Monday 3 February 2014

அமெரிக்காவில் கவிதை எழுதும் ரோபோ !

உலகப் பிரபல ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரிய­ருமான வில்லியம் ஷேக்ஸ்பியரின் எழுத்தாக்கங்களை கற்றுக்கொண்டு சுயமாக கவிதை எழுதக்கூடிய ரோபோவொன்றை அமெரிக்க டெக்கிரன்ச் செய்தி இணையத்த­ளத்தைச் சேர்ந்த நடாஷா லோமஸ் என்பவர் வடிவ­மைத்துள்ளார்.

மேற்படி ரோபோவானது 'புளுவன்சி' என அழைக்க­ப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி ஷேக்ஸ்பியரின் எழுத்து நடையை பகுப்பாய்வு செய்து கிரகித்து கவிதைகளை சுயமாக எழுதுகிறது.

இந்த மென்பொருள் அன்ட்ரோயிட் கையடக்கத்தொலை பேசியில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் மேற்படி ரோபோ இயந்திரம் வழங்கப்பட்ட சொற்களின் பட்டியலிலிருந்து பொருத்தமான சொற்களைத் தெரிவு செய்து புதிய கவிதையொன்றை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. 

0 comments:

Post a Comment