Tuesday 18 March 2014

தல – தளபதி ஷாக்! எல்லாம் போச்சி...?

நேற்று முன் தினம் சென்னையில் நடந்த வாயை மூடி பேசவும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், 2014ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை.


பல பெரிய ஸ்டார்கள் கடந்த இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆகியிருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்று, தயாரிப்பாளருக்கும், விநியோகிஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்த படங்கள் என்று பார்த்தால் இரண்டே இரண்டு படங்கள்தான் என்று அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த இரண்டு படங்களில் ஒன்று கோலி சோடா, மற்றொன்று தெகிடி.


ஆனால் ஊடகங்களில் விஜய் நடித்த ஜில்லாவும், அஜீத் நடித்த வீரம் படமும் பெரும் வெற்றி பெற்றதாக விளம்பரப்படுத்தின. இந்த வெற்றி உண்மையான வெற்றி அல்ல என்றும், அவருடைய பேச்சில் இருந்து தெரிய வருகிறது.


பசங்க படத்தில் நடித்த சிறுவர்கள் பெற்ற வெற்றியை கூட தல – தளபதி படங்கள் பெறவில்லை என்பதுதான் உண்மை. மேலும் கோலிசோடா அதிகளவான தியேட்டர்களில் 50 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல தெகிடி படமும் முதல் வார கலெக்ஷனைவிட, இரண்டாவது வார கலெக்ஷன் அதிகமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ஹன்சிகா பேசியதை நீங்க கேட்டீங்களா! இது மான் கராத்தே கூத்து!

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான் கராத்தே படத்தின் பாடல் வெளியீடு நேற்று சென்னை சத்யம் சினிமா திரையரங்கில் நடந்தது.


அந்த விழாவில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ், தேவா, ஷங்கர், பிரபு சாலமன், சூரி, கேயார், லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் ஹன்சிகா தமிழில் பேசி ஆடியன்ஸ் அனைவரையும் அசத்தினார். எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் தொடங்கிய ஹன்சிகா, இயக்குனரை பற்றி கூறும்போது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை போல இயக்குனர் சிறியவராக இருந்தாலும் பெரிய ஆள் என்று தெரிவித்தார்.


சிவகார்த்திகேயனை எஸ்.கே என்றுதான் தான் கூப்பிடுவதாகவும், அவருடன் நடித்ததில் மிகுந்த சந்தோஷம் என்றும் தெரிவித்தார்.


இறுதியில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் புகழ் சும்மா கிழி கிழின்னு இந்த படம் வந்துருக்கு என்று ஹன்சிகா சொல்லியபோது ஆடியன்ஸ் மத்தியில் பலத்த கரகோஷம் ஏற்பட்டது.

இவருதேன் அடுத்த சூப்பர் ஸ்டாராம்..?

ஒரு நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டுகிறார்கள் என்றால் அதனை ஒரு மேடை நாகரிகம் என்பார்கள். அது கொஞ்சம் அளவு கடந்து போனால், ஜால்ரா என்பார்கள். அதுவே உதாரணத்துடன் சொன்னால் உண்மை என்பார்கள்.

இன்றைக்கு நடந்த ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கேயார், மற்றும் செயலாளர் டி.சிவா இருவருமே சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். ஒரு கட்டத்தில் சிவாவே போதுமே சார் என்று சைகையால் கெஞ்சும் அளவுக்கு இவர்களது பேச்சு இருந்தது.

பாடலாசிரியர் அறிவுமதி பேசும்போது, “நான் குவைத்திற்கு சென்றிருக்கும்போது அங்கே ஒரு லேப்டாப்பில் தமிழ்ப் படம் ஓடிக் கொண்டிருந்தது. சுற்றிலும் குழந்தைகள் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் படத்தை நிறுத்துங்கள் என்றேன். ஆனால் குழந்தைகள் அனைவரும் அதனை எதிர்த்தார்கள். அதன் உளவியல் என்ன தெரியுமா..? இன்றைய தினத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்பது எனக்குப் புரிந்தது..” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும்போது, “சொல்லப் போறது மேடையா இருந்தாலும் மேடைக்காக சொல்லலை. அவருடைய தொடர்ச்சியான 5 படங்கள். அவை கொடுத்த வெற்றி.. அவர் தனது பெர்மார்மென்ஸை வளர்த்துக்கிட்டிருக்குற வேகம். அவரைச் சுற்றியிருக்கிற நண்பர்கள்.. சின்னக் குழந்தை முதல் பெரியவங்கவரைக்கும் அவருக்குக் கிடைச்சிருக்குற ஆடியன்ஸ்.. இதையெல்லாம் வைச்சு சொல்றேன்.. இன்றைய இளையதலைமுறையின் சூப்பர்ஸ்டார் சிவகார்த்திகேயன்தான்..” என்றார்.

கேயார் பேசும்போது, “இன்னிக்கு ஒரு நடிகரோட கால்ஷீட்டுக்கு எத்தனை கோடி வேண்ணாலும் தரேன்னு சொல்லிட்டு தயாரிப்பாளர்கள் ஓடி வர்றாங்கன்னா அது சிவகார்த்திகேயனுக்குத்தான்.. இவரோட அடுத்தடுத்த படங்கள் தொடர்ச்சியாக சூப்பர்ஹிட்டா ஓடி கோடிகள்ல லாபம் சம்பாதிச்சுக் கொடுத்திருப்பதை பார்த்தால் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தானோன்னு சொல்லத் தோணுது. முன்னாடில்லாம் எம்.ஜி.ஆர். படங்களுக்குத்தான் இப்படியொரு பேச்சு விநியோகஸ்தர்கள், தியேட்டர்கார்ர்கள் மத்தில இருக்கும். இன்னிக்கு சிவகார்த்திகேயன் படமா.. என்ன ஏதுன்னு கேக்காமலேயே படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ரெடியா இருக்காங்க. அந்த அளவுக்கு இவரோட வளர்ச்சி இருக்கு..” என்றார்.

இப்படி தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் ரெண்டு பேருமே ஏற்றிவிட்டுப் போனார்கள். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் காசு விஷயத்தில் ரொம்ப கெட்டியாக இருக்கிறார் என்று திரையுலகில் பலமான பேச்சு.. சம்பளமும் வாங்கிக் கொண்டு லாபத்திலும் பங்கு கேட்கும்விதமாக ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார் என்று முணுமுணுக்கிறார்கள். வருவதை வாங்கிக் கொண்டு நடிக்கும் சாதாரண நடிகரல்ல அவர் என்பது அவரது பேச்சிலும் நன்றாகவே தெரிந்தது.

சிவகார்த்திகேயன் பேசும்போது, “என் படங்களை தைரியமா, நம்பி வந்து பார்க்கலாம். இந்தப் படத்துக்காக பெரிய பட்ஜெட்ல செலவு பண்ணியிருக்கோம். வியாபாரம் கண்டிப்பா பெருசாத்தான் இருக்கும். தியேட்டர்ல டிக்கட் ரேட் அதிகமாகும்போது, அப்படி கொடுத்துவந்து பார்க்கிறவங்களுக்கு… இந்தப் படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும். நான் ஆர்ட்டிஸ்டா..? ஸ்டாரா..? ஹீரோவா..? அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஸ்கிரீன்ல வரும்போது என்னைப் பார்த்தால் ரசிகர்கள் சந்தோஷப்படணும். இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன். இன்னைக்கு ஒரு எக்ஸ்ட்ரா தைரியமும் வந்திருக்கு. இவ்வளவு பேர் இருக்காங்க தட்டிக் கொடுக்கிறதுக்கு… இவ்வளவு பேர் இருக்கீங்க தூக்கி விடுறதுக்குன்னு நினைக்கும்போது, இன்னும் தைரியமான முயற்சிகளை பண்ணலாம்னு கான்பிடன்ஸ் இருக்கு. அதோடு தொடர்ந்து நல்ல படங்கள் பண்ணணும்னும் நினைக்கிறேன்…” என்றார்.

