Friday 31 January 2014

வெள்ளித் தட்டுக்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

வெள்ளித் தட்டுக்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

வெள்ளி என்பது பிரகாசமாக இருப்பதை விட பளபளப்பாக இருந்தால் தான் அழகே. வெள்ளி என்பது இருக்கும் வரை, அது பாத்திர வடிவில் இருந்தாலும் சரி, அசல் வெள்ளியாக இருந்தாலும் சரி, அது மின்னிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் அதற்கு, அதனை சீரான முறையில் துடைத்து பராமரிக்க வேண்டும்.

பாத்திர வடிவில் இருந்தும் சரி அல்லது அசல் வெள்ளியாக இருந்தாலும் சரி, அதனை சுத்தப்படுத்தும் வழிமுறை ஒரே மாதிரியானவை தான். அதனால் இந்த இரண்டு வகையிலும் உங்களிடம் வெள்ளி இருந்தால் அவைகளை சுத்தப்படுத்த சில அடிப்படையான பொருட்களில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் வெள்ளியை துடைப்பது ஒருஎன்பது சோர்வடையச் செய்யும் ஒரு வேலையாகும். அதற்கு அதிகளவில் பொறுமை தேவைப்படும். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.

வெள்ளி பொருட்களை சுத்தப்படுத்த மென்மையான பொருட்கள் தேவை என்பதையும் மறந்து விடக்கூடாது. கடுமையான மற்றும் திடமான பொருட்களை கொண்டு வெள்ளியை சுத்தப்படுத்த கூடாது. அது உங்கள் வெள்ளிப் பொருட்களை பாழாக்கி விடும். வெள்ளிப் பொருட்களை சுத்தப்படுத்த உங்களுக்காக சில டிப்ஸ்:

சீரான முறையில் சுத்தப்படுத்துதல்

சீரான முறையில் சுத்தப்படுத்துவது என்றால் வெள்ளி பாலிஷ் போடுவது என்று அர்த்தமில்லை. அது உங்கள் வெள்ளிப் பொருட்களை பாழாக்கி விடும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு மென்மையான துணி அல்லது மென்மையான முட்களை கொண்ட பிரஷ்ஷை கொண்டு வெள்ளிப் பொருட்களை துடைக்க வேண்டும். அப்பப்போ, வெதுவெதுப்பான சோப்பு நீரிலும் அவைகளை துடைக்கலாம். இதனால் அவைகளில் காணப்படும் கறைகள் நீங்கும். கழுவிய பின்பு மென்மையான துணியை கொண்டு ஈரத்தை துடைத்திடுங்கள்.

பேக்கிங் சோடாவின் பயன்பாடு

வெள்ளியை துடைக்க பேக்கிங் சோடாவையும் கூட பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை ஒரு கை எடுத்து வெதுவெதுப்பான நீரில் போடுங்கள். அது நீரில் கரையும் வரை காத்திருக்கவும். கரைந்த பின்பு, உங்கள் வெள்ளி தட்டுக்களை உலோகத்தகடு மூலம் மூடுங்கள். பின் அதனை அந்த பேக்கிங் சோடாவின் கலவையில் போட்டு ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின், உலோகத்தகடை எடுத்து, வெள்ளி தட்டை மென்மையான துணியை கொண்டு துடைத்திடுங்கள்.

ஸ்பாஞ்சை வைத்து சுத்தப்படுத்துதல்

கடுமையானதாக இல்லாத குறைந்த அளவிலான பொருட்களை கொண்டு வெள்ளிப் தட்டுக்களை சுத்தப்படுத்தலாம். மென்மையான ஈர ஸ்பாஞ்சை மென்மையான சோப்பில் முக்கி வெள்ளி தட்டின் மீது தேய்க்கவும். செராமிக் அல்லது கண்ணாடியை கொண்டு செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரம் என்றால் ஸ்பாஞ்சை மிதமான சோப்பு கலந்த சுடுநீரில் நனைக்கலாம்.

மிதமான சோப்பை கொண்டு சுத்தப்படுத்திய பிறகு, வெதுவெதுப்பான நீரில் அதனை கழுவுங்கள். பின் ஒரு மென்மையான துணியை கொண்டு தட்டை துடைத்திடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் மென்மையான துணி பருத்தியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கம்பளி கலந்த துணியை பயன்படுத்தாதீர்கள். கழுவும் போது கையுறை அணிய விரும்பினால் அவை பிளாஸ்டிக் அல்லது பருத்தியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ரப்பர் கையுறையை பயன்படுத்தினால் அது தட்டை பாழாக்கி விடும்.

நன்றாக பாலிஷ் செய்யுங்கள்

வெள்ளி தட்டை சுத்தப்படுத்த மற்றொரு வழியாக விளங்குகிறது வெள்ளி பாலிஷ். நல்ல பாலிஷ் மூலம் தட்டை பளபளக்க செய்யலாம். ஈர ஸ்பாஞ்சை கொண்டு துடைத்த பின்னர், தட்டின் மீது வெள்ளி பாலிஷ் க்ரீமை தடவுங்கள். இந்த க்ரீமை மென்மையான துணியை கொண்டு தடவுங்கள். தட்டை ரொம்பவும் அழுத்தி துடைக்காதீர்கள். பாலிஷை தட்டை சுற்றி மெதுவாக தடவுங்கள். பருத்தி அல்லது முட்களை கொண்ட பிரஷ்ஷை வைத்து பாலிஷை தடவலாம். பாலிஷ் செய்த பின்பு உங்கள் வெள்ளித் தட்டு பளபளப்பாக இருப்பதை நீங்கள் காணலாம்.

