Saturday 22 February 2014

கால்ஷீட் தர மறுக்கும் விநோத நடிகை!

பிரியாமணியிடம் கால்ஷ¦ட் கேட்டால் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. பருத்திவீரன் படத்தில் கிராமத்து பெண்ணாக பரபரப்பாக பேசப்பட்ட பிரியாமணி பின்னர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்க மறுத்து கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.


 கிராமத்து பெண்ணாக தொடர்ந்து நடித்தால் கிராமத்து நடிகை என்று முத்திரை குத்திவிடுவிவார்கள் என்ற பயத்தால் அந்த வேடங்களை தவிர்த்தார். தெலுங்கு படங்களில் டூ பீஸ் உடையில் நடித்து சக ஹீரோயின்களுக்கு சவால் விட்டார். ஆனாலும் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் குவியவில்லை. டோலிவுட் படங்கள் கைவிட்ட நிலையில் மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார். அதைத் தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வருகிறார்.


இதற்கிடையில் தமிழ் படங்களில் நடிக்க சில இயக்குனர்கள் அவரிடம் கதை சொன்னார்கள். ஆனால் கால்ஷீட் தர மறுத்துவிட்டார். கன்னட இயக்குனர் பட்நாயக் இயக்கும் படமொன்றில் சிபிஐ அதிகாரியாக கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுபற்றி பிரியாமணி கூறும்போது, இதுவரை சிபிஐ கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. எனவேதான் ஒப்புக்கொண்டேன்.


மேலும் இயக்குனர் பட்நாயக் எனக்கு நல்ல நண்பர். அவர் கேட்டபோது மறுக்க முடியவில்லை. தெலுங்கு பட ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன். கன்னடம், மலையாளத்தில் பிஸியாக இருப்பதால் வேறு படத்தை ஏற்பதற்கு யோசிக்கிறேன் என்றார். 

0 comments:

Post a Comment