Monday 10 February 2014

பாலா - கும்பகோணம், தஞ்சாவூர் கரகாட்ட கோஷ்டிகளுக்கு அடித்தது யோகம்!

கும்பகோணம், தஞ்சாவூர் பகுதி கரகாட்ட கோஷ்டிகளுக்கு அடித்தது யோகம். அவர்களில் திறமையானவர்களை தேடி கண்டறிந்து பாலா முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

 காரணம்? இயக்குனர் பாலாவின் அடுத்த படம் கரகாட்டம் சம்பந்தப்பட்டது. தமிழ்சினிமா வரலாற்றிலேயே கரகாட்டக்காரன் படத்தைதான் ஓப்பன் டென்ட்டரில் விட்டு வியாபாரம் செய்தார்கள். அப்பவே கோடிகளை அள்ளிய படம் அது.

அதற்கப்புறம் அதே டைப்பில் படங்கள் வந்தாலும், எதுவும் போஸ்டர் காசுக்கு கூட பிரயோஜனமில்லாமல் போய்விட்டது.

 நாதஸ்வரம், கரகாட்டம் போன்ற கலைகள் மெல்ல மெல்ல அழிந்து வரும் நிலையில் பர்பெக்ட் படைப்பாளியான பாலா அந்த பக்கம் தன் பார்வையை செலுத்தியிருப்பதும், அதற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பதும் அந்த கலைஞர்களை பெருமைப்பட வைத்திருக்கிறது.

 இனி அந்த கலை அழியாது என்கிற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த படத்தில் கரகாட்டக்காராக சசிகுமார் நடிக்கிறார். கரகாட்டக்காரியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

சும்மாவே இடுப்பை அந்த ஆட்டு ஆட்டுவார் ஸ்ரேயா. (மறந்திருந்தால் கந்தசாமியை ஒருமுறை தகவலை பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளவும்) இந்த படத்தில் விடுவாரா?

 இருந்தாலும் பயிற்சி முக்கியம் என்று கூறிவிட்டாராம் பாலா. அவருக்கு பயிற்சி கொடுக்கவும், சசிகுமாருக்கு கற்றுக் கொடுக்கவும்தான் இந்த கரகாட்ட கோஷ்டிகளின் சென்னை பயணம்.

 ஆடுகிறவர்களுக்கு பெண்டு நிமிர்கிறதோ, இல்லையோ? சொல்லிக் கொடுப்பவர்கள் பாடு சுளுக்குதான்.

0 comments:

Post a Comment