Wednesday 29 January 2014

மாதக்கணக்கில் தாடி வளர்க்கிறார் கே.பாலசந்தர்! - உத்தமவில்லனுக்கு!

விஸ்வரூபம்-2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளில் தீவிரமடைந்திருக்கும் கமல், அடுத்தபடியாக, ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தனது நிஜவயது கேரக்டரிலேயே நடிக்கிறார் கமல். அதாவது நிஜத்தில் அவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் இருப்பது போன்று, இந்த படத்தில் அவருக்கு நான்கு டீன்ஏஜ் மகள்களாம். அதனால் தனது இயல்பு தன்மையோடு இப்படத்தில் நடிக்கப்போகிறாராம் கமல்.

அதோடு, இதேபடத்தில் தனது குருவான கே.பாலசந்தரும் நடிப்பதால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் கமல். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று சுற்றிக்கொண்டிருந்த கமலை, ஹீரோவாகும்படி அறிவுறுத்தியவரே பாலசந்தர்தான். சினிமாவில் இயக்குனராக நினைத்தால் ஆட்டோவில்தான் செல்ல முடியும். ஹீரோவானால் காரில் செல்ல முடியும். காரா? ஆட்டோவா? ரெண்டில் எது வேண்டுமென்று நீயே முடிவெடுத்துக்கொள் என்று கமலிடம், அவர் சொன்ன பிறகுதான், தீர யோசித்த கமல், தனது இயக்குனர் கனவை ஓரங்கட்டி வைத்து விட்டு, கதாநாயகனாக ஒரே மனநிலையுடன் களமிறங்கியிருக்கிறார்.

ஆனால், அப்போது தன்னை வைத்து பாலசந்தர் இயக்கும் படங்களில் அவரை நடிக்குமாறு கேட்டுக்கொள்வாராம் கமல். ஆனால், திரைக்குப்பின்னால் இருந்து உங்களையெல்லாம் இயக்கும் வேலையே எனக்கு போதும் என்று மறுத்து விடுவாராம் கே.பாலசந்தர்.

அப்படிப்பட்டவரை இப்போது தான் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிக்க வைக்கிறார் கமல். அதோடு, இந்த படத்திற்காக இப்போதைய நடிகர்கள் முன்கூட்டியே தங்களது கெட்டப்பை சேஞ்ச் பண்ணுவது போல், பாலசந்தரும் மாதக்கணக்கில் தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவர் வளர்த்திருக்கும் தாடியைப்பார்த்தால், பெரியார், திருவள்ளுவர் போன்றிருப்பதாக சொல்கிறார்கள். ஆக, ஏதோ ஒரு பெருமை வாய்ந்த கதாபாத்திரத்தில் கே.பி நடிக்கப்போகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

0 comments:

Post a Comment