Saturday 22 February 2014

பிரியயிருந்த ஜோடியை சேர்த்து வைத்த - கமலஹாசன்!


நடிகை லிசிக்கும் டைரக்டர் பிரியதர்ஷனுக்கும் 1996–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.


லிசிக்கும் பிரியதர்ஷனுக்கும் இடையே சமீபத்தில் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். லிசிக்கு ரூ.80 கோடிக்கு மேல் ஜீவனாம்சம் கொடுத்து விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் பரவின.


 இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே சமரச முயற்சிகளை சிலர் மேற்கொண்டார்கள். அதற்கு பலன் கிடைத்துள்ளது. கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரும் மீண்டும் சேர்ந்துள்ளார்கள். கமலஹாசன்தான் இவர்களை சேர்த்து வைத்துள்ளார்.


இதுகுறித்து நடிகை லிசி கூறியதாவது:–


பிரியதர்ஷனுக்கும் எனக்கும் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தோம். எங்கள் இருவருக்கும் நண்பராக இருந்தவர்தான் இந்த தகராறுக்கு காரணம். மனம் விட்டு பேசாததால் பிரச்சினை பெரிதானது.


இவை எல்லாமே நாங்கள் நேருக்கு நேர் சந்தித்து மனம் விட்ட பேசியதும் முடிந்து போனது. இப்போது தெளிவாகி விட்டோம். குழப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்ந்து நாங்கள் சேர்வதற்கு கமலஹாசனும் கவுதமியும் உதவினார்கள். இது போல் மோகன்லாலும் அவரது மனைவியும் முயற்சி எடுத்தார்கள். எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு லிசி கூறினார்.

0 comments:

Post a Comment