தியேட்டர்களில் பெரிய பட்ஜெட் படங்களின்போதும், பெரிய ஹீரோக்களின் பட ரிலீஸின்போதும் தியேட்டர் கட்டணங்கள் அளவு கடந்து உயர்த்தப்பட்டு ரசிகர்களின் பர்ஸ் காலியாகிறது என்கிற குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களாகவே உயர்ந்து வருகிறது. இதையெல்லாம் தெரிந்தும் கண்டு கொள்ளாமல்தான் நமது ஹீரோக்கள் கோடிகளை வாங்கி வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். இதே மனப்பான்மையோடு சிவகார்த்திகேயனும் இருப்பது இவரது பேச்சிலேயே தெரிகிறது..

“தியேட்டர்ல டிக்கட் ரேட் அதிகமாகும்போது, அப்படி கொடுத்துவந்து பார்க்கிறவங்களுக்கு… இந்தப் படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும்.” என்பதெல்லாம் “எவ்வளவுன்னாலும் கொடுத்துப் பாருங்க.. படம் நல்லாயிருக்கும்”னு தனது வெள்ளந்தியான வார்த்தைகளால் ரசிகர்களின் பாக்கெட்டில் உரிமையோடு கையைவிட்டு பணத்தைச் சுடுகிறார் என்றுதான் தோன்றுகிறது..!

கேயார் தெரிவித்த மேடை நாகரிக வார்த்தைகளுக்கு ஏதாவது மறுப்பு தெரிவிப்பாரென்று பார்த்தால் மனிதர் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், “இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன்…” என்றும் சொல்லியிருக்கிறார்.

வருத்தமாகத்தான் இருக்கிறது.. பணத்தினை மட்டுமே மையமாக வைத்து சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் சூட்டப்படவில்லை என்பது இங்கே யாருக்கு புரியப் போகிறது..!?

என் மகன் லவ்வை அத்துவிட்டுட்டாரே: புலம்பிய டாடிக்கு இயக்குனர் செம டோஸ்!


என் மகன் காதலை இந்த ஆளு இப்படி அத்துவிட்டுட்டாரே என்று விரல் நடிகரின் தாடிக்கார டாடி தெரிவித்துள்ளாராம்.


விரல் வித்தை நடிகர் தனது காதலியான புஸு புஸு நடிகையை அண்மையில் பிரிந்தார். அவர் பாண்டி இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலியான நயன நடிகை நடிக்கிறார். அவரை நடிக்க அழைத்து வந்ததே இயக்குனர் தான்.


இந்நிலையில் விரல் நடிகரின் தாடிக்கார டாடியும், மம்மியும் தங்கள் மகனின் காதல் முறிவுக்கு பாண்டி இயக்குனர் தான் காரணம் என்றும், அவர் நயனத்தை அழைத்து வந்து மகனின் காதலை அத்துவிட்டுவிட்டதாக சிலரிடம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் காத்து வாக்கில் இயக்குனரின் காதுக்கு சென்றுள்ளது.


இதை கேட்ட இயக்குனர் தாடிக்கார டாடிக்கு போன் போட்டு செம டோஸ் விட்டாராம்.

உதயமாகிறது இளையராஜா ரசிகர் மன்றம், பத்திரிகையும் வரப்போகிறது!

இளையராஜாவின் பெயரில் இளையராஜா ரசிகர் மன்றம் தொடங்கயிருக்கிறது. இசைஞானி என்ற பெயரில் வாரப்பத்திரிகையும் வெளிவர உள்ளது.


இளையராஜாவின் கோடிக்கணக்கான ரசிகர்களில் பலர் தனிப்பட்ட முறையில் ஒன்றிணைந்து அவர் பெயரில் மன்றங்களும், பேரவையும் வைத்துள்ளனர். வருடந்தோறும் இளையராஜாவின் ரசிகர்கள் ஒன்றுகூடும் நிகழ்வும் தொடர்ந்து நடந்து வருகிறது.


ஆனால் இளையராஜாவின் சம்மதத்துடன் அவரது பெயரில் ரசிகர் மனற்ம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. இளையராஜாவின் சம்மதத்தடன் தொடங்கப்படும் இந்த அமைப்பானது, இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, இயக்குனர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாகக் கொண்டு செயல்படும்.


அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் அமைப்பாக இளையராஜா ரசிகர் மன்றம் இருக்கும். இந்த மன்றத்தின் மூலம் சமூக விழிப்புணர்வு, சமூக முன்னேற்றத்துக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்கயிருக்கிறாராம் இளையராஜா.


மன்றம் குறித்த அறிவிப்பை ஏப்ரல் 5 மதுரையில் நடக்கயிருக்கும் ராஜாவின் சங்கீதத் திருநாள் இசை நிகழ்ச்சியின் போது வெளியிட உள்ளனர். அன்று இசைஞானி வார இதழையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

ஐயா சாமி...! ஆபாசமாக படமெடுக்கவே இல்லை..!

எனது மகளை ஆபாசமாக படமெடுத்தனர் என்று தயாரிப்பாளர் ரவிதேவன் மீது தரப்பட்ட புகாரை அவர் மறுத்துள்ளார்.


சென்னை சாலிக்கிராமம் காவரித் தெருவைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. துணை நடிகை. அவரை விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க தயாரிப்பாளர் ரவிதேவன் ஒப்பந்தம் செய்தார். விளம்பரப் படத்தை இயக்கியவர் ராமநாதன்.


ஆண்மைவிருத்தி சம்பந்தப்பட்ட காமசூத்ரா மாத்திரை விளம்பரம் அது. மணப்பெண் கோலத்தில் இருக்கும் பாக்யஸ்ரீ முதலிரவு அறைக்குள் பாலுக்கு பதில் காமசூத்ரா மாத்திரைகள் அடங்கிய சிறிய பெட்டியுடன் செல்வதாக விளம்பரம் எடுக்கப்பட்டது.


படப்பிடிப்பு முடிந்த பிறகு, எனது மகளை வைத்து ஆபாசப் படம் எடுத்தனர் என்று பாக்யஸ்ரீயின் தாயார் நிர்மலா வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் இந்த புகாரை ரவிதேவன் மறுத்தார்.


சம்பந்தப்பட்ட விளம்பரத்தை அவர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பித்தார். படத்தில் நடிக்க சம்மதித்து, படப்பிடிப்பு நடந்த பிறகு பிரச்சனை செய்வது சரியல்ல என்றவர், பணம் தந்தால் புகாரை வாபஸ் வாங்குவதாக போனில் முகம் தெரியாதவர்கள் மிரட்டுவதாகவும் கூறினார். 

அமர்க்களமாக நடந்த மான் கராத்தே ஆடியோ விழா (படங்கள்)

சும்மா சொல்லவில்லை. படுஅமர்க்களமாகதான் நடந்தது மான் கராத்தே பாடல்கள் வெளியீட்டுவிழா. அரங்கு கொள்ளாத அழைப்பாளர்களுடன் நூற்றுக்கணக்கில் ரசிகர்களும் முட்டி மோதியதில் சில விரும்பத்தகாத சம்பவங்கள். தடித்தடியாக இருந்த பவுன்சர்கள் அழைக்கப்பட்டவர்களையும் அலைக்கழித்தவிதம் பலரை முகம் சுழிக்க வைத்தது.


சிறப்பு அழைப்பாளர் ஷங்கர். நான் அனிருத்தின் ரசிகனாக வந்திருக்கிறேன் என்றவர் அவரின் ஒவ்வொரு படத்தை குறிப்பிட்டு பேசியது, மேடை நாகரிகம் கருதி சொல்லப்பட்ட வெறும் வார்த்தையல்ல என்பதை உணர்த்தியது. நான் காரில் ஏறினால் வணக்கம் சென்னை பாடல்கள்தான் ஒலிக்கும் என்றது அனிருத்தை கள்வெறி கொள்ள வைத்திருக்கும்.



சரியான பாதையில் போய்கிட்டிருக்கீங்க என்று சிவ கார்த்திகேயன் பற்றி சொன்னவர், இப்படியோ போனால் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இணைந்து கொள்ளலாம் என்றார்.


