Friday 14 March 2014

உத்தமவில்லனுக்கு 60 நாட்கள் பிறகு திரிஷ்யம்! கமலின் ரகசிய திட்டம்!

கடந்த இரண்டு வருடங்களாக விஷ்வரூபம் திரைப்படத்தின் பணிகளில் மூழ்கியிருந்த கமல்ஹாசன் தற்பொழுது விஷ்வரூபம் - 2 படத்தின் பணிகளையும் முற்றிலும் நிறைவு செய்துவிட்டு அடுத்த படமான உத்தமவில்லன் திரைப்படத்தின் நடித்துவருகிறார்.


கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கிவரும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார் கமல்ஹாசன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெங்களூருவில் துவங்கின.


கமலின் குருவான கே.பாலச்சந்தரின் அறிவுரையின் பேரில் வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடித்துவிடவேண்டும் என்று உறுதியெடுத்திருக்கும் கமல்ஹாசன் உத்தமவில்லன் திரைப்படத்திற்கு 60 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ளாராம்.



உத்தமவில்லன் திரைப்படத்திற்குப் பிறகு மலையாளத்தில் மெஹா ஹிட்டான திரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற ஜூன் மாதம் துவங்கவுள்ளன.



உத்தமவில்லன் திரைப்படத்தில் விஷ்வரூபம் நாயகிகளான ஆண்ட்ரியா, பூஜா குமார் மற்றும் மரியான் நாயகியான பார்வதி மேனன் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

0 comments:

Post a Comment