Sunday 9 February 2014

நான் எதையும் கொண்டு வரவில்லை - கமல் பேச்சு!

‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’ என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் ராம். இவருடைய அடுத்தப்படைப்பாக ‘தரமணி’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் புதுமுகம் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஆண்ட்ரியா, ‘தி சோல் ஆப் தரமணி’ என்னும் பாடலை எழுதி இசையமைத்து அவரே இந்தப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலின் இசைத்தட்டை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட இயக்குனர் இமயம் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.

பாரதிராஜா பேசும்போது, கமல் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் இருந்தாலும் எனக்கு அவர் நெருங்கிய நண்பர், நான் அவருடன் நட்பாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு மிகவும் பிடித்தமானவர். ஆண்ட்ரியா பாடலை கேட்டேன் மிகவும் நன்றாக இருந்தது. இயக்குனர் ராம் மிகவும் திறமையானவர். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சாதிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கமல ஹாசன் பேசும்போது, நான் எல்லாதையும் வைத்து படம் எடுப்பதாக இயக்குனர் ராம் என்னைப் பற்றி கூறினார். ஏனென்றால் நான் எதையும் கொண்டு வரவில்லை, போகும் போது எதையும் கொண்டு போவதில்லை. நான் சினிமாவில் சம்பாதித்ததை திரும்பவும் சினிமாவுக்கே தருகிறேன். என்னைப் பொருத்தவரை என்னுடைய முதலீடு நான்தான் என்றார். ஆண்ட்ரியா பாடிய பாடலை கேட்டேன், நன்றாக இருந்தது. மேலும் இப்படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

0 comments:

Post a Comment