Sunday 23 February 2014

மோகன்லால் பிரமோட் செய்யும் அமீர்கானின் டிவி ஷோ!

அமீர்கானின் தொலைக்காட்சி உணர்ச்சி நாடகம் சத்யமேவ ஜெயதே மார்ச் 2 முதல் மீண்டும் ஒளிபரப்பாகிறது. மற்ற என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியைப் போல இதுவும் செம சக்சஸ். மார்ச்சில் தொடங்குவது இரண்டாவது செஷன்.


இந்தியாவின் அதிமுக்கியமான பிரச்சனைகளை அலசுவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். பிரச்சனையில் அகப்பட்டவர்கள் அழுவது, ஆவேசப்படுவது, நெகழ்வது, நெக்குருகுவது என்று சென்டிமெண்ட் பேக்காக வந்த இந்நிகழ்ச்சி மத்தியவர்க்க இந்தியர்களிடம் வரவேற்பைப் பெற்றதில் வியப்பில்லை. அலசப்பட்ட பிரச்சனைகளில் ஒன்றுகூட இந்நிகழ்ச்சியால் தீர்த்து வைக்கப்படவில்லை என்பதுடன் எக்காலத்திலும் தீர்க்க முடியாது என்பதே உண்மை.


நமது பிரச்சனைகள் டிவியில் பேசி தீர்க்கக் கூடியவை அல்ல. அதேநேரம் இந்த நிகழ்ச்சியால் டைம் பத்திரிகையின் உலகின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலில் அமீர்கான் இடம்பெற்றார். இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வந்தார் என டைம் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.


நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சேனலின் டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றத்தைத் தவிர இந்தியாவில் இந்நிகழ்ச்சியால் சின்ன மாற்றமாவது ஏற்பட்டதா?


இரண்டாவது செஷனை பிரமோட் செய்ய மோகன்லால் முன் வந்துள்ளார். அமீர்கானுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த மாட்டார். அதன் அருமை பெருமைகளை மட்டும் பேசுவார். இந்த புதிய காம்பினேஷனில் பரவசமான ஸ்டார் இந்தியாவின் சிஇஓ உதய் சங்கர் இந்தியாவின் பிரச்சனைகளை பெரிய அளவில் பேசப்போகிறேnம், மோகன்லாலின் ஒத்துழைப்பு மக்களிடம் இன்னும் அதிகமாக நிகழ்ச்சியை கொண்டு சேர்க்கும் என தெரிவித்துள்ளார்.


நடிகர்கள் பேசி இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்கப் போகிறார்கள். காதுல பூ வளர்க்க நாங்களும் தயாராயிட்டோம்.

செவ்வாழையின் பலன்கள்…!

செவ்வாழைப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.


கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.


நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.


தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

சத்துப்பட்டியல்: சோம்பு…!

சோம்பு விதைகளில் உடலை வலுப்படுத்தும் சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள், தாதுப் பொருட்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன. பல்வேறு நோய் எதிர்ப்பு பொருட்கள் சோம்பு விதைகளில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை காயம்பெரோல் மற்றும் குவார்சிட்டின்.


புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கவல்லவை இவை. சோம்பு விதைகளில் எளிதில் கரையக்கூடிய நார்ப் பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. 100 கிராம் விதையில் 39.8 கிராம் அளவிற்கு நார்ச்சத்து காணப்படுகிறது.


இவை உட்கொள்ளும் உணவை எளிதில் செரிக்க வைக்கின்றன. மேலும் மலச்சிக்கலை சீராக்குகிறது. உடலுக்கு வலிவூட்டும் தாதுப் பொருட்களான தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவை சிறந்த அளவில் காணப்படுகின்றன.


தாமிரம் தாது, ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்ய உதவுகின்றன. சோம்பு விதைகளில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. உயிர் அணுக்கள் உற்பத்திக்கும், செரிமானத்திற்கும் இது அவசியம். இதிலுள்ள பொட்டாசியம் தாது, உடற் செல்களை வளவளப்பாக வைத்திருப்பதுடன், இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றன.


வைட்டமின்- ஏ, இ, சி போன்றவையும், பீ-குழும வைட்டமின்களான தயாமின், பைரோடாக்ஸின், ரிபோபிளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன.


சோம்பு விதைகள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு செரிமான சக்தியை அதிகரிக்கவும், வயிற்று வலியை நீக்கவும் சோம்பு கலந்த தண்ணீரை கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.


சோம்பு விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய் கை, கால் மூட்டு வலிகளை போக்குவதுடன் மட்டுமில்லாமல் இருமலையும் போக்க வல்லது. மீன், காய்கறி உணவுகள் போன்றவற்றில் செரிமானம் மற்றும் நறுமணத்திற்காக அதிக அளவில் சோம்பு விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கேக், பிஸ்கட், வெண்ணை, ரொட்டி தயாரிப்பிலும் சோம்பு சேர்க்கப்படுகிறது.

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்…!

1.கால்சியம் :

கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

2.ஆப்பிள்கள் :

தினசரி ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதே வேளையில், கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது தெரியுமா! ஆம், ஆப்பிளின் தோல் எடை குறைப்பு குறிக்கோளை பூர்த்தி செய்யும் பல விந்தைகளை உள்ளடக்கியது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

3.வால்நட் :

வால்நட்ஸ்களில் ஒமேகா3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப் புச்சத்தானது, பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.

4.பீன்ஸ் :

பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்ச்சிதை சுழலை வழங்குவதால், இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.

5.இஞ்சி :

இஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும் செயல்களையும் ஊக்குவிப்பதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6.ஓட்ஸ் :

காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைபயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.

7.க்ரீன் டீ :

க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 12 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

8.மிளகு :

மிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும் கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு, உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் துரிதப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப்பொருள், உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது. இந்த முறையினால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.

9.தண்ணீர் :

இது ஒரு உணவாக கருதப்படாவிட்டலும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் தண்ணீர் ஒரு இன்றியமையாத ஒரு பாகமாகும். தேவையான தண்ணீர் குடிக்கவில்லையெனில், சில நிமிடங்களுக்குள் உடல் வறட்சியை உணரக்கூடும். சில சமயங்களில் தாக உணர்வினை பசி உணர்வு என்று தவறாக புரிந்து கொண்டு, தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக உண்ணத் தொடங்குகிறோம். எனவே கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.

10.முட்டை :

முட்டை சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமானதாகும். இதிலுள்ள கொழுப்புச்சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும், புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது.

பாகற்காயின் மருத்துவக் குணங்கள் பற்றிய சில தகவல்கள்.!

கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்...

* பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.

* குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.

* பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது.

* 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.

* உடற்செயலின் போது 'சாரான்டின்' எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது. சாரான்டினானது குளு கோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் 'டைப்-2' நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய்.

* பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும்.

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.

* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும்.

* ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும்.

* வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.

* பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

தைராய்டு: டயட் முறைகள்…!

உடலில் அயோடின் அளவு குறைந்தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்சனை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம்images (5) ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்சனைகள் தோன்றும்.

அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்சனைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது. தைராய்டு பிரச்சனையை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. மீன்வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அயோடின் உப்பைப் பயன்படுத்த வேண்டும். அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைக்க வேண்டும். திறந்து வைக்கக் கூடாது.

அப்படி திறந்து வைத்தால், உப்பிலுள்ள அயோடின் காற்றில் கரைந்து விடும். உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம்.

அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

கோபத்தைக் கட்டுப்படுத்தும் இனிப்பு பானம்…!

இனிப்பான பானங்களை அருந்துவது குறித்துப் பொதுவாக இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. சிலருக்கு எப்போதும் download‘ஜில்’லென்று இனிப்பான பானங்களை அருந்துவது பிடிக்கும். சிலரோ- குறிப்பாக சற்று வயதானோர்- இனிப்பான பானத்தை நீட்டினாலே விலகி ஓடுவர்.


ஆனால் இனிப்பான பானங்களைப் பற்றிய ஓர் இனிய தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். அதாவது, இனிப்பான பானங்களைக் குடிப்பதால் கோபம் கட்டுப்படுமாம். தங்கள் ஆராய்ச்சியில் இவ்வாறு கண்டுபிடித்துள்ளதாக உளவியல் ஆய்வு இதழ் ஒன்றில் வெளியிட்ட கட்டுரையில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இனிப்புப் பதார்த்தங்களை விட, இனிப்புச் சுவையுள்ள பழச்சாறுகள், பானங்களைக் குடிப்பவர்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களோ, கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய சம்பவங்களோ ஏற்பட்டால் அதை மனதளவில் கட்டுப்படுத்தி சாந்தத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.


குறிப்பாக குளுக்கோஸ் பானங்களைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு இயல்பாகவே மனதை அடக்கி ஆளும் ஆற்றல் அதிகரிப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டாம் டென்னிசன் தெரிவித்துள்ளார். இனிப்புப் பான பிரியர்களுக்கு இந்தத் தகவல் இனிமையானதுதான். ஆனால் அமிழ்தமும் அளவோடு இருப்பது நல்லது என்கிறார்கள் நம் முன்னோர்கள்!

குளிர்காலங்களில் உடலை வெப்பமாக வைக்கும் உணவுகள்…!



குளிர்காலம் வந்தாலே நம்மை பல தொற்றுநோய்கள் தாக்க தொடங்கி விடும். அதனால், நாம் இந்த குளிர் காலங்களில் ginger_006நாம் உட் கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

இதன் மூலம், குளிர் காலங்களில் ஏற்படும் ஜல தோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம். குளிர்காலம் வரத் தொடங்கி விட்டதால், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய தருணம் இது தான். உங்கள் அலமாரிகளில் இருந்து கம்பளிகளையும், ஸ்வெட்டர்களையும் எடுத்து தயாராக வைத்திருங்கள்.

இந்த குளிர்காலங்கள் உங்கள் சருமத்தையும் தலைமுடியையும் வறண்டு போகச் செய்யும். இந்த கடினமான காலத்தை சமாளிக்க குளிர்கால பராமரிப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். நீங்கள் போதுமான முன்னேற்பாடுகளை செய்து வைத்திருந்தாலும் உங்கள் உணவிலும் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.

நாம் உட்கொள்ளும் உணவானது நமது ஆரோக்கியத்தை நிர்ணயம் செய்கின்றது. நமது உடலின் பி.எம்.ஐ. அளவை பராமரிப்பதற்கு சரியான உணவை உட்கொள்ளுவது அவசியமான ஒன்றாகும். நமது உடல் காலங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுவதற்கு நாம் அந்தந்த காலங்களுக்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

குளிர்காலங்களில் வெப்பம் தரும் உணவு வகைகளை சாப்பிடுவது அவசியமான ஒன்றாகும். குளிர்காலங்களில் வெப்பம் அளிக்கும் உணவுகளை சாப்பிடுவதும் வெயில் காலங்களில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதும் பொதுவான ஒன்றாகும்.

இந்த குளிர்காலங்களில் சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். உங்கள் குளிர் கால டயட்டில் வெப்பம் தரும் உணவுகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லா காலங்களிலும் நமது உடலின் மெட்டபாலிசம் (வளர்ச்சிதை மாற்றம்) சரிவர இயங்குவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

குளிப்பாக குளிர் காலங்களில் சரியான முறையில் இயங்குவது முக்கியமான ஒன்றாகும். இது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்காக இயக்கச் செய்து, நம்மை நோய்களிடம் இருந்து பாதுகாக்க உதவும். இங்கு குளிர்காலங்களில் உடலை வெப்பமாக வைக்க உதவும் சில உணவு வகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பயன்பெறுங்கள்.

இஞ்சி சிகிச்சை :

மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.

வேர்க்கடலைகள் :

குளிர்காலங்களில் பிராண வாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதனால், இந்த குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும், இந்த வேர்க்கடலைகளை உங்கள் உணவில் சேர்த்து இவற்றை பெறலாம். இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுவகைகளில் ஒன்றாகும்.

தேன் :

இந்த குளிர்காலங்களில் உங்கள் உணவில் தேனை சேர்த்து கொள்ளுவது மிகச் சிறந்த ஒன்றாகும். இது உங்கள் ஜீரண சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவி புரியும்.

பாதாம் :

பாதாமானது அதிக அளவில் பலன்களை அளிக்ககூடியதால் இது குளிர்காலங்களில் உட்கொள்ளும் உணவுகளில் மிகச்சிறந்த ஒன்றாகும். இது பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவி புரியும். இது சர்க்கரை நோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.

தானியங்கள் :

சிறு தானியங்கள் குளிர் காலங்களில் உங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகளில் மிகச்சிறந்த ஒன்றாகும். சிறு தானியங்களை சேர்த்து சப்பாத்தி செய்து உங்கள் குழந்தைகளுக்கு அளித்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த பலனை அளிக்ககூடிய உணவுகளில் ஒன்றாகும்.

நீர் நிறைந்த பழங்களை தவிர்த்தல் :

குளிர்காலங்களில் நீர் நிறைந்த உணவுகளையும் பழங்களையும் தவிர்க்க வேண்டும். உங்கள் உணவில் பேரிக்காய், ப்ளம்ஸ் மற்றும் ஆரஞ்ச் பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். அதிகமான நீர் நிறைந்த பழங்களை உட்கொண்டால் அது உங்களை உடலை மேலும் குளிர்ச்சியாக்கும்.

எள்ளு விதைகள் :

குளிர்காலங்களில் எள்ளு விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறந்த பலனை பெறலாம். குளிர்காலங்களில் உங்கள் உணவில் வெப்பம் தரும் உணவுகளை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த எள்ளு விதைகள் உங்கள் உடலில் உள்ள வெப்பத்தை அதிகரித்து மேடபாளிசத்தை மேம்படுத்த உதவி புரியும்.

ஒமேகா 3 :

கொழுப்பு அமிலங்கள் இந்த ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்த ஒன்றாகும். மீன்களில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது குளிர்காலங்களில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவி புரியும்.

இதில் அதிக அளவில் ஜிங்க் நிறைந்துள்ளதால் உங்கள் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை ரத்த அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் தான் நாம் பலவகை நோய்களிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றோம்.

காய்கறிகள் :

உங்கள் டயட்டில் சரியான அளவு காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த காய்கறிகள் உங்களுக்கு தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமாளிக்க உதவி புரியும். அதிக அளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை உட்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட உணவு வகைகளை தவறாமல் உட்கொண்டால் இந்த ஆண்டு குளிர்காலத்தை நோயின்றி எளிதில் கடக்கலாம். அத்துடன் குழந்தைகளுக்கு தேவையான உணவு வகைகள் மற்றும் மருந்துகளை உரிய மருத்துவரின் ஆலோசனையின்றி கொடுக்க கூடாது. தகுந்த முன்னேற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பீன்ஸின் மருத்துவ பயன்கள்…!

புற்றுநோயைத் தடுக்கும்


பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.


நீரிழிவை கட்டுப்படுத்தும் .


இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால், அது இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.


வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் .


பீன்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான பொட்டாசியம், ஃபோலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.


கர்ப்பிணிகளுக்கு நல்லது:


பீன்ஸில் போலேட் என்னும் கருவில் வளரும் சிசுவிற்கு தேவையான வைட்டமின் இருப்பதால், கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவது நல்லது.

கீரையில் உள்ள சத்துக்கள் பற்றிய சில குறிப்புகள்.!

வெந்தயக் கீரை :

கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். (கீரைகளை நன்கு கழுவவும்)

புளிச்ச கீரை : இரும்புச் சத்து 2.28 மி.கி. வைட்டமின் ஏ 2898 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். (கீரைகள் சமைத்த நீரை கீழே ஊற்றாமல் சாம்பார், சூப் அல்லது மாவு பிசையப் பயன்படுத்தவும்)

முட்டைகோஸ் :

வைட்டமின் சி 124 மி.கி. வைட்டமின் ஏ, ·போலிக் அமிலம், வைட்டமின் பி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை சிறிதளவு உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவும்.

முருங்கைக் கீரை :

வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்ஷியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி ஆகியவை உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

கறிவேப்பிலை :

வைட்டமின்ஏ 75000 மைக்ரோகிராம் கால்ஷியம் 830 மி.கி. ·போலிக் அமிலம் 93.9 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் பி. சி. சிறிதளவு உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும்.

புதினா கீரை :

போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்ஷியம் 200மி.கி. இரும்புச் சத்து 15.6 மி.கி. வைட்டமின்கள் ஏ.பி.சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்க வல்லது.

கொத்தமல்லி :

கால்ஷியம் 184 மி.கி. இரும்பு 1042 மி.கி, வைட்டமின் ஏ 8918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி.சி, உள்ளன. பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்க வல்லது.

மணத்தக்காளி:

இரும்புச் சத்து 20.5 மி.கி., கால்ஷியம் 410 மி.கி., வைட்டமின் பி.சி உள்ளன. வாய்ப்புண் ஏற்படுவதைக் தடுக்கும்.

சிசேரியன் செய்த பெண்களுக்கு உகந்த உணவுகள்.. !

 விறுவிறுப்பான கர்ப்ப காலத்திற்கு பின் தாய்மையை ஆனந்தமாக எண்ணி மகிழும் இந்த தருணங்களில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய காரியமாக உள்ளது. சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சை பிரசவமாக இருந்தாலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. முக்கியமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது.
 

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களின் தையல் ஆறுவதற்கும் சீக்கிரம் குணமடைவதற்கும் நாம் தேர்ந்தெடுக்கும் உணவு வகைகள் அவர்களுக்கு வாயு தொல்லை, மலச்சிக்கல் மற்றும் எந்த வித செரிமாண கோளாறுகள் கொடுக்கமாலும் இருக்க வேண்டியது அவசியமாகும். உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். இதற்கு உணவும் ஒரு வகையில் காரணமாகும். நாம் இந்த பகுதியில் பிரசவ அறுவை சிகிச்சைக்கு பின் என்ன உணவு உண்ணலாம் என்பதை குறித்துப் பார்ப்போம்.

முட்டை

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்கள் சாப்பிட வேண்டிய மிக முக்கிய உணவு முட்டை. இதில் உள்ள புரதச் சத்து மற்றும் துத்தநாகம் ஆகியவை பிரசவத்திற்கு பின் உடலுக்கு மீண்டும் அதன் வலிமையை கொண்டு வர உதவுகின்றன. இந்த உணவை ஒதுக்கி விடாமல் உண்டு நாம் கடந்து வந்த கடினமான கர்ப்ப கால மாற்றங்களை சரி செய்யலாம்.

மீன்

உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தியாகும். குழந்தை பெற்ற பின் நீங்கள் உண்ண வேண்டிய உணவுகளில் மீன் மிகவும் முக்கியமானதாகும். மேலும் ஓமேகா 3 உள்ள மீன்களை உண்பது சிறந்த பலன்களைத் தரும். இவை உடலுக்கு இழந்த சக்தியை மீட்டுத் தருகின்றன.

பால்

பாலில் உள்ள சுண்ணாம்பு அதாவது கால்சியம் தாய்ப்பால் தரும் பெண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. தாய்ப்பால் உருவாவதற்கு சுண்ணாம்பு சத்து அதிகம் தேவைபடுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது இரணடு டம்ளர் பால் அருந்துவது நல்லதாகும்.

தர்பூசணி

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களின் உடல் நிலை மீண்டும் அதன் பழைய சக்தியையும் செயல்களையும் செய்வதறகு சிறிது கால அவகாசம் தேவைபடுகின்றது. இதனால் நமது செர்மானம் மற்றும் வயிறு மற்றும் குடல் ஆகியவற்றின் செயல்கள் பாதிக்கப்படுகின்றது. தர்பூசணி இதை சரிசெய்வதில் சிறந்த பழமாக உள்ளது. உண்பதற்கு எளிதாகவும் நிறைய நீர் சத்து நிரைந்ததாகவும் உள்ள இந்த பழம் செரிமானத்தை எளிதாக்க வல்லது.

தண்ணீர்

உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி ஈரப்பதத்தை மேம்படுத்த தண்ணீர் உதவுகிறது. இது உங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், தாய்ப்பாலும் நான்றாக சுரக்கும்.

தயிர்

கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ள தயிர் மிகவும் சிறந்த உணவாகும். இதை நாமக்கு விருப்பமான எந்த வகை உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். பிரசவ அறுவை சிகிச்சையை எதிர் கொண்டிருக்கும் மகளிருக்கு தயிர் மிக சிறந்த மற்றும் ஊட்டமளிக்கும் உணவாகும்.

வால்நட்

அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதை சாப்பிடுவதால் அவர்களுடைய உடலில் புரதச் சத்துகளும், போலிக் அமிலத்தின் உற்பத்தியும் மிகுதிப்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை பிரசவத்திற்கு பின் இதை சாப்பிடுவது உடலின் சக்தியை அதிகரிக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த பழமாகும். இவை அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு எந்த வித தொற்று நோய்கள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளும். தையலில் புண்கள் இருக்கும் போது எளிதாக அந்த இடத்தில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வைட்டமின் சி உணவுகளை சாப்பிடுவது நம்மை கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்கிறது.

பச்சை இலை மற்றும் காய்கறிகள்

நார்ச்சத்து மிகுத்த உணவுகளை உண்ண வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். கீரைகள், பச்சை காய்கறிகள் அகியவற்றை தினசரி சாப்பிட வேண்டும். இது நமது செரிமாணத்தை அதிகப்படுத்தி குடலை சுத்தப்படுத்த உதவுகின்றன. இவைகளெல்லாம் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களுக்கு ஏற்ற சிறந்த உணவு வகைகளாகும்.