Thursday 20 March 2014

அவர மாதிரி என்னையும் வீட்லையே உட்கார வைச்சிருவாரோ…?


தேர்தல் நேரம் வந்தாலே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படித்தான் போன சட்டமன்றத் தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலுவை அரசியலில் இறக்கி விட்டு அவரது திரையுலக வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள்.


இதனால் கடந்த மூன்று வருடங்களாக தமிழ்சினிமா அவரை ஓரங்கட்டி விட்டது.


இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வடிவேலு இடத்தில் இருக்கும் சந்தானத்தை வைத்து ஒரு முழு நீள னகாமெடிப்படம் எடுக்க ஆசைப்பட்டாராம் உதயநிதி ஸ்டாலின்.


முதலில் அவசரப்பட்டு ஒப்பு கொண்ட சந்தானம் பிறகு எங்கே தேர்தல் சமயத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக இதை பெரிய பிரச்சனையாக்கி விடுவார்களோ?


என்ற பயத்தில் பின் வாங்கி விட்டார். முதலில் என்ன ஜி உங்ககிட்ட எல்லாம் பேமண்ட் பேச முடியுமா? குடுக்குறதைக் குடுங்க என்று சொன்ன சந்தானம் இப்போது இந்த தொகையை கொடுங்க என்று கழற்றி விடும் எண்ணத்தில் ஒரு பெரிய தொகையை கேட்கிறாராம்.


ஆதலால் சந்தானத்தை வைத்து படம் பண்ணும் யோசனையை பின்னுக்குத் தள்ளி விட்டாராம் உதயநிதி.

0 comments:

Post a Comment