வெள்ளித் தட்டை கழுவ போடுவதற்கு முன் அதில் படிந்திருக்கும் உணவு கறைகளை முதலில் நீக்க வேண்டும். தட்டின் தேய்மானத்தை இது தடுக்கும். சீரான முறையில் இப்படி செய்து வந்தால் வெள்ளிப் பொருட்களை அடிக்கடி கழுவ வேண்டியதை தவிர்க்கலாம்.

வெள்ளிப் பாத்திரங்கள் பாதுகாக்க ஐடியா!

இன்றைக்கு தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த அளவிற்கு மதிப்பு மிக்க வெள்ளிப் பொருட்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் நகைகளை எ‌வ்வளவுதா‌ன் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் அவை கறு‌ப்பாக மா‌றி ‌விடு‌கி‌ன்றன. இதற்கு காரணம் அவற்றின் தர‌த்‌தி‌ல் குறை இல்லை. காற்று பட்டாலே வெள்ளியானது கருத்துவிடுவது இயல்புதான். எனவே வெ‌ள்‌ளி‌ப் பொரு‌ட்களை‌ப் எ‌வ்வாறு பாதுகா‌ப்பது எ‌‌ன்பதை அ‌றி‌‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

பாலீதின் கவர்

மரப்பெட்டிக‌ளி‌ல் வெ‌ள்‌ளி‌ப் பொரு‌ட்களை வைக்கவேண்டாம். ஏனெனில் மரத்தில் இருக்கும் அமிலம் வெள்ளியின் மேல்பகுதியை பாதிக்கும். அ‌ப்படி மர‌ப்பெ‌ட்டி‌யி‌ல்தா‌ன் வை‌க்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்ப‌ட்டா‌ல் வெ‌ள்‌ளி‌ப் பொருளை பா‌லி‌த்‌தீ‌ன் கவ‌ரி‌ல் போ‌ட்டு ந‌ன்கு மூடி வை‌க்கவு‌ம்.

நகைப்பெட்டிகளில் ஒவ்வொரு நகைகளையும் தனித்தனியாக வையுங்கள். வெள்ளியின் மீது செ‌ய்‌தி‌த்தாளோ, ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொரு‌ட்களோ படும்படி வைக்க வேண்டாம்.

காற்றுப் படக்கூடாது

ஒ‌வ்வொரு முறையு‌ம் வெ‌‌ள்‌ளி நகையை பய‌ன்படு‌த்‌து‌ம் போது நம் உடலில் சுரக்கும் எண்ணெய் பசையால் வெள்ளியின் ஒளி மங்க வாய்ப்பிருக்கிறது. எனவே பய‌ன்படு‌த்‌திய ‌பிறகு அதனை ந‌ன்றாக துடை‌த்து ‌பி‌ன்ன‌ர் பாதுகா‌‌ப்பாக எடு‌த்து வை‌க்க வே‌ண்டு‌ம்.

பயன்படுத்திய வெள்ளி பொருட்களை மென்மையாக சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கழு‌வி உடனேயே காயவைத்தால் கூட போதுமானது. நீண்ட நேரங்களுக்கு அதை வெளியில் வைக்க வேண்டாம். வெள்ளியை குளிர்ச்சியான, வறண்ட இடங்களில், காற்றுபுகாத பெட்டிகளில் வைக்கவேண்டும்.

மங்கிப்போகும்

ஒரு சிலர் வீடுகளில் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் போன்றவைகளை உபயோகிப்பார்கள். வெள்ளித்தட்டுகளில் உணவுகளை போட்டு வைத்து நீண்ட நேரம் வைக்க வேண்டாம். ஏனெனில் சில உணவுப் பொருட்களில் உள்ள அமிலங்கள் வெள்ளித்தட்டை மங்கச் செய்யும். அதேபோல் பாத்திரம் கழுவும் மெஷின்களில் வெள்ளிப் பாத்திரங்களைப் போட வேண்டாம் அவை நசுங்கிவிடும்.

பூஜை சாமான்கள்

 குத்துவிளக்கு, ஆரத்தி தட்டு போன்றவைகளை வெள்ளியில் வைத்திருப்பது வாடிக்கை. அவற்றை வாரம் ஒருமுறையாவது எடுத்து வெள்ளியை சுத்தம் செய்யும் பொருளைப் போட்டு துடைத்து சுத்தம் செய்து வைக்கவும். இல்லையெனில் அவை கருத்துவிடும்.

அசினுக்கு பாலிவுட்டில் அதிர்ச்சி !

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த அசின் கஜினி ரீமேக்கில் ஆமீர்கானுக்கு ஜோடியாக நடிக்க அந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து மளமளவென அசினுக்கு வாய்ப்புகள் குவிந்தன. அவரை பார்த்து த்ரிஷா, காஜல் அகர்வால், இலியானா என தென்னிந்திய ஹீரோயின்கள் வரிசையாக பாலிவுட்டுக்கு படையெடுத்தனர். வேகமாக வளர்ந்து வந்த அசினுக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் அவர் நடித்த 3 இந்தி படங்கள் கடைசியாக திரைக்கு வந்தன.

