Tuesday 18 March 2014

தல – தளபதி ஷாக்! எல்லாம் போச்சி...?

நேற்று முன் தினம் சென்னையில் நடந்த வாயை மூடி பேசவும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், 2014ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை.


பல பெரிய ஸ்டார்கள் கடந்த இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆகியிருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்று, தயாரிப்பாளருக்கும், விநியோகிஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்த படங்கள் என்று பார்த்தால் இரண்டே இரண்டு படங்கள்தான் என்று அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த இரண்டு படங்களில் ஒன்று கோலி சோடா, மற்றொன்று தெகிடி.


ஆனால் ஊடகங்களில் விஜய் நடித்த ஜில்லாவும், அஜீத் நடித்த வீரம் படமும் பெரும் வெற்றி பெற்றதாக விளம்பரப்படுத்தின. இந்த வெற்றி உண்மையான வெற்றி அல்ல என்றும், அவருடைய பேச்சில் இருந்து தெரிய வருகிறது.


பசங்க படத்தில் நடித்த சிறுவர்கள் பெற்ற வெற்றியை கூட தல – தளபதி படங்கள் பெறவில்லை என்பதுதான் உண்மை. மேலும் கோலிசோடா அதிகளவான தியேட்டர்களில் 50 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல தெகிடி படமும் முதல் வார கலெக்ஷனைவிட, இரண்டாவது வார கலெக்ஷன் அதிகமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment