Friday 31 January 2014

தமிழ் படங்களின் மீது இயக்குநர்களுக்கு திடீர் பற்று!

அதென்னமோ தெரியவில்லை இப்போது தமிழ் பட டைரக்டர்களுக்கு தமிழ் பற்று பொங்கி வழிகிறது. சங்க இலக்கியத்திருந்தெல்லாம் சொற்களை கண்டுபிடித்து படத்துக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாரணம் ஆயிரம், பொன்மாலை பொழுது, விண்ணைத்தாண்டி வருவாயா என கவுதம் மேனன்தான் அழகு தமிழில் பெயர் வைப்பார். இப்போது அவரையும் மீறி சங்கத் தமிழ் வரைக்கும் சென்று விட்டார்கள்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஞ்சான் என்றால் எதற்கும் அஞ்சாதவன், பயப்படாதவன் என்ற பொருள்.

கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனேகன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். அனேகன் என்றால் அனைத்தும் அறிந்தவன் என்று பொருள் அதாது ஆல் இன் ஆல் அழகுராஜா.

மகிழ்திருமேனி டைரக்டஷனில் ஆர்யா நடிக்கும் படத்திற்கு மீகாமன் என்பது டைட்டில். மீகாமன் என்றால் கப்பல் தலைவன் என்று பொருள். அதாவது கேப்டன், மாலுமி.

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் டைரக்ஷனில் ஜீவா நடிக்கும் படத்திற்கு யான் என்ற டைட்டில். யான் என்றால் நான் என்று பொருள்.

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை டைரக்ட் செய்த பரதன் இப்போது காக்டெயில் மலையாளப்படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். அதற்கு அதிதி என்று டைட்டில் வைத்துள்ளார். இதற்கு அழையா விருந்தினர், அல்லது திடீர் விருந்தினர் என்று பொருள்.

வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி ஒரு படம் டைரக்ட் செய்ய இருக்கிறார். அதற்கு குறோணி என்று டைட்டில் வைத்திருக்கிறார். குறோணி என்றால் அசுரன் என்று பொருளாம்.

இன்னும் நிறைய சங்கத்த தமிழ் பெயர்கள் வரப்போகிறது. வாழ்க டைரக்டர்களின் தமிழ்த் தொண்டு

0 comments:

Post a Comment