கடந்த வருடம் முழுவதும் ஒரு படம் கூட அவருக்கு வரவில்லை. இந்த ஆண்டில் "ஆல் இஸ் வெல்" என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். தென்னிந்திய நடிகைகள் மீது கவனம் செலுத்திவந்த பாலிவுட் ஹீரோ மற்றும் டைரக்டர்கள் மீண்டும் கேத்ரினா கைப், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா, அலியா பட், பரினீதி சோப்ரா என சீனியர் மற்றும் இளம் நடிகைகளையே தேடிச் சென்றனர். இதனால் பாலிவுட்டை நம்பி பறந்த தென்னிந்திய ஹீரோயின்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பாலிவுட்டில் இயக்குனர்களால் அசின் ஓரம்கட்டப்பட்டுவிட்டாலும் விளம்பர படங்களை நம்பி அங்கேயே தங்கி இருக்கிறார். சமீபத்தில் அழகு சாதனம் பொருட்கள் நிறுவனம் ஒன்றின் தூதராக அவர் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.

தோல்வி என்பது அபிப்ராயம்தான் ...!

தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.

வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத் தக்கதல்ல. சிலர் சின்ன தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள். மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி. ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம். உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.

தோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.

தோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது?

சிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.

ஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது.

நெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் அறியாமல் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டி வருகிறது. எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள். அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்.

தமிழ் படங்களின் மீது இயக்குநர்களுக்கு திடீர் பற்று!

அதென்னமோ தெரியவில்லை இப்போது தமிழ் பட டைரக்டர்களுக்கு தமிழ் பற்று பொங்கி வழிகிறது. சங்க இலக்கியத்திருந்தெல்லாம் சொற்களை கண்டுபிடித்து படத்துக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாரணம் ஆயிரம், பொன்மாலை பொழுது, விண்ணைத்தாண்டி வருவாயா என கவுதம் மேனன்தான் அழகு தமிழில் பெயர் வைப்பார். இப்போது அவரையும் மீறி சங்கத் தமிழ் வரைக்கும் சென்று விட்டார்கள்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஞ்சான் என்றால் எதற்கும் அஞ்சாதவன், பயப்படாதவன் என்ற பொருள்.

கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனேகன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். அனேகன் என்றால் அனைத்தும் அறிந்தவன் என்று பொருள் அதாது ஆல் இன் ஆல் அழகுராஜா.

மகிழ்திருமேனி டைரக்டஷனில் ஆர்யா நடிக்கும் படத்திற்கு மீகாமன் என்பது டைட்டில். மீகாமன் என்றால் கப்பல் தலைவன் என்று பொருள். அதாவது கேப்டன், மாலுமி.

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் டைரக்ஷனில் ஜீவா நடிக்கும் படத்திற்கு யான் என்ற டைட்டில். யான் என்றால் நான் என்று பொருள்.

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை டைரக்ட் செய்த பரதன் இப்போது காக்டெயில் மலையாளப்படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். அதற்கு அதிதி என்று டைட்டில் வைத்துள்ளார். இதற்கு அழையா விருந்தினர், அல்லது திடீர் விருந்தினர் என்று பொருள்.

வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி ஒரு படம் டைரக்ட் செய்ய இருக்கிறார். அதற்கு குறோணி என்று டைட்டில் வைத்திருக்கிறார். குறோணி என்றால் அசுரன் என்று பொருளாம்.

இன்னும் நிறைய சங்கத்த தமிழ் பெயர்கள் வரப்போகிறது. வாழ்க டைரக்டர்களின் தமிழ்த் தொண்டு

மாத்தி யோசிக்க வைத்த நயன்தாரா..?

 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. சிம்புவிற்கு ஜோடி யார் என்பது குறித்து பெரிய விவாதம நடைபெற்று வந்தது.

நயன்தாரா தான் நாயகி என்று ட்விட்டர் தளத்தில் இயக்குநர் பாண்டிராஜ் அறிவிக்க, அன்றிலிருந்தே படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு எகிறியது.

சிம்பு - நயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தன. படப்பிடிப்பு தளத்தில் இருவருமே நண்பர்களாகவே வலம் வந்தார்கள். தங்களுக்குள் பிரச்சினை எதுவுமே நடக்காதது போல் இருவருமே நடந்து கொண்டதை படக்குழு ஆச்சர்யத்தோடு பார்த்தது.

கதைப்படி சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு தான் நயன்தாரா. நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும் காதல் தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்னைகள்... இது தான் படத்தோட அவுட்லைன்.

இப்படத்தில் நயன்தாராவை நாயகி ஆக்குவதற்கு முன்பு, 'கதவைத் திற காதல் வரட்டும்’ அல்லது 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு’ என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து இருக்கிறார் பாண்டிராஜ். நயன்தாரா நாயகி ஆனவுடன் தற்போது 'இது நம்ம ஆளு' என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால் படத்தில் நயன்தாராவைப் பார்க்கும் போது எல்லாம் 'இது நம்ம ஆளு சார்' என்று கூறிக்கொண்டே இருப்பாராம் சிம்பு. அது தான் தலைப்பிற்கு காரணமாம்.

