Thursday 20 March 2014

முக்கியப் புள்ளிகளுக்கு பினாமியாக மாறிய இயக்குநர் லிங்குசாமி...?

ஒரே நேரத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்து வருகிறார் இயக்குநர் லிங்குசாமி.


அதோடு, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உட்பட அரை டஜன் இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஆளுக்கொரு ஆபீஸ் போட்டுக்கொடுத்து ஸ்டோரி டிஸ்கஷனில் உட்கார வைத்திருக்கிறார்.



இதை எல்லாம் பார்த்துவிட்டு லிங்குசாமிக்கு ஏதுய்யா இவ்வளவு பணம்? என்ற கேள்வி படத்துறையில் பரவலாக அடிபடுகிறது. அதற்கான பதிலாக இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள்.


லிங்குசாமி படம் எடுப்பது அவரது சொந்தப்பணம் இல்லை, அவரது பெயரில் திரையுலகில் புழங்கும் மொத்தப் பணமும் அழகிரியின் மகன் துரைதயாநிதியின் பணம். சுமார் 200 கோடியை லிங்குசாமியிடம் கொடுத்திருக்கிறார் துரை தயாநிதி என்கிறார்கள் கிசுகிசுப்பாக.


 இன்னொரு தரப்போ, இத்தகவலை அடியோடு மறுப்பதோடு லிங்குசாமியின் பணப்புழக்கத்துக்கான காரணமாக மதுரை அன்புவை சுட்டிக் காட்டுகிறார்கள்.


ஏறக்குறைய 50 கோடிக்கு மேல் மதுரை அன்புவிடம் கடன் வாங்கியுள்ளாராம் லிங்குசாமி. மாதத்தின் முதல் தேதி அன்று வாங்கிய கடனுக்கான வட்டியை கரெக்டாகக் கொடுத்துவிடுகிறாராம்.


அந்த நம்பிக்கையின் பேரில்தான் லிங்குசாமி எந்த நேரத்தில், எத்தனை கோடிகள் கேட்டாலும் அடுத்த அரை மணி நேரத்தில் ரெடி பண்ணி கொடுத்துவிடுகிறாராம் மதுரை அன்பு.

சினிமாவில் நாணயமாக நடந்து கொள்வது மிகப்பெரிய விஷயம்தான்..!

0 comments:

Post a Comment