Monday 24 February 2014

விலைமதிப்புள்ள வைரத்தை விழுங்கிய திருடன்!

இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் இருந்து விலை மதிப்பு மிக்க வைரத்தை திருடி வாயில் போட்டு விழுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மாத்யூ ஆஸ்போர்ன் என்னும் 29 வயது நபர் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா வந்தார். அப்போது, மெல்போர்ன் நகரில் நடந்த வைர கண்காட்சிக்கு சென்ற இவர் அங்கு வைக்கப்பட்டிருந்த இளஞ்சிவப்பு நிற வைரத்தை திருடி ஒரு சைக்கிளில் தப்பியுள்ளார்.


பின்னர் மெல்போர்னில் இருந்து விமானம் மூலம் நியூசிலாந்திற்கு தப்பிக்க முயன்ற மாத்யூவை போலீசார் கைது செய்தனர்.


விசாரணையில் அவர் கொள்ளையடித்த வைரத்தை விழுங்கி மறைத்தது தெரியவந்தது. அந்த வைரத்தின் மதிப்பு 1,00,000 பவுன்டுகளுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment