Friday 14 March 2014

விஷாலின் நாசுக்கான பேச்சை நம்பும் நடிகர்!

விஷால்-விக்ராந்த் இருவருமே நல்ல நண்பர்கள். அதன் அடிப்படையில்தான் மார்க்கெட்டில் எழ முடியாமல் தடுமாறிக்கொண்டு வந்த அவருக்கு தனது பாண்டியநாடு படத்தில் நல்லதொரு வேடத்தை கொடுத்து கைதூக்கி விட்டார் விஷால்.


இதனால் நெகிழ்ந்து போன விக்ராந்த், இதே சினிமாவில் எனக்கு நெருக்கமான அண்ணன் இருந்து செய்யாத உதவியை விஷால் செய்து விட்டார் என்று அவரை பெருமையாக பேசினார்.


ஆனால், அதையடுத்து தான் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில் விக்ராந்துக்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை விஷால். அதனால் இதுகுறித்து அவரைக்கேட்டால், இந்த படத்தில் விக்ராந்துககு ஏற்ற வேடம் இல்லை. அதனால் கொடுக்கவில்லை. ஆனால், அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன் என்கிறார்.


அப்படி விக்ராந்த்தை வைத்து தயாரிக்கும் படத்தில் நான் இருக்க மாட்டேன். அந்த படத்தில் அவர் மட்டுமே நாயகன். அதனால், இந்த படத்தில் சின்ன கேரக்டரை கொடுத்து அவரது ரேஞ்சை இறக்க வேண்டாமே என்ற ஒரு எண்ணமும் மனதளவில் இருந்ததால் அவரை இந்த படத்தில் பயன்படுத்தவில்லை என்று கூறும் விஷால், விக்ராந்துக்காக வித்தியாசமான கதையை தேடிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்.

0 comments:

Post a Comment