Tuesday 18 March 2014

சிம்புவுக்கு தருமடி கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிம்புவும் ஹன்சிகாவும் பிரிந்ததற்கு படத்துறையில் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

அவற்றில் ஒன்று…சிவகார்த்திகேயன் ஹன்சிகா இடையிலான நட்பு.

மான் கராத்தே படத்தில் இணைந்து நடிக்கும்போது ஹன்சிகா உடன் சிவகார்த்திகேயன் நட்பாகப்பழகியதுதான் சிம்புவை சினம் கொள்ள வைத்தது என்றும், அதன் காரணமாகத்தான் ஹன்சிகா உடனான காதலுக்கு குட்பை சொன்னார் என்றும் ஒரு கதை உலவிவரும்நிலையில்….

மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் சிவகார்த்திகேயனின் பேச்சு, அவரது பேச்சில் உள்குத்து இருக்கிறதோ என்ற சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது.

அப்படி என்ன பேசினார் சிவகார்த்திகேயன்?

‘‘இந்த படம் இவ்வளவு அழகா, கலர் ஃபுல்லா வந்ததுக்குக் காரணம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். முருகதாஸ், மதன் அவர்கள்தான். எனக்கு அருமையான டீம் அமையறது ரொம்ப லக்குதான்.

இங்க ஜெயிக்கிறதுக்கு ஒரே வழி கடின உழைப்புதான். ஆனால், நல்ல டீம் அமைஞ்சா ஈஸியா ஜெயிச்சிடலாம். நிறைய பேர் அதை லக்குனு சொல்றாங்க. அப்படின்னா நான் பயங்கர லக்கிதான்.

எல்லா படத்துலயும் பாடல்கள்தான் படத்துக்கு அடையாளம். தியேட்டருக்கு ரசிகர்களை வரவைக்கிறதே பாடல்கள்தான். அனிருத், இந்த படத்துல கொடுத்திருக்கிற பாடல்களுக்கு டான்ஸ் ஆடறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சி. என்னால முடியவேயில்லை. சாதாரணமா இந்தப் பாடல்களுக்கு நடந்தே போயிட முடியாது. டான்ஸ் ஆடினால் மட்டும்தான் அந்த பாடல்களுக்கு மேட்ச் பண்ண முடியும்.”

என்று வழக்கமான வாசிப்புகளுக்குப் பிறகு ஹன்சிகா மேட்டரை டச் பண்ணினார் சிவகார்த்திகேயன். “ இந்த படத்துக்கு ஹன்சிகா , ஹீரோயின்னு சொன்ன உடனே, பாருப்பா இவனுக்கு பயங்கர மச்சத்தைன்னு சொன்னாங்க. அவங்க கூட நடிக்கதானங்க செஞ்சேன்? அது ஒரு பெரிய தப்பா?”

என்று அவர் கேட்டது வெளிப்பார்வைக்கு காமெடியாகத் தோன்றினாலும், அது காமெடி இல்லை, சீரியஸ்.

“இது சிம்புவுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பதிலடி” என்றே சொல்கிறார்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்.

0 comments:

Post a Comment