Tuesday 18 March 2014

நான் வளர்கிறேனே முருகா...


நடிகைகள் கோயிலுக்குச் செல்வதும், பூஜை செய்து யாகம் வளர்ப்பதும் அதிசயமில்லை. அதுபோலதான் லட்சுமி மேனன் பழனிக்கு வந்ததும், தங்கத்தேர் இழுத்ததும்.


மலையாளிகள் என்னதான் தமிழர்களை மட்டம் தட்டினாலும் ஆன்மீக விஷயத்தில் மலையாளி இந்துக்களுக்கு பழனியும், கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணியும் தவிர்க்க முடியாத வழிபாட்டுத்தலங்கள். குழந்தைகளின் முதல்முடியை காணிக்கை செலுத்த மலையாளிகள் அதிகம் படையெடுப்பது பழனிக்குதான்.


லட்சுமிமேனன் முதல்முறை பழனி வந்தபோது கும்கியில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது முருகனிடம் தமிழ், மலையாளத்தில் அதிக படங்கள் செய்ய வேண்டும், செய்கிற படங்கள் வெற்றிபெற வேண்டும், சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும், எல்லாம் நடந்தால் தங்கத்தேர் இழுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டாராம்.


முருகன் அருளால் நான் இப்போது வளர்ந்து வருகிறேன். அதனால்தான் தங்கத்தேர் இழுக்க வந்தேன் என்றார் லட்சுமிமேனன்.


தமிழ்க் கடவுளான முருகா... மலையாள நடிகையை வளர வைத்த நீ தமிழ் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பே வழங்குவதில்லையே. முருகா... இதென்ன ஓரவஞ்சனை.

0 comments:

Post a Comment