Thursday 13 March 2014

வாயை மூடி பேசவும் - லேட்டஸ்ட் அப்டேட்...!

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் இயக்குனர் பாலாஜி மோகனின் இரண்டாவது படம் வாயை மூடி பேசவும்.


இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டை மார்ச்14ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர்.


இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் மணிரத்னம் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உள்ளார்.


வாய் மூடி பேசவும் படத்தில் டல்கர் சல்மான் நாயகனாகவும், நசிரியா நசிம் நாயகியாகவும் நடித்துள்ளனர்.


நான் சிகப்பு மனிதன் ஆடியோ வெளியீடு மற்றும் வாயை மூடி பேசவும், என இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்த நாளில் வெளியாகவுள்ளது.


எனவே இந்த இரண்டு படங்களுக்கிடையே போட்டிகள் நிலவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கைகோர்க்கும் மூன்று துருவங்கள்..!

டுவன்ட்டி20 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மோலிவுட்டில் இணைந்து நடிக்கவுள்ளனர் மம்முட்டி, மோகன்லால் மற்றும் கமல்ஹாசன்.


ஜோஷி இயக்கத்தில் வெளிவந்த டுவன்ட்டி20 பல நட்சத்திரங்களுக்கு பெயர் சொல்லும்படி அமைந்திருந்தது.



மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், பிரித்திவிராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை தயாரித்துள்ளார் திலீப்.



கமலஹாசன், மம்முட்டி, மோகன்லால் வைத்து டுவன்ட்டி20 படம் போல் மீண்டும் ஒரு படம் தயாரிக்க திட்டம் தீட்டி வருகிறார் திலீப்.



ஆனால் இன்னும் எதுவும் உறுதிசெய்யப்படவில்லை என மோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

நிருபரின் வாயடைத்த கவுண்டமணி! நிகழ்ந்தது என்ன?

சுமார் இரண்டு மூன்று வருடங்களாக வெளித்திரையிலிருந்து தள்ளி நின்ற கவுண்டமணி தற்போது 49ஒ நடித்து வருகிறார்.


சாதாரணமாகவே பேட்டி என்றாலே விரட்டி ஒட விடும் இந்த பஞ்ச் நாயகன், அண்மையில் தனியார் வார இதழில் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார்.


49ஒ ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளப்படம் இது ஒரு விவசாயம் பற்றிய படம் இதில் முழுக்க முழுக்க விவசாயத்தை மையப்படத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன் என்றுள்ளார்.


கடைசியாக எந்தப்படம் பார்த்தீர்கள் என நிருபர் கேட்ட கேள்விக்கு நான் படங்கள் பார்ப்பதில்லை.


தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என எந்த மொழியிலும் படம் பார்ப்பதில்லை ஹாலிவுட் படங்களை தவிர என கூறியிருக்கிறார்.


ஏன் என மீறி கேட்டதுக்கு ஏன் பார்க்கனும் என்பதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் பின் ஏன் பார்க்கவில்லை என்பதற்கு நான் பதில் சொல்கிறேன் என்று கேட்டுள்ளார்

மீண்டும் திரையுலகில் கலக்குவார் - நானி !

வெப்பம் படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான நானி, ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.


இந்த படங்களுக்கு பிறகு தெலுங்கில் பைசா என்ற படமும், தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படமும் நடித்திருந்தார். ஆனால் இவ்விரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது.


கடந்த ஆண்டு நானிக்கு எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு திரைப்படமும் அவருக்கு சரியான வெற்றியை தரவில்லை.



எனவே இப்போது நானியின் மூன்றாவது படம் ஜென்டபை கபிராசு படம் வெளியிட பிரச்சனைகளை எதிர்க்கொண்டுள்ளது.



பைசா, ஆஹா கல்யாணம் படங்கள் தோல்வியை அடைந்துள்ளதால் இந்த படத்தினை வெளியிட தயங்குகின்றார் தயாரிப்பாளர்.


இதனை பார்க்கையில் நானி தனது படங்களுக்கு சரியான திட்டம் போடவில்லை என்று தான் தெரிகிறது.


நானி விரையில் ஒரு வெற்றி படத்துடன் மீண்டும் திரையுலகில் கலக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிங்கம் படத்தை வெறுக்கும் - சூர்யா! காரணம் என்ன..?

