Sunday 9 March 2014

நயன்! அசத்தல் ஆக்‌ஷன்!

ஆரம்பம், ராஜா ராணி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிக்சர் அடித்திருக்கும் நயன்தாரா, தொடர்ந்து நடித்துவரும் படங்களிலும் சிக்சர் அடிப்பார் என்கிறது கோடம்பாக்கம்.


தமிழ் தெலுங்கு என கிட்டத்தட்ட ஆறு படங்களில் கமிட் ஆகியிருக்கும் நயன்தாரா அதிகம் எதிர்பார்ப்பது என் அன்பே நீ எங்கே என்ற திரைப்படத்தைதானாம்.


இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம் இத்திரைப்படத்திற்காக நயன்தாரா ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருப்பதும் ஒரு காரணம் என்கின்றனர் படக்குழுவினர்.


இதுகுறித்து பேசிய இயக்குனர் ஷேகர் கம்முலா “ என் அன்பே நீ எங்கே திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தைப் பற்றி யோசித்தபோது நான் அந்த கதாபாத்திரத்தை அதிக நகம் இல்லாதவராகத்தான் கற்பனை செய்துவைத்திருந்தேன்.


இதைப் பற்றி நான் நயன்தாராவிடம் கூறியதுமே அவரது நகங்களை வெட்டிக்கொண்டார். மேலும் சில ஆக்‌ஷன் காட்சிகளுக்காக டூப் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னபோதும், வேண்டாம் நானே நடிக்கிறேன் என்று ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் நயன்தாரா” என்று கூறியிருக்கிறார். 

நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா!

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!

• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்..

கோச்சடையான் விழாவில் - கவிஞர் வைரமுத்து பேசியதாவது!


ரஜினி – தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த கோச்சடையான் பட பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் பாடல்களை வெளியிட்டார். அப்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

விழாவில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷெராப், படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே, டைரக்டர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், முரளி மனோகர், ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:–

‘கோச்சடையான்’ தலைப்பு ஈர்ப்பானது. அதில் அழுத்தம் இருக்கும், பழமையும் இருக்கும். கோச்சடையான் சிவனின் இன்னொரு பெயர். பாண்டியர்களுக்கும் இந்த பெயர் உண்டு. பல புதுமைகள் இதில் உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரஜினி நான்கு யுகங்கள் தாண்டி வந்திருக்கிறார். 40 வருடம் சிம்மாசனத்தில் நகர்த்த முடியாமல் அமர்ந்திருக்கிறார். அது மிகப்பெரிய சாதனை.

அவரது முதல் ரசிகனுக்கு இப்போது 65 வயது. 25 வயது உடையவரும் அவரது ரசிகனாக இருக்கிறார். 65 வயது ரசிகரும், 25 வயது ரசிகரையும் பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிதான். இதற்கு உழைப்பு மட்டும் காரணம் அல்ல. நல்ல எண்ணமும் இருக்கிறது.

‘படையப்பா’ படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் தங்க சங்கிலி கொடுத்தார். அதில் மனிதாபிமானம் தெரிந்தது. ‘பாபா’ படம் நஷ்டமானபோது வினியோகஸ்தர்களை அழைத்து நஷ்டத்தை நான் தருகிறேன் என்றார். அதில் கொடை உள்ளது தெரிந்தது.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்த சமயத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு யாரும் தப்பிக்க முடியாது. ஆனால் ரஜினி சொன்ன பதிலில் அவரது அறிவு முதிர்ச்சி வெளிப்பட்டது.

தமிழகத்தின் முதல்வராக தமிழன் வரவேண்டும் என்கிறார்களே என்று அவரிடம் கேட்டனர். இது சிரமமான கேள்வி. நெஞ்சில் வேல் பாய்ச்சும் கேள்வி. சரியான கருத்துதானே, நாடாரோ, முதலியாரோ, பிள்ளைமாரோ வரவேண்டும் என்று சொல்லவில்லையே, தமிழன்தான் வரவேண்டும் என்று சொல்கிறார்கள் என்றார். அவர் தமிழ் மக்கள் நெஞ்சில் நிறைந்து வாழ்கிறார். அவரது ‘கோச்சடையான்’ வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

படத்தின் டைரக்டர் சவுந்தர்யா விழாவில் பேசியதாவது:–

‘கோச்சடையான்’ கார்ட்டூன் படம் அல்ல. அனிமேஷன் படம் ஆகும். நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பாடல்கள் உள்ளது. அப்பாவை (ரஜினிகாந்த்) வைத்து இயக்கியது பெருமை அளிக்கிறது. அவரது ருத்ரதாண்டவ நடன காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

‘கோச்சடையான்’ தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்பட ஆறு மொழிகளில் வெளியாகிறது. தமிழ், இந்தி படடிரெய்லர்களும் இன்று வெளியிடப்பட்டன. கோச்சடையான் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.

