Monday 10 March 2014

ஐதராபாத் சிறையில் விஜய்!

விஜய்யின் கேரியரில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி மிக முக்கியமான படம். ஒரு ராணுவ வீரன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இடத்தில், வெடிகுண்டு வைத்து நாட்டை சீர்குலைக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் கதாபாத்திரம். அது விஜய்க்கு அற்புதமாகவும் பொருந்தியிருந்ததோடு, படமும் மெகா ஹிட்டாக அமைந்தது.


அதையடுத்து, விஜய் இயக்கத்தில் தலைவா, நேசன் இயக்கத்தில் ஜில்லா என இரண்டு படங்களில் நடித்த விஜய்க்கு எதிர்பார்த்த ஹிட் கிடைக்கவில்லை. அதனால் இப்போது தீரன் படம் மூலம் மீண்டும் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்திருப்பதால் அதிக உற்சாகத்தோடு இருக்கிறார். துப்பாக்கியை மிஞ்சும் ஹாட்ரிக் ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்.


அதனால், இதற்கு முன்பு அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் நடித்தபோது பெரிய வித்தியாசத்தைக்காட்டாத விஜய், இந்த படத்தில் நடிக்கும் இரண்டு வேடங்களிலும நிறைய வித்தியாசம் காட்டுகிறாராம். அதனால் உடல்ரீதியாகவும் சேஞ்ச் காட்டுவதால் இரண்டு கெட்டப்புக்கும் இடையே காலஅவகாசமும் எடுத்துக்கொள்கிறாராம்.


மேலும், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ள முருகதாஸ், வில்லன் அட்டாக்கினால் சிறைக்குள் விஜய் தள்ளப்படும் காட்சிகளை தற்போது ஐதராபாத்தில் படமாக்கி வருகிறார். இதை மிகப்பெரிய செட் அமைத்து படமாக்கிக்கொண்டிருக்கிறார். இதில் சிறைச்சாலைக்குள் ஊடுருவும் வில்லனின் அடியாட்களிடம் விஜய் மோதும் ஒரு அதிரடி சண்டை காட்சியும் படமாகிறதாம்.

0 comments:

Post a Comment