Wednesday 12 March 2014

கௌதம் முயற்சி தோல்வி! தல ’தலை’ தப்பியது!

அஜித்தின் ஸ்டைலான தோற்றத்தையும், கௌதம் மேனனின் ஸ்டைலான இயக்கத்தையும் மனதில் கொண்டு அஜித்-கௌதம் மேனன் இணைகிறார்கள் என்ற தகவல் வெளியானதும் முற்றிலும் மாறுபட்ட அஜித்தை கௌதம் மேனன் படத்தில் பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டார்கள் ரசிகர்கள்.



ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதத்தில் நீண்ட நாட்களாக தொடர்ந்துவரும் அஜித்தின் ’சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தை மாற்ற முயற்சிசெய்திருக்கிறார் கௌதம் மேனன்.


ஆனால் அஜித் ‘அதெல்லாம் வேண்டாம்.


நான் டை அடித்துக்கொண்டு காலேஜ் ஸ்டூடண்டாகவா நடிக்கப்போகிறேன்.


தலை அப்படியே இருக்கட்டும். உடலை கூடிய விரைவில் நீங்கள் கேட்டதுபோல் ஃபிட்-ஆக்கிவிடலாம் கவலைப்படாதீர்கள்’ என்று கூறிவிட்டதாக தெரிகிறது.


கௌதம் மேனன் படத்திற்காக வெறித்தனத்தோடு உடற்பயிற்சிகள் செய்துவரும் அஜித் ஆரம்பம் படத்தில் இருந்ததை விட கட்டுமஸ்தான உடல்தோற்றத்தை பெற்றுவிட்டாராம்.

மீண்டும் ஒரு ரஜினி படம் சாதனை படைத்தது!

ஐட்யூன் தரவிறக்கத்தில் ரஜினியின் கோச்சடையான் இசை முதலிடம் பிடித்துள்ளது.


 அதேபோல, ட்விட்டர் ட்ரெண்டிலும் முதல் பத்து இடங்களில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது கோச்சடையான்.



 கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி நடந்தது. ஆனால் அதற்கு சில மணி நேரங்கள் முன்பே சிடிகள் விற்பனைக்கு வந்துவிட்டன.



ஐ ட்யூனிலும் தரவிறக்கிக் கொள்ளும் வசதி தரப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் கோச்சடையான் இசைதான் இந்திய அளவில் ஐட்யூனில் முதலிடத்தைப் பிடித்தது.



எந்திரன் படத்தின் இசைதான் ஐ ட்யூனில் முதலிடம் பிடித்த தமிழ்ப் பட இசையாக இருந்தது.



அதற்குப் பிறகு மீண்டும் ஒரு ரஜினி படம்தான் இந்த சாதனையைச் செய்துள்ளது.

மீண்டும் ஜோடியாக.... சிவகார்திகேயனுடன் ஹன்சிகா!

சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு ஹன்சிகா இன்னும் அதிக உற்சாகத்தில் இருக்கிறார்.



தரணி இயக்கும் 'ராஸ்கல்' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல், மகிழ் திருமேனி இயக்கும் 'மீகாமன்' படத்தில் ஆர்யாவுக்கும் ஜோடியாக நடிக்கிறார்.



அதுமட்டுமல்லாமல் மான் கராத்தேவை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் மற்றொரு படத்தில் ஜோடியாக நடிக்கவிருகிறார் ஹன்சு.

விநியோகஸ்தர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஜினி!

ரஜினியின் ஒரு சில படங்களின் தோல்விக்கு முழுப்பொறுப்பேற்று வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை திருப்பி கொடுத்திருக்கிறார்.



 ஆனால் கோச்சடையான் படத்தை பொறுத்தவரை, அக்ரிமென்ட் போடும்போதே தெளிவாக போட சொல்லியிருக்கிறாராம் ரஜினி.



அதாவது படம் வெளியான பின்பு வரும் லாப நட்டங்களுக்கு ரஜினி பொறுப்பேற்க மாட்டார் என்பதுதான் அது.



