Thursday 23 January 2014

பாலாவும் இளையராஜாவும் கூட்டணி....!


பரதேதி வெற்றிக்குப் பிறகு பாலா, தான் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் கரகாட்டத்தின் பின்னணியில் உருவாக உள்ளது.

பரதேசியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை அற்புதமாக இருந்தது. எனவே, சசிகுமார் படத்திற்கும் இசையமைக்க முதலில் ஜி.வி.பிரகாஷ்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம்.ஆனால் ஜி.வி., கொடுத்த பாடல் டியூன்கள் எதுவும் பாலாவுக்கு திருப்தியை கொடுக்கவில்லையாம்.

அதனால ஜி.வி.யை கழற்றிவிட்டு பாலா, மீண்டும் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவிடமே சென்றுவிட்டாராம். இதற்கு முன்பு இளையராஜா, சேது, பிதாமகன், நான் கடவுள் ஆகிய மூன்று பாலா படங்களுக்கு இசையமைத்துள்ளார். இது இருவரும் இணையும் நான்காவது படம்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க பிரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வித்தியாசமான காதல் கதையை இந்த படத்தில் மேலும் இரு முக்கிய நடிகர்களும் நடிக்க உள்ளனராம். மற்ற விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, சமீபகாலமாக படங்களுக்கு சரியானபடி இசையமைப்பதில்லையாம் ஜி.வி.பிரகாஷ்.

0 comments:

Post a Comment