ஹன்சிகா அப்படினு ஒருத்தங்க இருக்காங்களா.....? 

'சதுரங்க வேட்டை' சிறப்பு!

 ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிப்பில், வினோத் இயக்கி வரும் 'சதுரங்க வேட்டை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் மனோபாலா.

'நாளை', 'சக்கர வியூகம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ். தற்போது 'சதுரங்க வேட்டை' என்ற படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கிவரும் இப்படத்தை தயாரிக்கிறார் நடிகர் மனோபாலா.

இயற்கையோட சமநிலை தவறும் போது நடக்கிற அழிவு மாதிரி, மனுஷனோட சமநிலை தவறும் போதும் அழிவு நடக்கும், இதுதான் இப்படத்தோட மையக் கரு.

இப்படம் குறித்து இயக்குநர் வினோத், "இங்க பணம் இருந்தால் ஹீரோ ஆகலாம், எம்.பி. ஆகலாம். எவனையாவது பிடிக்கலைன்னா அடிக்கலாம். பணம் இருந்தால் என்ன வேணா பண்ணலாம்னா, பணம் சம்பாதிக்க என்ன பண்ணால் என்னன்னு நினைக்கிற ஒருத்தனோட கதைதான் இந்த ‘சதுரங்க வேட்டை’.

நல்லவனா வாழ்ந்தால் செத்த பிறகு சொர்க்கத்துக்குப் போகலாம். கெட்டவனா வாழ்ந்தால் வாழும் போதே சொர்க்கத்துல வாழலாம்னு சொல்ற ஹீரோவோட கதையை முழுக்க முழுக்க காமெடியா சொல்றோம்.

புதுமையான வசனங்கள் கலந்து , ஆறு எபிசோடுகளாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு. ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும்.

மொத்தத்துல நம்ம சமூகத்து முன்னாடி வைக்கப்படற கண்ணாடி இந்த படம். சிரிக்கவும் வைப்போம், அதே சமயம் சிந்திக்கவும் வைப்போம். உங்களை நீங்களே ‘சதுரங்க வேட்டை’ல பார்க்கலாம்,” என்று கூறியிருக்கிறார். 

நாகேஷ் – நினைவுக் குறிப்புகள்!

தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.”நான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அம்மனோ சாமியோ’ என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.

ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, “பிசி’யாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. “நம்மவர்’ படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார். இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். 10 வருடங்களுக்கு முன், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷுக்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.

நகைச்சுவை நாயகன் நாகேஷ்!: தமிழ் சினிமாவில், ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ், இன்று அவர்களை கண்ணீர் விட வைத்து இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் குண்டுராவ். கடந்த 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.

இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை “கம்ப ராமாயணம்’ நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

 “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்’ என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.”மேக்அப்’ போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.

தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. “தாமரைக்குளம்’ இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.”திருவிளையாடல்’ படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. “காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, “சியர்ஸ்’ சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.

“தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல்’ என்று, அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். “அபூர்வ சகோதரர்கள்’ “மைக்கேல் மதன காமராஜன்’ “மகளிர் மட்டும்’ ஆகிய படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான “தசாவதாரம்’ வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம் பெற்றார். மகளிர் மட்டும் படத்தில் “பிணமாக வாழ்ந்த’ நாகேஷ் நடிப்பு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது.நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?’ என்றார்.சிரித்தபடியே நாகேஷ், “உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா… அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா… மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் “அம்மை’ என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது’ என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. “சிரித்து வாழ வேண்டும்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார்.

ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.சென்னை காமராஜர் அரங்கில், 2007, ஜூன் 17ல் “என்றென்றும் நாகேஷ்’ பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல், பாக்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். இவருக்கு நடிகர் ஆனந்த் பாபு உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர். திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.

இயக்குநர் சிகரம் கே. பால்சந்தர் நாகேஷ் பற்றி சொன்ன விஷ்யங்களில் சில:

தமிழில் மட்டுமல்லாது பிறமொழிக் கலைஞர்களுக்கும் ஆதர்ச ஆசானாக விளங்கியவர் நாகேஷ். ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தை இந்தியில் எடுத்தபோது, நாகேஷின் பாத்திரத்தில் நடித்த மகமூத் அவர் காலில் விழுந்து வணங்கினார். கலைவாணருக்கு அடுத்த சிறந்த கலைஞன் சந்தேகமே இல்லாமல் நாகேஷ்தான்! அவருக்காகவே நான் எழுதிய நாடகம் தான் ‘சர்வர் சுந்தரம்’. அதற்குள் அவர் மூன்று படங்களில் காமெடியனாக நடித்துப் பிரபலமாகிஇருந்தார்.

‘சர்வர் சுந்தரம்’ முழுக்க மெல்லிய சோகம் இழையோடும் கதாபாத்திரம். காமெடியனாகப் பிரபலமாகிவிட்ட நாகேஷ் இப்படியரு சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் எங்கள் இருவருக்கும். ஆனால், எங்களுக்கு நாங்களே நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொள்வோம். நாடகம் பெருவெற்றி பெற்றது. ‘நீர்க்குமிழி’ படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் குடிப்பதால் கேன்சரால் பாதிக்கப்படும் கதாபாத்திரம் அவருக்கு. அப்போது நானே செயின் ஸ்மோக்கர். ஆனாலும், புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பேச வேண் டும் என்று தோன்றியதால் அந்தப் படத்தை இயக்கினேன்.

நாகேஷூக்கும் எனக்கும் ‘வெள்ளிவிழா’படத்தின் போது பிரிவு ஏற்பட்டது. அவரால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கோபத்தில் நான் ‘தேங்காய்’ சீனிவாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கினேன். பாதி படத்தின்போதே எனக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தேன். மனத்தாங்கல் இருந்தபோதும் என்னை மருத்துவமனையில் நாகேஷ் வந்து பார்த்து, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்தினேன். சிகரெட்டையும் நாகேஷையும் பிரிந்திருந்த காலகட்டம் அது!

நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்றதும் செட்டில் எல்லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக்.

டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம்.

‘அந்த நாகேஷ் இல்லை’ என்ற நினைப்பே ஏதோ ஒரு தனிமை உணர்வுக்கு என்னை ஆட்படுத்துகிறது. ‘நீர்க்குமிழி’ பாடலின் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல்தான் இப்போதைக்கு எனக்கு ஆறுதல் மருந்து

ராமனின் விளைவு கைகொடுத்தது! மருத்துவத்தில் அரிய சாதனை!

மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம்.

ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் ராமனின் விளைவை பயன்படுத்தும் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

ஹென்றி போர்டு மருத்துவமனையில் இன்னோவேஷன் அமைப்பின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இது 99.5 சதவீதம் துல்லியம் வாய்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மனித மூளையில் நரம்பு செல்களை சுற்றி திசுக்கள் உள்ளன. இதனை சுற்றி கிளையோபிளாஸ்டோமா மல்டிபோர்ம் (ஜி.பி.எம்.) எனப்படும் புற்று கட்டிகள் அதன் மீது படர்கிறது. இக்கட்டிகளை நீக்கி சிகிச்சை மேற்கொள்வது மருத்துவர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

 இந்த கட்டிகள், சீரான முனைகள் கொண்டு இருக்கும். மூளை திசுவிற்கும் இக்கட்டிகளுக்கும் வேறுபாடு இருக்கும். இது ஆரோக்கியமான திசு மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு கடினம் என்பதால் அவற்றை நீக்குவதில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பது அரிதாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், இது சரியான பலனளிக்கவில்லை. எனவே, மிக துல்லியமாக, திறமையாக மற்றும் குறைந்த செலவில் மூளை திசுவில் இருந்து புற்று கட்டிகளை உருவாக்கும் திசுக்களை விரைவாக வேறுபடுத்தி அறுவை சிகிச்சை அறையில் அதனை கண்டறிவதற்காக ஹென்றி போர்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்கள் இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற ராமன் ஒளி விளைவு சோதனையை அடிப்படையாக கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் முடிவில் உள்ளனர்.

குறிப்பிட்ட பரப்பில் ஒளிகளை சிதற செய்து அவற்றில் தேவையற்ற திசுக்களை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேம்பட்ட முறையில் இந்த ஆய்வு முடிவு உலக அளவில் மூளையில் உருவாகும் கட்டிகளை குணப்படுத்த முதல் முயற்சியாக இது அமையும். மேலும், தொடர்ந்து ராமன் விளைவு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று ஆய்வின் தலைவரான ஸ்டீவன் என். கல்கானிஸ் தெரிவித்துள்ளார்.

சும்மா டிப்ஸ்....?


மக்களே.... நிலாவை தொட்டது யாருன்னு கேட்டா டக்குன்னு பதில் சொல்லுவது போல, கிருமிகள் எங்க அதிகமாக இருக்கும்? அப்படின்னு கேட்டா சும்மா யோசிக்காம டக்குன்னு பதில் சொல்லிடுவிங்க...டாய்லெட்டில் தான் இருக்குமுன்னு.  ஒரு விளம்பரத்தில் நம்ம விஜய் ஆதிராஜ் ஒரு பிகர் கூட வந்து ஒரு அக்கா வீட்டுல உள்ள பாத்ருமை கிளின் பண்ணிட்டு போவாங்க...ஆனால் அந்த டாய்லெட்டை விட மோசமான அதிக கிருமிகள் இருக்கும், நாம அதிகமா பயன்படுத்தும் இடங்கள் எது எதுன்னு பாக்கலாமா?.

1. ஹோட்டல்களின் மெத்தை விரிப்புகள்: சில ஹோட்டல்களில் மெத்தை விரிப்புகளை தினமும் மாத்த மாட்டாங்க. இதுக்கு பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்கள் கூட விதிவிலக்கு இல்லை. லேட்டஸ்டா இது போல ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தான் ரொம்ப நாளைக்கு பின்ன பாக்ஸர் மைக் டைசனின் டி என் ஏ வை ஒரு மெத்தை விரிப்புலருந்து எடுத்தாங்க. அந்தளவுக்கு துவைக்காத மெத்தை விரிப்புகளில் மோசமான கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லத்தான் இந்த உதாரணம். அதனால ஹோட்டலுக்கு போனா துவைக்காத மெத்தை விரிப்புகள் இருந்தா உடனே மாத்த சொல்லுங்க.