 இதை கேள்விப்பட்ட விநியோகஸ்தர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்களாம்.

கவுண்டமணியும் தேர்தலும் - அதிரடி அட்டாக்!

தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் செய்தி கவுண்டமணி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பதே.


அந்த எதிர்பார்ப்பினை மேலும் சூடாக்க மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.


 கவுண்டமணி நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும் 49-O திரைப்படம் ஏப்ரலில் வெளியாகவிருப்பதாகப் படக்குழு விளம்பரம் செய்துள்ளது.


வருகிற ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் தங்களது படத்தினை வெளியிடலாம் என்று நினைத்திருந்த பலரும் பட வெளியீட்டினை ஏப்ரலில் இருந்து தள்ளிவைக்கவோ அல்லது மார்ச் மாதத்திலேயே வெளியிடவோ முயன்று வருகின்றனர்.



இந்நிலையில் உலகமகா நக்கல் நாயகன் கவுண்டமணி நடிப்பில் உருவாகிவரும் 49-ஓ திரைப்படத்தினை ஏப்ரலில் வெளியிடப் படக்குழு தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.


49-O என்ற இப்படத்தின் தலைப்பே தேர்தல் மற்றும் வாக்காளர்களுடன் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் இப்படம் தேர்தலுக்கு முன்னதாக வெளியிடப்படலாம் என்றும் மக்கள் பேசிவருகின்றனர்.



மக்களுடன் கூட்டணி ஏப்ரல் முதல் என்ற வாசகங்களுடன் வெளியாகியிருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் பெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பிவருகின்றன.


கவுண்டமணியின் நக்கல் நகைச்சுவைகளில் திளைத்துக் களிப்புற ஒட்டுமொத்தத் தமிழகமுமே காத்திருக்கின்றது.

சோனம் கபூரின் ஷேவிங் படங்கள் - புதிய சர்ச்சை!


சர்ச்சையானாலும், சந்தி சிரிச்சாலும் தினம் பத்திரிகைகளில் பெயர் வந்தால்தான் சிலருக்கு தூக்கமே வரும். சோனம் கபூருக்கு இதுவரை அப்படியொரு வியாதி இல்லை.


ஆனால் அவரின் இந்த ஸ்டில்களைப் பார்க்கையில் பிரபலபோபியா அவரையும் அட்டாக் செய்துவிட்டதோ என்று சந்தேகம்.


ஆட்டு இறைச்சியில் ஆடை செய்து அதனை போட்டோ எடுத்து விளம்பரப்படுத்துவது, கட்சி கொடிகளை உடம்பில் போர்த்தி எலெக்சன் நேரம் பார்த்து தங்களைப் பிரபலப்படுத்துவது என்று பாலிவுட் நடிகைகள் ஒருமார்க்கமாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.


இந்நிலையில் முகம் முழுக்க ஷேவிங் க்‌ரீம் பூசி கத்தியால் ஷேவ் செய்யும் போஸ் தந்துள்ளார் சோனம்.


இது எந்தப் படத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் எடுத்ததில்லை. பிரபல போட்டோகிராஃபருக்கு சோனம் தந்த அதிரடி போஸ் இது.


அப்பா அனில் கபூரிடம் சொல்லி யாராவது கண்டிக்க சொல்லுங்களேன்.

ரஜினி தமிழரா? இல்லையா? சிந்திக்க வேண்டிய தமிழ் மக்கள்!

கோச்சடையான் படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோது பலரும் ரஜினியை புகழ்ந்து தள்ளி விட்டனர். அப்படி புகழ்ந்தவர்களில் வைரமுத்துவும் ஒருவர்.


ஆனால் அவர் பேசுகையில், முன்பு ஒருமுறை நிருபர் ஒருவர் ரஜினியிடம், தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்கிறார்களே? என்று கேள்வி கேட்டார். அதற்கு ரஜினி, நல்லவேளை நாடார், முதலியார், செட்டியார் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்லாமல் தமிழன் முதலமைச்சராக வேண்டும் என்று சொன்னார்களே அதுவரைக்கும் சந்தோசம் என்று புத்திசாலித்தனமாக பதிலுரைத்தார்.


