Monday 3 February 2014

ஏப்ரல் 11-ல் வெளியாகிறது 'கோச்சடையான்'! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'கோச்சடையான்' ஏப்ரல் 11-ம் தேதி உலக அளவில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில், மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது.

அவதார், டின் டின் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், முதல் முதலாக இந்திய சினிமாவில் கோச்சடையான் மூலம் புகுத்தப்பட்டுள்ளதாக, தயாரிப்பு நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் உடன் தீபிகா படுகோன், சரத் குமார், நாசர், ஆதி மற்றும் ருக்மணி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் 11-ல் கோச்சடையான் ரிலீஸ் ஆவது குறித்து இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் கூறும்போது, இந்தியாவில் மாற்று சினிமா களத்தில் கோச்சடையான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டார். 

0 comments:

Post a Comment