Sunday 23 February 2014

மோகன்லால் பிரமோட் செய்யும் அமீர்கானின் டிவி ஷோ!

அமீர்கானின் தொலைக்காட்சி உணர்ச்சி நாடகம் சத்யமேவ ஜெயதே மார்ச் 2 முதல் மீண்டும் ஒளிபரப்பாகிறது. மற்ற என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியைப் போல இதுவும் செம சக்சஸ். மார்ச்சில் தொடங்குவது இரண்டாவது செஷன்.


இந்தியாவின் அதிமுக்கியமான பிரச்சனைகளை அலசுவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். பிரச்சனையில் அகப்பட்டவர்கள் அழுவது, ஆவேசப்படுவது, நெகழ்வது, நெக்குருகுவது என்று சென்டிமெண்ட் பேக்காக வந்த இந்நிகழ்ச்சி மத்தியவர்க்க இந்தியர்களிடம் வரவேற்பைப் பெற்றதில் வியப்பில்லை. அலசப்பட்ட பிரச்சனைகளில் ஒன்றுகூட இந்நிகழ்ச்சியால் தீர்த்து வைக்கப்படவில்லை என்பதுடன் எக்காலத்திலும் தீர்க்க முடியாது என்பதே உண்மை.


நமது பிரச்சனைகள் டிவியில் பேசி தீர்க்கக் கூடியவை அல்ல. அதேநேரம் இந்த நிகழ்ச்சியால் டைம் பத்திரிகையின் உலகின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலில் அமீர்கான் இடம்பெற்றார். இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வந்தார் என டைம் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.


நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சேனலின் டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றத்தைத் தவிர இந்தியாவில் இந்நிகழ்ச்சியால் சின்ன மாற்றமாவது ஏற்பட்டதா?


இரண்டாவது செஷனை பிரமோட் செய்ய மோகன்லால் முன் வந்துள்ளார். அமீர்கானுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த மாட்டார். அதன் அருமை பெருமைகளை மட்டும் பேசுவார். இந்த புதிய காம்பினேஷனில் பரவசமான ஸ்டார் இந்தியாவின் சிஇஓ உதய் சங்கர் இந்தியாவின் பிரச்சனைகளை பெரிய அளவில் பேசப்போகிறேnம், மோகன்லாலின் ஒத்துழைப்பு மக்களிடம் இன்னும் அதிகமாக நிகழ்ச்சியை கொண்டு சேர்க்கும் என தெரிவித்துள்ளார்.


நடிகர்கள் பேசி இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்கப் போகிறார்கள். காதுல பூ வளர்க்க நாங்களும் தயாராயிட்டோம்.

0 comments:

Post a Comment