இப்படி முன்பு ரஜினி சொன்ன பதிலை நினைவுகூர்ந்த வைரமுத்து, இப்படித்தான் எம்.ஜி.ஆரையும் மலையாளி என்றார்கள்.


 பின்னர் ரஜினியை கன்னடர் என்றார்கள். ஆனால், அவர்கள் இருவரும் அதையெல்லாம் கடந்தவர்கள். பேச்சு, பழக்கவழக்கத்தின் மூலம் தமிழர்களாக மாறிப்போனவர்கள் என்று பேசினார்.


ஆனால் அதையடுத்து பேச வந்த சரத்குமார், ரஜினி தமிழரா? இல்லையா? என்ற சந்தேகத்தை திடீரென்று கிளப்பி விட்டிருக்கிறார் வைரமுத்து.


ஆனால் அவர் எப்போதோ தமிழராகி விட்டார்.


அதனால் அவர் இப்படி கேட்க வேண்டியதன் அவசியம் இப்போது ஏன் வந்தது என்பது தெரியவில்லை என்று வைரமுத்துவுக்கு பதில் கொடுக்கும வகையில் பேசினார் சரத்குமார்.

அதென்ன, செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்.?! 'கோச்சடையான்' பிரஸ்மீட்டில் விளக்கிய செளந்தர்யா!!

கோச்சடையான்' ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர், ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, நடிகர் ஆதி ஆகியோருடன் கலந்து கொண்ட இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின், பலதரப்பட்ட மீடியா மற்றும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னார். அவரிடம் நமது  நிருபர் கேட்ட வித்தியாசமான வினாக்களும், அதற்கு செளந்தர்யா அளித்த விறுவிறுப்பான விடைகளும் இங்கு உங்களுக்காக...

நமது நிருபர் : உங்களது தந்தை ரஜினிகாந்த், ''என் மகள்கள் இயக்குநராக பேரும் புகழும் சம்பாதிப்பதை விட குடும்ப தலைவிகளாக தொடர்ந்து குறைந்தது 2 குழந்தைகளாவது பெற்றுக் கொண்டு 12 வயது வரை அவற்றை பார்த்து, பார்த்து வளர்த்து ஆளாக்கி நல்ல குடிமக்களாக இந்த நாட்டிற்கு தர வேண்டும்! அது தான் என் ஆசை, சந்தோஷம், பெருமை என்றார். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும், தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தாலும் செளந்தர்யா குடும்பத்திற்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.'' 'கோச்சடையான்' மேடையில் இதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள் செளந்தர்யா? அடுத்து உடனடியாக படமா? குழந்தை குட்டியா...?

செளந்தர்யா : அப்பாவே அப்படி சொல்லிவிட்டார் எனும்போது இனி நான் சொல்ல என்ன இருக்கிறது. நிச்சயம் அப்பா சொல்படி நடப்பேன். குடும்பத்திற்கும், என் கணவர் அஸ்வினுக்கும் உரிய முக்கியத்துவம் அளிப்பேன். இச்சமயத்தில் அப்பாவிற்கும், அஸ்வினுக்கும் நன்றியும் சொல்லிக் கொள்கிறேன்.

நமது நிருபர் : அதென்ன செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்? நம் இந்திய பெண்கள் திருமணம் ஆனதும் அப்பாவை கழட்டி விடுவதுதானே மரபு.? இது என் போன்ற பெண் குழந்தை பெற்ற ஆண்களுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும், மற்றொரு பக்கம் ஒரு பெண்ணிற்கு கணவனாக சற்றே வருத்தத்தையும் தருகிறதே...?

செளந்தர்யா : ஏன்? ஐஸ்வர்யா ராய் பச்சன் இல்லையா? அவரை கேட்டீர்களா இப்படி? எல்லோருக்கும் பிடித்த என் அப்பாவை எனக்கும் ரொம்ப பிடிக்கும். பிறந்ததில் இருந்து என் பெயருடன் இருக்கிறது அப்பாவின் பெயரும், இருந்துவிட்டு போகட்டுமே. (ஐஸ்வர்யா ராய் பெயரில் வரும் 'ராய்' அவரது ஜாதியை குறிக்கும் சொல் என்றாலும் எல்லா கேள்விகளுக்கும் மடை திறந்த வெள்ள போல் படபடவென பேசும் செளந்தர்யாவை மடக்க பிடிக்கவில்லை நமக்கு...)

நமது நிருபர் : அப்போ, ஐஸ்வர்யா ராய் பச்சன் உங்கள் ரோல் மாடலா? இதுமாதிரி நிறைய விஷயங்களுக்கு அவரை பின்பற்றுகிறீர்களா...?

செளந்தர்யா : அப்படி அல்ல, அவரையும் பிடிக்கும். சும்மா உதாரணத்திற்கு சொன்னேன்.

நமது நிருபர் : 'கோச்சடையான்' என முதல் படத்திலேயே சிவனின் பெயர்?, டிரையிலரில் அப்பா ரஜினியை ருத்ர தாண்டவமெல்லாம் ஆடவிட்டிருக்கிறீர்களே? நீங்களும் அப்பா ரஜினி மாதிரி ஆன்மிகவாதியோ?

செளந்தர்யா : ஆமாம், அதில் என்ன தப்பு. சிவன் எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பிடித்த கடவுள்தானே. அப்பாவை இனி நிஜத்தில் 'ருத்ரதாண்டவம்' ஆட விட முடியாது. அதுதான் கற்பனையில் என் அனிமேஷன் படத்தில் ஆடவிட்டுள்ளேன். 'ருத்ரதாண்டவம்' சிவனின் பேவரைட் அல்லவா.?!

நமது நிருபர் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எல்லாம் 'கோச்சடையான்' ரஜினிகாந்த் பற்றி குழந்தை அழுதால் அப்பா பொம்மை வாங்கி தருவார்... இங்கு அப்பாவே குழந்தைக்காக பொம்மையாக மாறி இருக்கிறார்... எனும் கமெண்ட்டுகள் கண்டீர்களா...? அதுப்பற்றி உங்கள் கருத்து?

செளந்தர்யா : ஆமாம்! கோச்சடையான் பொம்மை படம்தானே. அதில் தவறில்லை. ஆனாலும் 'அவதார்' மாதிரி உலகெங்கிலும் ரசிக்க பட இருக்கும் அனிமேஷன் பொம்மை படம் என்பது தான் ஹைலைட்! (சிரிக்கிறார்)

நமது நிருபர் : தமிழ், 'கோச்சடையானில்' 9 பாடல்கள். இது இந்தி, தெலுங்கு, மலையாளம், இங்கிலீஷ், ஸ்பானிஷ், ஜப்பனிஷ் மொழிகளிலும் இருக்குமா...?

செளந்தர்யா : 9 பாடல்கள் என்றால் அதில் சில மாண்டேஜ் பாடல்கள். அவை மொழிக்கு ஏற்றபடி அவசியம் கருதி வைத்துக் கொள்ளப்படும்.

நமது நிருபர் : கோச்சடையான் படத்திற்கு உங்கள் அக்கா ஐஸ்வர்யாவும், அக்கா வீட்டுக்காரர் தனுஷூம் எவ்வாறு ஒத்துழைத்தார்கள்? ஆதியை பயன்படுத்திய நீங்கள் தனுஷை நடிக்க வைக்காதது ஏன்?

செளந்தர்யா : அவரது(தனுஷ்) கால்ஷீட் வாங்கி தாருங்களேன் (சிரிக்கிறார்...) தொடர்ந்து, இருவருமே கிரியேட்டர்கள். நிறைய ஐடியா கொடுத்து உதவியுள்ளனர் என்ற செளந்தர்யா பிற நிருபர்களின் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறி அனைவரையும் அசத்தியது ஆச்சர்யம்!!