Sunday 2 February 2014

கோலிவுட்டில் லேட்டஸ் டாக்.... ஆயா வடை சுட்ட கதை....

பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா கரகாட்ட கலையை மையமாக வைத்து ஒரு படம் டைரக்ட் செய்யப்போகிறார். இதில் சசிகுமார் நடிக்கிறார்.

 செழியன் கேமரா. இளையராஜா இசை. மற்ற டெக்னீஷியன்களும், டைட்டிலும் இன்னும் முடிவாவவில்லை. பரமன் படம் முடிந்ததும் சசிகுமார் பாலா படத்தில் நடிக்க இருக்கிறார்.


இதற்கிடையில் தனது அடுத்த படத்துக்கான 6 பாடலையும் இளையராஜாவிடம் கொடுத்து இசை அமைத்து வாங்கிவிட்டார். இந்த பாடல்கள் தயாரான விதத்தை 90 விநாடி வீடியோ காட்சியாக பாலா வெளியிட்டுள்ளார்.

அதில் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இளையராஜா காரில் வந்து இறங்கி பாடலுக்கு இசை அமைப்பது, பாலாவுடன் ஆலோசனை நடத்துவது, பாலா பாடல்களை திருத்தி தருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

 12 நாட்களில் தயாரானது 6 பாடல்கள் என்றும், படப்பிடிப்புகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்குகிறது என்றும் அந்த வீடியோ காடசிகள் தெரிவிக்கிறது.

0 comments:

Post a Comment