Wednesday 5 February 2014

கழுகுக்கு பிறகு சிவப்பு !

இயக்குனர் மற்றும் நடிகருமான ராஜ்கிரண், நீண்ட இடைவெளி பிறகு நடிக்கும் படம் சிவப்பு . வெற்றிப் படங்களை வழங்கிய முக்தா ஆர்.கோவிந்த் அவரின் முக்தா என்டர்டைன்மென்ட்(பி)லிட் - புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட் பட நிறுவனங்கள் இணைந்து, கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் தயாராகும் படம் “சிவப்பு”.

அழுத்தமான கோணார் என்ற கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். நவீன்சந்திரா நாயகனாகவும் ரூபா மஞ்சரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் தம்பி ராமய்யா,செல்வா,போஸ்வெங்கட்,ஏ.வெங்கடேஷ்,அல்வாவாசு, பூராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

'சிவப்பு' பற்றி இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டதுக்கு.....
சிவப்பு என்பது நிறம் மட்டுமல்ல பல உணர்ச்சிகளின் உறைவிடம் தான் சிவப்பு. அதில் கோபம், காதல், வறுமை, தோழமை, புரட்சி என நிறைய உணர்வுகளின் உள்ளடக்கம் தான் சிவப்பு நிறம்.

அதே போல் இந்த திரைக்கதையில் இது அத்தனையும் இருக்கும். அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலமாக இருப்பவர் கோணார். இவரது கட்டுமான நிறுவனத்தில் வேலை கொடுத்து வாழ வைக்கிறார்.

அங்கு நிகழும் சம்பவங்கலே இது என்றார்....

0 comments:

Post a Comment