 2. டாய்லெட் இருக்கும் அறையின் தரை: நாம வெளி இடங்களுக்கு போகும் போது..நம்ம பையை பக்கத்துலையே வச்சுப்போம்..சில சமயம் டாய்லெட் போனா கூட அங்கயும் எடுத்துட்டு போயி டாய்லெட் பக்கத்துல தரையில் வச்சுப்போம். அதுமாதிரி செய்யாதிங்க...ஏன்னா? டாய்லெட்டை விட டாய்லெட் தரையில்தான் அதிக கிருமிகள் இருக்காம்.

3. ஏ டி எம் மெசின்: கிருமிகள் அதிகமா இருக்கதுல மூனாவது இடம் ஏ டி எம் மெசினின் தொடு திரையும் key போர்டுதான். இந்த  key போர்டுல பூசப் பட்டிருக்கும் வேதிப் பொருள் ஒரு ஸ்லொவ் பாய்சனாம். மெசினை பயன்படுத்திய உடன் விரலை கண்ணு காது வாயில வச்சுடாம உடனே கழுவும் வேலைய பாருங்க.

4. ஆபீஸ் டெலிபோன்: பல பேர் பயன்படுத்தும் ஆபீஸ் டெலிபோனில் 25000 வரையான எண்ணிக்கையில் கிருமிகள் இருக்கிறதா அமெரிக்கா பல்கலை கழகம் நடத்திய ஆய்வு சொல்லுது.

5. ஹோட்டல் மெனு கார்ட்ஸ்: இந்த மெனு கார்ட்சை அப்போபோ ஆன்டி பாக்டீரியா திரவம் வச்சு தொடைக்கணும்...ஆனால் யாரும் செய்யவதில்லை. அதை தொட்டுட்டு சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட்டா கிருமிகள் நேரா வயித்துக்குத்தான்.

6. ஹோட்டல் டேபிள் வேர்ஸ்: சாப்பாட்டு மேசையில்  உப்பு, சக்கரை,ஊறுகா வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் ஏகப்பட்ட கிருமிகள் இருக்காம்.

7. ட்ராலிகள்: பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டில் அல்லது ஏர்போர்டில் ட்ராலிகள் வச்சுருப்பாங்க...அந்த ட்ராளிகலிலும் கிருமிகள் அதிகம்.சில பேர் குழந்தைகளை அதுல உக்கார வச்சு தள்ளிகிட்டு போவாங்க அதுமாதிரி செய்யாதிங்க.

8. கார்: காரில் உள்ள ஸ்டியரிங் வீலில் கிருமிகள் அதிகம். சில பேர் சாப்பிட்டுக்கிட்டே வண்டி ஓட்டுவாங்க. பின்ன ஸ்டியரிங் வீலில் இருக்கும் கிருமிகள் அப்படியே வயித்துக்குத்தான் ஸ்ட்ரெயிட்டா...

9. சமையல் அறை: சமைக்கற இடம், பாத்திரம் கழுவும் பேசணில் அதிகமா கிருமிகள் இருக்குமுன்னு எல்லாருக்கும் தெரியும். சுத்தமா வச்சுக்கணும் என்பதும் தெரியும்தானே..

10.ஜிம்: பல பேர் பயன்படுத்தும் உடற்பயிற்சி உபகரணங்களில் கிருமிகள் இருப்பது இயற்கைதானே.

11. பூங்கா: பறவைகள் எச்சம் இருக்கும்... பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும்...ஊஞ்சல், சறுக்கு மரம், சாய்ந்தாடும் பலகைகளில் கிருமிகள் எப்போதும் இருக்கும்.

இதுல சொன்ன நிறைய இடங்களுக்கு நாம போயித்தான் ஆகணும். நாம போகும் அந்த இடங்களையும் அந்த இடத்தில் உள்ள பொருள்களையும் நாம கழுவிக்கிட்டே இருக்க முடியாது. ஆனால் பயன்படுத்துவதற்கு முன்னரும் பயன் படுத்திய பின்னரும் நம்ம கைய கழுவிக்கலாம்தானே....        

விஜய் இரட்டை வேடம் பலனளிக்குமா...?

‘துப்பாக்கி’ ஹிட்டுக்குப் பிறகு விஜய் – முருகதாஸ் மீண்டும் இணைகிறார்கள்.

சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில்’எதிர்நீச்சல்’ சதீஷ் காமெடியனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘வாள்’ என்று டைட்டில் வைத்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அது இல்லையாம்.

‘அதிரடி’, ‘வாள்’ என்று படத்துக்கு டைட்டில் வைக்கவில்லை. கூடிய விரைவில் அறிவிக்கிறோம் என்று படக்குகுழுவினர் சொல்கிறார்கள்.

இந்தப் படத்தில்  விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

ஆக்ஷன் ஹீரோ, காமெடி ஹீரோ என இரு வேடங்களிலும் பட்டையக் கிளப்பப் போகிறாராம்.

‘தலைவா’, ‘ஜில்லா’ படங்களில் விட்டதை இதில் பிடிக்க வேண்டும் என்பதற்காக பன்ச் வசனங்கள் அதிகம் இடம்பெறுகிறதாம்.

தல கொடுத்த ஷாக்...!

