Thursday 13 February 2014

பாலா படத்தில் வரலெட்சுமி சரத்குமார்..... ஸ்ரேயா என்ன ஆனார்?

 பாலா - சசிகுமார் இணையும் படத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.


'பரதேசி' படத்தினைத் தொடர்ந்து பாலா தனது பட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் நாயகனாக நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.


விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது. படத்தின் இசைக்காக மீண்டும் இளையராஜாவோடு கைகோர்த்திருக்கிறார் பாலா.


இப்படத்தில் நாயகியாக நடிக்க பலரையும் அழைத்து டெஸ்ட் ஷுட் செய்து பார்த்தார்கள். தற்போது படத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.


சிம்புவின் 'போடா போடி' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வரலெட்சுமி. அதற்கு பிறகு விஷாலுடன் இவர் நடித்த 'மதகஜராஜா' இன்னும் வெளியாகவில்லை.


தற்போது பாலா படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதால் மிகுந்த் சந்தோஷத்தில் இருக்கிறார் வரலெட்சுமி. 

0 comments:

Post a Comment