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் திரைப்படத்தின் நடித்துவரும் சூர்யா, இப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.


வெங்கட் பிரபு படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படத்திற்குக் கதை சொல்லும் இயக்குனர்கள் பெரும்பாலும் சிங்கம் படத்தின் பாணியிலேயே கதை சொல்வதாகவும், அப்படம் மாதிரியான கதைகளைத் தன்னிடம் கூற வேண்டாம் என்று சொல்லிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


சூர்யாவின் கேரியரில் சிங்கம் மற்றும் சிங்கம்-2 ஆகிய படங்கள் மிக முக்கியமான பங்களிப்பினைச் செய்துள்ள படங்களாகும்.


குறிப்பாக சிங்கம்-2 படம் ஆந்திராவில் சக்கைப்போடு போட்டு, தெலுங்கு ரசிகர்களையும் இவருக்குப் பெற்றுத்தந்தது.


ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்பதால் சூர்யா இந்த முடிவிற்கு வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


தற்பொழுது சூர்யா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புக்கள் நிறைவடைந்துள்ளன.


இதுவரை படம்பிடிக்கப்பட்டுள்ள காட்சிகளால் சூர்யா மிகவும் திருப்தியாக இருப்பதாக் கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட்டில் இப்படத்தினை வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது.


அஞ்சான் திரைப்படத்தில் முதல் முறையாக சூர்யா- சமந்தா ஜோடி சேர்ந்துள்ளனர்.

ஓவர் கான்பிடென்ட் காட்டிவரும் நான் சிகப்பு மனிதன்!

விஷால் - லக்‌ஷ்மிமேனன் இணைந்து நடித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நிகழ்ந்தது.


அதிவேகமாகப் படப்பிடிப்புக்களை நிறைவு செய்துள்ள படக்குழு, அதே வேகத்தில் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி படத்தினை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.


இப்படத்தின் ஆரம்பம் முதலே இதன் மீதான எதிர்பார்ப்புக்கள் எகிறிவருகின்றன. இப்படத்தின் படுவேகமாக நிறைவடைந்துள்ள படப்பிடிப்புக்கள், அட்டகாசமான ட்ரெய்லர் மற்றும் இன்று வெளியாகியிருக்கும் நெக்ஸ்ட் ஜெனரேசன் இசை என்று கூறப்படும் இசை ஆகிய அனைத்துமே எதிர்பார்ப்பினைக் கூட்டிவருகின்றன.


அத்துடன் ஏப்ரலில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எங்களின் கதை மற்றும் திரைக்கதையின் மீது நம்பிக்கை இருப்பதால், கோச்சையானைப் பற்றிக் கவலையில்லை என்று கூறியிருக்கும் படக்குழுவின் நம்பிக்கையும் மக்களிடம் பரபரப்பினை
ஏற்படுத்தியுள்ளது.


விஷால் பிலிம் பேக்டரி மற்றும் யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தினை, விஷாலில் தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் சமர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கியுள்ளார்.


இவ்வளவு ஓவர் கான்பிடென்ஸ் காட்டிவரும் நான் சிகப்பு மனிதன் திரை

ஜெயிக்கப்போவது குருவா..? சிஷ்யனா..?

தமிழ் சினிமாவை கலக்கிய காமெடியன்களில் கவுண்டமணி, வடிவேலு ஆகிய இருவருக்கும் தனி இடம் உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர்கள், தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்.


கவுண்டமணி, வாய்மை, 49ஓ ஆகிய படங்களிலும், வடிவேலு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்திலும் தற்போது நடித்துள்ளனர்.


 இதில் கவுண்டமணி நடித்த 49ஓ, வடிவேலுவின் தெனாலிராமன் படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதனால், ஏப்ரல் மாதம் அப்படங்களை வெளியிடும் முயற்சிகள் நடக்கிறது.


இதே மாதத்தில் ரஜினியின் கோச்சடையான், விஷாலின் நான் சிகப்பு மனிதன், சிவகார்த்திகேயனின் மான்கராத்தே உள்பட பல படங்கள் திரைக்கு வர உள்ளன.


 என்றாலும், ஒரே நேரத்தில் இரண்டு மெகா காமெடியன்கள் நடித்த படங்கள் வெளியாவதால், இவர்களுக்கிடையேயும் ஒரு போட்டியை உருவாக்கி விட்டு பரபரப்பு கூட்ட முடிவு செய்துள்ளனர்.


அதனால் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தடபுடலாக நடைபெறும் கட்அவுட் கலாசாரம், மேற்படி காமெடியன்களின் படங்கள் வெளியாகும்போது உருவாகும் என்று தெரிகிறது.

குக்கூவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு! யூ சான்றிதழும் வரிவிலக்கும் கிடைத்தது..!


திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் குக்கூ. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ராஜுமுருகன் இயக்கி உள்ளார். இவர் லிங்குசாமியிடம் உதவியாளராக இருந்தவர்.


அண்மையில் நடந்த இதன் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட பாடல்களும், டிரைலரும் படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


மேடையிலேயே நடிகர் சூர்யா, ராஜுமுருகனுக்கு தலைவணங்கி மரியாதை செய்தது படத்தின் மதிப்பை இன்னும் கூட்டியிருக்கிறது.


குக்கூவை பார்த்த தணிக்கை குழுவினரும் இயக்குனரை மனதார பாராட்டி உள்ளனர். யு சான்றிதழும் வழங்கி உள்ளனர். இன்னும் ஒருசில நாட்களில் வரிவிலக்கும் கிடைத்து விடும்.


 அட்டகத்தி தினேஷூடன் மாளவிகா என்ற புதுமுகம் நடித்துள்ளார். நெரிசலும், இரைச்சலும், நிறைந்த சென்னை நகரத்தில் வாழும் இரு பார்வையற்றவர்களின் காதல் கதை.


அந்த காதலோடு பார்வையற்றோர்கள் வாழும் உலகத்தை காட்டுகிற படம். வருகிற 21ந் தேதி ரிலீசாகிறது.

உத்தமவில்லனில் மெகா காமடி கூட்டணி... கலக்கும் கமல்!

ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்தால் அதற்கடுத்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்வதற்காக ஒரு காமெடி படத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் கமல்.


விஸ்வரூபம் படத்தைப்பொறுத்தவரை அடுத்தடுத்து இரண்டு பாகங்களையும் இயக்கியதால் அடுத்து காமெடி படம் அமையவில்லை. ஆனால் இப்போது நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் காமெடியில செம கலக்கு கலக்கப்போகிறாராம் கமல்.


அதனால் தன்னுடன் தெனாலி, பஞ்சதந்திரம் படங்களில் நடித்த மலையாள நடிகர் ஜெயராமையும் இந்த படத்தில் தன்னுடன் கூட்டணி சேர்த்திருக்கும் கமல், அப்படத்தை இயக்கும் ரமேஷ் அரவிந்தையும் இப்போது இணைத்துள்ளார்.


 ஏற்கனவே பஞ்சதந்திரம் படத்தில் கமலுடன் ஜெயராம், ரமேஷ் அரவிந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருப்பவர்கள் என்பதால், இந்த படத்தில் அவர்களின் காமெடி கூட்டணி சூப்பராக ஒர்க் அவுட்டாகியுள்ளதாம்.


தற்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட கலகலப்பான காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுக்கொண்டிருப்பதால், அக்கம் பக்கம் கவனத்தை சிதற விடாமல் நடித்து வருகிறார் கமல்.


 அதனால் தெனாலி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம் படங்களை மிஞ்சும் வகையில் நூறு சதவிகிதம் காமெடியை கொடுத்து ரசிகர்களின் வயிற்றை உத்தமவில்லன் பதம் பார்ப்பார் என்று இப்போதே கியாரண்டி கொடுக்கிறார்கள்.

லட்சுமி மேனனுக்காக விஷால் - விஷ்ணுக்குயிடையே பெருஞ்சண்டை!

பாண்டியநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷால் - லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ள படம் ''நான் சிகப்பு மனிதன்''. திரு இப்படத்தை இயக்குகிறார். லட்சுமி மேனன் முதன்முறையாக முத்தக்காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளார்.


இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று(மார்ச் 13ம் தேதி) சென்னையில் நடந்தது. இவ்விழாவில் நடிகர்கள் விஷ்ணு, விக்ரகாந்த் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


அப்போது விழாவில் பேசிய விஷ்ணு, விஷாலிடம், 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் ஷூட்டிங்கை காண, நான் வருகிறேன் என்று கூறினேன். விஷால் பலமுறை தட்டி கழித்தார். பின்னர் அவரே ஒருநாள் என்னை வர சொன்னார்.


அங்கு விஷால், லட்சுமி மேனனுக்கு தடபுடலாக விருந்து வைத்து கொண்டிருந்தார். நான் லட்சுமி மேனனை பார்க்க எண்ணினேன், ஆனால் கடைசிவரை என்னை, லட்சுமி மேனனை பார்க்கவே விஷால் விடவில்லை. விஷால் என்ன லட்சுமி மேனனுக்கு பாதுகாவலரா என்று நகைச்சுவையாக கேட்டார்.


விஷ்ணுவுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால், விஷ்ணு தானாக இப்படி பேசவில்லை. யாரோ பேசச்சொல்லி கேட்பது போன்று தோன்றுகிறது. நான் ஹீரோயின்களை ரொம்பவே மதிக்கிறேன். பாலா சாரின் அவன் இவன் படத்தில் நடித்தபோது பெண்கள் மீதான மரியாதை இன்னும் அதிகரித்தது.


அந்தப்படத்தில் பெண் வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்பதற்காக பாலா சார் எனக்கு 10 நாட்களுக்கு மேல் பயிற்சி கொடுத்தார். பெண்களின் நடை, உடை, பாவனை எப்படி என்று கற்றுக்கொள்ள அவர்களிடம் நேரடியாக பழகவிட்டு எனக்கு பயிற்சி கொடுத்தார். பெண் போன்று நடிப்பதற்கு நான் கிட்டத்தட்ட ஒருவாரம் ஆனது. அப்போது முதல் பெண்களின் மீதான மதிப்பு எனக்கு கூடிவிட்டது.


லட்சுமி மேனன் மிகவும் சின்னப்பொண்ணு, அவர் பயந்த சுபாவம் உடையவர். விஷ்ணுவின் அப்பாவோ ஐ.ஜி.யாக இருப்பவர். விஷ்ணு சும்மா எதேச்சையாக லட்சுமியிடம் பேசப்போக அவர் ஈவ்டீசிங் என பயந்து போலீஸை கூப்பிட்டுவிட்டால், பிறகு விஷ்ணுவின் அப்பாவான ஐ.ஜி.யே தன் மகனை கைது செய்து அழைத்து போக நேரிடும். அப்படி ஒரு விபரீதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் விஷ்ணுவை, லட்சுமி மேனனை பார்க்க நான் அனுமதிக்கவில்லை என்று நகைச்சுவையாக கூறினார். 

டிமிக்கி கொடுக்கும் டேனியல் பாலாஜி!

காக்க காக்க படத்தில், சூர்யாவின் போலீஸ் டீமில் அதிகாரிகளில் ஒருவராக நடித்தவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் புகழ்பெற்றார்.


 அவர் தற்போது மறுமுகம், ஞானகிறுக்கன் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டு படங்களிலுமே சைக்கோ கேரக்டர்தான். இதுதவிர ஒரு படத்தை இயக்க இருக்கிறார். தான் இயக்கும் படத்தில் அதிக கவனம் செலுத்துவதால் நடித்த படங்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறாராம்.


மறுமுகம் படத்தின் புரமோசன்களுக்கு வராமல் அடம்பிடிக்கிறாராம். அந்த படத்தின் எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லையாம். அதேபோல ஞான கிறுக்கன் படத்தின் புரமோசனுக்குவம் வருவதில்லையாம். ஆடியோ பங்ஷனுக்கு தயாரிப்பாளரும், டைரக்டரும் மிரட்டித்தான் அழைத்து வரவேண்டியது இருந்ததாம்.


"பட வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருக்கும் இந்த காலத்தில் கிடைத்த வாய்ப்பைகூட சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவராக இருக்கிறாரே" என்று வருத்தப்படுகிறார்களாம் நண்பர்

ஏப்ரல் 11-ல் கோச்சடையான் ரிலீஸ்! ரஜினி உஷார் நடவடிக்கை!!

