Sunday 2 February 2014

காமெடி நடிகைக்கு கிடைத்த அதிஷ்டம் ஹீரோயின் ஆனார்..!

காமெடி நடிகர்கள் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமா? காமெடி நடிகையும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். பல சிறு பட்ஜெட் படங்களில் காமெடியாகவும் கவர்ச்சியாகவும் நடித்து வந்தவர் ஜோதிஷா.


இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் தாதாக்களின் ஆசை நாயகியாக வந்து கடைசியில் மச்சினன் சூரியையும் மடக்கி போட்ட கேரக்டரில் நடித்து பாப்புலர் ஆனார்.


இப்போது ஜோதிஷா சமுதாயம் செய் என்ற படத்தில் ஹீரோயின் ஆகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராவணன் என்ற நியூபேஸ் நடிக்கிறார். எஸ்.பி.என்பவர் டைரக்ட் செய்கிறார். "ஓடுற வரைக்கும்தான் வாழ்க்கை, சுத்துற வரைக்கும்தான் உலகம். நல்லது கெட்டது எதுவும் இல்லை.


 வாழ்க்கை ஒரு முறைதான் அதில் நமக்கு பிடித்தமானதை செய்து கொண்டே இருக்க வேண்டும். நமக்கு பிடித்ததை கையில் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அதைத்தான் இந்தப் படத்துல சொல்றோம்" என்று படத்துக்கு இண்ட்ரோ கொடுக்கிறார் டைரக்டர் எஸ்.பி.

0 comments:

Post a Comment