Friday 14 March 2014

கோலிசோடாவின் சவுண்டு பலரை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பியாச்சு!

பெரிய பெரிய ஜாம்பவான்களின் படங்களுக்கு மத்தியில் பசங்க நடித்த கோலிசோடா ரொம்ப பவர்புல்லாக அமைந்து விட்டது. கோலிசோடாவின் சவுண்டு பலரை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பியிருக்கிறது.


தொடர்ந்து 50 நாட்களாக கோலிசோடாவின் விற்பனை குறையவில்லை. 75 லட்சம் ரூபாய் தயாரிக்கப்பட்ட கோலிசோடா, இதுவரைக்கும் 7 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும், தயாரிப்பாளர் ஷேர் மட்டும் 5 கோடிக்கு மேல் கிடைத்திருப்பதாகவும் விநியோகஸ்தர்கள் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


படத்தை இயக்கிய விஜய் மில்டனை, விஜய்யிலிருந்து விஜய் சேதுபதி வரைக்கும் பாராட்டி, அடுத்து எனக்கொரு கதை ரெடி பண்ணுங்க என்று கேட்டிருக்கிறார்கள். படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா ஆகியோருக்கும் அடுத்த படங்கள் கிடைத்திருக்கிறது.


விஜய் மில்டன் தற்போது பாலாஜி சக்திவேலின் ரா...ரா...ரா...ராஜ்குமார் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


இதே நிறுவனத்திற்கு தான் விஜய்மில்டன் அடுத்த படம் இயக்க இருக்கிறார். கோலிசோடாவை பார்க்க தவறவிட்டவர்கள் இப்போதும் சத்யம், எஸ்கேப், தேவி, அபிராமி, பிவிஆர், மாயாஜால் மால் தியேட்டர்களில் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment