Thursday 13 March 2014

கெளதம்மேனனின் சொத்துக்கள் ஏன் ஏலத்துக்கு வந்தது!

மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என மெகா ஹிட் படஙக்ளை இயக்கியவர் கெளதம்மேனன்.


அதோடு சொந்தமாக பட நிறுவனம் தொடங்கி அதன்மூலம் நடுநிசி நாய்கள், வெப்பம், தங்க மீன்கள் போன்ற படங்கள் தயாரித்தார்.


இதில் சில படங்கள் அவருக்கு நஷ்டத்தைக் கொடுத்தன. இருப்பினும், சிம்புவைக்கொண்டு சட்டென்று மாறுது வானிலை என்ற படத்தை தனது சொந்த பேனரிலேயே தயாரிக்கும் கெளதம், தற்போது அஜீத் நடிக்கும் படத்தை ஏ.எம்.ரத்னம் பேனரில் தயாரித்து வருகிறார்.


இந்த நிலையில், படங்கள் தயாரித்து தான் பட்ட கடனை அடைப்பதற்காக சென்னை இந்திரா நகரில் தனக்கு சொந்தமாக உள்ள 7 ஆயிரம் சதுர அடி சொத்தை அடமானம் வைத்து கடனை அடைத்திருந்த கெளதம்மேனன்.


அதன்பிறகு அந்த கடனை திருப்பி அடைக்காததால் இப்போது அவரது சொத்துக்களை ஏலம் விடுவதாக கோர்ட் அறிவித்துள்ளதாம்.


ஏலத்துக்கு வந்துள்ள கெளதம்மேனனுக்கு சொந்தமான அந்த சொத்தின் மதிப்பு ரூ.12.26 கோடியாம்.

0 comments:

Post a Comment