‘கோச்சடையான்’ பாடல் வெளியீட்டு விழாவையொட்டி சத்யம் தியேட்டர் எதிரில் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ‘கோச்சடையான்’ படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றன. 3டி மோஷன் பிக்சர் தொழில்நுட்பத்தில் இப்படத்தை எடுத்துள்ளனர்.

ரவிக்குமார் ... இவரு ஆக்‌ஷன் எல்லாம் சொல்லட்டும், நீங்க கட் மட்டும் சொல்லுங்க..- ரஜினி!

ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் ரஜினி, ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது,

எனக்கு எப்பவுமே ராஜா ராணி கதை என்றாலே ரொம்பவும் பிடிக்கும். ரசிகர்களுக்காக நிறைய படங்கள் பண்ணியிருந்தால்கூட, இதுவரை ஒரு ராஜா ராணி கதை நான் பண்ணவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.

இதுவரைக்கும் தமிழ் சினிமால ஏன் இந்தியாவில்கூட யாருமே பண்ணாத ஒரு ராஜா ராணி படம் செய்யணும்னு முடிவு பண்ணித்தான் 'ராணா' படத்தை தொடங்க முடிவு செய்தேன். அந்தப் படத்தோட கதை எனக்குள் 20 வருஷமா ஓடிக்கொண்டு இருந்தது.

அந்தப் படம் தொடங்கின நேரத்துலதான் எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அதற்கு பிறகு என்னாச்சுன்னு உங்களுக்கே தெரியும். ஆஸ்பத்திரியில சிகிச்சை முடிஞ்சு திரும்பி வந்தாலும், இந்த கதைக்கு நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டுச்சு. அப்போதைக்கு அது முடியல.

ஒருநாள் முரளி மனோகர் எனக்கு போன் செய்து கே.எஸ்.ரவிக்குமார் ராணாவுக்கு பதிலா  'கோச்சடையான்' னு ஒரு கதை பண்ணியிருக்கிறார், கேட்டுப் பாருங்கனு சொன்னார். இப்போ பண்ண முடியாது, 2 வருஷமாவது ஆகும்னு சொன்னேன்.

நீங்க முதல்ல அதை கேளுங்க. அப்புறம் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்னு சொன்னார். ராணாவைவிட எனக்கு கோச்சடையான் கதை ரொம்பவும் பிடிச்சது. ஆனா இதை இப்போ எப்படி பண்றதுனு கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட கேட்டேன். நீங்க சரின்னு சொன்னா வேற ஒரு ஐடியா இருக்கு.

'சுல்தான்'னு ஒரு அனிமேஷன் படத்தை செளந்தர்யா பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதனால இந்த கதையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துல பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தி தெரியாது. அதில எனக்கு நம்பிக்கை வேற இல்லை.

இந்த படத்தை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பேரிடம் கருத்து கேட்டேன். இந்தப் படம் பண்றதுக்கு 5, 6 வருஷமாகும். 700 கோடியாகும்னு சொன்னாங்க. அவ்வளவு செலவு எல்லாம் ஆகாது. நம்மோட பட்ஜெட்லயே பண்ண முடியும்னு அவங்க சொன்னாங்க.

உடனே செளந்தர்யாகிட்ட பேசினேன். இந்த படத்துக்காக உனக்கு பெரிய பொறுப்பு இருக்கும். பண்ண முடியுமான்னு கேட்டேன். அவங்க உடனே நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க. இந்த படம் இந்தளவிற்கு வந்ததிற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கம் தான்.

நான் படம் பாத்துட்டேன். இப்போ 3டி பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு.

செளந்தர்யா, ஐஸ்வர்யா இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப ரெண்டு பேரும் படம் இயக்குறாங்க அப்படின்னா அதற்கு தனுஷ், அஸ்வின் மற்றும் அவங்களோட குடும்பத்தினர்தான் காரணம். அவங்களோட குழந்தையா நினைச்சு, ஊக்குவிக்கிறாங்க. அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும். இன்னும் ஐஸ்வர்யா, செளந்தர்யா நிறைய படங்கள் பண்ணனும்.

குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. குழந்தைகளுக்கு 10, 12 வயசு வருகிற வரைக்கும் நல்லபடியா அவங்களை வளர்க்கணும். அதற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த படம் வந்த பிறகு நிறைய பேர் இயக்கச் சொல்லி கேட்பாங்க. 2 குழந்தைகளை பெற்று என்கிட்ட கொடுத்துட்டு அதற்கு பிறகு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க அப்படிங்கிறது எனது கருத்து.

செளந்தர்யாவை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க முதல்ல ஆக்‌ஷன் அப்படினு சொன்னப்போ எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அப்புறம் ரவிக்குமார் சார் நீங்க வாங்க. இவரு ஆக்‌ஷன் எல்லாம் சொல்லட்டும், நீங்க கட் மட்டும் சொல்லுங்கனு சொன்னேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

நடிகையின் சகோதரர் காலமானார்!

பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவின் சகோதரர் பாபி சாவ்லா, மும்பையில் உள்ள மரு்துவமனையில் இன்று ( மார்ச் 09) காலமானார்.


இவர் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோமாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


ஜூகி சாவ்லாவிற்கு மிகவும் பிரியமான சகோதரரான பாபியின் மரணம் குறித்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ள ஜூகி, கடவுள் எனக்கு அளித்த மிகப் பெரிய பரிசு எனது சகோதரர் என குறிப்பிட்டுள்ளார்.


 ஜூகி சாவ்லாவின் சக நடிகர்களான மாதுரி தீட்சித், ஷாருக்கான், இயக்குனர் ஃபருக் கான் ஆகியோரும் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


பாபி சாவ்லா, ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மைட் நிறுவத்தின் சிஇஓ., வாக இருந்தவர். ஜூகி சாவ்லாவின் பெரும்பாலான பேட்டிகளின் போது பாபி சாவ்லாவும் உடன் இருந்துள்ளார். 

விஜய் - தனுஷு - சிம்பு - கூட்டாளிகளாம்!

விஜய் மற்றும் தனுஷுடன் சிம்பு இரவு பொழுதை மகிழ்ச்சியாக கழித்துள்ளார். தனுஷும், சிம்புவும் இனி பரம எதிரிகள் கிடையாது.


ஒருவரை பார்த்தால் மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொள்ள மாட்டார்கள். இனி அவர்கள் நண்பேன்டா. இந்நிலையில் சிம்பு நண்பன் தனுஷ் மற்றும் விஜய்யுடன் இரவு பொழுதை கழித்துள்ளார். இது குறித்து சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


என்ன ஒரு இரவு, விஜய் அண்ணா மற்றும் தனுஷுக்கு நன்றி என்று ட்விட்டரில் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்


பரம எதிரிகள் நெருங்கிய நண்பர்களாக முடியும் என்றால் அது நானும், தனுஷும் தான் என்று தெரிவித்து சிம்பு ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார்.


தனுஷ் இளையதளபதி விஜய்யை சந்தித்து அவருடன் ஆடிப் பாடி மகிழ்ந்ததுடன் கிசுகிசுக்கள் பற்றி பேசியதாகவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.


உக்ரம் கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷும், விஜய்யும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி நீங்கள் உங்கள் அம்மாவின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தலாம் ?

தன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக ஒரு தாய் செய்யும் சேவைகளுக்கு ஈடு இணையே கிடையாது. காலையில் எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை தாயானவள் தன் குடும்பத்துக்காக தன்னையே அர்பணிக்கிறாள். ஒரு தாய் தன் பிள்ளைகளையும், கணவனையும் எப்போதுமே கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாலும், அவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரத்தை கொடுப்பதில்லை.

நம் தாய் தானே என்ற உரிமை இருப்பதால், அவர்களின் மீது பெரிதாக நாம் தனிப்பட்ட அக்கறை காட்டுவதில்லை. ஆகவே சிறிது நேரம் எடுத்து கொண்டு தாயை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுங்கள். அவர்கள் செய்வதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, நன்றி பாராட்ட மறக்காதீர்கள். இத்தகைய அன்னையை மகிழ்விக்கவும் , ஆச்சரியப்படுத்தவும் சில வழிகள் உள்ளன.

01-ரகசியமான பரிசு

தாய் காலை எழுவதற்கு முன், விடியற்காலையே எழுந்து தாய்க்கு அருகில் ஒரு சின்ன பரிசை வைக்கலாம். இதனால் அவர் எழுந்து பார்க்கும் போது, அது அவருக்கு ஆச்சரியமான சந்தோஷத்தை கொடுக்கும். அது ஒரு சின்ன கவரிங் மோதிரம் அல்லது ஒரு சின்ன கப் கேக் அல்லது ஒரு புகைப்பட ஃப்ரேம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்பை வெளிக்காட்டுவது மட்டும் முக்கியமே தவி,ர விலை ஒரு பொருட்டு இல்லை
ஒரு பாட்டு அல்லது கவிதை

தாயின் மேல் வைத்திருக்கும் அன்பை சிறு வார்த்தைகளாக எழுத பெரிய கவிஞராகவோ, புலவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குடும்ப நிகழ்ச்சியில் அல்லது வீட்டில் குடும்பத்தாருடன் உணவருந்தும் போது, திடீரென்று எழுதிய கவிதையை அவர் முன் உரக்கப் படித்து காட்டி, அவர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டலாம். உரக்க படிக்க கூச்சமாக இருந்தால், எழுத்து வடிவில் அவர்களுக்கு கொடுக்கலாம்.

02-பேஸ்புக்

பேஸ்புக் நண்பர்களின் பட்டியலில் தாயை சேர்க்கவில்லை என்றால் வாழ்க்கையில் இருந்து அவரை பிரித்து பார்க்கிறீர்கள் என்ற எண்ணம் அவருக்கு தோன்றலாம். நீங்கள் குழந்தையாக இருக்கும் போது, உங்கள் ஜட்டியை மாற்ற உங்கள் தாய் யோசித்தாரா? அல்லது பல பேர் முன்னிலையில் குழந்தை பருவத்தில் அவரை அடிக்கும் போது அதற்காக அவர் சங்கடப்பட்டாரா? யோசித்துப் பாருங்கள். அதனால் ஃபேஸ்புக் மூலம் அவருடன் உரையாடி, அவருக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

03-சமையல்

தினமும் முகம் சுழிக்காமல் சமைப்பவர் தான் அன்னை. அப்படிப்பட்ட அவருக்கு ஒரு மாலை வேளையில் ஓய்வு கொடுத்து ,அவருக்காக நல்ல ருசியான உணவை சமைத்து கொடுத்தால், அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமையும்.

04-சுற்றுலா

வார இறுதியில் ஒரு சின்ன சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து அழைத்து சென்றால், அது அவருக்கு மகிழ்ச்சியை அளித்து, தினசரி பார்க்கும் வேலையில் இருந்து ஒரு மாறுதல் கிடைக்கும். உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை எடுத்துக் கொண்டு உரையாடிக் கொண்டே சுற்றுலாவை கொண்டாடுங்கள். மேலும் காரில் இசையை ஒலிக்கச் செய்து, அவரை ஒரு இளவட்டம் போல் மாற்றுங்கள்.

05-திரைப்படம்

பள்ளி பருவத்திலும், வாலிப வயதிலும் கண்டு களித்த படங்களை திரும்பி அவருடன் சேர்ந்து பார்த்தோமானால், அவருடைய பழைய நினைவுகள் திரும்பி மகிழ்ச்சி அடைவார் இல்லையா? அந்த நினைவுகளுக்கு அவரை எடுத்துச் செல்ல, அவர்களுக்கு பிடித்த படங்களை வாங்கி பாருங்கள். அவருடன் சேர்ந்து படங்களை பார்த்தால், அவர் மீது இருக்கும் அக்கறையை எடுத்துச் சொல்லும்.

06-ஷாப்பிங்

பரிசளிப்பது ஒரு இன்பம் என்றால் அவரை கடைக்கு அழைத்து சென்று அவருடன் பொழுதை கழிப்பது இன்னொரு வகையான இன்பம். அதிலும் தாயை குழந்தை போல் பாவித்து, எது பிடிக்கும் பிடிக்காதென்று கேட்டு கடை வீதியில் சுற்றுங்கள். இந்த நாள் கண்டிப்பாக விலை மதிப்பில்லா நாளாக அமைவது உறுதி. மேலும் இது அன்பை வெளிக்காட்டும் வழியாகவும் அமையும்.

07-குளியல் அறை

எந்த தாய்க்கு தான் குளியலறை அலங்கரிக்கப்பட்டு வாசனை திரவியங்களை மணக்க செய்தால் பிடிக்காமல் போகும். எனவே தாயின் ரசனைக்கேற்ப அவருடைய குளியலறையை அலங்காரம் செய்யுங்கள். குளிக்கும் டப்பில் நுரை நிறைந்த தண்ணீரை நிரப்பி அமைதியான பாட்டை இசைக்க செய்யுங்கள்.