இது மட்டும் சிவ கார்த்திகேயனுக்குப் பிடித்திருக்க வாய்ப்பில்லை. விழா நெடுக கும்மியடித்த ரசிகர்களும், சிவ கார்த்திகேயனின் பேச்சும், அவர் ஏற்கனவே முன்னணி லிஸ்டில் இருப்பதை போலதான் இருந்தது.


என்னுடைய படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் ரசித்துப் பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நான் இந்த நிலைக்கு வர ரசிகர்கள்தான் காரணம். அவர்கள் என்னை விழாமல் தாங்கிப் பிடிப்பார்கள் என்றார் சிவ கார்த்திகேயன்.


அண்ணாத்தே விரைவில் கட்சி ஆரம்பித்து சிஎம் போஸ்டுக்கு கர்ச்சீஃப் போடுவார் போலத் தோன்றியது. விழா நெடுக வருங்கால சூப்பர்ஸ்டார் என்று மேடையில் இருந்தவர்களும், ரசிகர்களும் கூச்சலிட்டதே அதற்கு சான்று.

நான் வளர்கிறேனே முருகா...


நடிகைகள் கோயிலுக்குச் செல்வதும், பூஜை செய்து யாகம் வளர்ப்பதும் அதிசயமில்லை. அதுபோலதான் லட்சுமி மேனன் பழனிக்கு வந்ததும், தங்கத்தேர் இழுத்ததும்.


மலையாளிகள் என்னதான் தமிழர்களை மட்டம் தட்டினாலும் ஆன்மீக விஷயத்தில் மலையாளி இந்துக்களுக்கு பழனியும், கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணியும் தவிர்க்க முடியாத வழிபாட்டுத்தலங்கள். குழந்தைகளின் முதல்முடியை காணிக்கை செலுத்த மலையாளிகள் அதிகம் படையெடுப்பது பழனிக்குதான்.


லட்சுமிமேனன் முதல்முறை பழனி வந்தபோது கும்கியில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது முருகனிடம் தமிழ், மலையாளத்தில் அதிக படங்கள் செய்ய வேண்டும், செய்கிற படங்கள் வெற்றிபெற வேண்டும், சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும், எல்லாம் நடந்தால் தங்கத்தேர் இழுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டாராம்.


முருகன் அருளால் நான் இப்போது வளர்ந்து வருகிறேன். அதனால்தான் தங்கத்தேர் இழுக்க வந்தேன் என்றார் லட்சுமிமேனன்.


தமிழ்க் கடவுளான முருகா... மலையாள நடிகையை வளர வைத்த நீ தமிழ் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பே வழங்குவதில்லையே. முருகா... இதென்ன ஓரவஞ்சனை.

ஷகிலா வேடத்தில் நடிப்பதாக வதந்தி : அஞ்சலி!!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதற்கான திரைக்கதையை ஷகிலாவே எழுதி உள்ளார். சினிமா அனுபவங்கள், கதாநாயகியாக ஆசைப்பட்டு கவர்ச்சி நடிகை ஆக்கப்பட்டது, திரைக்குப் பின்னால் தனக்கு நேர்ந்த தொல்லைகள், மலையாள பட உலகினர் பின்னிய சதி வலைகள் அனைத்தையும் ஷகிலா இந்த படம் மூலம் காட்சிப்படுத்த உள்ளார்.


இந்தியில் டேர்டி பிக்சர் பெயரில் படமான சில்க் சுமிதா வாழ்க்கை கதை வெற்றிகரமாக ஓடியதால் இதுவும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் ஷகிலாவாக அஞ்சலி நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. அஞ்சலி தற்போது மீண்டும் மாயமாகி விட்டதாகவும், அமெரிக்காவில் குடியேறி விட்டார் என்றும் செய்திகள் வந்தன.


இந்த நிலையில் அவர் திடீரென ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது..


நான் ஷகிலா வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. அந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை அதற்கு பதில் வேறொரு படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளேன். அந்த கதை எனக்கு ரொம்ப பிடித்தது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை. இதுபோன்ற கதையைதான் நான் தேடிக்கொண்டு இருந்தேன்.


இயக்குனர் சொன்னதும் நடிக்க ஒப்புக் கொண்டேன். என் சினிமா வாழ்க்கையில் இது திருப்புமுனை படமாக இருக்கும். எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்று அஞ்சலி கூறினார்.

மதுவுக்கு நோ! சொல்லும் குடிமகன்!

சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சரக்கடிப்பார் உதயநிதி.. ஆனால் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் காதல் தோல்வியால் புலம்பினாலும்கூட சந்தானம் மட்டுமே ட்ரிங்ஸ் அருந்துவார். உதயநிதி அதை தொடாமல் பேசிக்கொண்டு மட்டும் இருப்பார்.


இதற்கு உதயநிதி சொல்லும் காரணம் நம்மை வியக்க வைக்கிறது..”என்னுடைய படங்களில் நான் மது அருந்துவது மாதிரியான காட்சிகளில் மது அருந்துவது போல நடிப்பதை தவிர்த்துவிடுகிறேன்.. இயக்குனரின் கதைப்படி காட்சிகளில் நான் தலையிட மாட்டேன்..


ஆனால் இனிவரும் என்னுடைய படங்களில் இது சம்பந்தப்பட்ட காட்சியில் நடிக்கவேண்டி இருந்தாலும் கூட, நான் மது அருந்துவதில்லை என முடிவே செய்திருக்கிறேன்..” என்கிறார் உதயநிதி.


மேலும் “நான் வந்திருப்பது பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து. நான் நடிக்கும் கேரக்டர்கள் மூலமாக சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்க விரும்பவில்லை. அதுவும் தவிர நமக்கும் சமூக பொறுப்பு என்பது இருக்கிறதே” என்றும் காரணம் கூறியுள்ளார். உதயநிதியின் இந்த முடிவு நிச்சயம் பாராட்டத்தக்கது.

அஜித்தா வேணாம் சாமி ! தீபிகா படுகோனே!

கெளதம் மேனன் படத்தில் நடிக்கும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


பின்னர் அவர் இரண்டு மெகா பட்ஜெட் தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அவரால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. எனவெ அவர் படத்தில் இருந்து விலகினார். இதனால் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க பலர் பரிசீலிக்கப்பட்டனர்.


தற்போது தீபிகா படுகோனேவிடம் இயக்குனர் கெளதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் அஜீத் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் முன்வரவில்லை.


தீபிகா படுகோனே அஜித்துடன் நடிக்க ரூ.7கோடி சம்பளம் கேட்கிறார். ரூ.7 கோடிக்கு குறைவாக கொடுத்தால் அஜீத் படத்தில் நடிக்க முடியாது என கறாராக் கூறிவிட்டார்.


இவ்வளவு பெரிய தொகையை ஹிரோயினுக்கு கொடுக்க தயாரிப்பாளர் மறுத்துவிட்டதால், கெளதம் மேனன் வேறு நடிகையை பரிசீலனை செய்து வருகிறார். தற்போது நயன் தாரா மற்றும் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சிம்புவுக்கு தருமடி கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிம்புவும் ஹன்சிகாவும் பிரிந்ததற்கு படத்துறையில் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

அவற்றில் ஒன்று…சிவகார்த்திகேயன் ஹன்சிகா இடையிலான நட்பு.

மான் கராத்தே படத்தில் இணைந்து நடிக்கும்போது ஹன்சிகா உடன் சிவகார்த்திகேயன் நட்பாகப்பழகியதுதான் சிம்புவை சினம் கொள்ள வைத்தது என்றும், அதன் காரணமாகத்தான் ஹன்சிகா உடனான காதலுக்கு குட்பை சொன்னார் என்றும் ஒரு கதை உலவிவரும்நிலையில்….

மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் சிவகார்த்திகேயனின் பேச்சு, அவரது பேச்சில் உள்குத்து இருக்கிறதோ என்ற சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது.

அப்படி என்ன பேசினார் சிவகார்த்திகேயன்?

