Saturday 15 March 2014

மீண்டும் ஜோடி சேரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லட்சுமி!


பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், தேசிய விருது பெற்ற நடிகை லட்சுமியும் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள். இவர்கள் இணையும் படத்தை மதுமிதா இயக்குகிறார்.


பாலசுப்பிரமணியமும், லட்சுமியும் தெலுங்குப் படமான மிதுனத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படமும், இவர்களின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.


அந்தப் படத்தைப் பார்த்த மதுமிதா தனது மூணே மூணு வார்த்தை படத்தில் இவர்களை நடிக்க வைத்துள்ளார்.


கொலகொலயாய் முந்திரிக்கா படத்துக்குப் பிறகு மதுமிதா இந்தப் படத்தை இயக்குகிறார். எஸ்.பி.பி.யின் மகன் சரண் படத்தை தயாரிக்கிறார்.


அர்ஜுன் சிதம்பரம், அதிதி செங்கப்பா, வெங்கடேஷ் ஹரிநாதன் நடிக்கும் இப்படத்தில் ஹீரோவின் தாத்தா, பாட்டியாக எஸ்.பி.பி.யும், லட்சுமியும் வருகின்றனர்.


இவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

0 comments:

Post a Comment