Tuesday 11 February 2014

குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட தலைமுடிக்கான சில பராமரிப்பு டிப்ஸ்…

குளிர்காலம் என்றாலே குளிர்ந்த காற்றும் மிதமான பனிபொழிவும் தான் நினைவிற்கு வரும். இவை இனிமையாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் சரும பதிப்புகள் நம்மை வருத்தப்படச் செய்யும். அதனால், இந்த குளிர்காலங்களில் நமது உடல்நல மற்றும் சரும பராமரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் சரும மற்றும் உடல்நல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மீண்டும் இந்த வருடத்திற்கான குளிர்காலத்தை வரவேற்க தயாராகுங்கள். குளிர்காலம் இனிமையாக இருந்தாலும் இது பிரச்சனைகளுக்கான காலமும் கூட. இந்த காலத்தில் உங்கள் சருமமும் தலைமுடியும் வறண்டு போய்விடுவதால், அவற்றின் பராமரிப்பு தவிர்க்க முடியாத ஒன்று. குளிர்காலத்தை கண்டு பயம் கொள்ளுபவர்கள் பலர் உண்டு. குளிர்காலங்களில் வீசும் குளிர்ந்த காற்றை நீங்கள் ரசிப்பவராக இருக்கலாம். ஆனால், அது உங்கள் தலைமுடியை பாதிக்கக்கூடும் என்பது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.

டிசம்பர் மாதமே வருக வருகவே! உங்கள் விலை உயர்ந்த உடை அலமாரியில் இருக்கும் ஸ்வெட்டர் மற்றும் ஸ்கார்ப்களை எடுப்பதற்கான நேரம் இதுதான். இவை அனைத்தும் உண்மை என்றால், குளிர்காலங்கள் உங்கள் தலைமுடியை வறண்டு போகச் செய்யும் என்பதும் உண்மைதான். குளிர்காலத்தில் தட்பவெட்ப நிலைகளில் வேறுபாடு ஏற்படுவது பொதுவான ஒன்றாகும்.

இதுவே உங்கள் தலை முடி வறண்டு போவதற்கான காரணமாகும். காலங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை அதனால் அதன் நிலைகளுக்கு ஏற்றவாறு இணங்க வேண்டும். ஒவ்வொரு காலங்களும் உங்கள் சருமத்திலும், தலைமுடியிலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திச் செல்லும். குளிர்கால மாதங்கள் உங்கள் தலைமுடியை வறண்டு போகச் செய்து, அதில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்துவிடும். தலைமுடி மற்றும் தலைச் சருமத்தின் ஈரப்பத பற்றாக்குறை உங்கள் தலைமுடிக்கு பல எண்ணற்ற பிரச்சனைகளை விளைவிக்கும். உங்கள் தலைமுடிக்கான குளிர்கால பராமரிப்பு டிப்ஸ் இதோ உங்களுக்காக. இதனை படித்து பின்பற்றினால், அழகான தலைமுடியை எளிதாக பெறலாம்.

எண்ணெய்களில் கவனம் தேவை

வறண்ட தலைமுடியின் பராமரிப்பில் முதன்மையான தாதுப்பொருளாக இருப்பது இன்றியமையாத எண்ணெய்கள் தான். குளிர்காலங்கள் தலைமுடியையும் தலைச்சருமத்தையும் வறண்டு போகச் செய்யும். அப்பொழுது இன்றியமையாத எண்ணெய்களாகிய தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை தலையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால் சிறந்த பலனை அடையலாம். இது தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

“கூடாது”

தலைமுடிக்கு வண்ணம் பூசுதல், அயர்னிங் செய்வது, ஸ்ட்ரீகிங் செய்வது போன்றவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாது. இது குளிர்காலங்களில் தலைமுடி பராமரிப்பில் ஒரு பகுதியாகும். இவை அனைத்தும் உங்கள் அழகான தலைமுடிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதனால், இவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது. குளிர்கால தலைமுடி பராமரிப்பு மிகவும் இன்றியமையாதலால் தலைமுடியை கவனமாக பராமரிக்க வேண்டும்.

0 comments:

Post a Comment