‘‘இந்த படம் இவ்வளவு அழகா, கலர் ஃபுல்லா வந்ததுக்குக் காரணம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். முருகதாஸ், மதன் அவர்கள்தான். எனக்கு அருமையான டீம் அமையறது ரொம்ப லக்குதான்.

இங்க ஜெயிக்கிறதுக்கு ஒரே வழி கடின உழைப்புதான். ஆனால், நல்ல டீம் அமைஞ்சா ஈஸியா ஜெயிச்சிடலாம். நிறைய பேர் அதை லக்குனு சொல்றாங்க. அப்படின்னா நான் பயங்கர லக்கிதான்.

எல்லா படத்துலயும் பாடல்கள்தான் படத்துக்கு அடையாளம். தியேட்டருக்கு ரசிகர்களை வரவைக்கிறதே பாடல்கள்தான். அனிருத், இந்த படத்துல கொடுத்திருக்கிற பாடல்களுக்கு டான்ஸ் ஆடறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சி. என்னால முடியவேயில்லை. சாதாரணமா இந்தப் பாடல்களுக்கு நடந்தே போயிட முடியாது. டான்ஸ் ஆடினால் மட்டும்தான் அந்த பாடல்களுக்கு மேட்ச் பண்ண முடியும்.”

என்று வழக்கமான வாசிப்புகளுக்குப் பிறகு ஹன்சிகா மேட்டரை டச் பண்ணினார் சிவகார்த்திகேயன். “ இந்த படத்துக்கு ஹன்சிகா , ஹீரோயின்னு சொன்ன உடனே, பாருப்பா இவனுக்கு பயங்கர மச்சத்தைன்னு சொன்னாங்க. அவங்க கூட நடிக்கதானங்க செஞ்சேன்? அது ஒரு பெரிய தப்பா?”

என்று அவர் கேட்டது வெளிப்பார்வைக்கு காமெடியாகத் தோன்றினாலும், அது காமெடி இல்லை, சீரியஸ்.

“இது சிம்புவுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பதிலடி” என்றே சொல்கிறார்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்.

தேசிய விருதுப் போட்டிக்கு 40 தமிழ் படங்கள்!!



2013ம் ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன.



61வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ளது.



கடந்த பெப்ரவரி 14ம் திகதி வரை போட்டிக்கு படங்களை அனுப்ப கால அவகாசம் தரப்பட்டிருந்தது.



40 தமிழ் படங்கள் பல்வேறு தலைப்பின் கீழ் இப்போட்டியில் மோத உள்ளது.




தேசிய விருதில் மொத்தம் 30 விருது பிரிவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், ஹரிதாஸ், மரியான், மூடர் கூடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், தலைமுறைகள், தங்க மீன்கள் மற்றும் விடியும் முன் உள்ளிட்ட பல படங்கள் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.



பொக்ஸ் ஒபீஸ் பட பிரிவில் கோலிசோடா, எதிர் நீச்சல், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ராஜா ராணி, சூதுகவ்வும் படங்களும் மற்றும் திரைக்கு வரவுள்ள இனம், நெடுஞ்சாலை, ராமானுஜம் ஆகிய படங்களும் நுழைந்துள்ளன.

இது நடிகை அஞ்சலியின் திருவிளையாடல்!

நடிகை அஞ்சலி மீண்டும் மாயமாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் கூறினார்.


சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார். முன்பு போல் படங்களில் நடிக்கவில்லை. உடல் எடையும் கூடியது. தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.


இந்த நிலையில் சமீப காலமாக அஞ்சலியை ஐதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி விட்டதாக செய்திகள் பரவி உள்ளன. மொபைல் போன் சுவிட்ஜ்ஆப் செய்யப்பட்டு உள்ளது. தெலுங்கு திரையுலகினரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரகசிய திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளது.


அமெரிக்காவுக்கு சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் அது உறுதிபடுத்தப்படவில்லை. தொடர்ந்து தேடும் படலம் நடக்கிறது.

பல கண்டிஷன் போடும் நித்யா மேனன்

நித்யா மேனன் என்றதும் தெலுங்கிலும் மலையாளத்திலும் விநியோகஸ்தர்கள் விழுந்தடித்து அவர் நடித்த படங்களை வாங்குகிறார்கள்.


தெலுங்கிலும் மலையாளத்திலும் நித்யா மேனன்க்கு இருக்கும் மார்கெட் தமிழில் அவருக்கு இல்லை என்பது மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்திலிருந்தே நமக்கு தெரிந்த விஷயம்.


மாலினி 22 படத்திற்கு பிறகு அவர் தமிழில் நடித்த ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் வாங்க ஆள் இல்லாமல் முடங்கியுள்ளது.
இந்நிலையில் நித்யாவை, படத்தில் புக் செய்ய அணுகும் இயக்குனர்களிடம் அதிக கண்டிஷன் போடுகிறாராம்.


நான் நடிக்கும் படத்தில் எது எது இருக்ககூடாது என ஒரு பட்டியலே முன் வைக்கிறாராம்.
ஆகையால் இது வேலைக்கு ஆகாது என கேரளா வரை செல்லும் இயக்குனர்கள் நித்யாவின் வீட்டில் தலையை கூட காட்டுவது இல்லையாம்.

அலுத்துப்போன தங்கர்பச்சான்!

அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்களை இயக்கிய தங்கர் பச்சான் வெகுகாலம் முன் களவாடிய பொழுது என்ற படத்தையும் முடித்தார்.



களவாடிய பொழுது திரைப்படத்தை இயக்கிய தங்கர் பச்சான் அப்படத்தை வெளியிட பெரும் பாடுபட்டிருக்கிறார்.



இப்படத்தை வெளிகொண்டு வர பல முயற்சிகளை எடுத்துள்ளார் ஆனாலும் அப்படம் வெளியிட முடியவில்லை.



சலித்துப்போன தங்கர்பச்சான் இனி இப்படத்திற்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என அடுத்த படத்திற்கு தாவி விட்டார்.



அந்த படத்தில் தன் மகனையே ஹீரோவாக நடிக்க வைக்க அவருக்கு ஜோடியாக முன்னனி ஹீரோயின்களை தேடி வருகிறாராம் தங்கர்பச்சான்.

திரிஷா இல்லைன்னா நயன்தாரா – ஜி.விக்கு யாரு?

பென்சில் என்ற படத்தின் மூலம் பேனா சைஸ் கூட இல்லாத ஜீவி பிரகாஷ் ,ஹீரோ அவதாரம் எடுத்து உள்ளார் என்பது பழைய செய்தி.


தற்போது தன்னுடைய அடுத்து படத்துக்குக்கான கதை விவாத்தில் இறங்கி உள்ளாராம் நம்ம ஜிவி .


முதல் படமே வர வில்லை அதற்குள் தன்னுடைய இரண்டாவது படத்தை அறிவித்து விட்டார்.


இதில் சுவாரசியம் என்னவென்றால் தன்னால் முன்னணி கதாநாயகி கூடலாம் நடிக்க முடியாது என்ற தெரிந்த கொண்டு ஜீவி, சமீபத்தில் புதுமுக  இயக்குனர் அட்ஹிக் சொன்ன  டைட்டில் கேட்டு பஜ்ஜர் ஆகி உடனே ஓகே சொல்லி விட்டதாக தகவல்.


அவர் சொன்ன டைட்டில் "திரிஷா இல்லைன்னா நயன்தாரா" , அட டா  டைட்டில்  செம என்று சொல்லி இயக்குனர் அட்ஹிக் சொன்ன ஒன்லைன் கேட்டு ரொம்பவும் பிடித்து போக , உடனே Rebel Studio என்ற தயாரிப்பு நிறுவனத்திடம்  இயக்குனரை அனுப்பி வைத்தாராம்.



அவர்களுக்கும் கதை பிடித்து போக கூடிய விரைவில் இப் படத்தை தொடங்க உள்ளனராம்.


Rebel studio ஏற்கனவே விஜய் சேதுபதின் மெல்லிசை படத்தை தயாரித்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.