Friday 31 January 2014

ஹீரோவாக மாறிய டெக்னீஷியன்கள் ..!



டெக்னீஷியன்களே ஹீரோக்களாக நடிக்கும் படம் கள்ளப்படம். இதுபற்றி இயக்குனர் ஜெ.வடிவேல் கூறியதாவது: 

புதுமுக நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு கோலிவுட்டில் வாய்ப்பு கிடைப்பது அரிது. அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். தமிழ் கலாசாரத்தின் அடையாளமாக கருதப்படும் கூத்து உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகள் தற்போது நலிவடைந்து வருகிறது.

முன்பெல்லாம் ஊர் திருவிழா என்றால் கூத்து நடக்கும். இப்போது பாட்டுக்கச்சேரி, குத்தாட்ட நிகழ்ச்சி தான் நடக்கிறது. பாரம்பரிய கலைக்கு முக்கியத்துவம்தரும் வகையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இது டாக்குமென்ட்ரி படமாக இல்லாமல் கமர்ஷியல் அம்சத்துடன் த்ரில்லராக கதை கரு அமைந்துள்ளது.

சினிமாவில் முன்னேற புதியவர்கள் எப்படி போராட வேண்டி இருக்கிறது என்ற பின்னணியில் இக்கதை அமைந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனரான நான், ஒளிப்பதிவாளரான ஸ்ரீராம் சந்தோஷ், இசை அமைப்பாளரான கே, எடிட்டராக பணியாற்றும் காகின் ஆகிய நான்குபேரும் அந்தந்த கதாபாத்திரங்களாக படத்தில் வேடமேற்றிருக்கிறோம்.

ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கிறார். திருவண்ணாமலை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து நிஜகூத்து கலைஞர்களை வரவழைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன. இயக்குனர் மிஷ்கின் ஒரு பாடல் பாடி இருக்கிறார். சுட்டகதை பட ஹீரோ யின் லக்ஷ்மி ப்ரியா, நரேன், சிங்கம் புலி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடம் ஏற்றிருக்கின்றனர்.

0 comments:

Post a Comment