எந்திரனுக்குப்பிறகு ரஜினி நடித்த கோச்சடையான் படம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகிறது என்பதால் அவரது ரசிகர்கள் சந்தோச கூத்தாடிக்கொண்டிருக்கிறார்கள்.


அதேபோல் ரஜினியும், நீண்ட நாளைக்குப்பிறகு கோச்சடையான் மூலம் ரசிகர்களை சந்திக்க வருகிறோம். அதுவும் 125 கோடியில் தயாரான மெகா பட்ஜெட் படத்துடன் வருகிறோம் என்று எஜமான் தோரணையில் நடமாடிக்கொண்டிருக்கிறார்.


ஆனால் இந்த சந்தோசத்திலும் உஷார் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளார் ரஜினி. அதாவது, பாபா படம் தோல்வியடைந்தபோது, நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்கினார் ரஜினி.


அவர் கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை என்றாலும், தன்னால் அவர்கள் நஷ்டப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் தாமாக முன்வந்து உதவினார். அதனால், அதையடுத்து ரஜினி படங்களை வாங்கி லாபம் சம்பாதித்தபோதும், சிலர் உங்கள் படம் கையை கடித்து விட்டது என்று ரஜினி வீடு தேடிச்சென்று தலையை சொறிந்து நஷ்டஈடு கேட்டு நின்றனர்.


அதனால், இனி அதுபோன்று தன்னைத்தேடி யாரும் வந்து நிற்கக்கூடாது என்பதற்காக, கோச்சடையான் படத்தில் ரஜினி நடிகர் மட்டுமே.


அதனால் லாப நஷ்டங்களுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இலலை என்று ஒரு அக்ரிமென்ட் போடப்பட்டு விட்டதாம். ரஜினியின் இந்த உஷார் நடவடிக்கையால், சில விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.

கெளதம்மேனனின் சொத்துக்கள் ஏன் ஏலத்துக்கு வந்தது!

மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என மெகா ஹிட் படஙக்ளை இயக்கியவர் கெளதம்மேனன்.


அதோடு சொந்தமாக பட நிறுவனம் தொடங்கி அதன்மூலம் நடுநிசி நாய்கள், வெப்பம், தங்க மீன்கள் போன்ற படங்கள் தயாரித்தார்.


இதில் சில படங்கள் அவருக்கு நஷ்டத்தைக் கொடுத்தன. இருப்பினும், சிம்புவைக்கொண்டு சட்டென்று மாறுது வானிலை என்ற படத்தை தனது சொந்த பேனரிலேயே தயாரிக்கும் கெளதம், தற்போது அஜீத் நடிக்கும் படத்தை ஏ.எம்.ரத்னம் பேனரில் தயாரித்து வருகிறார்.


இந்த நிலையில், படங்கள் தயாரித்து தான் பட்ட கடனை அடைப்பதற்காக சென்னை இந்திரா நகரில் தனக்கு சொந்தமாக உள்ள 7 ஆயிரம் சதுர அடி சொத்தை அடமானம் வைத்து கடனை அடைத்திருந்த கெளதம்மேனன்.


அதன்பிறகு அந்த கடனை திருப்பி அடைக்காததால் இப்போது அவரது சொத்துக்களை ஏலம் விடுவதாக கோர்ட் அறிவித்துள்ளதாம்.


ஏலத்துக்கு வந்துள்ள கெளதம்மேனனுக்கு சொந்தமான அந்த சொத்தின் மதிப்பு ரூ.12.26 கோடியாம்.

காதல் குறித்து காஜல்! அதிரடி ஸ்டேட்மென்ட்!

பொம்மலாட்டம் படத்தில் நடிக்கத் தொடங்கிய காஜல்அகர்வால், அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வந்தார்.


அப்போதெல்லாம் அவரைப்பற்றி எந்த கிசுகிசுக்களும் பரவவில்லை. ஆனால், தெலுங்கு படங்களில் நடிக்க அவர் ஐதராபாத்தில் முகாம் போட்ட பிறகுதான் அங்குள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.அந்த செய்தி காட்டுத்தீயாய் பத்தி எறிந்தது.