08-பெடிக்யூர்

வீட்டிலேயே பெடிக்யூர் (கால்களுக்கான மசாஜ்) மற்றும் தலை மசாஜ் போன்றவற்றை செய்துவிட்டால், அவருடன் அலுப்புத் தட்டாமல் நேரத்தை செலவழிக்கும் ஒரு வழியாக இது அமையும். தாயை அழகு நிலையங்களுக்கு செல்லவிடாமல், நீங்களே இந்த பணியை செய்யவும். அவரின் நகத்திற்கு நெயில் பாலிஷ் பூசுங்கள், பாதத்தில் அழுக்கெடுங்கள் அல்லது தலை மசாஜ் செய்யுங்கள். இது அவருடைய மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

09-செல்லப்பிராணி

இன்றைய வாழ்க்கை முறையில் விட்டில் அனைவரும் வேலைக்கு செல்கின்றனர். அதனால் அன்னை தனிமையில் வாடுவது உறுதி. எனவே தாய்க்கு துணையாக பூனை குட்டி, நாய் குட்டி அல்லது பறவைகளை பரிசளியுங்கள். இது அவரின் தனிமையை போக்கும் விதமாக எடுத்துக் கொள்வதோடு, அவர்கள் மீது அக்கறை காட்டும் விதமாகவும் இருக்கும். குறிப்பாக தாய்க்கு செல்லப் பிராணிகளை பிடித்தால் மட்டுமே, இந்த வழியை கையாள வேண்டும்.

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!

சிலர் எப்போது பார்த்தாலும், ஒருவித டென்சனுடன் காணப்படுவார்கள். அத்தகைய டென்சன் ஏற்படும் போது, அதனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது,


வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள். அந்த ஒரு பிரச்சனையால் மட்டும் அனைவரும் பாதிக்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பலர்


பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவற்றிற்கு ஒருவகையான தீர்வு என்னவென்று பார்த்தால், அது ஒருசிலப் பொருட்களின் நறுமணங்கள் தான். மேலும் அனைத்து நறுமணங்களும் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல


முடியாது. உதாரணமாக, பெட்ரோல் வாசனை சிலருக்கு பிடிக்கும், சிலர் அதனை வெறுப்பார்கள். ஆனால் ஒருசில பொருட்களின் வாசனையை பிடிக்காது என்று யாரும் சொல்லமுடியாது. அவ்வாறு உள்ள பொருட்களின் வாசனை,


சோர்வு, மயக்கம், மனஅழுத்தம், தூக்கமின்மை, இரத்த அழுத்தம், தெளிவற்ற மனம் போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்யும்.

பெண்களுக்கு எப்படிபட்ட ஆண்களை பிடிக்கும் தெரியுமா?

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான்........

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

கற்றாழை ஜெல்லின் சரும நன்மைகள்!

வீட்டில் வளர்க்கும் செடிகளில் ஒன்றான கற்றாழையில் சருமத்திற்கான நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. மேலும் இவை சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் உதவும்.          

குறிப்பாக முகப்பருவை நீக்க சிறந்த பொருள் என்றால் அது கற்றாழை தான். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அவை முகப்பரு மற்றும் பிம்பிளை நீக்குகின்றன.

மேலும் இந்த கற்றாழையை வைத்து நிறைய அழகுப் பொருட்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கற்றாழையை வீட்டிலேயே வளர்த்து, தினமும் முகத்திற்கு தடவி வந்தால், முகம் நன்கு பட்டுப் போன்று மாறிவிடும்.

இப்போது அதன் மற்ற நன்மைகளைப் பார்ப்போமா!!! * முகப்பருவை குறைக்க வேண்டுமென்பவர்கள், இதனை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும்.

ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன.

இதனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும். * வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை மென்மையாக்கும்.

குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக இருக்கும். * ஆண்கள் ஷேவிங் செய்த பின்னர், முகத்திற்கு லோசனை தடவுவார்கள்.

ஏனெனில் ஷேவிங் செய்த பின்னர், அந்த இடத்தில் அரிப்புகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமென்று தடவி மசாஜ் செய்வார்கள்.

அவ்வாறு கெமிக்கல் கலந்த லோசனை தடவுவதற்கு பதிலாக கற்றாழை ஜெல்லை தடவினால், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம். * உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல்.