தல போல வருமா! தல போல வருமா! என்ற வரும் பாடலை போலவே கோடம்பாக்கத்தில் தலயை பத்தி தான் இன்று பேச்சு.
தலயை வைத்து பில்லா, ஆரம்பம் படத்தை எடுத்த விஷ்ணுவர்தன் இப்போது தலயின் மிக நெருங்கிய நண்பர்.

ஆரம்பம் படம் மிக பெரிய வெற்றி விஸ்வரூபத்தை எடுத்தாலும் விஷ்ணுவர்தனுக்கு சொல்லும் படியாக வாய்ப்புக்கள் வரவில்லை என்பது உண்மை.

சரி நமக்கு தான் ஆர்யா இருக்கானே என்று அவருக்கு கதை பண்ணி கொண்டு இருக்க, சமிபத்தில் தல விஷ்ணுவர்தன்யை கூப்பிட்டு மறுபடியும் நம்ம ஒன்னு சேரலாம் விஷ்ணு  என்று சொல்லி ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து ஒரு ஷாக் ட்ரீட்மென்ட்டை கொடுத்தார்.

என்ன தல சொல்றிங்க என்று அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லையாம் விஷ்ணுவர்தன்

ரஜினி ரகசிய பயணம் சென்றுள்ளார்!

 கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் வந்த ரஜினிகாந்த் தனது அண்ணன், நெருங்கிய நண்பர்களை சந்தித்தார். தான் படித்த பள்ளிக்கூடம் உள்பட பிடித்த இடங்களுக்கு ரகசியமாக சென்று வந்தார்.

நேற்று காலை அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். இந்த‌ தகவலறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திடீரென வீட்டின் முன்பு குவிந்து, ஆரவாரம் செய்தனர். ரஜினி வீட்டின் பால்கனியில் நின்று, ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.

பிறந்து வளர்ந்த பெங்களூருக்கு ரஜினி காந்த் அடிக்கடி ரகசியமாக வந்துபோவது வழக்கம். கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெங்களூர் வருவதை குறைத்துக்கொண்டார். சில மாதங்களுக்கு முன்னர் அவர‌து அண்ணன் சத்தியநாராயணா பெங்களூரில் கட்டிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்தார். அப்போது நெருங்கிய நண்பர்களை கூட சந்திக்காமல், உடனே சென்னைக்கு கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் கடந்த 27-தேதி ரஜினி தனது நண்பர்கள் 3 பேருடன் ரகசியமாக பெங்களூர் வந்தார். வழக்கமாக அனுமந்த் நகரில் உள்ள சத்திய நாராயணா வீட்டில் தங்கும் ரஜினி, இந்த முறை பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தன‌து இல்லத்தில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இருப்பினும் முதல் வேலையாக, 28-ம் தேதி காலை சத்திய நாராயணா வீட்டிற்கு சென்றார்.

ரஜினியின் வருகையொட்டி அவரின் உறவினர்கள் அனைவரும் சத்திய நாராயணா வீட்டில் கூடினர். அனைவரோடு பேசி மகிழ்ந்த அவர், தனது அண்ணனுடன் நீண்ட நேரம் தனியே பேசி கொண்டிருந்தார்.

படித்த பள்ளியை வலம் வந்தார்

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் கவிப்புரம் குட்டஹள்ளி மண்ணை மிதிக்காமல், திரும்ப மாட்டார். ஏனென்றால் அவர் படித்த மாதிரி கன்னட தொடக்கப்பள்ளி, அவரின் இஷ்ட தெய்வமான கவிகங்காதேஷ்வர் கோயில், உயிர் நண்பன் ராஜ் பகதூர் வீடு என அனைத்தும் அங்குதான் உள்ளது. மாறுவேடத்தில் வலம்வந்ததால் நெருக்கமானவர்களால்கூட ரஜினியை அங்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

நண்பர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது, கவிப்புரம் மாதிரி கன்னட தொடக்கப்பள்ளியை ரஜினி பார்த்தார். இந்த‌ பள்ளிக்கூடத்தை கர்நாடக அரசு ரூ.1.53 கோடி செலவில் நவீன வசதிகளோடு புதுப்பித்து வருகிறது.

வறுமையில் வாடிய தனது ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிற்கு சமீபத்தில் பெரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தி, அவரது கண்ணீரை ரஜினி காந்தி துடைத்தார். அப்போது ஆசிரியையிடம் தொலைப்பேசியில் பேசிய ரஜினி,' பெங்களூர் வரும்போது நிச்சயம் வீட்டிற்கு வருகிறேன்'என உறுதியளித்தார்.

இப்போது பெங்களூர் வந்த ரஜினி உங்களை சந்தித்தாரா என்று ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிடம் கேட்டோம். 'இல்லை. சிவாஜிக்கு(ரஜினியின் இயற்பெயர்) நிறைய வேலைகள் இருக்கும். அதனால்தான் வரவில்லை.அடுத்தமுறை நிச்சயம் வருவார். இல்லாவிட்டால் பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு வருவார்''என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் அவருடைய நிழலாக இருப்பவர், உயிர் நண்பர் ராஜ் பகதூர் தான். ரஜினியோடு பள்ளியில் ஒன்றாக படித்தது, பேருந்தில் அவர் நடத்துநராக இருந்த போது ஓட்டுநராக இருந்தது ராஜ் பகதூர் தான்.