அதனால் ஆந்திராவில் தொடர்ந்து முகாமிட்டிருந்தால், எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாகி விடும் என்று ஒரு மாற்றத்துக்காக கோலிவுட்டுக்கு வந்தார் காஜல்.


அந்த நேரம் சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் கிடைத்ததால் சென்னையிலேயே தங்கி விட்டார். அதையடுத்து ஆந்திராவுக்கு மீண்டும் அவர் சென்றபோது, பழைய தொழிலதிபர் சர்ச்சை காணாமல் போயிருந்தது. அதனால் நிம்மதியடைந்தார் நடிகை.


ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது ஒரு நபருடன் ஊர் சுற்றிய போட்டோக்கள் வெளியாக, மீண்டும் அதே தொழிலதிபர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இருப்பினும் இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வந்த காஜல்அகர்வால், தற்போது சில மீடியாக்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.


அதில், நடிகைகள் காதலிப்பது ஒன்றும் பெரிய பாவச்செயல் அல்ல. நடிகைகளுக்கும் மனசு உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள காஜல், தான் தொழிலதிபரை காதலிக்கவில்லை என்று மறுப்பு சொல்லவில்லை. மாறாக, இன்னும் மூன்று ஆண்டு கழித்து என் திருமணம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். 

10 மணி நேரம் தண்ணீரில் மிதந்த லட்சுமி மேனன்!!

கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என்று தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை லட்சுமி மேனன்.


இவர் இப்போது மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதிலும் பாண்டியநாடு ஹிட்டுக்கு பிறகு விஷாலுடன் இரண்டாவது முறையாக நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்து வருகிறார்.


விஷாலே தயாரிக்கும் இப்படத்தை திரு இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தபோது லட்சுமி மேனனை, கிட்டத்தட்ட 10 மணிநேரம் தண்ணீரில் மிதக்கவிட்டுள்ளார் இயக்குநர் திரு.


இதற்காக சென்னையை ஒட்டியுள்ள கடற்கரையில் லட்சுமி மேனனை தண்ணீரில் இறக்கிவிட்டு படமாக்கியுள்ளார் திரு.


இதுப்பற்றி நடிகை லட்சுமி மேனன் கூறும்போது, கும்கி படத்திற்கு பிறகு நான் சிகப்பு மனிதன் படத்திற்காகத்தான் ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்தேன். அதிலும் தண்ணீரில் சுமார் 10 மணிநேரம் என்னை மிதக்கவிட்டுவிட்டார் இயக்குநர்.


அதற்காக நான் வருத்தப்படவில்லை. கஷ்டப்பட்டால் தான் முன்னேற முடியும். இதுவரை நான் நடித்த படங்கள் கஷ்டப்பட்டு நடித்ததால் தான் வெற்றி பெற்றுள்ளன.


அதேப்போல் இந்தப்படமும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். 

இளவட்ட நடிகர்களை ஆச்சர்யப்படுத்தும் கமலின் அதிரடி வேகம்!

அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.


அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது கதை வசனம் எழுதுவது என்று பல முகங்களை காட்டி வருகிறார் கமல்.


அந்த வகையில், விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்து முடித்து விட்டவர், இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் ஈடுபட்டிக்கிறார்.


இதற்கிடையே ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் உத்தமவில்லன் பட வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்த படத்தை இன்னும் 6 மாதத்திற்குள் ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் கமல், அதை மனதில் கொண்டு வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.



அதோடு, உத்தம வில்லனை முடிக்கும் தருவாயில் இருக்கும்போதே, த்ரிஷ்யம் ரீமேக்கிலும் நடிக்கிறார். ஆக, அந்த படமும் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு விடும் நிலை உள்ளது.


அதனால், ஓய்வு கொடுக்காமல் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார் கமல்.


அவருக்கு ஒன்றும் இது புதிது இல்லை என்றாலும், தாங்களெல்லாம் வருடம் ஒரு படம் கொடுத்துக்கொண்டிருக்க கமலோ, வருடத்திற்கு மூன்று படம் வரை கொடுத்து விடுவார் போலிருக்கே என்று கோடம்பாக்கத்தின் முன்னணி இளவட்ட நடிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நிற்கிறார்கள்.