Friday 14 March 2014

காப்பி அடித்தேனா? உத்தம வில்லன் பற்றி கமல் பதில்!

பல எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு வெளிவந்தவை என்ற சிறப்பு பெற்றவை கமல்ஹாசனின் படங்கள். ஆனால் சமீபகாலமாக ஒரே ஒரு போஸ்டர் வெளியிட்டதற்கே பலவித விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார் கமல்ஹாசன்.


’தெய்யம்’ எனப்படும் கேரளாவின் பாரம்பரிய நடனக் கலைஞரைப் போன்று முகத்தில் ஓவியம் வரைந்து கமல்ஹாசன் வெளியிட்டிருந்த போஸ்டர் பிரெஞ்சு ஃபோட்டோகிராஃபர் ஒருவரின் ஃபோட்டோவிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று எழுந்த விமர்சனங்களுக்கு, சமீபத்தில் மும்பையில் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் பதிலளித்திருக்கிறார் கமல்.



இதுகுறித்து பேசிய கமல் “தெய்யம் என்பது 1000 வருடங்கள் பழமை வாய்ந்த கலை. இந்த கலையில் இயங்கிவரும் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவரால் இந்த ஓவியம் என் முகத்தில் 4 மணிநேரமாக வரையப்பட்டது. இரு காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒரே திசையில் பார்த்துக்கொண்டிருந்தால் அவர்கள் ஏக் துஜே கே லியே’ திரைப்படத்தின் போஸ்டரைப் பார்த்து காப்பி அடித்தார்கள் என்று சொல்லிவிடமுடியுமா?



தெய்யம் என்பது ஒவ்வொரு தலைமுறையினரிடமிருந்தும் அடுத்த தலைமுறையினரிடம் கொடுத்துவரப்படும் பழமை வாய்ந்த கலை” என்று கூறியுள்ளார். உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிகர் ஜெயராமும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

0 comments:

Post a Comment