Monday 3 February 2014

ஆண்ட்ரியாவுக்கு கிடைத்த அதிஷ்டம்...?

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு ஆண்ட்ரியாவின் மவுசு ஓரளவு எகிறியிருக்கிறது. ஆனபோதும், முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைக்கவில்லை. அதனால், அதன்பிறகு தனது சமபளத்தை கிடுகிடுவென உயர்த்தி விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஆண்ட்ரியா அடக்கி வாசித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது விஸ்வரூபம்-2 படம் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருப்பதால், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நான்தான் முக்கிய கதாநாயகியாக நடித்திருக்கிறேன். கமலுடன் எனக்கு பாடல் காட்சிகூட உள்ளது. அதோடு, கிளாமரிலும் அதிரடியாக பிரவேசித்திருக்கிறேன் என்று புதிய பில்டப்பை அவிழ்த்து விட்டு வருகிறார்.

அதை முன்வைத்து, புதிதாக கமிட்டாகும் படங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி விட்டுள்ள ஆண்ட்ரியா, பிரம்மன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமாட வேணடும் என்று கேட்டபோது, 25 லட்சம் வேண்டும் என்றாராம். ரொம்ப ஜாஸ்தியா இருக்கே என்று தயாரிப்பாளர் தலையை சொறிந்தபோது, வேண்டுமானால், அந்த பாடலையும் நானே பாடிக்கொடுக்கிறேன். இரண்டுக்கும் சேர்த்து இதே சம்பளத்தை கொடுங்கள் என்றாராம்.

இதற்கு படாதிபதி உடன்படாத போதும், அந்த காட்சியில் அவர் ஆடினால்தான் சிறப்பாக இருக்கும் என்று டைரக்டர் சொன்னதால், இப்போது ஆண்ட்ரியாவையே புக் பண்ணியிருக்கிறார்களாம். இதனால் இன்னும் கொஞ்சம் அடித்து பேசினால், நாமளும் கோடிக்கணக்கில் சம்பளமே கேட்கலாம் போலிருக்கே என்று உற்சாக மனநிலையில் இருக்கிறார் ஆண்ட்ரியா.

0 comments:

Post a Comment