Friday 14 March 2014

ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் அடுத்த ஹீரோ யார்... முடிவாகிவிட்டது!

தமிழில், விஜயகாந்தை நாயகனாக வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் 'ரமணா'. இதே படத்தை அதன்பிறகு தெலுங்கில் சிரஞ்சீவியைக்கொண்டு ஸ்டாலின் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.


அப்படமும் சூப்பர் ஹிட்டானது. இருப்பினும் அதன்பிறகு இந்திக்கு சென்று அதே படத்தை ரீமேக் செய்த முருகதாஸ், தெலுங்கில் படம் இயக்கும் சூழ்நிலை அமையவில்லை.


இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் தற்போதைய மாஸ் ஹீரோக்களில் ஒருவரான மகேஷ்பாபுவை வைத்து அடுத்து ஒரு ஆக்ஷ்ன் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் முருகதாசுக்கு ஏற்பட்டுள்ளதாம்.


தற்போது விஜய்யைக்கொண்டு தீரன் படத்தை விறுவிறுப்பாக இயக்கி வரும் அவர், இப்படத்தை முடித்ததும் தெலுங்கு படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.


ஆனால், இந்த படமும் ரமணா ரீமேக் மாதிரி, தமிழில் ஏற்கனவே அவர் இயக்கிய படங்களின் ரீமேக்கா அல்லது மகேஷ்பாபுவுக்காக தனி கதை ரெடி பண்ணுகிறாரா? என்பது பற்றிய முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லையாம்.


விஜய்யை இயக்கும் படம் வெளியான பிறகுதான் அதுபற்றி முடிவெடுக்க உள்ளாராம்.

0 comments:

Post a Comment