ஆனால் கற்றாழையை வைத்து, மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், மார்க்குகள் லேசாக மறைய ஆரம்பிக்கும்.

பொதுவாக இந்த மார்க்குகள் உடல் எடை அதிகரிப்பது அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும். * முதுமை தோற்றம் சிலருக்கு இளமையிலேயே ஏற்படுகிறது.

எனவே இத்தகைய தோற்றத்தை தடுக்க கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி உடலில் செய்து வர, தளர்ந்து இருக்கும் சருமம் நன்கு இறுக்கமடைந்து, இளமை தோற்றதை வைக்கும்.

அதுமட்டுமின்றி கற்றாழை ஜெல்லில் வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது. இதனால் சருமம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும். * சூரிய கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், சருமம் கருமையான நிறத்தில் காணப்படும்.

அதுமட்டுமின்றி சில நேரங்களில் கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை ஏற்படும். இவ்வாறு தொடர்ந்து சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால், தோல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

எனவே எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், ஏதேனும் மாய்ச்சுரைசரை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சருமத்தை பாதிப்பிலிருந்து தடுக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

ஆண்களால் பெண்களுக்கு அளிக்கப்படும் சில கஸ்டமான விடயங்கள் !!

காதலும், மூர்க்கத்தனமும் ஒரு சேர நிறைந்த ஆண்கள், தாங்கள் பெரிதும் விரும்பும் பெண்களுக்கே கூட தங்களுக்கே தெரியாமல் பலவகைகளில் தொல்லைகள்  புரிவதில் வல்லவர்கள். அப்படி ஆண்கள், பெண்களுக்குச் செய்யக்கூடிய சில கூடாதா விடயங்களை என்னவென்று பட்டியல் இட்டுள்ளர்கள்


01-ஆண்கள் அனைவருமே பெண்களை  கடைக்கண்ணில் பார்க்கும் வழக்கமுடையவர்கள் என உலகெங்கிலும் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, ‘ஜொள்' வடிக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாவது, அவர்கள் பார்க்கும் பெண் மட்டுமல்லாது, அவர்கள் அருகில் இருக்கும் பெண்ணும் தான்! காதலியுடன் வெளியில் செல்லும் தருணங்களில் கூட, ஆண்கள் பிற பெண்களை பார்க்காமல் விடுவதில்லை!


02-அநேகமாக ஆண்கள், பெறாமை குணம் இருக்கும். பெண்கள் மிகுந்த பொறாமைக் குணம் உடையவர்கள் என குற்றம் சொல்லும் ஆண்கள், தங்கள் காதலி வேறொரு ஆணைப் பற்றி பேசினால் கூட உச்சக்கட்ட பொறாமை கொள்கிறார்கள்.


03-மிகவும் சுதந்திரமான, நவநாகரீகமான பெண்ணுடன் பழகுவதே பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தாய்க்கு அறிமுகம் செய்யும் சமயங்களில் அடக்கமான பெண்களையே விரும்புவார்கள். ஊர் சுற்றும் போது நவநாகரீகமான உடைகளை அணிவதையும், வித்தியாசமான சிகையலங்காரத்தையும் விரும்பியவர்கள், திருமணத்தின் போது மட்டும் நேர்மாறான பெண்களைத் தேடுவது தான் ஆண்களின் மோசமான செயல்களிலேயே முதன்மையானது!


04-மனைவி வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததிலிருந்து, "எங்கே இருக்கிறாய்?" என நச்சரித்துக் கொண்டே இருக்கும் கணவனின் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் வரும். ஆண்களின் இந்த அளவுக்கு அதிகமான அக்கறை பெண்களுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலாக மாறிவிடுகிறது.


05-பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் வருவதற்கு முன்பும், இந்த உலகில் பெண்கள் கவனமாகத் தான் வாழ்ந்தார்கள் என்பதை ஆண்கள் உணருவதே கிடையாது. இதைப் படிக்கும் போதாவது சில ஆண்கள் திருந்தினால் சரி.


06 பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றாலும், ஆண்களைப் போல் அல்லாது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் விஷயங்களை செய்வதில் வல்லவர்கள்.


ஆண்கள் பெண்களின் உணர்வுகளை கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால், வாழ்வில் சிறப்பாக வாழ்வது நிச்சயம்

மொறுமொறு... முந்திரி ப்ரை!

நட்ஸ் உடலுக்கு மிகவும் சிறந்தது. அத்தகைய நட்ஸில் முந்திரி பெரும்பாலானோருக்கு மிகவும் பிடிக்கும்.

எனவே மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அப்போது முந்திரியை ப்ரை செய்து சாப்பிடலாம்.

அந்த முந்திரி ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்:

முந்திரி - 1

கப் கடலை மாவு - 1/2

கப் அரிசி மாவு - 2

டீஸ்பூன் மிளகாய் தூள் - 1

டீஸ்பூன் நெய் - 2

டீஸ்பூன் (விரும்பினால்) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:

முதலில் முந்திரியை முழுமையாகவோ அல்லது இரண்டாகவோ உடைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், நெய் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும், அதில் முந்திரியை, கலந்து வைத்துள்ள கலவையில் நனைத்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி ப்ரை ரெடி!!!

சாப்பிடும் முன் சூப்!

சாப்பிடுவதற்கு முன் சூப் சாப்பிடுவதை சிலர் ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பணக்காரர்களின் விருந்தில் இது ஒரு கவுரவ கலாசாரமாக பின்பற்றப்படுகிறது. 16- நூற்றாண்டின் ஐரோப்பியர்கள் இரவு சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிடுவதை ஒரு வழக்கமாக உருவாக்கினார்கள். இதை அறிவியல் ரீதியாக சொல்லும் போது அப்பிடைசர் ஸ்டார்ட்டர் வகையைச் சேர்ந்தது என்கிறார்கள்.                                                          

அதாவது அதிகம் பசி இல்லாமல் இருக்கையில் இந்த சூப் வயிற்றுக்குள் சென்று ஜீரணத்துக்கு உண்டான என்சைம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க முடியும். வசதி படைத்தவர்களுக்கு பெரும்பாலும் பசி எடுப்பதில்லை. அந்த பசியைத் தூண்டி விடுவதற்காக இப்படி சூப் கொடுக்கப்டுகிறது. சூப் மட்டும்ல்ல மசாலா வாசனைகளும் பசியை தூண்டிவிடுகின்றன என்கிறார்கள்.


ஒட்டலுக்கு அருகில் குடியிருப்பவர்கள் எப்போதும் மசாலா வாசனையை நுகர்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தொடர்ந்து மசாலா வாசனையை மட்டும் நுகர்வதால் கல்லீரல் பிரச்சனை, பித்தம் முதலியவை ஏற்படலாம்.


நமக்கு உணவு வாசனை மூக்கை எட்டியவுடன் நமது வயிறு உணவை எதிர்பார்த்து காத்துடக் கொண்டிருக்கும். வாசனை வரும் போது எல்லா சுரப்பிகளும் தயாராகி விடுகின்றன. மூக்குக்கு எட்டியது வாய்க்கும் எட்ட வேண்டும் என்பது இயற்கை நியதி. அதை மீறி  வெறும் வாசனையை மட்டுமே தொடர்ந்து சுவாசிக்கம் போது சுரப்பிகள் பலவீனம் அடைகின்றன. அதனால் ஓட்டல் அருகே குடியிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?

பெற்றோராக இருப்பவர்கள், தங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதற்கு, புத்தகங்கள் பலவற்றை படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்கள்.          

குறிப்பாக அப்பாக்களை விட, சில மாறுபட்ட சவால்களை அம்மாக்களே எதிர்கொள்கின்றனர். இப்போது அம்மாவாக இருப்பவர்கள், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும், குழந்தைகளை எப்படி நன்றாக வளர்ப்பது என்பது பற்றியும் கீழே சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. தாயாக இருப்பது சில நேரங்களில் சற்று சவாலானதாகவே இருக்கும். அதனால் எப்போதும் அமைதியாகவும் மற்றும் பொறுமையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அவர்கள் ஏதாவது குறும்பு செய்தால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

2. உங்கள் குழந்தைகளின் விருப்பங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு இசையில் விருப்பமிருந்தால், அவனுக்காக ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வாசிப்பதை கவனியுங்கள். குழந்தை கோபமாக இருந்தால், அப்போது அவர்களிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும்.

