Thursday 6 February 2014

வீ‌ட்டி‌ல் 2 கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் அவ‌சிய‌ம்!!

வீ‌ட்டி‌ல் 2 கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் அவ‌சிய‌ம்!!

‌ஒ‌வ்வொரு ‌வீ‌ட்டிலு‌ம் இர‌ண்டு கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். த‌ற்போது ம‌க்கு‌ம் கு‌ப்பைக‌ள், ம‌க்கா கு‌ப்பைக‌ள் எ‌ன்று ‌பி‌ரி‌‌ப்பது கு‌றி‌த்து நா‌ங்க‌ள் பேச‌வி‌ல்லை.

அதாவது, உல‌ர்‌ந்த கு‌ப்பைகளை ‌கொ‌ட்டவு‌ம், ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ள் த‌ங்களா‌ல் ஒது‌க்க‌ப்படு‌ம் கு‌ப்பைகளை‌ப் போடவு‌ம் ஒரு கு‌ப்பை‌த் தொ‌ட்டி‌ ‌வீ‌ட்டி‌ல் துடை‌ப்ப‌ம் போ‌ன்றவை வை‌க்கு‌ம் இட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌தி‌ல் கா‌கித‌ம், தூசு போ‌ன்றவ‌ற்றையு‌ம், ‌வீ‌ட்டை‌ப் பெரு‌க்‌கினா‌ல் வரு‌ம் கு‌ப்பையையு‌ம் கொ‌ட்டி வை‌க்கலா‌ம்.

ஆனா‌ல், ‌வீ‌ட்டி‌‌ன் சமையலறை‌யி‌ல் த‌னியாக ஒரு கு‌ப்பை‌த் தொ‌ட்டி வை‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌தி‌ல் சமையலறை‌யி‌ல் வரு‌ம் கு‌ப்பைகளை‌ப் போ‌‌ட்டு வை‌க்கலா‌ம். இவை ஈர‌த்துட‌ன் இரு‌க்கு‌ம். இவ‌ற்றையு‌ம் ம‌ற்ற‌க் கு‌ப்பைகளுட‌ன் போ‌ட்டு வ‌ந்தா‌‌ல் ‌வீடே நா‌ற்ற‌ம் எடு‌க்கு‌ம்.

மேலு‌ம், சமையலறை‌க் கு‌ப்பைகளை ‌தினமு‌ம் அ‌க‌ற்‌றி‌க் கொ‌ண்டே இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌தனை ஒரு அ‌ட்டை போ‌ட்டு மூடி வை‌த்தா‌ல் கொசு‌த் தொ‌ல்லை இரு‌க்காது.

கோச்சடையான் Vs தெனாலிராமன்

 ஏப்ரல் 11ம் தேதி ரஜினியின் 'கோச்சடையான்' படத்தோடு வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படமும் வெளியாகவிருக்கிறது.

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ பல்வேறு மொழிகளில் 6 ஆயிரம் தியேட்டர்களில் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகிறது. ரஜினியோடு தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட் டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செளந்தர்யா இயக்கியிருக்கிறார்.

ஏற்கனவே ஏப்ரல் 11ம் தேதி சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மான் கராத்தே' மற்றும் விஷால் நடித்துவரும் 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படமும் வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.

வடிவேலுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் "சித்திரை திங்கள் "ஜெகஜால புஜபல தெனாலிராமன்" பராக்... பராக்... பராக்...!" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்டநாட்கள் கழித்து வடிவேலு நடித்து வருவதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது 'கோச்சடையான்' படத்துடன் 'தெனாலிராமன்' படமும் வெளிவருவதால் விநியோகஸ்தர்கள் கடும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

'தெனாலிராமன்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் மொத்த பணிகளும் முடிந்துவிடும். இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீடு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மூத்த, சினிமா சூப்பர் ஸ்டார் வேடத்தில் - கமல்!

 ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல் அடுத்து நடிக்கவிருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் நடந்து வரும் சமயத்தில், தனது அடுத்த படமான 'உத்தம வில்லன்' படத்திற்கான கதை, திரைக்கதை இரண்டையும் எழுதி முடித்துவிட்டார் கமல்.

கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், கிரேஸி மோகன் மூவருமே 'உத்தம வில்லன்' பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ரமேஷ் அரவிந்த் படத்தினை இயக்கவிருக்கிறார். கிரேஸி மோகன் படத்தின் வசனங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றி வருகிறார். இசைப்பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'விஸ்வரூபம் 2' படத்தின் பின்னணி இசையையும் ஜிப்ரான் தான் செய்து வருகிறார்.

இப்படத்தில் கமலுடன் பாலசந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் கமலுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கமலுடன் நடிக்க அவரின் மகளான ஸ்ருதிஹாசனிடம் கேட்டு இருக்கிறார்கள், ஆனால் அவரோ தேதிகள் இல்லை என்று கூறிவிட்டாராம். இப்படத்தில் கமல் மூத்த, சினிமா சூப்பர் ஸ்டார் வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மார்ச்சில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தினை முடிந்தவுடன் 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க இருக்கிறார். 

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்!

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்த ஸ்டீவ் பால்மர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதனையடுத்து அப்பதவிக்கான நபரை தேர்வு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு சிறப்புக்குழுவை அமைத்தது.

இதையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பட்டியலில் சத்யா நாதெள்ளா,சுந்தர் பிச்சை, விக் குண்டோத்ரா ஆகிய இந்தியர்கள் உள்பட 9 பேர் இருந்தனர். இதில், அனுபவம் மிக்க அதிகாரியாக இருந்த 46 வயது சத்யாவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்து நியமித்திருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.