Tuesday 4 February 2014

'மாலிபவுல்' - விநோதமான பறவை!

ஆஸ்திரேலியாவின் 'மாலிபவுல்' என்னும் பறவை ரொம்ப விநோதமானது. இந்தப் பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடி வைத்து விட்டு சென்று விடும்.

குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன. இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை. தாய் பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண வருவதில்லை. பொறுப்பில்லாத மம்மி.

இந்தப் பறவை பற்றிய இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையும் இதுதான்.

0 comments:

Post a Comment