3. பணவிஷயத்தில் மிகவும் சரியாக இருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் பணத்தை கொடுப்பது சரியில்லைதான், அதற்காக உங்கள் குழந்தை கேட்கும் எந்தவொரு விருப்பத்தையும் உடனே முடியாது என்று நிராகரிக்க வேண்டாம். எதைக்கேட்டாலும் முடியாதென்றும், எப்போதும் பணத்தை சேமிப்பது பற்றிய அறிவுரைகளை சொல்லி, எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொடுக்காமல் இருந்தால், பின் அவர்கள் மனதில் உங்கள் மீது இருக்கும் அன்பு குறைய நேரிடும். எனவே அவ்வப்போது ஏதேனும் விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

4. உங்களை எப்பொழுதும் அவர்களுடன் பேசுவதற்கு ஏற்ற நபராக வைத்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள். எப்பொழுதும் புரிந்துகொள்ளக் கூடியவராகவும் மற்றும் அவர்கள் பேசுவதை செவிகொடுத்து கேட்பவராகவும் இருப்பதற்கு, உங்களால் முடிந்தவரை கடினமான முயற்சிகளை எடுங்கள். அம்மாவிடம் நட்புடன் ஆலோசனை கேட்பதும், வயதுக்கு வருவது பற்றிய சந்தேகங்களை கேட்கவும், வீட்டுவேலைகளில் உதவி செய்யவும், அல்லது சாதாரணமாக அம்மாவை கட்டிப்பிடிப்பதும் அவர்களுக்கு தெரியும். தங்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாமலிருந்தால், பின் குழந்தைகள் தனிமையிலேயே இருப்பார்கள். எனவே அவ்வப்போது அவர்களிடம் பேசும் வழக்கத்தை கொள்ள வேண்டும்.

5. குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு மருத்துவம் படிப்பதிலோ அல்லது மருத்துவராக ஆவதிலோ விருப்பம் இல்லையென்றால், அப்போது கோபப்பட வேண்டாம். உங்கள் மகளின் எண்ணம் உங்களுடையதிலிருந்து மாறுபடுவதை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளை எப்போதுமே குழந்தையாக எண்ணாமல், அவர்களின் வயதிற்கு ஏற்றவாறு மாறுங்கள். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்கனவே பெரியளவில் பங்கேற்றிருக்கிறீர்கள். அதனால் அதனையே திரும்பவும் செய்ய வேண்டாமே!

6. தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க பயப்படாதீர்கள். இது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் தவறை நீங்கள் ஒப்புக் கொள்வதும் மன்னிப்பு கேட்பதும் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். நீங்கள் பிடிவாதமாக இல்லாமலிருந்தால் அது மற்றவர்கள் உங்கள் மேல் கோபப்படுவதை தடுக்கும். மேலும் குழந்தைகளுக்கு மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுங்கள்.

7. குழந்தை தனது தந்தையை நேசிப்பதற்கு மதிப்பளித்திடுங்கள். உங்கள் குழந்தை, அவர்களது தந்தையை அளவுக்கு அதிகமாக நேசிப்பதைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது.

8. இறுதியாக, மற்ற எல்லாவற்யையும் விட உங்கள் குழந்தைகளை அதிகமாக நேசியுங்கள். அவர்களை நேசிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் அர்த்தம் தராது. எந்த நேரத்திலும் குழந்தைகளை நேசித்தால், அவர்களது மனதில் எக்காலத்திலும் பெற்றோர்களை மறக்காமல் நேசிப்பார்கள்.

ஓட்ஸ் உப்புமா ஓட்ஸ் உப்புமா !

தேவையானப் பொருள்கள்:                                                                  

ஓட்ஸ்- 2 கப்
சின்ன வெங்காயம்- 10
இஞ்சி-ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய்-2
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
எலுமிச்சை சாறு உப்பு-தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு உளுந்து
கடலைப் பருப்பு
காய்ந்த மிளகாய்-2
பெருங்காயம்-சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

• வெறும் வாணலியில் ஓட்ஸை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்

•  வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

• பிறகு நறுக்கி வைத்துள்ள் வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி 4 கப்புகள் (ஒன்றுக்கு இரண்டு என) தண்ணீர் ஊற்றி கலக்கி உப்பு சேர்த்து மூடி கொதி வரும் வரை வேக விடவும்.

• கொதி வந்ததும் திறந்து ஓட்ஸை சிறிது சிறிதாக சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

• முழுவதும் சேர்த்த பிறகு நன்றாகக் கிளறி விட்டு மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.

• வேகும் வரையில் இடையிடையே அடிப் பிடிக்காதவாறு அடிக்கடி கிளறிவிடவும்.

• நன்றாக வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கொத்துமல்லி தூவி,எலுமிச்சை சாறு விட்டு இறக்கவும்.