Sunday 9 March 2014

நயன்! அசத்தல் ஆக்‌ஷன்!

ஆரம்பம், ராஜா ராணி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிக்சர் அடித்திருக்கும் நயன்தாரா, தொடர்ந்து நடித்துவரும் படங்களிலும் சிக்சர் அடிப்பார் என்கிறது கோடம்பாக்கம்.


தமிழ் தெலுங்கு என கிட்டத்தட்ட ஆறு படங்களில் கமிட் ஆகியிருக்கும் நயன்தாரா அதிகம் எதிர்பார்ப்பது என் அன்பே நீ எங்கே என்ற திரைப்படத்தைதானாம்.


இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம் இத்திரைப்படத்திற்காக நயன்தாரா ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருப்பதும் ஒரு காரணம் என்கின்றனர் படக்குழுவினர்.


இதுகுறித்து பேசிய இயக்குனர் ஷேகர் கம்முலா “ என் அன்பே நீ எங்கே திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தைப் பற்றி யோசித்தபோது நான் அந்த கதாபாத்திரத்தை அதிக நகம் இல்லாதவராகத்தான் கற்பனை செய்துவைத்திருந்தேன்.


இதைப் பற்றி நான் நயன்தாராவிடம் கூறியதுமே அவரது நகங்களை வெட்டிக்கொண்டார். மேலும் சில ஆக்‌ஷன் காட்சிகளுக்காக டூப் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னபோதும், வேண்டாம் நானே நடிக்கிறேன் என்று ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் நயன்தாரா” என்று கூறியிருக்கிறார். 

0 comments:

Post a Comment