இந்த முறை கன்னட படமான 'ஒன்வே' வெளியூர் படப்பிடிப்பில் ராஜ்பகதூர் மிகவும் பிஸியாக இருந்தார். அதனால் அவரால் ரஜினியோடு நேரத்தை செலவிட முடிய‌வில்லை.

அதிகாலையிலேயே ரசிகர்கள்!

வழக்கமாக ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் வீட்டில் தங்காமல், வெளியே சுற்றுவார்.ஆனால் இந்த முறை அதிகமாக வீட்டிலே இருந்தார். நேற்று அதிகாலை 6 மணிக்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டு முன்பு கூடி 'தலைவா..தலைவா..'' என உற்சாகமாக ஆரவாரமிட்டனர். மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பல ரசிகர்கள் ரஜினி வீட்டின் மதில் சுவருக்குள் ஏறிக் குதித்தனர்.

மந்த்ராலயத்திற்கு கிளம்பிய ரஜினி

ஒரு கட்டத்தில் ரசிகர்க‌ளின் குரல் அக்கம் பக்கத்து வீட்டாரையும் விழித்தெழ செய்தது. இதனால் ரஜினி தனது வீட்டின் பால்கனிக்கு வந்தார். குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து வணங்கினார். அனைவரையும் பத்திரமாக வீட்டுக்கு போகுமாறு சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டார். ரசிகர்கள் கூட்டத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாததால் ரஜினி வீட்டை விட்டு காரில் புறப்பட்டார். அப்போது கன்னட தொலைக்காட்சி செய்தியாளர் அவரை மறித்து பேட்டி கேட்டார். 'பேட்டியெல்லாம் வேண்டாம்.வழக்கம்போல சும்மாதான் பெங்களூர் வந்தேன்'' என கூறிவிட்டு தனது நண்பர்களுடன் கிளம்பி சென்றார்.

ரஜினி மந்த்ராலயத்திற்கு சென்று இருப்ப‌தாக அவருடைய வீட்டில் இருந்தவர்கள் கூறினர். 

போலீஸ் ஸ்டோரிக்காக ஜாக்கிசான் பாடிய பாட்டு..!




ஜாக்கிசான் தயாரித்து நடிக்கும் படம், போலீஸ் ஸ்டோரி 2013. முந்தைய போலீஸ் ஸ்டோரி கதைகளின் ஆறாம் பாகம் இது. இதில் முதன்முறையாக ஜாக்கி சான் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

டிங் ஷெங்க் இயக்கி உள்ள இந்தப் படம் சீனா மற்றும் ஹாங்காங்க்கில் வெளியாகி அதிக வசூலை அள்ளி உள்ளது. ஒரு கும்பல் 33 பேரை கடத்தி பணய கைதிகளாக வைத்திருக்கின்றனர்.

அதில் ஒருவர் ஜாக்கி சானின் மகள். பணய கைதிகளில் ஒருவராக, அவர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து எல்லோரையும் ஜாக்கிசான் எப்படி மீட்கிறார் என்பது பரபரக்கும் திரைக்கதை.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், ஆங்கிலத்தில் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை சுரபி பிலிம்ஸ் மோகன் வெளியிடுகிறார்

ஹீரோவாக மாறிய டெக்னீஷியன்கள் ..!



டெக்னீஷியன்களே ஹீரோக்களாக நடிக்கும் படம் கள்ளப்படம். இதுபற்றி இயக்குனர் ஜெ.வடிவேல் கூறியதாவது: 

புதுமுக நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு கோலிவுட்டில் வாய்ப்பு கிடைப்பது அரிது. அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். தமிழ் கலாசாரத்தின் அடையாளமாக கருதப்படும் கூத்து உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகள் தற்போது நலிவடைந்து வருகிறது.

முன்பெல்லாம் ஊர் திருவிழா என்றால் கூத்து நடக்கும். இப்போது பாட்டுக்கச்சேரி, குத்தாட்ட நிகழ்ச்சி தான் நடக்கிறது. பாரம்பரிய கலைக்கு முக்கியத்துவம்தரும் வகையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இது டாக்குமென்ட்ரி படமாக இல்லாமல் கமர்ஷியல் அம்சத்துடன் த்ரில்லராக கதை கரு அமைந்துள்ளது.

சினிமாவில் முன்னேற புதியவர்கள் எப்படி போராட வேண்டி இருக்கிறது என்ற பின்னணியில் இக்கதை அமைந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனரான நான், ஒளிப்பதிவாளரான ஸ்ரீராம் சந்தோஷ், இசை அமைப்பாளரான கே, எடிட்டராக பணியாற்றும் காகின் ஆகிய நான்குபேரும் அந்தந்த கதாபாத்திரங்களாக படத்தில் வேடமேற்றிருக்கிறோம்.

ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கிறார். திருவண்ணாமலை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து நிஜகூத்து கலைஞர்களை வரவழைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன. இயக்குனர் மிஷ்கின் ஒரு பாடல் பாடி இருக்கிறார். சுட்டகதை பட ஹீரோ யின் லக்ஷ்மி ப்ரியா, நரேன், சிங்கம் புலி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடம் ஏற்றிருக்கின்றனர்.