Wednesday 12 February 2014

கமல் சொல்வது சரியா...?

தமிழ் படத்தில் ஆங்கிலம் கலப்பதா? என்று ஒரு கேள்வி நீண்ட காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. தமிழில் படத்துக்கு பெயர் வைத்தால்தான் வரி விலக்கு தருவோம் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. இதனால் இயக்குனர்கள் இப்போது சங்கத் தமிழ் சொற்களாக தேடிப்பிடித்து படத்துக்கு தலைப்பு வைக்கிறார்கள். இந்த நிலையில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.

ஒன்று கற்றது தமிழ் என்ற படத்தை இயக்கிய ராம், ஆங்கிலவழி கல்வியை அதே படத்தில் சாடிய ராம். தனது அடுத்த படத்துக்கு தங்க மீன்கள் என்று அழகான தமிழ் பெயர் வைத்த ராம். தனது அடுத்த படமான தரமணி விளம்பரத்துக்காக ஆங்கில பாடலை வெளியிட்டுள்ளார். அதன் வெளியீட்டு விழாவில் பேசிய கமல் "தமிழ் படத்தில் ஆங்கிலம் கலந்தால் என்ன தப்பு?" என்று கேட்டு அதிர வைத்தார்.

அவர் பேசியதாவது: இங்கு ஆண்ட்ரியாவின் ஆங்கில பாடலை வெளியிட்டிருக்கிறேன். இதை படத்தில் பயன்படுத்தலாம் தவறில்லை. ஆங்கிலம் கிராமத்து வரைக்கும் பரவி இருக்கிறது. எங்க ஊர் பரமக்குடிக்கு போனால் டீக்கடையில் நின்று கொண்டு டேய் அவன் அந்த பொண்ண கிஸ் அடிச்சிட்டாண்டா என்கிறார்கள். கிஸ் என்கிற வார்த்தையை தப்பான செயலுக்காக பயன்படுத்துகிறார்கள். அதற்கு என்னை குறை சொல்லாதீர்கள் (கமல்தான் தமிழ் சினிமாவில் முத்தக் காட்சியை கொண்டு வந்தவர்). ஜாக்கிரதையா இரு என்று சர்வசாதாரணமா சொல்வோம், ஜாக்கிரதை என்பது தமிழ் வார்த்தை இல்லை.

மற்ற மொழி மாதிரி கிடையாது தமிழ். எல்லா மொழியையும் உள்வாங்கிக் கொண்டு நிமிர்ந்து நிற்கும். ஆங்கிலமும் அப்படித்தான் எல்லா மொழிகளையும் ஏற்றுக் கொள்ளும். தமிழ் சினிமாவில ஆங்கிலம் கலப்பது புதுசும் இல்லை. அது தப்பும் இல்லை. அதனால் தமிழுக்கோ, தமிழ் சினிமாவுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

0 comments:

Post a Comment