Tuesday 18 March 2014

உதயமாகிறது இளையராஜா ரசிகர் மன்றம், பத்திரிகையும் வரப்போகிறது!

இளையராஜாவின் பெயரில் இளையராஜா ரசிகர் மன்றம் தொடங்கயிருக்கிறது. இசைஞானி என்ற பெயரில் வாரப்பத்திரிகையும் வெளிவர உள்ளது.


இளையராஜாவின் கோடிக்கணக்கான ரசிகர்களில் பலர் தனிப்பட்ட முறையில் ஒன்றிணைந்து அவர் பெயரில் மன்றங்களும், பேரவையும் வைத்துள்ளனர். வருடந்தோறும் இளையராஜாவின் ரசிகர்கள் ஒன்றுகூடும் நிகழ்வும் தொடர்ந்து நடந்து வருகிறது.


ஆனால் இளையராஜாவின் சம்மதத்துடன் அவரது பெயரில் ரசிகர் மனற்ம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. இளையராஜாவின் சம்மதத்தடன் தொடங்கப்படும் இந்த அமைப்பானது, இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, இயக்குனர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாகக் கொண்டு செயல்படும்.


அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் அமைப்பாக இளையராஜா ரசிகர் மன்றம் இருக்கும். இந்த மன்றத்தின் மூலம் சமூக விழிப்புணர்வு, சமூக முன்னேற்றத்துக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்கயிருக்கிறாராம் இளையராஜா.


மன்றம் குறித்த அறிவிப்பை ஏப்ரல் 5 மதுரையில் நடக்கயிருக்கும் ராஜாவின் சங்கீதத் திருநாள் இசை நிகழ்ச்சியின் போது வெளியிட உள்ளனர். அன்று இசைஞானி வார இதழையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

0 comments:

Post a Comment