Thursday 20 March 2014

நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் அலையும் அமிதாப் பச்சன்! என்ன கொடுமை சார்....!


பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகர் என கூறப்படும் நடிகர் அமிதாப் பச்சன்.


ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இந்த வயதில் எனக்கு அதிக வாய்ப்பு வருவதில்லை; நிறைய வாய்ப்புகள் தன்னை விட்டு போய்விட்டதாக கூறி உள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் அமிதாப் பேட்டி அளித்துள்ளார்.


 அதில், திரையுலகில் உங்களுக்கு வயதாகி விட்டால், உங்களுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்காது.


 அவ்வாறு வாய்ப்பு கிடைக்காத போது உங்களைத் தேடி எது வருகிறதோ அதனை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.


எப்போதும் இளம் எழுத்தாளர்களின் கதைகளில் வயதானவர்கள் நடிக்க வேண்டி உள்ளது.


அதனால் அவர்கள் தங்கள் வயதை ஒத்த நடிகர்களையே கதைக்கு தேர்வு செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment