பது கோபித்துக் கொண்டு அந்த இருவரில் ஒருவர் சோபாவில் படுத்துத் தூங்கத்தான் உதவும்…

குழந்தைகள்….

காதல் பொழுதுகளில் குழந்தைகளைப் பற்றி கனவு காண்பார்கள்…. திருமணத்திற்குப் பிறகோ குழந்தைகளிடமிருந்து தங்களுக்கு சிறிது தனிமை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தவிப்பார்கள்

பசி….

காதல் பசியைக் குறைக்கும்… திருமணம் உடல் எடையைக் குறைக்கும்… (கவலைகளால்…)

டிவி யுத்தம்….

காதலுக்கு டிவி தேவையில்லை… திருமணத்திற்குப் பிறகோ டிவி ரிமோட்டிற்காக உலகப் போரே நடக்கும்….

இளநீர் தத்துவம்….

காதலில் ஒரு இளநீரில் 2 ஸ்ட்ரா… திருமணத்திற்குப் பிறகோ, ‘நீயே குடிச்சுத் தீர்த்துடலாம்னு ஆசைப்படாத…’

அவ்ளோ தாங்க….

மொத்தத்தில், காதலுக்கு கண்ணில்லை….கல்யாணம் கண்களைத் திறந்து வைக்கும் கருவி….

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்...!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்????

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்???

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில்
குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும்
போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள்,
பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும்
அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்???

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்!!!!!!

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்..!

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்:

முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: 

நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியிடம் ஸ்ருதிஹாசன் போட்ட கண்டிஷன்..?

இனி சென்னைக்கு நோ, ஹைதராபாத் தான் எப்போவும் ஸ்ருதி முடிவு.. எல்லாவற்றையும் எழுதும் ஸ்ருதிஹாசன் தனக்கு நடந்த ஆபரேஷன் பற்றி மூச்சுகூட விடவில்லை ட்விட்டரில்.

இது இப்படி இருக்க, ஸ்ருதி எப்போதும் தெலுங்குக்கும் இந்திக்கும் முதலிடம் கொடுக்கிறார். அவரை தமிழில் நடிக்க கூப்பிட்டதும் தனது கண்டிஷன் ஒன்றையும் ஹரியிடம் வைத்தாராம். அவரும் ஓகே என்றாராம்.

என்னவென்றால், இந்த படத்திற்காக சில நேடிவிட்டி காட்சிகளை நீங்கள் தமிழ்நாட்டில் எடுக்கிற ஊரில் எடுங்கள். ஆனால் கூடுமானவரை நான் நடிக்கிற காட்சிகளை மட்டும் ஆந்திராவில் வைத்துக் கொண்டால் நல்லது என்றாராம்.

மும்பையிலிருந்து தனது குடியிருப்பை ஐதராபாத்துக்கே மாற்றிவிடும் எண்ணத்திலும் இருக்கிறாராம் அவர். திடீரென அவர் சென்னையை வெறுத்ததற்கு என்ன காரணம் யாருக்கும் தெரியவில்லையாம். 

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் வளைந்த ஸ்மார்ட்போன் ரூ.69,999...!

பிப்ரவரி மாதம் இந்தியாவில் எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் வளைந்த ஸ்மார்ட்போன் ரூ.69,999 விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் வளைந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் நிறுவனத்தின் முதல் வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் ஆகும்.

ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் அடிப்படையில் எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் குவாட் கோர் 2.26GHz ஸ்னாப்ட்ராகன் 800 (MSM8974) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. Adreno 330 ஜி.பீ.யூ., மற்றும் ரேம் 2GB கொண்டுள்ளது. இது 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 2.1 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

இதில் 3,500 mAh பேட்டரி ஆதரிக்கப்படுகிறது, 177 கிராம் எடையும், மற்றும் அதன் அடர்த்தி 8.7mm, மெல்லிய 7.9mm கொண்டுள்ளது. 6 இன்ச் (1280 x 720 பிக்சல்கள்) HD வளைந்த பிளாஸ்டிக் ஓல்இடி டிஸ்ப்ளே, அல்ட்ரா ஒளி, அல்ட்ரா மெல்லிய மற்றும் நெகிழ்வு கொண்ட பிளாஸ்டிக் ஓல்இடி டிஸ்ப்ளே (POLED), வருகிறது.

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

    6 இன்ச் (1280 x 720 பிக்சல்கள்) HD வளைந்த பிளாஸ்டிக் ஓல்இடி டிஸ்ப்ளே,
    Adreno 330 ஜி.பீ.யூ கொண்ட 2.26GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 800 (MSM8974) பிராசசர்,
    LED ஃப்ளாஷ், 30 FPS 1080p வீடியோ பதிவு கொண்ட 13MP மெகாபிக்சல் பின்புற கேமரா,
    2.1MP முன் எதிர்கொள்ளும் கேமரா,
    2GB DDR3 ரேம், 32 ஜிபி உள் நினைவகம்,
    3500 mAh திறன் கொண்ட பேட்டரி,
    177 கிராம் எடை,
    ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன்.

எஸ் பென் கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ டேப்லட்..!

சாம்சங் இறுதியாக விலை விவரங்கள் வெளிப்படுத்தாமல், அதன் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் வெளியிடப்பட உள்ளது. கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட், 3 ஜி மற்றும் கேலக்ஸி நோட் 3 நியோ LTE+ டப், LTE மாடல் ஆகிய இரு வகைகளில் கிடைக்கும் என்று சாம்சங் போலந்து, வழியாக உறுதி செய்யப்பட்டது. மேலும், சாம்சங் போலந்தில் சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பிப்ரவரி மாதம் உலக சந்தையில் கிடைக்கும் என்று தகவல் அளித்துள்ளது மற்றும் கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ண வகைகளில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி நோட் பேப்லட் தொடர் போல மிகவும் சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ எஸ் பென் கொண்டுள்ளது. LTE variant ஒரு Hexa கோர் பிராசசர் (இரண்டு 1.7GHz கார்டெக்ஸ் A15 + நான்கு 1.3GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A7) மூலம் இயங்குகின்றது, 3G மாடல் 1.6GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) மூலம் இயங்குகின்றது என்பதை தவிர சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ இரண்டுமே ஒரே மாதிரியான innards  உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகின்றது.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் மற்ற குறிப்புகள்:

5.5 இன்ச் HD (720x1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ரேம் 2GB, microSD அட்டை வழியாக 64GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடிக்கிய சேமிப்பு, மற்றும் 3100mAh பேட்டரி. சாம்சங்  கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட்டில் எல்இடி ஃப்ளாஷ் மற்றும் BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, மேலும் BSI சென்சார் கொண்ட 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. சாதனத்தில் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, ஜிபிஎஸ், GLONASS, NFC, ப்ளூடூத், இன்ஃப்ராரெட் மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ சாம்சங் ஆப்ஸ், சாம்சங் ChatON, சாம்சங் WatchON, சாம்சங் Link, ஸ்கிரீன் மிரர்ரிங், எஸ் வாய்ஸ், S ஹெல்த், க்ரூப் ப்ளே, ஸ்மார்ட் Scroll, ஸ்மார்ட் பாஸ், ஏர் வியூ, ஸ்டோரி ஆல்பம் மற்றும் S மொழிபெயர்ப்பாளர் ஆகிய அப்ளிக்கேஷன் ஏற்றப்பட்டு வருகிறது. எஸ் பென், ஏர் கமென்ட் மற்றும் எளிதாக கிளிப் அம்சம் கொண்டு வருகிறது, மேலும் மல்டி விண்டோஸ் மற்றும் S நோட் ஆதரிக்கிறது.

மேலும், கேலக்ஸி நோட் 3 நியோ கூகுள் சேர்ச், ஜிமெயில், Google+, கூகுள் மேப்ஸ், ப்ளே புக்ஸ், ப்ளே மூவிஸ், ப்ளே ஸ்டோர், ப்ளே கேம்ஸ், ப்ளே ஹேங்கவுட்ஸ், வாய்ஸ் சேர்ச் மற்றும் YouTube போன்ற கூகுள் அப்ளிக்கேஷன்கள் கொண்டுள்ளது. பேப்லட்டில், பரிமாணங்கள் 148.4x77.4x8.6mm மற்றும் 162.5 கிராம் எடையுடையது.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ பேப்லட் குறிப்புகள்:

    5.5 இன்ச் HD (720x1280 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே,
    ரேம் 2GB,
    microSD அட்டை வழியாக 64GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடிக்கிய சேமிப்பு,
    எல்இடி ஃப்ளாஷ் மற்றும் BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
    BSI சென்சார் கொண்ட 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
    எஸ் பென்,
    Wi-Fi,
    ஜிபிஎஸ்,
    GLONASS,
    NFC,
    ப்ளூடூத்,
    இன்ஃப்ராரெட்,
    3 ஜி,
    ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்,
    162.5 கிராம் எடை,
    3100mAh பேட்டரி.

பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள்

பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள்

* காந்தி இறக்கும்போது ' ஹே ராம் ! ' என்றார் .

* ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ் ? ' என்றார் .

* கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) : தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம் சொன்னான் , " நான் இன்னும் இறக்கவில்லை ! "

* தாமஸ் ஆல்வா எடிசன் : " விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் ! "

* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : " இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது ! "

* பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : தன் மகன் ஹுமாயூனிடம் .... " இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே ! "

* ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : " இறைவா .....நான் ஒரு குற்றமும் செய்யாதவன் ! "

* டயானா : " கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ? "

* ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) : தீயில் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் சொன்னது . " ஜீஸஸ் ! "

* வால்டேர் : தூக்கு தண்டனைக்கு முன் ' சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ' என்று சொன்ன பாதிரியாரிடம் , " எதிரிகளை உருவாக்கிக்கொள்வதர்கான நேரம் இது அல்ல ! "

* கிளியோபாட்ரா : பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , " ஆஹா... இதோ ... என் முடிவு இங்கே இருக்கிறது ! "

* பீத்தோவன் : " நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது ! "

* ஆன் ( இங்கிலாந்து ராணி ) ; தன் உதவியாளரிடம் , " மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள் ! "

* நெப்போலியன் : " ஃபிரான்ஸ் ... ஆர்மி...ஜோஸஃபின் ! "

* மேரி க்யூரி : " என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் ! "

* எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : ' வேறு எதுவும் வேண்டுமா ' என்று கேட்ட தங்கையிடம் , " இறப்பைத் தவிர எதுவும்

* வின்ஸ்டன் சர்ச்சில் : " எனக்கு எல்லாமே போர் அடிக்குது ! " இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார் .

* பெருந்தலைவர் காமராஜர் : தன் உதவியாளரிடம் , " வைரவா ! விளக்கை அணைத்துவிடு ! "

டாப்சியும் பேட்மின்டன் வீரரும் டும்..டும்.. டும்.....?

டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போய்க்கும் நடிகை டாப்சிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

டாப்சியும் மத்தியாஸ் போயும் ஐதராபாத்தில் நடந்த இந்தியன் பேட்மின்டன் லீக் போட்டியில்தான் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். அந்த போட்டிக்கு டாப்சி விளம்பர தூதுவராக இருந்தார். மத்தியாஸ் போயின் ஆட்டம் டாப்சியை மிகவும் கவர்ந்தது. இருவரும் நண்பர்களாயினர். அதன் பிறகு இருவரும் ஒன்றாக சுற்றினர்.

விருந்துகளிலும் ஜோடியாக பங்கேற்றார்கள். அப்போது இதுபற்றி கேட்ட போது நண்பர்களாக பழகுகிறோம் என்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக இவர்களிள் நெருக்கம் வலுவாகியுள்ளதாக பட உலகினர் கிசுகிசுக்கிறார்கள்.

மத்தியாஸ் போயிவுடனான தொடர்பு குறித்து டாப்சியிடம் கேட்ட போது என் சொந்த வாழ்க்கை எந்த கேள்விக்கும் பதில் அளிக்க விரும்பவில்லை என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்தார்.

 ஆனால் மத்தியாஸ் அவரது டுவிட்டரில் டாப்சியுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு என்னுடைய அழகான தோழி என்று குறிப்பிட்டு உள்ளார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் மறைமுகமாக நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

"அனாமிகாவில்" அடம்பிடிக்கும் நயன்தாரா!

இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஓடியப படம் கஹானி. இப்படத்தை தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள் இந்தியில் வித்யா பாலன் கர்ப்பிணியாக நடித்தார். ஆனால் ரீமேக்கில் நடிக்கும் நயன்தாரா கர்ப்பமாக நடிக்க தயக்கம் காட்டினாராம்.

 இதனால் இயக்குனர் சேகர் கம்முலா ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்திருக்கிறார். படத்தின் முக்கிய அம்சமே நயன்தாராவின் கேரக்டர்தான், அதில் மாற்றம் செய்ய சொல்லி நயன்தாரா குளறுபடி செய்ததால் இயக்குனர் அப்செட் ஆகிப்போனாராம்.

ஆனாலும் கேரக்டர் பாதிக்காத வகையில் அவர் சில மாற்றங்களை செய்திருக்கிறாராம். இந்த படம் தமிழிலும் அனாமிகா என்ற பெயரிலேயே வெளியிடுவதா அல்லது பெயரை மாற்றுவதா என முடிவு செய்யப்படவில்லையாம். இன்று இப்படத்தின் டிரைலர் காட்சி ஐதராபாத்தில் வெளியிடப்பட்டது . 

தேசியக்கொடி ஏற்றும் போது, அதில் பூக்கள் வைப்பது ஏன்...

தேசியக்கொடி ஏற்றும் போது, அதில் பூக்கள் வைப்பது ஏன்...


நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன், அதில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து நாம் கை தட்டுகிறோம்.

ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது... அது என்ன தெரியுமா....?

நமது தேசியக்கொடி மேலே ஏற, அதாவது நாம் சுதந்திரம் பெற, எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது, மலர்கள் கீழே விழுந்து, அதனை ஞாபகப்படுத்துகிறது.

இனி ஒவ்வொரு முறையும் நமது தேசியக்கொடி ஏற்றத்தைக் காணும் போதும், இதை உங்களது மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்று அந்த நல்ல உள்ளங்கள், தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்குஅனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்று எங்கேயாவது செக்கு இழுத்துக் கொண்டு தான் இருந்திருப்போம்...!

ஒற்றுமையுடன் பெற்ற சுதந்திரத்தை
ஒற்றுமையுடன் பாதுகாப்போம்...

இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை
இரத்தம் சிந்தாமல் பாதுகாப்போம்...

நமது சுதந்திற்க்காக உயிர் தியாகம் செய்த
நமது முன்னோர்களை நினைவு கூறுவோம்..

"இந்தியனாய் பிறந்தமைக்கு பெருமை படுவோம்"

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லையெனில் ஓங்கிடும் தாழ்வு.

நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறுவோம்.

தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!

ஐஸ்வர்யாவுடன் ஸ்ருதிஹாசன் !

இயக்குனர் மணிரத்னம் தமிழ், தெலுங்கில் இயக்கவிருக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜுனா, பஹத் பாசில் நடிக்க உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆக உள்ளார். இளம் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசனை மகேஷ்பாபுக்கு ஜோடியாக நடிக்க கேட்டிருக்கிறாராம் மணிரத்னம்.

இதுபற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது அவர் அதை மறுக்கவும் இல்லை ஒப்புக்கொள்ளவும் இல்லை. ஆனால் அவர் தனது பதிலை கூறும்போது, ஒவ்வொருவருக்கும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது கனவு. எனக்கும் அந்த கனவு உண்டு என்றார்.

ஸ்ருதியின் நெருக்கமான வட்டாரங்கள் மணிரத்னம் படத்தில் நடிக்க கேட்டு அவரது தரப்பில் அணுகினார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை புது படத்தில் நடிப்பது பற்றி ஸ்ருதி எப்போதும் வெளியே சொல்வதில்லை. தற்போது 4 படங்களில் நடித்து வருகிறார். நேரம் வரும்போது மணிரத்னம் படத்தில் நடிப்பது பற்றி தெரிவிப்பார் என்றனர்